Saturday, July 30, 2011

ஓட்ஸ் அடை

தேவையானவை :

ஓட்ஸ் 1 கப்
அரிசி மாவு 1/2 கப்
சோள மாவு 1/2 கப்
பெரிய வெங்காயம் 1 (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் 2 (பொடியாக நறுக்கவும்)
உப்பு
அடை வார்க்க எண்ணை

செய்முறை:

முதலில் ஓட்ஸ் ஐ வெறும் வாணலி இல் போட்டு வறுக்கவும்.
கர கர ப்பாக மிக்சி இல் பொடிக்கவும்.
ஒரு பாத்திரத்தில் போட்டு அரிசி மாவு, சோள மாவுடன் கலக்கவும்.
உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய் எல்லாம் போட்டு கொஞ்சமாய் தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையவும் .
ஒரு பிளாஸ்டிக் கோவரில் அல்லது வாழை இலை இல் எண்ணை தடவி, இந்த மாவில் ஒரு சாத்துகுடி அளவு எடுத்து அடை போல் தடவும்.
உரித்து எடுத்து தோசை கல்லில் போட்டு இரண்டு பக்கமும் எண்ணை விட்டு எடுக்கவும்.

குறிப்பு: மிளகாய் வேண்டாம் என்பவர்கள் மிளகாய் பொடி போட்டுக்கலாம்; மிளகு சீராக பொடி போடலாம், கரம் மசாலா போடலாம் நம் சுவைக்கு ஏற்ப செயலாம்புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">கறிகாய் கூட காரட் துருவி போடலாம .

ஓட்ஸ் தோசை

தேவையானவை :

ஓட்ஸ் 1 கப்
கோதுமை மாவு 1 கப்
பெரிய வெங்காயம் 1 (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் 2 (பொடியாக நறுக்கவும்)
தேவையானால் ..மிளகு சீரக பொடி சேர்க்கவும்.
உப்பு
தோசை வார்க்க எண்ணை

செய்முறை:

முதலில் ஓட்ஸ் ஐ வெறும் வாணலி இல் போட்டு வறுக்கவும்.
கர கர ப்பாக மிக்சி இல் பொடிக்கவும்.
ஒரு பாத்திரத்தில் போட்டு கோதுமை மாவுடன் கலக்கவும்.
உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய், மிளகு சீரக பொடி எல்லாம் போட்டு தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும்
பிறகு தோசை கல்லில் எண்ணை விட்டு வார்க்கவும்.

குறிப்பு: வேண்டுமானால், இந்த மாவை மோர் விட்டு கரைக்கலாம்

ஓட்ஸ் பொங்கல்

தேவையானவை:

ஓட்ஸ் 1 கப்
மிளகு சீரகம் பொடித்தது 1 டீ ஸ்பூன்
இஞ்சி மிகவும் பொடியாக நறுக்கினது அல்லது துருவினது 1/2 ஸ்பூன்
வேக வைத்த பயத்தம் பருப்பு 1/2 கப்
நெய் 2 ஸ்பூன்
வேண்டுமானால் முந்திரி
கொஞ்சம் கறிவேப்பிலை
உப்பு
பெருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்

செய்முறை:

ஒரு வாணலி இல் 1 ஸ்பூன் நெய் விட்டு ஒட்சை போட்டு நன்கு வறுக்கவும்.
( நல்ல வறுபடவில்லை என்றால் 'கொஞ்சம் ஒட்டிக்கும்' )
இதில் வெந்த பருப்பை கொட்டி வேண்டுமால் கொஞ்சம் தண்ணீர் விட்டு அடுப்பை சின்ன தாக வைக்கவும்.
நன்கு கலக்கவும்.
ஓட்ஸ் வெந்து நன்கு கலந்ததும், உப்பு போட்டு கிளறவும்.
வேறு ஒரு வாணலி இல் 1 ஸ்பூன் நெய் விட்டு முந்திரி வறுக்கவும்.
அதிலேயே மிளகு சீரகம், இஞ்சி கறி வேப்பிலை போட்டு தாளிக்கவும்.
இதை அடுப்பில் உள்ள ஓட்ஸ் மற்றும் பருப்பு கலவை இல் கொட்டவும்.
நன்கு கிளறி இறக்கவும்.
ஓட்ஸ் பொங்கல் ரெடி.

உலர் பழங்கள் / நட்ஸ் உடன் ஓட்ஸ்

இதுவும் குழந்தைகளுக்கானது

தேவையானவை:

ஓட்ஸ் 2 கரண்டி
பால் 1/2 கப்
படம், முந்திரி , கிஸ்மிஸ் (உலர்ந்த திராக்ஷை) உலர்ந்த அத்திப்பழம் 1/4 கப்
சர்க்கரை அல்லது தேன்

செய்முறை:

ஓட்ஸ் ஐ மைக்ரோ வேவ் பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் வரை தண்ணீர் விட்டு 3 – 5 நிமிஷங்கள் வரை வைக்கவும்.
வெளியே எடுத்ததும் நன்கு கிளறி, பால் மற்றும் சக்கரை போட்டு கலக்கவும்.
போடவும்
உலர் பழங்கள் போடவும்
வேண்டுமானால் தண்ணீர் விட்டுக்கொள்ளவும்.
இல்லைஎன்றால் கெட்டியாக கப்பில் விட்டு ஸ்பூன் போட்டு கொடுக்கவும்.
சத்தான கஞ்சி இது .
மதியம் வரை பசிக்காது

குறிப்பு: இந்த கஞ்சி இல் உங்களுக்கு விருப்பமான பழங்கள் + உலர் பழங்கள்சேர்க்கலாம்.

பழங்களுடன் ஓட்ஸ்

நாம் குடிக்கும்போது குழந்தைகள் கேட்குமே, அதனால், அவர்களுக்கானது இது.

தேவையானவை:

ஓட்ஸ் 2 கரண்டி
பால் 1/2 கப்
வாழைப்பழம் அல்லது ஆப்பிள் துண்டாங்கள் 1/2 கப்
சர்க்கரை அல்லது தேன்

செய்முறை:

ஓட்ஸ் ஐ மைக்ரோ வேவ் பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் வரை தண்ணீர் விட்டு 3 – 5 நிமிஷங்கள் வரை வைக்கவும்.
வெளியே எடுத்ததும் நன்கு கிளறி, பால் மற்றும் சக்கரை போட்டு கலக்கவும்.
ஆப்பிள் அல்லது வாழப்பழம் போடவும்
வேண்டுமானால் தண்ணீர் விட்டுக்கொள்ளவும்.
இல்லைஎன்றால் கெட்டியாக கப்பில் விட்டு ஸ்பூன் போட்டு கொடுக்கவும்.
சத்தான கஞ்சி இது .
மதியம் வரை பசிக்காது

குறிப்பு: இந்த கஞ்சி இல் உங்களுக்கு விருப்பமான பழங்கள் சேர்க்கலாம். 2 பழங்களை சேர்த்தும் போட்டுத் தரலாம்.

ஓட்ஸ் கஞ்சி சக்கரையுடன்

தேவையானவை:

ஓட்ஸ் 2 கரண்டி
பால் 1/2 கப்
சர்க்கரை அல்லது தேன்

செய்முறை:

ஓட்ஸ் ஐ மைக்ரோ வேவ் பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் வரை தண்ணீர் விட்டு 3 - 5 நிமிஷங்கள் வரை வைக்கவும்.
வெளியே எடுத்ததும் நன்கு கிளறி, பால் மற்றும் சக்கரை போட்டு கலக்கவும்.
வேண்டுமானால் தண்ணீர் விட்டுக்கொள்ளவும்
பருகவும்.
சத்தான கஞ்சி ரேயடு.
மதியம் வரை பசிக்காது

குறிப்பு : சர்க்கரை வியாதி உள்ளவர்கள் கூட அதர்க்கான 'செயற்க்கை சக்கரையை ' போட்டுக்கொள்ளலாம்.ஓட்ஸ் ஐ பாலிலேயும் வேக விடலாம்

பூண்டு ஓட்ஸ்

தேவையானவை:

ஓட்ஸ் 2 கரண்டி
பூண்டு 4 - 5 பல்
உப்பு


செய்முறை:

பூண்டை மிகவும் பொடியாக நறுக்கி மைக்ரோ வேவ் பாத்திரத்தில் போட்டு அது 1 டம்ளர் தண்ணீர் விட்டு 2 நிமிஷங்கள் வரை வைக்கவும்.
பிறகு ஓட்ஸ் போட்டு மீண்டும் 3 -5 நிமிடங்கள் வைக்கவும்.
வெளியே எடுத்ததும் நன்கு கிளறி, உப்பு போடவும்.
வேண்டுமானால் தண்ணீர் அல்லது மோர் விட்டுக்கொள்ளவும்
பருகவும்.
சத்தான கஞ்சி தயார் .
மதியம் வரை பசிக்காது.

குறிப்பு: இது கொலஸ்ற்றால் உள்ளவர்கள் குடிக்க ஏற்றது.

கோஸ் ஓட்ஸ்

தேவையானவை:

ஓட்ஸ் 2 கரண்டி
துருவின கோஸ் 1 கரண்டி
உப்பு


செய்முறை:

துருவின கோஸ் ஐ மைக்ரோ வேவ் பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் வரை தண்ணீர் விட்டு 3 - 5 நிமிஷங்கள் வரை வைக்கவும்.
பிறகு ஓட்ஸ் போட்டு மீண்டும் 3 -5 நிமிடங்கள் வைக்கவும்.
வெளியே எடுத்ததும் நன்கு கிளறி, உப்பு போடவும்.
வேண்டுமானால் தண்ணீர் அல்லது மோர் விட்டுக்கொள்ளவும்
பருகவும்.
சத்தான கஞ்சி தயார் .
மதியம் வரை பசிக்காது.

குறிப்பு: இது போல் காரட் துருவலையும் செயலாம்

ரசம்/குழம்பு ஓட்ஸ்

தேவையானவை:

ஓட்ஸ் 2 கரண்டி
ரசம் அல்லது குழம்பு 1 கரண்டி


செய்முறை:

ஓட்ஸ் ஐ மைக்ரோ வேவ் பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் வரை தண்ணீர் விட்டு 3 - 5 நிமிஷங்கள் வரை வைக்கவும்.
(ஒவ்வொரு ஓவன் ஒரு மாதிரி அதனால் தான் 3 -5 என்றேன். நீங்கள் ஒருநாள் வைத்து பார்த்து பின் உங்களுக்கு தேவையான நேரம் வைத்துக்கொள்ளவும்.)
வெளியே எடுத்ததும் நன்கு கிளறி, ரசமோ குழம்போ விட்டு கலக்கவும்.
வேண்டுமானால் தண்ணீர் விட்டுக்கொள்ளவும்
பருகவும்.
சத்தான கஞ்சி தயார் .
மதியம் வரை பசிக்காது.

குறிப்பு:
வயசானவங்களுக்கு நாம் ஆவாளுக்கு தராமல் ஏதோ சமைத்து சாப்பிடுகிறோம் என்கிற எண்ணம் வரும், அதை தவிர்க்க வே இப்படி புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">வேண்டுமானால் இதுல் மாவடு சாறு, வேற ஏதேனும் ஊருகாய் கூட போடலாம்

ஓட்ஸ் கஞ்சி

இதை பல வழிகளில் போடலாம், ஒவ்வொன்றாக பார்போம.

