Tuesday, September 13, 2011

மோர் குழம்பு

தேவையானவை :

'திக்' மோர் 2 கப் (புளிப்பில் லாதது)
துவரம் பருப்பு 3 ஸ்பூன்
உளுந்து 1 / 2 ஸ்பூன்
கடுகு 1/2 ஸ்பூன்
வெந்தியம் 1/4 ஸ்பூன்
சிவப்பு மெளகாய் 4 - 5
பச்சை மெளகாய் 2 - 3
பெருங்காய பொடி ஒரு சிட்டிகை
மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை
எண்ணெய் 2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
துருவின தேங்காய் 2 ஸ்பூன்
கறிவேப்பிலை

செய்முறை:

துவரம் பருப்பை ஊற வைக்கவும்.
தேங்காய், கடுகு தவிர எல்லா சாமான் களையும் வறுத து, துவரம் பருப்பை சேர்த்து அரைக்கவும்.
ஒரு வாணலி இல் கடுகை தாளித்து, அரைத்த விழுது, 'திக்' ஆனா மோர், உப்பு போட்டு கலக்கவும்.
நன்கு கொதிக்கட்டும் .
நடு நடு வில் கிளறவும்.
கறிவேபலை போட்டு இற கவும்.
மோர் குழம்பு ரெடி.
சாதத்தில் போட்டு சாபிடலாம்.

குறிப்பு: இதில் வெண்டக்காய், முருங்க காய், பெங்களூரு கத்தரிக்காய், பூசணிக்காய், வேகவைத்து வறுத்த உருளை கிழங்கு ஆகியன 'தான்' ஆக போடலாம்.
தொட்டுக்கொள்ள பருப்பு உசுலி நன்றாக இருக்கும்.
நாள் கிழமை களில் உளுந்து வடை யை 'தான்' ஆக போடுவது வழக்கம்.