Tuesday, June 23, 2015

பூரி...சாகு

பூரி...சாகு - இது கர்நாடகா ஸ்பெஷல் என்றே சொல்லலாம்

பூரி செய்வது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

சாகு செய்யத் தேவையானவை:

காலிஃப்ளவர் 1 கப்
உருளைக்கிழங்கு 1 கப் பொடியான நறுக்கவும்
வெங்காயம் 1 பொடியான நறுக்கவும்
பட்டாணி 1/2 கப்
காரட் 1/2 கப் பொடியாக நறுக்கியது
பச்சை சோளம் 1/2 கப்
கடலைமாவு 1 டேபிள்ஸ்பூன்
vegetable stock 1 கப் ( முடிந்தால் )
உப்பு
எண்ணெய் கொஞ்சம்

அரைக்க:

துருவிய தேங்காய் 1 கப்
பட்டை 1 துண்டு
கிராம்பு 2
சீரகம் 1 டீஸ்பூன்
இஞ்சி 1 துண்டு
கசகசா 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் 2
கொத்தமல்லி 1/2 கப்

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை 1கொத்து
பெருங்காயம 1/2 டீஸ்பூன்

செய்முறை :

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
மற்ற காய்கறிகளை சிறிது உப்பு சேர்த்துவேகவைக்கவும்.
அரைக்கக் கொடுத்துள்ளவைகளை நன்றாக விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலி il எண்ணைய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
பின்னர் வேகவைத்த காய்கறிகள் மற்றும் அரைத்த விழுது சேர்க்கவும்.
இதனுடன் vegetable stock அல்லது தண்ணீர் ஒரு கப்,தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
எல்லாம் சேர்ந்து கொதித்தவுடன் கடலை மாவை கால் கப் தண்ணீரில் கரைத்து சேர்த்து கொதிக்கவிடவும்.
கைவிடாமல் கிளறவும்.
நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் இறக்கி கொத்துமல்லி தூவி வைக்கவும்.
பூரியுடன் பரிமாறவும்.

குறிப்பு: இதை தோசை யுடனும் கூட பரிமாறலாம். முக்கியமானது என்ன வென்றால்.... கடலை மாவு போட்டு கொதிக்கவைப்பதால் வெகுநேரம் வைத்திருக்க முடியாது, ஒரே வேளை இல் பயன்படுத்தி விடவேண்டும். சரியா?


1 comment:

Dr.S.Soundarapandian said...

சூப்பர் கிருஷ்ணாம்மா !

Blog Archive