தேவையானவை:

ஓட்ஸ் 2 கரண்டி
புளிக்காத தயிர் 1 கரண்டி
உப்பு சிறிதளவு

செய்முறை:

ஓட்ஸ் ஐ மைக்ரோ வேவ் பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் வரை தண்ணீர் விட்டு 3 - 5 நிமிஷங்கள் வரை வைக்கவும்.
(ஒவ்வொரு ஓவன் ஒரு மாதிரி அதனால் தான் 3 -5 என்றேன். நீங்கள் ஒருநாள் வைத்து பார்த்து பின் உங்களுக்கு தேவையான நேரம் வைத்துக்கொள்ளவும்.)
வெளியே எடுத்ததும் நன்கு கிளறி, உப்பு தயிர் விட்டு கலக்கவும்.
வேண்டுமானால் தண்ணீர் விட்டுக்கொள்ளவும்
பருகவும்.
சத்தான கஞ்சி தயார்.
மதியம் வரை பசிக்காது புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">

ஓட்ஸ் இல் பலவகை உணவுகள்

"ஓட்ஸ்" சமீபகாலமாக நிறைய பேரின் காலை உணவாக மாறிவருகிறது. சக்கரை நோயாளிகள், இருதய நோயாளிகள், எடை குறைப்பவர்கள் , கர்பிணிகள் என
அனைத்து தரப்பினரும் உபயோகிக்க ஆரம்பித்து விட்டார்கள். பிடித்தோ பிடிக்காமலோ டாக்டரின் அறிவுரை இன் பேரில் சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள்.
நாம் அதையே ஏன் சுவையான உணவாக சாப்பிடக்கூடாது, என யோசித்தத்தான் விளைவு தான் இந்த பதிவு

Thursday, July 28, 2011

கார பட்சணம் செய்ய டிப்ஸ்

கார பட்சணம் செய்ய டிப்ஸ்:

1 நெறைய கார பட்சணம் செய்வதானால், ஒரு பாத்திரத்தில், பிரண்டையை போட்டு தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். உப்பும் போடவும். நன்கு கொதித்ததும் ஆறவைக்கவும். பிறகு வடிகட்டி அந்த நீரை கார பட்சணம் செய்யும்போது மாவு கலக்க உபயோகப் படுத்தவும். அதனால், பட்சணம் அதிக சுவையுடனும் , கரகரப்பாகவும் இருக்கும்.

2 நெய் அல்லது வெண்ணை சொன்ன அளவைவிட சற்று குறைவாக இருந்தால் பட்சணம் கரகரப்பு குறைவாக வரும். அதை தவிர்க்க, நெய் அல்லது வெண்ணையுடன் ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்த்து நன்கு நுரை வரும் வரை தேய்க்கவும். பிறகு அதை மாவுடன் கலக்கவும். பட்சணம் நல்ல 'கரகரப்'பாக வரும்.

3 கார பட்சணம் செய்யும்போது அது கரகரப்பாக வந்ததா என தெரிந்துகொள்வதற்கு (பெருமாளுக்கு படைக்கும் முன் சாப்பிடக் கூடாது )
பட்சணத்தை வெறுமன கிழே போடணும். ( not forcibly ) அது நன்றக உடைந்தால் , கரகரப்பாக உள்ளது என அர்த்தம். புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">

சுவையான 'மிக்ஸ்ர்'

ஒரு பெரிய பேசினில் ,ஓமபொடி, காரா பூந்தி ,கனமான அவல் (வறுத்து), பொட்டுகடலை, வேர்கடலை (வறுத்து தோல் உரித்தது ), முந்தரி பருப்பு (வறுத்து உடைத்து), கோதுமை சிப்ஸ் ',உருளை சிப்ஸ், காரா சேவை அல்லது முள்ளு தேன்குழல்' என் எல்லாவற்றிலும் ஒவ்வொரு கப் எடுத்துக்கொண்டு, கறிவேப்பிலையும் பொறிதுப்போட்டு குலுக்கவும்.
பிறகு உப்பு, மிளகாய்பொடி , மற்றும் பெருங்காயபொடி போட்டு குலுக்கவும்.
சுவையான 'மிக்ஸ்ர்' ரெடி.

தட்டை

தேவையானவை:

1cup அரிசி மாவு ( களைந்து உலர்த்தி அரைத்து )
3sp வெண்ணை
2 -3sp உளுந்து பொடி (வறுத்து அரைத்து )
2 -3sp தேங்காய் துருவல்
2sp கடலை பருப்பு (ஊறவைத்து )
2sp மிளகாய்பொடி
1sp எள்
பெருங்காயம் ஒரு சிட்டிகை
உப்பு
பொரிக்க எண்ணெய்

செய்முறை:

மேல் கூறிய பொருட்களை ஒரு பேசினில் போட்டு, நன்கு கலக்கவும்.
பிறகு சிறிது தண்ணிவிட்டு கெட்டியாக பிசையவும்.
ஒரு பிளாஸ்டிக் கவர் அல்லது வாழை இல்லை துண்டில் எண்ணெய் தடவவும்.
சிறிதளவு மாவு எடுத்து தட்டை போல் தட்டவும்.
அது போல் 4 - 5 தட்டினதும்
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்
தட்டி வைத்துள்ள தட்டைகளை போடவும்.
நிதானமாக திருப்பவும்.
நன்கு வெந்ததும் எடுக்கவும். மொத்த மாவையும் இது போல் செய்யவும்.
கர கரப்பான தட்டை ரெடி.

ரிப்பன் பகோடா

தேவையானவை :

1cup கடலை மாவு
1 1 / 2cup அரிசி மாவு
1sp மிளகாய்பொடி
சோடா உப்பு ஒரு சிட்டிகை
2 -3 sp நெய்
உப்பு
பொரிக்க எண்ணெய்

செய்முறை:

ஒரு பெரிய பேசினில் மாவு,மிளகாய்பொடி,சோடா உப்பு, உப்பு மற்றும் நெய் யை போடவும்.
கைகளால் நன்கு கலக்கவும்.
தண்ணீர் விட்டு நன்கு பிசையவும்.
அடுப்பில் வாணலி போட்டு எண்ணெய் விட்டு, சுட்டதும்,
தேன்குழல் அச்சில், 'நாடா' தட்டு போட்டு , மாவை போட்டு எண்ணெய் இல் பிழியவும்.
நிதானமாக அடுப்பு எரியும்படி பர்த்துக்கவேண்டும்.
சிறிது நேரம் கழித்து திருப்பவும்.
மறுபுறமும் வெந்ததும் எடுக்கவும்.
'ரிப்பன் பகோடா'/'நாடா பகோடா' தயார்.

ஓமபொடி

2 தேவையானவை :

2cup கடலை மாவு
2cup அரிசி மாவு
1sp ஓமம்
2 -3 sp பட்டர் - வெண்ணை
உப்பு
பொரிக்க எண்ணெய்

செய்முறை:

ஓமத்தை அரை மணி தண்ணிரில் ஊறவைக்கவும்.
பிறகு களைந்து, மண், கல் அரித்து நன்றாக அரைக்கவும்.
அரைத்ததை வடிகட்டவும்.
ஒரு பெரிய பேசினில் மாவு,உப்பு மற்றும் வெண்ணையை போடவும்.
கைகளால் நன்கு கலக்கவும்.
வடிகட்டிய நீரைவிட்டு கைகளால் நன்கு பிசையவும்.
அடுப்பில் வாணலி போட்டு எண்ணெய் விட்டு, சுட்டதும்,
தேன்குழல் அச்சில், 'ஓமபொடி' தட்டு போட்டு , மாவை போட்டு எண்ணெய் இல் பிழியவும்.
நிதானமாக அடுப்பு எரியும்படி பர்த்துக்கவேண்டும்.
சிறிது நேரம் கழித்து திருப்பவும்.
மறுபுறமும் வெந்ததும் எடுக்கவும்.
கரகரப்பாக நன்றாக இருக்கும்.

குறிப்பு: நல்ல மஞ்சள் நிறமான 'ஓமபொடி' வேண்டுமானால், 'foodcolours இல் மஞ்சள் கலரை இரண்டு சொட்டு மாவில் விடவும்.
ஓமவல்லி இலைகளை அரைத்தும் வடிகட்டி உபயோகிக்கலாம்.
அல்லது குழந்தைகளுக்கு தரும் 'ஓம வாட்டர் ' இருந்தால் 2 ஸ்பூன் விடலாம்.

மனங்கொம்பு - 'முள்ளு தேன்குழல்'

தேவையானவை :

2 cup அரிசி மாவு
1cup கடலை மாவு
2 -3 sp பட்டர் - வெண்ணை
1 /2sp பெருங்காய பொடி
2 -3 sp எள்
உப்பு
பொரிக்க எண்ணெய்


செய்முறை:

ஒரு பெரிய பேசினில் மாவு,பெருங்காய பொடி, எள் , உப்பு மற்றும் வெண்ணையை போடவும்.
கைகளால் நன்கு கலக்கவும்.
தண்ணீர் விட்டு நன்கு பிசையவும்.
அடுப்பில் வாணலி போட்டு எண்ணெய் விட்டு, சுட்டதும்,
தேன்குழல் அச்சில், 'முள்ளு தேன்குழல்' தட்டு போட்டு , மாவை போட்டு எண்ணெய் இல் பிழியவும்.
நிதானமாக அடுப்பு எரியும்படி பர்த்துக்கவேண்டும்.
சிறிது நேரம் கழித்து திருப்பவும்.
மறுபுறமும் வெந்ததும் எடுக்கவும்.
கரகரப்பாக நன்றாக இருக்கும்.

காரா சேவ்

தேவையானவை :

2 1 /4cup கடலை மாவு
1cup அரிசி மாவு
2 -3 sp பட்டர் - வெண்ணை
2 -3 sp மிளகு சீரகம் (ஒன்று இரண்டாக பொடித்தது )
உப்பு
பொரிக்க எண்ணெய்

செய்முறை:

ஒரு பெரிய பேசினில் மாவு, மிளகு சீரகம், உப்பு மற்றும் வெண்ணையை போடவும்.
கைகளால் நன்கு கலக்கவும்.
தண்ணீர் விட்டு நன்கு பிசையவும்.
அடுப்பில் வாணலி போட்டு எண்ணெய் விட்டு, சுட்டதும்,
தேன்குழல் அச்சில் மாவை போட்டு எண்ணெய் இல் பிழியவும்.
உடனே திருப்பவும் , பிழிந்த மாவு துண்டு துண்டாக ஆகும்.
பவுன் கலர் வந்ததும் எடுத்துவிடவும்.
மொத்த மாவையும் இதுபோல் காரா சேவைகளாக பிழியவும்.

குறிப்பு: பூந்தி கரண்டி போல் 'காரா சேவ்' கரண்டி இருந்தால் அதில் தேய்க்கலாம்.

