Monday, August 1, 2011

அஞ்சறை பெட்டி

இதை வெறும் தாளிக்கும் பொருட்கள் வைக்கும் பெட்டி என்று என்ன வேண்டாம் இதற்க்கு பல உபயோகங்கள் உண்டு.

1. பூஜை அறை இல் திரி, சுவாமிக்கு பண்ணுவதற்க்கு கல்கண்டு, அவல், திராக்ஷை போன்றவை வைத்து கொள்ளலாம்.

2. பூஜை இன் போது தேவைப்படும், மஞ்சள் பொடி, சந்தன கட்டி, குங்குமம் வைக்கக்லாம் .

3. சின்ன பெண் குழந்தை கள் இருக்கும் வீடுகளில் சின்ன சின்ன ஹேர் கிளிப்ஸ், ஹெஐர் பின், சேஃப்டி பின் , ரப்பர் பாண்ட் போன்றவை வாக்க உபயோகிக்கலாம். கால வேளைகளில் தேடாமல் இருக்க சௌகர்யமாய் இருக்கும்.

4. சமையல் அறை இல் சாதாரணமாய் கடுகு, மிளகு, உளுந்து, கடலை பருப்பு , மிளகாய் வற்றல் போன்றவை வைப்போம் அல்லவா அது போல மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, கரம் மசாலா பொடி, தனைய பொடி, அம்சூர் போல தினமும் தேவை படும் பொடிகளி வைக்கவும் உபயோகப்படுத்தலாம்.

5. இப்ப பண்டிகை காலங்களில், அதில் நாம் துண்டாக்கிய முந்திரி, அலம்பி துடைத்த திராக்ஷை (கிஸ் மிஸ் ) , ஊறவைத்து தோலுரித்து துண்டங்கள் ஆக்கிய பாதாம் போன்றவைகளை வைத்துக்கொண்டால், பாயசத்திலும் பொங்கலிலும் போட சௌகர்யமாய் இருக்கும்.

மத்தியான வேளைகளில் வெறுமன இருக்கும் போது இப்படி செய்து வைத்துக்கொண்டால் , காலை நேர பர பரப்பை தவிர்க்கலாம் புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">

2 comments:

Anonymous said...

Super !

Kudu said...

Very nice!