காரா பூந்தி

தேவையானவை :

2cup கடலை மாவு
2sp அரிசி மாவு
50gms முந்தரி பருப்பு
உப்பு தேவையான அளவு
மிளகாய்பொடி தேவையான அளவு
கறிவேப்பிலை கொஞ்சம்
1 /2sp பெருங்காய பொடி
'baking powder ' - சோடா உப்பு ஒரு சிட்டிகை
பொரிக்க எண்ணெய்

செய்முறை:

முந்தரி பருப்பு தவிர மீதி பொருட்களை நன்கு கலக்கவும்.
தண்ணீர் விட்டு 'தோசை மாவு' பதத்துக்கு கரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் வைத்து சுட்டதும்,
பூந்தி கரண்டி இல் மாவை விட்டு, ஒரு கரண்டியால் தட்டவும்
பூந்திகள் எண்ணெய் இல் தொடர்ந்து விழனும்.
பிறகு பொறித்த பூந்திகளை வடிதட்டில் போடவும்.
இது போல் மொத்த மாவையும் பூந்தி யாக பொரிக்கவும்.
முந்திரியை பொரித்து போட்டு கலக்கவும்.
சுவையான 'காரா பூந்தி ' ரெடி.

குறிப்பு: காரம் அதிகம் வேண்டுவோர் , பொறித்த பூந்தி இல் மீண்டும் உப்பு காரம் போட்டு குலுக்கிய பின் உபயோகிக்கவும்.

'பட்டர் முறுக்கு'

தேவையானவை :

1cup பச்சரிசி மாவு ( களைந்து, உலர்த்தி, பொடித்து சலித்து )
2 -3 sp பட்டர் - வெண்ணை
2 -3 sp தேங்காய் துருவல்
3 sp உளுத்தம் பொடி (வறுத்து அரைத்து )
1sp சீரகம் (சுத்தம் செய்தது )
பெருங்காயபொடி ஒரு சிட்டிகை
உப்பு
பொரிக்க எண்ணெய்

செய்முறை:

மேலே கூறிய பொருட்களை ஒரு பேசினில் போட்டு, நன்கு கலக்கவும்.
சிறிது தண்ணீர் தெளித்து பிசையவும்.
ஒரு 'பிளாஸ்டிக்' கவரிலோ வெள்ளை வேஷ்டியிலோ கொஞ்சம் மாவு எடுத்து
முறுக்கு சுற்றவும்.
எல்லா மாவும் சுற்றிய பின் 4 - 4 ஆக எண்ணெய் இல் போட்டு எடுக்கவும்.
பொன்னிறமாக எடுக்கவும்.
வாயில் கரையும் 'பட்டர் முறுக்கு' தயார். ஜொள்ளு" src="http://r18.imgfast.net/users/1813/71/41/02/smiles/95051.gif" alt="ஜொள்ளு" longdesc="53">

மைதா சிப்ஸ் - 2

தேவையானவை :

2 cup மைதா மாவு
1 /4 cup சன்ன ரவை
1sp மிளகு பொடித்தது
'baking powder ' - சோடா உப்பு ஒரு சிட்டிகை
1 தேக்கரண்டி புளிக்காத தயிர்
4 தேக்கரண்டி உருகின நெய்
7 தேக்கரண்டி வெந்நீர்
உப்பு
பொரிக்க எண்ணெய்

செய்முறை:

ஒரு பெரிய பேசினில் மாவு, ரவை , மிளகு பொடி மற்றும் நெய் யை போடவும்.
கைகளால் நன்கு கலக்கவும்.
அவை மொத்தம் நன்கு கலந்து, 'பிரட் தூள்' போல் இருக்கவேண்டும்.
இதில் புளிக்காத தயிர் + வெந்நீர் விட்டு, நன்கு பிசையவும்.
ஒரு அரை மணி மூடி வைக்கவும்.
பிறகு சப்பாத்தி போல் இட்டு, சின்ன சின்ன 'சதுரங்களாக' வெட்டவும்.
அடுப்பில் எண்ணெய் விட்டு, வெட்டிய துண்டங்களை பொரித்து எடுக்கவும்.
'மைதா சிப்ஸ் ' தயார்.

குறிப்பு: இதை சின்ன சின்ன தட்டை போலவும் செய்து பொரிக்கலாம்.

மைதா சிப்ஸ்

தேவையானவை :

1cup மைதா மாவு
1sp ஓமம்
உப்பு
பொரிக்க எண்ணெய்

செய்முறை:

மாவில், உப்பு + ஓமம் போட்டு, தண்ணீர் விட்டு ரொட்டி மாவு போல் பிசையவும்.
சப்பாத்தி போல் இட்டு, சின்ன சின்ன 'சதுரங்களாக' வெட்டவும்.
அடுப்பில் எண்ணெய் விட்டு, வெட்டிய துண்டங்களை பொரித்து எடுக்கவும்.
'மைதா சிப்ஸ் ' தயார்.

குறிப்பு: ஓமம் விரும்பாதவர்கள் மிளகாய் பொடி போடலாம். அல்லது வெறும் உப்பு போட்டுவிட்டு பொரித்தும் மிளகாய்பொடி + பெருங்காயபொடி போட்டு குலுக்கலாம். அல்லது மிளகு பொடியும் போடலாம்.

கோதுமை சிப்ஸ் கொஞ்சம் 'கலர்' குறைவாக இருக்கும் . இது நல்ல வெள்ளையாய் இருக்கும்.

கோதுமை சிப்ஸ்

தேவையானவை :

1cup கோதுமை மாவு
1sp ஓமம்
உப்பு
பொரிக்க எண்ணெய்

செய்முறை:

மாவில், உப்பு + ஓமம் போட்டு, தண்ணீர் விட்டு ரொட்டி மாவு போல் பிசையவும்.
சப்பாத்தி போல் இட்டு, சின்ன சின்ன 'சதுரங்களாக' வெட்டவும்.
அடுப்பில் எண்ணெய் விட்டு, வெட்டிய துண்டங்களை பொரித்து எடுக்கவும்.
'கோதுமை சிப்ஸ் ' தயார்.

குறிப்பு: ஓமம் விரும்பாதவர்கள் மிளகாய் பொடி போடலாம். அல்லது வெறும் உப்பு போட்டுவிட்டு பொரித்தும் மிளகாய்பொடி + பெருங்காயபொடி போட்டு குலுக்கலாம். அல்லது மிளகு பொடியும் போடலாம்.

'நிஜமான மிக்ஸ்ர்'

'மிக்ஸ்ர்' என்றாலே கலப்பது தான். பின்வருவனவற்றை செய்யாமல் வெளியில் வாங்கியே கலக்கலாம் . ( உண்மையான மிக்ஸ்ர் பிறகு சொல்கிறேன்)

தேவையானவை :

100gms காரா பூந்தி
100gms ஓமபொடி
100gms கனமான அவல் (வறுத்து)
100gms பொட்டுகடலை
100gms வேர்கடலை (வறுத்து தோல் உரித்தது )
50gms முந்தரி பருப்பு (வறுத்து உடைத்து)
50gms உலர் திராக்ஷை
50gms காரசேவ்
உப்பு தேவையான அளவு
மிளகாய்பொடி தேவையான அளவு

செய்முறை:

மேலே சொன்ன பொருட்களை ஒரு பெரிய பேசினில் போட்டு கலக்கவும்.
'மிக்ஸ்ர்' ரெடி.

'அவல் மிக்ஸ்ர்' 2

தேவையானவை :

200gms கனமான அவல்
100gms பொட்டுகடலை
100gms வேர்கடலை (வறுத்து தோல் உரித்தது )
50gms முந்தரி பருப்பு (உடைத்து)
50gms உலர் திராக்ஷை
50gms எள்
25gms சோம்பு
கறிவேப்பிலை கொஞ்சம்
பெருங்காய பொடி - ஒரு சிட்டிகை
மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை
உப்பு தேவையான அளவு
2 - 3 சிகப்பு மிளகாய்
1sp கடுகு
1sp - 2sp எண்ணெய்
1sp சர்க்கரை (பொடித்தது)


செய்முறை:

ஒரு கடாயை சூடுபடுத்தவும்.
அதில் கனமான அவல்/கெட்டி அவலை போட்டு நன்கு வறுக்கவும்.
தனியே வைக்கவும்.
இப்போது எண்ணெய் விட்டு, கடுகு, உடைத்த சிவப்பு மிளகாய் போட்டு நன்கு வறுக்கவும்.
பிறகு சோம்பு, எள், பொட்டுகடலை, வேர்கடலை (வறுத்து தோல் உரித்தது ),முந்தரி பருப்பு (உடைத்து), உலர் திராக்ஷை,கறிவேப்பிலை பெருங்காய பொடி,மஞ்சள் பொடி போட்டு நன்கு வறுக்கவும்.
அடுப்பை சிறிய தணலில் வைக்கவும்.
உப்பு, சர்க்கரை (பொடித்தது) சேர்க்கவும்.
நன்கு கலக்கவும்.
இப்போது தனியே வறுத்து வைத்த அவலை போட்டு நன்கு கலக்கவும்.
அடுப்பை அணைக்கவும்.
சுவையான 'அவல் மிக்ஸ்ர்' ரெடி.

அவல் மிக்ஸ்ர்

தேவையானவை :

200gms மெல்லிய அவல்
50gms கனமான அவல்
50gms பொட்டுகடலை
50gms வேர்கடலை (வறுத்து தோல் உரித்தது )
20gms முந்தரி பருப்பு
20gms உலர் திராக்ஷை
கறிவேப்பிலை கொஞ்சம்
பெருங்காய பொடி - ஒரு சிட்டிகை
மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை
உப்பு தேவையான அளவு
2 - 3 பச்சை மிளகாய் (பொடியாக அரியவும்)
1sp கடுகு
1sp - 2sp எண்ணெய்
1sp சர்க்கரை (பொடித்தது)

செய்முறை:

ஒரு கடாயை சூடுபடுத்தவும்.
அதில் கனமான அவல்/கெட்டி அவலை போட்டு நன்கு வறுக்கவும்.
தனியே வைக்கவும்.
அடுத்தது மெல்லிய அவல் போட்டு வறுக்கவும்.
தனியே வைக்கவும்.
இப்போது எண்ணெய் விட்டு, கடுகு, பொடியாக அரிந்த பச்சை மிளகாய் போட்டு நன்கு வறுக்கவும்.
பிறகு பொட்டுகடலை, வேர்கடலை (வறுத்து தோல் உரித்தது ),முந்தரி பருப்பு (உடைத்து), உலர் திராக்ஷை,கறிவேப்பிலை பெருங்காய பொடி,மஞ்சள் பொடி போட்டு நன்கு வறுக்கவும்.
அடுப்பை சிறிய தணலில் வைக்கவும்.
உப்பு, சர்க்கரை (பொடித்தது) சேர்க்கவும்.
நன்கு கலக்கவும்.
இப்போது தனியே வறுத்து வைத்த அவலை போட்டு நன்கு கலக்கவும்.
அடுப்பை அணைக்கவும்.
சுவையான 'அவல் மிக்ஸ்ர்' ரெடி.

குறிப்பு: உங்களிடம் 'மைக்ரோவேவ் அவன்' இருந்தால், அவலை அதில் வைத்து 1 நிமிடம் சூடுபடுத்தி விட்டு மிக்ஸ்ர்ல் சேர்க்கலாம். அது இன்னும் சுலபம்.

Monday, July 25, 2011

கத்தரிக்காய் எப்படி வாங்குவது ?

அதன் பாவாடை நல்ல பச்சை யாக இருக்கணும். வாடி இருந்தால் அது பழசு. அதை வாங்குவதை தவிர்க்கணும் . பூச்சி இல்லாததாக
பார்த்து எடுக்கணும். காயை தொட்டால் , மெல்ல அமுத்தினால் மெத் என் இருக்கணும். அழுத்தமாக இருந்தால் அதில் விதை இருக்கும் என் அர்த்தம் புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">
அத வாங்காதிங்கோ, சுடும் போது வெடிக்கும் .

பாதுகாப்பது எப்படி?: கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான். காம்பை நறுக்கிவிட்டு வைக்கலாம் . முதலில் இந்த காயை பயன் படுத்திவிடுவது தான் நல்லது. வெகு நாட்கள் தாங்காது.

புடலங்காய் எப்படி வாங்குவது ?

விரல்களால் அழுத்தி பார்க்கணும். "மெத்" என் இருந்தால் புதுசு. கடினமாக இருந்தால் முற்றினது, பழசு. ஃபிரெஷ் புடல் என்றால் நல்ல வாசம் வரும்.

எப்படி பாதுகாப்பது?: முனையும்
காம்பும் நறுக்கி வைக்கலாம். பிளாஸ்டிக் கவரில் போட்டு ஃபிரிஜ் இல் வைக்கலாம் .

முருங்கைக்காய் எப்படி வாங்குவது ?

இளசாக வேண்டும் என்றால், காய் இன் ஒருமுனையை ஒருகையாலும், மறுமுனையை மறு கையாலும் பிடித்துக்கொண்டு , லேசாக முறுக்கி (twist) பார்க்கணும். நன்கு வளைந்தால் இளசு. முற்றியதானால் வளயாது.ஆனால் தொக்கு கிளற, கூட்டு செய்ய முற்றியது தேவைப்படும் , அப்ப அதை எடுத்துக்கலாம்

எப்படி பாதுகாப்பது?: முனையும் காம்பும் நறுக்கி வைக்கலாம் அல்லது சாம்பாரில் போடுவதற்க்கு நறுக்குவது போல் நறுக்கி வைக்கலாம். பிளாஸ்டிக் கவரில் போட்டு ஃபிரிஜ் இல் வைக்கலாம் .

வெண்டைக்காய் வாங்குவது எப்படி?

கை இல் தொட்டால் கெட்டியாக அதே சமயம் பச்சை யாக இருக்கணும். முன்பு காம்பை ஒடித்து வாங்குவார்கள் இப்ப முடியாது புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4"> ஓட்டை இல்லாததாக பார்த்து வாங்க வேண்டும். ஓட்டை இருந்தால் புழு இருக்கும்.

பாதுகாப் பது எப்படி?: ஃப்ரிஜ்ஜில் வைப்பதானால் கழுவாமல், லூஸாக பிளாஸ்டிக் பையில் போட்டு காய்கறி ட்ரேயில் வைக்கவும். ஃப்ரிஜ்ஜில் வைக்கும்போது துளி கூட ஈரம் இருக்கக் கூடாது. ஈரம் இருந்தால் வெண்டைக்காய் அழுகி கொசகொசத்து பூசணம் பூத்துவிடும். சமைப்பதற்கு முன்தான் அலம்ப வேண்டும். சில வகை வெண்டைக்காயில் மெல்லிய பூனைமுடி போல இருக்கும். நன்றாக தேய்த்துக் கழுவி பேப்பர் டவலில் துடைத்துவிட்டு நறுக்கவும். நறுக்கி
தண்ணீரில் போடக்கூடாது. காம்பை நறுக்கி வைப்பதால் காய் முற்றாமல் இருக்கும்.

பாகற்காய் எப்படி வாங்குவது?

பச்சையாக இருக்கணும். தொட்டுப் பார்க்க கெட்டியாக இருக்கணும். வாடிவதங்கி இருக்க கூடாது. அதேசமயம் கெட்டியாக புடைத்துக்கொண்டு விதைகள் தெறிக்கவும் இருக்க கூடாது. வெளி இல் இருக்கும் முட்கள் போன்ற அமைப்பு குறைவாக உள்ளதாக பார்க்கணும். அப்ப கசப்பு குறைவானதாக இருக்கும். கெட்டியாக அதேசமயம் உள்ளே விதைகள் பிஞ்சாக இருந்தால் சமையலுக்கு நல்லது. மஞ்சள் தோல் இருக்கக் கூடாது. ரொம்ப பச்சை யாக இருப்பதும் நல்ல கசப்பாக இருக்கும்.

பாதுகாப்பது எப்படி?: பாகற்காயை 2 நாள் வரை ஃப்ரிஜ்ஜில் வைக்கலாம். அதற்கு மேல் வைத்தால் மஞ்சளாகும். இல்லை ஒரு 4 , 5 நாட்கள் வாக்கணும் எனில் கம்புகளை நறுக்கி வையுங்கள் .அப்போது பழுக்காது. அவ்வப்போது வாங்கி சமைப்பதுதான் சிறந்தது

சர்க்கரை வள்ளிக்கிழங்கு தேர்ந்தெடுப்பது எப்படி?

கையில் எடுத்தால் கனமாகக் கெட்டியாக இருக்க வேண்டும். அமுந்தக்கூடாது . தோல் புள்ளி எதுவும் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும். நுனியில் சுருங்கி இருந்தால் பழசு. அழுகதுவங்கி இருக்கு என் அர்த்தம் அழுகத் தொடங்கிய பகுதியை வெட்டி எறிந்தால் கூட அதன் வாசனை மற்ற இடங்களுக்குப் பரவி இருக்கும். வெளித்தோல் கொஞ்சம் கறுத்திருந்தாலும் கெட்டுப் போய் இதனடியில் உள்ள சதையும் கறுப்பாக மாறியிருக்கும். வாங்கியதும் மண் படிந்திருந்தால், அலம்பாமல் அப்படியே வைய்யவும். ஈரம், கிழங்கை சீக்கிரம் கெடுத்துவிடும். உபயோகிக்கும் முன் சுத்தம் செய்தால் போதும்.

பாதுகாத்தல் எப்படி?: சீக்கிரம் பயன்படுத்தி விடவேண்டிய காய்கறி இது. ஃப்ரீஜ்ஜில் வைத்தால் காய்ந்து போய் ருசியும் குறைந்துவிடும். உருளை வெங்காயம் போல் காற்றாட வைக்கலாம். அல்லது கொஞ்சம் மண்ணை போட்டு அதில் வைக்கலாம் .

பீட்ரூட் வாங்குவது எப்படி?

நல்ல கருஞ்சிவப்பு வண்ணத்தில் தோல் மிருதுவாக, உருண்டையாக, அதன்மேல் வெடிப்புகள் இல்லாமல் இருக்க வேண்டும். பீட்ரூட் வாங்கும் போது இலைகளோடு வாங்குங்கள். இதில் நிறைய சத்துகள் உள்ளன. கீரையாக சமைத்து சாப்பிடலாம். சின்ன காயை வாங்குங்கள். பெரியதாக இருந்தால் முற்றல் அதிகம் இருக்கும். இலைகளை சாப்பிட வேண்டுமானால் இளசாக கரும்பச்சை வண்ணத்தில் இருக்க வேண்டும்.

பாதுகாப்பது எப்படி? : ஃப்ரெஷ்ஷாக இருக்கக் கொஞ்சமாக அவ்வவ்போது வாங்க வேண்டும். சமைக்கும் போது தான் நறுக்க வேண்டும். முன்பே நறுக்கி வைத்தால் சாயம் வடியும். வாங்கியதும் இலைகளை தனியே பிரித்து வைக்கவும். உடனே கழுவாமல் இலையையும், காயையும் தனித்தனி பையில் போட்டு வைக்கவும். இலைகளை ஒன்றிரண்டு நாளில் சமைத்து விடவும். காயை பிளாஸ்டிக் பையில் போட்டு ஃபிரிஜ் இல் 1 வாரம் கூட வைக்கலாம்.

காலிஃபிளவர் தேர்ந்தெடுப்பது எப்படி?

தேர்ந்தெடுப்பது எப்படி?: நல்ல வெள்ளை நிறத்தில் அதை ஒட்டியுள்ள இலை பசுமையாக இருக்க வேண்டும். பூவின் அளவு பெரிதாகவோ சிறியதாகவோ இருக்கலாம். சிலவற்றில் சிறிய பூக்களுக்கு இடையில் இலைகள் வளர்ந்து இருக்கும் இதனால் எந்தக் கெடுதலும் இல்லை. இலையை நீக்கிவிட்டு உபயோகிக்கலாம். தண்டு நடுவிலோ, பூக்களுக்கு இடையிலோ பெரிய பச்சைப் புழு இருக்கும். மொட்டிலேயே உள்ளே போய் இதன் சத்தை சாப்பிட்டு வளரும். பார்க்க சட்டென்று தெரியாது.கூர்ந்து பார்த்தால் புழு இருக்கும் இடத்தைச் சுற்றி கறுப்பு புள்ளிகள் இருக்கும். ஜாக்கிரதை புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">

அப்படியே வாங்கி வந்து விட்டாலும் புழு இருக்கும் பகுதியை நீக்கி விட்டு உபயோகிக்கலாம். சமைப்பதற்கு முன்
பூவை நறுக்கி உப்பு கலந்த வெதுவெது ப்பான நீரில் போட்டு எடுக்கவும். புழுகள் இறந்து வெளியே வந்துவிடும். பூக்கள் மஞ்சளாக இருந்தால் பழசு என்று அர்த்தம்.

பாதுகாப்பது எப்படி?: வெளி இலேயே ஒரு நாள் - 2 நாள் வைக்கலாம் . ஃப்ரிஜ்ஜில் வைக்கும்போது பிளாஸ்டிக் பைகளில் வைக்கக்கூடாது.துணிப்பைகளில் வைக்கலாம் . அடியிலுள்ள கிரிஸ்பரில் வைக்கவும். அதுவும் தண்டுப் பகுதி மேல் பக்கமாக இருக்குமாறு வைத்தால் ஈரம் பூவின் மேல் தங்காது. ஃபிரெஷ் ஆக இருக்கும்.

முழு உளுந்து பொங்கல்

தேவையானவை:

முழு உளுந்து - 1/2 கப்
பச்சரிசி -1 கப்
இஞ்சி (நறுக்கியது) - 1/2 ஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
நெய் - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முழு உளுந்தை அரை மணி நேரம் ஊற வைத்து நன்றாகக் களைந்து எடுக்கவும். அரிசியுடன் சேர்த்து ஒன்றுக்கு 3 பங்கு தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். ஆறியதும், உப்பு போட்டு நன்றாகக் கலக்கவும்.
கடாயில் நெய் விட்டு பொடித்த மிளகு, சீரகம் தாளித்து அதில் நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து பொங்கலில் விட்டு நன்றாகக் கலக்கி பரிமாறவும்.
இதுவும் பெண் குழந்தைகளுக்கு ஏற்றது.

உளுத்தங்களி 3

தேவையானவை:

சிகப்பு அரிசி 2 கப் - வறுத்து அரைக்கவும்
உளுத்தம் பருப்பு - 3 /4 கப் - - வறுத்து அரைக்கவும்
பயற்றம் பருப்பு - 1 /2 கப் - வறுத்து அரைக்கவும்
சர்க்கரை - 2 கப்
நெய் - கொஞ்சம்
ஏலப்பொடி - கொஞ்சம்
தேங்காய் பால் - 1 கப்

செய்முறை:

உருளியில் தேங்காய்பால், சர்க்கரை ஏலப்பொடி போட்டு ஒரு கொதி விடவும்.
அடுப்பை சின்னதாக்கி விட்டு , எல்லா மாவையும் போட்டு நெய் விட்டு
கிளறவும்.
நன்றாக 'பந்து' போல் வந்ததும் இறக்கவும்.

குறிப்பு: பூப்பெய்தும் பெண்குழந்தைகளுக்கு தினமும் உளுத்தங்களி சாப்பிட கொடுப்பது வழக்கம் உளுத்தங்களியில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம்,வைட்டமின் ஆகிய பலசத்துகள் அடங்கியுள்ளது. அத்துடன் உளுத்தங்களியை கொடுப்பதால் அவர்களின் இடுப்பெலும்பு கள் வலுவாகும்.

உளுத்தங்களி 2

தேவையானவை:

முழு உளுத்தம் பருப்பு - 1/4 கிலோ
சர்க்கரை - 150 கிராம்,
ஏலக்காய் - 5,
தேங்காய் - 1 மூடி,
நெய் - 4 ஸ்பூன்.

செய்முறை:

உளுத்தம்பருப்பை நன்கு சிவக்க வறுக்கவும். மெஷினில் நைசாக அரைக்கவும்.
தேங்காயை துருவி 2 டம்ளர் பால் எடுக்கவும். தேங்காய் பாலை அடுப்பில் வைத்து, சர்க்கரை சேர்த்து கரைய விடவும்.
சர்க்கரை கரைந்தவுடன் உளுத்தம் மாவை கட்டியில்லாமல் தூவி கிளறவும்.
ஏலக்காயை பொடி செய்து தூவி நெய் ஊற்றி கிளறி அல்வா பதம் போல் வரும் போது இறக்கவும்.
சுவையான உளுத்தங்களி தயார்.

உளுத்தங்களி

உளுத்தங்களி, உளுத்தங்க கஞ்சி எல்லாமே குருக்க்கு (இடுப்புக்கு நல்லது)
உளுந்து சுண்டல், உளுந்து வடையும் சாப்பிடலாம்.

தேவையானவை:

தோலுடைய முழு உளுத்தம் பருப்பு - 1 1/4 கப்
பனை வெல்லம் - 200 கிராம்
நெய் 100 கிராம்
ஏலக்காய் தூள் - அரை தேக்கரண்டி
தண்ணீர் - அரை லிட்டர்

செய்முறை:

உளுந்தை சிவக்க வறுத்து நன்கு பவுடராக அரைத்து சலித்து கொள்ளவும். ஒரு உருளியில் தண்ணீர் ஊற்றி பனை வெல்லத்தை இடித்து கரைத்து தெளிய வைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
பின் உளுந்து மாவில் கலந்து கட்டியில்லாமல் கரைத்து அடுப்பில் வைத்து கரண்டியால் கிளறிக்கொண்டே இருக்கவும்.
சுருண்டுவரும் பதம் வந்ததும் நெய், ஏலக்காய் தூள் சேர்த்து சிறிது நேரம் கிளறி இறக்கவும்.

குறிப்பு: சிலர் நல்லெண்ணெய் விட்டும் செய்வார்கள்.

கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்..2

கோடை இல் நிறைய பேர் அவதிப்படுவது நீர்சுருக்கு எனப்படும் நோயால். அதாவது
சிறுநீர் வரும் போல் இருக்கும் ஆனால் நன்றாக பெருகி வராது . அதற்க்கு கைகண்ட மருந்து இதோ . ஒரு மிளகு அளவு சுண்ணாம்பை ( நாம் வெற்றலை போட உபயோகிப்ப்மே அது தான் ) எடுத்து அரை டம்ளர் தண்ணீரில் போட்டு கரைத்து குடித்துவிடவும் , சில நிமிடங்களிலேயே உங்கள் தொல்லை போயே போச்.

கோடை இல் சரும வியாதிகள் வர்ரமல் தடுக்க , ஒரு கை வேப்பிலையை (சுத்தம் செய்து ) ஒரு பக்கெட் தண்ணீரில் இரவே போடவும். காலை இல் அந்த தண்ணீரில் குளிக்கவும்.

வியர்வை யால் வரும் துர்நாற்றத்தை போக்க குளிக்கும் நீரில் சில துளி "யூடிகலோன் " அல்லது சில சொத்துகள் எலுமிச்சை சாறு கலக்கலாம்.

வியர்க்குரு வந்து விட்டால் அதன்மேல் தண்ணியாக கரைத்த சந்தனம் பூசலாம் அல்லது நுங்கின் உள்ளிருக்கும் நீரை தடவலாம் .

உடல் குளுமைக்கு வெட்டிவேர் போட்ட நீரை வறுகலாம். வெட்டிவேரை ஒரு வெள்ளை துணி இல் முடிந்து பானை நீரில் போடவும். தண்ணீரும் நல்ல மணமாக இருக்கும், உடலுக்கும் நல்லது + குளுமை.

வீட்டு ஜன்னல் மற்றும் வாசல் படிகளில் வெட்டிவேர் தட்டிகளை போடலாம். அதில் தண்ணீர் தெளித்தால், நல்ல மனமாகவும் வீடு குளுமயாகவும் இருக்கும்.

ரொம்ப உடல் சூட்டால் அவதி படுபவர்கள் தலைக்கு விளக்கெண்ணை கூட வைத்துக் கொள்ளலாம்.

மேலும் சோம்பு ஜலம் வைத்து சாப்பிடலாம்

கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்..

வெயீல் கொளுத்துகிறது; அதிலிருந்து தப்பிக்க சில டிப்ஸ் இங்கே புன்னகை

நிறைய குளுமயான பொருட்களை சாப்பாட்டில் சேர்க்கவும். அதாவது வெள்ளரி, பூசணி, பரிங்கி, சௌ சௌ போன்ற நீர் காய்களை யும், தர் பூசணி , கிர்ணி , வெள்ளரிப்பழம் போன்ற பழங்களையும் சேர்க்கலாம்.

மசாலா அதிகம் சேர்க்காத சாப்பாட்டை சாப்பிடவும்.

நீர்மோர், இளநீர் , பழரசங்கள் பருகவும். ரொம்பவும் அதிகம் பருகவேண்டியது குளிர்ந்த நீர் புன்னகை

உடல் ரொம்ப சூடாகிவிட்டால் , வாழைப்பழம் + பால் + சர்க்கரை சேர்த்து மிக்சி ல அரைத்து குடிக்கவும். உடலுக்கு ரொம்ப குளுமை.

பிடித்தவர்கள் போகவர சோம்பு சாப்பிடலாம். அதுவும் உடலுக்கு குளுமை.

தலைக்கு தவறாமல் எண்ணை தடவவும். எண்ணை தேய்த்து குளிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதை செயலாம்.

கைக்கு மருதாணி இட்டுக்கொள்ளல்லாம், அதுவும் குளுமை.

இரவே ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் ஊற போட்டுவிட்டு காலை அதை அரைத்து தலை இல் வைத்துக்கொண்டு ஒரு 10 -15 நிமிட்ங்கல் ஊறி குளித்தால் தலை முடிக்கும் நல்லது, உடலுக்கும் ரொம்ப குளுமை.

அதேபோல் வெந்தயத்தை எவ்வளவுக்கு எவ்வளவு சாப்பாட்டிட்டில் செக்கிறோமோ அவ்வளவு நல்லது.

கறைகளை நீக்குவதற்க்கு முன்

கறை பட்டவுடன் கழுவினால் கறைகள் மறைந்துவிடும். ஆனால் பல சமயங்களில் கறைகளை நீக்குவது அவ்வளவு சுலபமில்லை. இதற்குத் தனி கவனம் தேவைப்படுகிறது.

கறைகளை நீக்குவதற்கு முன் செய்ய வேண்டியவை, துணிகளை ஊற வைப்பதற்கான குறிப்புகள் ஆகியவற்றை கீழே காணலாம்.

கறைகளை நீக்குவதற்கு முன்:

மறக்காதீர்கள்! கறைகள் பட்டவுடன் உடனடியாக அதை நீக்கினால் அவை முழுமையாக மறையும் வாய்ப்புண்டு.

உங்கள் உடையின் பாதுகாப்பு விதிகளைப் படித்து கறைகளை நீக்கும் போது உடைகளுக்கு ஏதேனும் சேதம் ஏற்படுமா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் உபயோகிக்கும் சோப் உங்கள் துணிகளுக்கு ஏற்றதா என்பதை சரி பார்த்து உபயோகிக்க வேண்டும்.

டிட்டர்ஜண்ட், சோப் ஆகியவற்றில் உள்ள குறிப்புகளையும் மறக்காமல் படிக்கவும்.

உங்கள் துணிகளின் நிறம் போகாமல் இருக்குமா என்பதை சரி பார்க்கவும்.

கம்பளி, பட்டு உடைகளுக்கு ப்ளீச் அல்லது ப்ளீச் அடங்கிய டிட்டர்ஜெண்ட் உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.

அதிகமாக கறை படிந்த துணிகளை ஊற வைத்துத் துவைக்க வேண்டும்.

ஊற வைப்பதற்கு முன் கவனிக்க வேண்டியவை:

உடையின் சாயம் மாறுமா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

பட்டு, கம்பளி, தோல் மற்றும் உலோகத்தாலான பொருட்கள் இல்லாத ஆடைகளாக இருக்க வேண்டும்.

சோப் அல்லது டிட்டர்ஜெண்ட் முழுமையாக கரைந்து விட்டதா என்று சரி பார்க்கவும்.

தண்ணீரின் வெப்பத்தை உடை தாங்குமா என்று சரி பார்க்கவும்.

உடைகள் அளவுக்கு அதிகமாக கசங்கிவிடாமல் பார்த்துக் கொள்ளவும்.

வெள்ளைத் துணிகளை வண்ணத் துணிகளோடு கலந்து ஊற வைக்காமல் தனியாக ஊற வைக்கவும்.

உடைகளின் சாயம் மாறுமா?

உடைகளின் சாயம் போகுமா இல்லையா என்று சந்தேகமாக இருந்தால், துணியின் ஒரு சிறிய பகுதியை நனைத்து, அதன் மேல் வெள்ளை துணி அல்லது டிஷ்ஷு பேப்பர் வைத்து அய‌ர்‌ன் ப‌ண்ணவு‌ம். துணியின் நிறம் அதில் பட்டால் துவைக்கும் போது சாயம் அவசியம் போகும்.

சாயம் போகும் துணிகளை எப்படித் துவைப்பது?

ஊற வைக்காமல், தனியாக குளிர்ந்த நீரில் துவைக்க வேண்டும்.

சாயம் மாறும் துணிகளை வீட்டில் துவைக்காமல் டிரை கிளீனிங் செய்யலாம்.

உங்கள் வீட்டின் துணிகள் கறையின்றி பளிச்சிட மேலுள்ள குறிப்புகளை மறக்காமல் பின்பற்றுங்கள்.

கறைகளை நீக்க

கா‌பி, டீ கறைகள் பட்டவுடன் சோப்பு அல்லது டிட்டர்ஜெண்ட்டால் கழுவி விடவும். வெள்ளை துணியாக இருந்தால் பிளீச் அல்லது பேகிங் சோடாவை கறையின் மீது தேய்த்து கறைகளை நீக்கலாம்.

சூயிங் கம் கறையை நீக்க:

சூயிங் கம் பட்ட உடையை ஒரு பையில் போட்டு, ஃப்ரீஜரில் ஒரு மணி நேரம் வைக்கவும். இதனால் சூயிங் கம் கெட்டியாகிவிடும். இப்போது இதை எளிதில் உடைத்து எடுத்துவிடலாம்.

எப்போதும் போல் துவைத்து முழுமையாக சுத்தம் செய்துவிடலாம்.

சாக்லேட் கறையை நீக்க:

துணியில் பட்டுள்ள சாக்லேட்டை முதலில் நீக்கவும். பிறகு வெதுவெதுப்பான சோப்பு நீரால் கறையை தேய்த்து சுத்தம் செய்யவும். சாக்லேட் கறை மறைந்துவிடும்.

பழக் கறையை நீக்க:

உடனடியாக துவைக்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு உப்பை கறையின் மேல் தேய்த்து கழுவவும்.

காய்ந்த கறைகளை நீக்க க்ளிசரின் (மருந்து கடைகளில் கிடைக்கும்) மற்றும் வெதுவெதுப்பான நீரை சமமான அளவில் கலந்து கறையில் தேய்த்து கழுவவும். அல்லது தண்ணீரில் துணியை ஊரவைத்து, கறையில் உப்பைத் தேய்த்து அதன்பின் கழுவவும்.

லிப்‌ஸ்டிக் கறையை நீக்க:

சிறிதளவு டூத்பே‌ஸ்ட்டை கறையின் மீது தடவி தேய்த்தால் லிப்‌ஸ்டிக் கறை மறையும். பிறகு எப்போதும் போல் துணியை துவைக்கலாம்.

அல்லது பெட்ரோலியும் ஜெல்லியால் தேய்த்தும் இந்த‌க் கறையை நீக்கலாம்.

பீர் கறையை நீக்க:

வினிகருடன் வெதுவெதுப்பான நீரை கலந்து, பீர் கறையின் மேல் தடவவும். சிறிது நேரத்திற்கு பிறகு டிட்டர்ஜேண்ட்டால் துவைக்கவும். கறை நீங்கும்.

பிரட் ஹல்வா 2

தேவையானவை:

மில்க் பிரட்10 ஸ்லைஸ்
மில்க் மெய்டு 1/2 டின்
நெய் 1 – 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி துண்டுகள் 1 டேபிள் ஸ்பூன்
திராக்ஷை 10 – 12

செய்முறை:

முதலில் பிரட் ன் ஓரங்களை நிக்கிவிடுங்கள்.
பிரட் ஐ மிச்சி இல் ஒரு சுட்டறு சுற்றி எடுங்கள்.
பூந்துருவலாக வரும்.
வாணலி இல் நெய் விட்டு முந்திரி திராக்ஷை வறுக்கவும்.
அடுப்பை சின்னதாக்கி விட்டு பிரட் துருவலை போடவும்.
ஒரு கிளறு கிளறி மில்க் மெய்டு செக்கவும்.
நன்கு கிளறி மிதி ஒரு ஸ்பூன் நெய் யையும் விட்டு இறக்கிவிடவும்.
அவ்வளவு தான் சுவையான ‘பிரட் ஹல்வா’ நிமிடத்தில் தயார்.

குறிப்பு: மில்க் மெய்டு சேர்ப்பதால் சர்க்கரை மற்றும் பால் வேண்டாம்

பிரட் சக்கரை தூவினது

தேவயானவை:

4 பிரட் ஸ்லைஸ்
3 ஸ்பூன் நெய்
2 ஸ்பூன் சக்கரை

செய்முறை:

பிரட் ஐ சிறிய துண்டங்களாக்கவும் .
வாணலி இல் நெய் விட்டு பிரட் துண்டங்களை நல்ல ‘மெத்’ என சிறிய தீ இல் வைத்து வறுக்கவும்.
சக்கரையை தூவி இறக்கவும்.
அவ்வளவு தான். ருசியோ ருசி.

மிளகு ரசம்

இப்ப மிளகு ரசம் வைப்பதை பார்போம்.

தேவையானவை:

ரசப்பொடி 1 – 1 1/2 ஸ்பூன்
புளி பேஸ்ட் 1 – 1 1/2 ஸ்பூன்

தாளிக்க:

கடுகு 1/2 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
தக்காளி 1 ( விதைகள் நீக்கவும்)
மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன்
பொருங்காய பொடி 1/4 ஸ்பூன்
உப்பு
கறி வேப்பிலை 1 கை
2 டீ ஸ்பூன் மிள்கு உடைத்த்து
1 ஸ்பூன் துவரம் பருப்பு உடைத்த்து
நெய் 2 ஸ்பூன்

செய்முறை :

வாணலி il நெய்விட்டு கடுகு சீரகம் தாளிக்கவும்.
1 டம்பளர் தண்ணீர்விட்டு புளி பேஸ்ட் ஐ போட்டு கரைக்கவும்
நறுக்கி வைத்துள்ள தக்காளி மட்டும் கறிவேப்பிலை போடவும்
உப்பு போடவும்.
நன்கு கொதிக்கும் வரை பொறுக்கவும்.
ஒரு 7 -8 நிமிஷம் கொதித்ததும் உடைத்து வைத்துள்ள மிளகு மற்றும் துவரம் பருப்பை போடவும்.
மீண்டும் அது கொதிக்கட்டும், ஒரு 4 -5 நிமிடம் கழித்து 1 டம்ப்லர் தண்ணீர் விடவும்
அது ஒரு கொதி வந்த தும் அடுப்பை அணைக்கவும் .
உங்களது மிளகு ரசம் தயார்.
சூடு சாதத்தில் நெய் விட்டு ரசம் விட்டு சாப்பிடவும்.
வேண்டுமானால் சூப் போல ஒரு கப் குடிக்கலாம்.

குறிப்பு: ரசம் நாங்க ஈய பாத்திரத்தில் தான் செய்வோம். அது எல்லோரிடமும் இருக்காது என்று தான் நான் வாணலி என்று சொன்னேன். ஈய சோம்பு இருந்தால் அதில் வைக்கும் ,சர்ற்றமுது (நாங்க ரசத்தை அப்படித்தான் சொல்வோம் புன்னகை" longdesc="4" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை"> ) கு ஈடு இணை இல்ல. ஆனால் ஈய சொம்பை அப்படியே அடுப்பில் வைக்க கூடாது. உருகிவிடும். புளி தண்ணி விட்டு தான் வைக்கணும். வேற வாணலி இல் தாளித்தம் செய்து அதில் கொட்டனும். மேலும் ஈய சொம்பில் எவ்வளவு திரவம் இருக்கோ அது வரை தான் தீ இருக்கணும் இல்லாட்டா உருகிடும். ஜாக்கிரதையாக கையாளனும் அந்த சொம்பை புன்னகை" longdesc="4" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை">

மிளகு டீ

மிளகு டீ – இது ரொம்ப சுலபம்.

தேவையானவை :

1 டீ ஸ்பூன் டீ
1/2 ஸ்பூன் உடைத்த மிளகு
சர்க்கரை
பால்

செய்முறை:

ஒரு வால் பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும் .
அது கொதிக்கும் போது டீ யை போடவும்.
2 நிமிடம் கழித்து மிளகை போடவும்.
மீண்டும் நன்கு கொதித்ததும் பாலை விட்டு ஒரு கொதி வந்ததும் தம்ளரில் டீ வடிகட்டியால் , வடிகட்டவும்.
சர்க்கரை சேர்க்கவும் .
இதை குடித்ததுமே உங்கள் “தலைகனம்” இறங்குவதை உணரலாம்.
முக்கடைப்பும் குறையும்.
அற்புதமாக இருக்கும்.
மழை காலங்களில் சாதாரணமாக கூட இதை குடிக்கலாம்.

குறிப்பு: சிலர் பாலில் டீ போடுவார்கள், இதில் மிளகு போடுவதால் சில சமயம் திரிய வாய்ப்புண்டு அதனால் கடைசி இல் விட்டால் போதுமானது.


பூண்டு ரசம்

மிளகு ரசத்திலேயே சிலர் பூண்டும் தட்டி போடுவார்கள் அப்படியும் செயலாம் அல்லது இப்படி தனியாகவே பூண்டு உரித்து போட்டும் செயலாம். எப்படி செய்தாலும் சாப்பிட்டதும், கண்ணிலிருந்தும் மூக்கிலிருந்தும் ஜலம் வரணும், அது தான் கணக்கு , சரியா?

தேவையானவை :

கண்டத்திப்பிலி 2 ஸ்பூன் ( நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும – மைலாபூர் “டப்பா செட்டி கடை” ல கிடைக்கும் )
குண்டு மிளகாய் 2 -4
மிளகு 2 ஸ்பூன்
துவரம் பருப்பு 1 ஸ்பூன்
தனியா 1 – 2 ஸ்பூன்
புளி பேஸ்ட் 1 -1 1/2 ஸ்பூன்
நெய் 2 ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
வேகவத்த துவரம் பருப்பு 1/2 கப்
அல்லது துவரம் பருப்பு வேகவைத்த ஜலம் 1 கப்
உரித்த பூண்டு 1 கை நிறைய

செய்முறை:

ஒரு வாணலி இல் 1 ஸ்பூன் நெய் விட்டு, கண்டத்திப்பிலி, மிளகாய் ,மிளகு, துவரம் பருப்பு, தனியா எல்லாம் போட்டு வறுக்கவும்.
அதே வாணலி இல் மீதி நெய் யை விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து , பூண்டை நன்றாக வதக்கவும்
அதிலிருந்து ஒரு 10 பல் பூண்டு எடுத்து , வறுத்து வைத்துள்ள பொருட்களுடன் போட்டு , ஆறினதும் நல்ல விழுதாக தண்ணீர் விட்டு அரைக்கவும்
பூண்டு வதக்கிய வாணலி இல் 1 டம்ப்லர் தண்ணீர் விட்டு புளி பேஸ்ட் ஐ போடவும்.
நன்கு கலக்கவும் , நன்கு கொதிக்க விடவும்.
பூண்டு நன்கு வெந்ததும், அரைத்துவைத்துள்ளதை கொட்டவும்
மீண்டும் கொதிக்க விடவும்.
பருப்பை கரைத்துவிடவும அல்லது பருப்பு ஜலம் விடவு.
மீண்டும் நன்கு கொதித்ததும் இறக்கவும்
ரொம்ப வாசனையாக சூப்பராக இருக்கும்.
நல்ல சூடு சத்தத்தில் நெய் விட்டு இந்த பூண்டு ரசமும் விட்டு சாப்பிடணும்.
நல்ல தளர பிசையுங்கோ.
வேண்டுமானால் 1 கப் ரசம் குடியுங்கோ ரொம்ப நல்லது.

குறிப்பு: இதற்க்கு பருப்பு துவையல் செய்தால் தொட்டுக்கொள்ள நல்லா இருக்கும் . மிளகு அதிகமாய் மிளகாய் குறைவாய் இருக்கணும். சில பேர் பருப்புடன் பூண்டையும் வேக வெச்சுடுவா, அப்படி செய்தால் பூண்டு ரொம்ப குழியந்துவிடும் . இப்படி வதக்கி போட்டால் நல்லா கண்ணுக்கு தெரியும், கரண்டியால அரித்து போட்டுக்கலாம்

சூட்டில் சளி

முதலில் எப்படி கண்டுபிடிப்பது ? கண்ணு எரியும், தொண்டை கர கரக்கும், தலை இல் எண்ணை வைத்து அழுந்த தேத்தால சூடு பறக்கும், வறட்டு இருமல் இருக்கும்,
சில சமையம் அடி வயிறு வலிக்கும், ‘ஒன்றுக்கு’ போனால் எரியும் அல்லது கொஞ்சமாக நீர் கடுப்புபோல் அளவு குறைவாக போகும்

அப்படி இருந்தால், செய்ய வேண்டியவை, நல்ல எண்ணை தேய்த்து குளிக்கணும், நிறைய மோர் குடிக்கணும், தயிர் சாதம் நரத்தங்கை தொட்டுண்டு சாப்பிடணும், இஞ்சி டீ குடிக்கலாம், சோம்பு ஜலம் குடிக்கலாம், பனங்கல்கண்டு ஜலம் குடிக்கலாம்,
பனம் வெல்லத்தில் ஏதாவது பண்ணி சாப்பிடலாம். ஆக மொத்தத்தில் குளுமைக்கு சாப்பிடணும்.

எல்லாத்தைவிட ரொம்ப ரொம்ப சிறந்த து, வாழைப்பழ மில்க் ஷேக் அது குடித்தால் ஒரே வேளை இல் சரியாகிவிடும்.

சேர்க்க வேண்டிய காய்கறிகள், பூசணி, சௌ சௌ , பரங்கி, சூறை போன்ற நீர் காய்கறிகள், வெந்தயம் , வெந்தய கீரை, பசும்பால் போன்றவை .

குளுமையால சளி என்றால்….

முதலில் சளி , ஜுரத்துக்கு என்ன சாப்பிடலாம் என்ன கூடாது என பார்போம். சாதாரணமாக எல்லோருக்கும் சளி பிடிக்கும் , அது உடம்பு சூட்டாலா அல்லது குளுமையாலா என முதலில் தெரிந்து கொள்ளனும்.

குளுமையால சளி என்றால் தலை கனக்கும், கழுத்து , அள்ளை பக்கம் வலிக்கும். மூக்கில் சளி வரும். அப்ப என்ன சாப்பிடணும் என்றால், மிளகு சீரக ரசம், பூண்டு ரசம், மிளகு குழம்பு, மிளகு டீ என மிளகு அதிகம் சேர்த்துகனும்.

இதுக்கு ரூல் என்ன வென்றால், “சளி பிடித்தால் வயிறு முழுக்க சாப்பிட்டுவிட்டு நல்ல தூங்கணும். ஜுரம் வந்தால் “லங்கனம் பரம ஔஷதம் “ அதாவது சாப்பிடாமல் பட்டினி போடணும்” என்பா என் பாட்டி .

நல்லா விக்க்ஸ் வேடு பிடிக்கலாம், உடல் சூடுதரும் பண்டங்களை சாப்பிடலாம். அதாவது அத்திபழம் – இதை சூடு நீரில் ஊறவைத்து சாப்பிடலாம். பப்பாளி சாப்பிடலாம். கேழ்வரகால் ஆன பண்டங்களை சாப்பிடலாம்.

தவிர்க்க வேண்டியவை: குளுமையான கறிகாய்கள், அதாவது பூசணி, சௌ சௌ,
சுரைக்காய், வெந்தய கீரை போன்றவை. மற்றும் சோம்பு, பனம் கல்கண்டு , பனை வெல்லம். (சாதாரண வெல்லம் சூடு , ஆனா பனை வெல்லம் குளுமை புன்னகை" longdesc="4" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை"> )

ராயல் மிக்ஸர்

தேவையானவை :

500 gms கார்ன் ப்ளகேஸ் (cornflakes ) plain
150 gms முந்தரி பருப்பு
150gms பாதாம்
100gms உலர் திராக்ஷை
1sp சர்க்கரை
1sp மிளகாய் பொடி
1 /2sp உப்பு
கறிவேப்பிலை கொஞ்சம்
1 தேக்கரண்டி எண்ணை

செய்முறை:

பாதாமை தண்ணிரில் 15 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும்.

முந்திரியை சரிபாதியாக உடைதுவைத்துக்கொள்ளவும்.

ஊரிய பாதாமை தோல் உரித்து, சரிபாதியாக உடைதுவைத்துக்கொள்ளவும்

கறிவேப்பிலை, உலர் திராக்ஷை யை அலம்பி துடைக்கவும்.

அடுப்பை பற்றவைக்கவும் .

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, முந்தரி பருப்பு, பாதாம், கறிவேப்பிலை, உலர் திராக்ஷை எல்லாவற்றையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு பொரிக்கவும்.

தீயை குறைத்து கார்ன் ப்ளகேஸ் (cornflakes ) போடவும். நன்கு வறுக்கவும்.

அடுப்பை அணைக்கவும்.

இப்பொழுது உப்பு, சர்க்கரை,மிளகாய் பொடி சேர்த்து நன்கு கலக்கவும்.

‘ராயல் மிக்ஸ்ர்’ ரெடி.

Friday, July 22, 2011

இஞ்சி டீ

இஞ்சி டீ - இது ரொம்ப சுலபம் :)

தேவையானவை :

1 டீ ஸ்பூன் டீ
1/2 ஸ்பூன் துருவின இஞ்சி
சர்க்கரை
பால்

செய்முறை:

ஒரு வால் பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும் .
அது கொதிக்கும் போது டீ யை போடவும்.
2 நிமிடம் கழித்து துருவின இஞ்சி போடவும்.
மீண்டும் நன்கு கொதித்ததும் பாலை விட்டு ஒரு கொதி வந்ததும் தம்ளரில் டீ வடிகட்டியால் , வடிகட்டவும்.
சர்க்கரை சேர்க்கவும் .
அற்புதமாக இருக்கும்.
மழை காலங்களில் சாதாரணமாக கூட இதை குடிக்கலாம்.

குறிப்பு: சிலர் பாலில் டீ போடுவார்கள், இதில் துருவின இஞ்சி போடுவதால் சில சமயம் கசக்க வாய்ப்புண்டு அதனால் கடைசி இல் விட்டால் போதுமானது.

பனங்கல்கண்டு ஜலம்

சோம்பு பிடிக்காத வா இதை குடிக்கலாம் :)

தேவையானவை:

நெய் 2 ஸ்பூன்
4 டம்ளர் தண்ணீர்
பனம் கல்கண்டு 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

ஒரு வாணலி இல் 4 டம்ளர் தண்ணீரை விடவும்
பனம் கல்கண்டை போடவும்
அது கொதித்து கொதித்து 1 1/2 டம்ளராக ஆனதும் .
அடுப்பை அணைக்கவும்.
கொஞ்சம் ஆறினதும் வடிகட்டி , மீதி நெய் சேர்த்து பருகவும்.

குறிப்பு: நெய் ஜலத்தில் விட்டதும் உருகனும், அந்த அளவுக்காவது சூடு இருக்கணும்.

சோம்பு ஜலம்

தேவையானவை:

சோம்பு 2 டேபிள் ஸ்பூன்
நெய் 2 ஸ்பூன்
4 டம்ளர் தண்ணீர்
பனம் கல்கண்டு 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

ஒரு வாணலி இல் சோமபை சுத்தம் செய்து போடவும்.
1 ஸ்பூன் நெய் விட்டு பொன் வறுவலாக வறுக்கவும் .
நல்ல மணம் வரும், அப்ப 4 டம்ளர் தண்ணீரையும் விடவும்
அடுப்பை நிதானமாக எரியாவிடவும்
அது கொதித்து கொதித்து 1 1/2 டம்ளராக ஆனதும் பனம் கல்கண்டை போடவும்.
மீண்டும் கொதித்ததும் அடுப்பை அணைக்கவும்.
கொஞ்சம் ஆறினதும் வடிகட்டி , மீதி நெய் சேர்த்து பருகவும்.

குறிப்பு: நெய் சோம்பு ஜலத்தில் விட்டதும் உருகனும், அந்த அள்வுக்காவது சூடு இருக்கணும்.

வாழைப்பழ மில்க் ஷேக்

தேவையானவை:

நல்ல கனிந்த வாழைப்பழம் 2 (பொதுவாக கற்பூர வாழை ரொம்ப குளுமை அது கிடைத்தால் ரொம்ப நல்லது )
பால் 1 கப்
சக்கரை தேவையான அளவு
தேவைப்பட்டால் ஏலப்பொடி அல்லது எசன்ஸ்

செய்முறை:

எல்லாவற்றையும் மிக்ஸில போட்டு அடிக்கவேண்டியது தான்.
உடனே குடிக்க வேண்டியது தான் ;) ;) ;)

வெந்தய பொடி

இது நாம் செய்யும் எல்லா குழம்புகளுக்கும் வேண்டும். என்னதான் குழம்பு பொடி செய்யும் போது வெந்தயம் போட்டு அரைத்தாலும் , மேலுக்கு இதையும் போடணும் அப்ப தான் குழம்பு மணக்கும். தினமும் குழம்பு செய்யும் முன் வறுத்து பொடித்து போடணும். முடியாதவர்கள் 1 வாரம் 10 நாளுக்கு சேர்த்து வறுத்து அரைத்து வைத்து கொள்ளலாம் .

எல்லா ஊருகாய் களுக்கும் இது தேவைப்படும்.

தக்காளி சாதம், கத்தரிக்காய் சாதம், புளியோதரை போன்ற கலந்த சாதங்களுக்கும் பயன்படும்.

100 கிராம் வெந்தயத்தை எடுத்து சுத்தம் செய்யவும்.
வரட்டு வாணலி இல் போட்டு நல்ல சிவப்பாக கருகாமல் வறுக்கவும்.
நல்ல மணம் வந்ததும், ஒரு தட்டில் கோட்டவும்.
ஆறினதும் மிக்ஸில பொடிக்கவும்
பாட்டிலில் போட்டு வைக்கவும்.
தேவைப்படும் போது உபயோகிக்கவும்.

கரம் மசாலா பவுடர்

தேவயானவை:

தனியா 50 கிராம்
மிளகு 20 கிராம்
பட்டை 20 கிராம்
சீரகம் 15 கிராம்
பெரிய ஏலக்காய் 15 கிராம்
கிராம்பு 10கிராம்
சிறிய ஏலக்காய் 10 கிராம்
பிரிஞ்சி இலை 10 கிராம்

செய்முறை :
எல்லாவற்றயும் லேசாக வறுத்து பொடிக்கவும்.
Microwave வில் சுட வைத்தாலும் போரும்.
காற்று புகாமல் முடி வைத்து உபயோகப்படுத்தவும்.

கறிப்பொடி

பலசுவைகளில், பல முறைகளில் இதை தயாரிக்கலாம் நாம் சிலது பார்க்கலாம்

தேவையானவை:

குண்டு மிளகாய் வற்றல் 10 -12
தனியா 2 -3 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
கச கசா - 2 டீ ஸ்பூன்
மிளகு 1 ஸ்பூன்
தேங்காய் - துருவியது 1/2 கப் ( வரட்டு வாணலி இல் சிவக்க வருக்க்வும்)

செய்முறை:

எல்லாவற்றையும் அப்படியே பச்சையாக போட்டு அரைத்து வைக்கவும்.
குருமா அல்லது கறி செய்யும் போது உபயோகப்படுத்தலாம்.

குறிப்பு: தேங்காய் சேர்ப்பதால் ஃபிரிஜ் ல வைக்கவும்.

டீ மசாலா பவுடர்

தேவையானவை:

ஏலக்காய் 10 கிராம்
கிராம்பு 10
பட்டை கொஞ்சம்
ஜாதிக்காய் 1/2

செய்முறை:

எல்லாவற்றையும் பொடிக்கவும்.
டீ போடும் போது ஒரு சிட்டிகை போடவும
மண மணக்கும் டீ ரெடி

முருங்கை இலை பொடி

தேவையானவை:

முருங்கை இலைகள் 1 கப்

பொட்டுக்கடலை 100 கிராம்
குண்டு மிளகாய் வற்றல் 5 -6
பூண்டு 10 -12 பல்
சீரகம் 1 ஸ்பூன்
உப்பு

செய்முறை:

முருங்கை இலையை சுத்தம் செய்து, அலம்பி வடிய விடவும்.
வாணலி இல் துளி நெய்விட்டு வதக்கவும்.
தனியே வைக்கவும்
வெறும் வாணலி இல் பொட்டுக்கடலையை போட்டு சூடாகவும்
அத்துடன் மிளகாய் வற்றல்லையும் போட்டு வறுக்கவும்.
பிறகு மிக்சி இல் உப்பு, பூண்டு, சீரகத்துடன், வறுத்தத்தையும் போட்டு, பொடிக்கவும்
சூடான சாதத்துடன் பரிமாறவும்.


பொட்டுக்கடலை பொடி

தேவையானவை:

பொட்டுக்கடலை 100 கிராம்
குண்டு மிளகாய் வற்றல் 5 -6
பூண்டு 10 -12 பல்
சீரகம் 1 ஸ்பூன்
உப்பு

வெறும் வாணலி இல் பொட்டுக்கடலையை போட்டு சூடாகவும்.
அத்துடன் மிளகாய் வற்றல்லையும் போட்டு வறுக்கவும்.
பிறகு மிக்சி இல் உப்பு, சீரகத்துடன், வறுத்தத்தையும் போட்டு, பொடிக்கவும்
சூடான சாதத்துடன் பரிமாறவும்.
வேண்டுமானால் வறுத்த காய்களின் மேல் தூவலாம், நல்லா இருக்கும்.

கறிவேப்பிலை பொடி

தேவையானவை :

கறிவேப்பிலை 2 கப் உருவியது
உளுத்தம் பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
கடலை பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
தனியா 2 டேபிள் ஸ்பூன்
கடுகு 1/2 ஸ்பூன்
குண்டு மிளக்காய் வற்றல் 12 -14
புளி சிறிய எலுமிச்சை அளவு
பெருங்காய பொடி 1/4 டீ ஸ்பூன்
உப்பு
எண்ணை
மிளகு 1 ஸ்பூன் (காரம் அதிகம் தேவைபடுபவர்கள் இதை சேர்க்கலாம் )

செய்முறை:

முதலில் கறிவேப்பிலையை அலம்பி வடிய விடணும்.
வெறும் வாணலி இல் நன்கு வறுக்கணும்.
வறுத்தத்தை கை இல் நொறுக்கினால் நொறுங்கணும் அது தான் பதம்
அதை தட்டில் கொட்டி வைக்கவும்
புளியை சிறிது சிறிதாக பிச்சு போட்டு நன்கு வறுக்கணும்
அதையும் தனியே வைக்கக்ணும்.
பின் வாணலி இல் எண்ணை விட்டு மற்ற சாமான்களை வறுக்கணும்
பின்பு எல்லா வற்றை யும் மிசில பொடிக்கணும்.
கமகமக்கும் கறிவேப்பிலை பொடி தயார்.
சாதத்தில் போட்டு சாப்பிடலாம்.
நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு சாப்பிடலாம்.
தொட்டுக்கொளா சுட்ட அப்பளம் அல்லது தயிர் போரும்.

எள்ளுப் பொடி (காரம் )

தேவையானவை:

25 - 35 குண்டு மிளகாய்
1 /4cup கருப்பு எள்
உப்பு.

செய்முறை:

கருப்பு எள் ளை சுத்தம் செய்யவும்.
வறட்டு வாணலில் 'பட பட' வென பொரியும் வரை வறுக்கவும்
தனியே வைக்கவும்.
ஒரு சொட்டு எண்ணெய் மிளகாய் வற்றலை கருகாமல் வறுக்கவும்.
தனியே வைக்கவும்.
ஆறினதும், மிக்சியில் போட்டு , உப்பு போட்டு மிகவும் பொடியாக அரைக்கவும்.
எள்ளுப் பொடி ரெடி.
எள்ளுப் பொடி ரொம்ப மணமாக இருக்கும்.
இதை போட்டு சாதம் கலந்து சாப்பிடலாம், லஞ்ச் பாக்ஸ் கட்டலாம்.
நன்றாக இருக்கும்.

கொள்ளு பருப்பு பொடி

தேவயானவை :

துவரம்பருப்பு – 4 கப்
கொள்ளு – 2 கப்
மிளகு – 2 ஸ்பூன்
குண்டு மிளகாய் வற்றல் – 10 -15
பெருங்காயம் – 1 சிட்டிகை
உப்பு – 2 டீஸ்பூன்

செய்முறை:

வெறும் வாணலியில் கொள்ளை போட்டு மிதமான தீயில் அது படபடவென வெடிக்கும் வரை நன்கு வறுத்து ஆற வைக்கவும்.
அதேபோல துவரம் பருப்பு, மிளகு, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை மெல்லிய வாசனை வர வறுத்து ஆற வைக்கவும்.
பிறகு வாணலிச் சூட்டிலேயே உப்பை சற்று வறுத்துக் கொள்ளவும்.
வறுத்த அனைத்தையும் மிச்சியில் போட்டு பொடித்து காற்று புகாத டப்பாவில் அடைத்து வைக்கவும்.
இந்தப் பொடியை சூடான சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடலாம்.
பொடியுடன் சிறிது நெய் அல்லது நல்லெண்ணை கலந்து சாப்பிடலாம்.

குறிப்பு: உப்பை வறுத்து உபயோகிப்பது பொடி நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க உதவும். மேலும் BP காரர்களும் உப்பு பற்ற்ய பயம் இல்லாமல் சாப்பிடலாம் புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">

வேர்கடலை பொடி 2

தேவயானவை:
1 கப் சிவக்க வறுத்த தேங்காய் துருவல்
1/2 கப் வறுத்த வேர்கடலை
1/2 கப் வறுத்த எள்
10 மிளகாய் வற்றல் (குண்டு)
10 -12 பூண்டு
உப்பு
கொஞ்சம் எண்ணை

செய்முறை:

எல்லாவற்றயும் மிக்சி இல் போட்டு பொடிக்கவும்.
சாத்ததில் போட்டு சாப்பிடவும்.
சுவையாக இருக்கும்.

வேர்கடலை பொடி

தேவயானவை:

2 கப் வறுத்த வேர்கடலை
1/2 கப் எள்
15 மிளகாய் வற்றல் (குண்டு)
1/2 ஸ்பூன் பெருங்காயப்பொடி
உப்பு
கொஞ்சம் எண்ணை

செய்முறை:

வெறும் வாணலி இல் எள்ளை வறுக்கவும்.
நன்கு பட பட வென் வெடித்ததும், தட்டில் கொட்டிவைக்கவும்.
துளி எண்ணை விட்டு மிளகாய் வற்றல் லை வறுக்கவும்.
வேர்கடலையும் போட்டு வறுக்கவும்.
மிக்சி இல் எல்லாவற்றயும் போட்டு பொடிக்கவும்.
வாசனை மிகுந்த 'வேர்கடலை பொடி' தயார்.
சாத்ததில் போட்டு சாப்பிடலாம், அல்லது இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ளல்லாம்

உருளை கிழங்கு பொடி

தேவையானவை:

ஒரு பெரிய உருளை கிழங்கு
2 Tea spoon உளுத்தம் பருப்பு
1 கப் துவரம் பருப்பு
6 -8 மிளகாய் வற்றல்
ஒருசின்ன துண்டு பெருங்காயம்
உப்பு
துளி எண்ணை

செய்முறை:

துளி எண்ணை விட்டு பெருங்காயத்தை பொரிக்கவும்.
தனியே வைக்கவும்.
பிறகு மற்றவைகளை போட்டு நன்கு வறுக்கவும்.
கருகாமல் வறுக்கவும்.
ஆறினதும், உப்பு பெருங்காயம் போட்டு அரைக்கவும்.
உருளை கிழங்கை அலம்பி துடைக்கவும்.
அதன் மேல் துளி எண்ணெய் விட்டு புரா காய் மீதும் தடவவும்.
காஸ் அடுப்பில் வைத்து சுடவும்
சுடும் போது திருப்பி திருப்பி வைத்து சுடவும்.
நன்றாக சுட்டதும், ஒரு பேசினில் தண்ணீர் விட்டு அதில் போடவும்.
ஆறினதும், தோலுரித்து துருவவும்.
பொடித்து வைத்துள்ள தில் போட்டு கலக்கவும்.
அல்லது பொடி , உருளை துருவல் இரண்டையும் மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடி போட்டு கலந்து சாப்பிடவும்.

குறிப்பு:
இதில் துளி கூட தண்ணீர் இல்லாத தால் ஒரு வாரம் வரை வைத்திருந்து
உபயோகிக்கலாம். fridge இல் வைத்தால் 15 நாள் கூட வைக்கலாம்.உருளை யை வேகவைத்தும் இது போல் செயலாம். ஆனால் உடனே உபயோகிக்கவேண்டும். நாள் பட வைத்துக்கொள்ள முடியாது.

வாழைக்காய் பொடி

தேவையானவை:

ஒரு பெரிய வாழைக்காய்
2 Tea spoon உளுத்தம் பருப்பு
1 கப் துவரம் பருப்பு
6 -8 மிளகாய் வற்றல்
ஒருசின்ன துண்டு பெருங்காயம்
உப்பு
துளி எண்ணை

செய்முறை:

துளி எண்ணை விட்டு பெருங்காயத்தை பொரிக்கவும்.
தனியே வைக்கவும்.
பிறகு மற்றவைகளை போட்டு நன்கு வறுக்கவும்.
கருகாமல் வறுக்கவும்.
ஆறினதும், உப்பு பெருங்காயம் போட்டு அரைக்கவும்.
வாழைக்காயை அலம்பி துடைக்கவும்.
அதன் மேல் துளி எண்ணெய் விட்டு புரா காய் மீதும் தடவவும்.
காஸ் அடுப்பில் வைத்து சுடவும்
சுடும் போது திருப்பி திருப்பி வைத்து சுடவும்.
நன்றாக சுட்டதும், ஒரு பேசினில் தண்ணீர் விட்டு அதில் போடவும்.
ஆறினதும், தோலுரித்து துருவவும்.
பொடித்து வைத்துள்ள தில் போட்டு கலக்கவும்.
அல்லது பொடி , வாழை துருவல் இரண்டையும் மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த வாழைக்காய் பொடி போட்டு கலந்து சாப்பிடவும்.

குறிப்பு: இதில் துளி கூட தண்ணீர் இல்லாத தால் ஒரு வாரம் வரை வைத்திருந்து உபயோகிக்கலாம். fridge இல் வைத்தால் 15 நாள் கூட வைக்கலாம்.

பூண்டு பொடி 2

தேவையானவை:

10 பல் பூண்டு
ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
3 - 4 குண்டு மிளகாய்
உப்பு

செய்முறை:
எல்லாவற்றையும் ஜஸ்ட் எண்ணெய் தடவிய வாணலில் வறுக்கவும்.
எல்லாவற்றையும் மிக்சி இல் பொட்டு பொடிக்கவும்.
வாசனையாக நல்ல இருக்கும்.
சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடி போட்டு பிசைந்து
சாப்பிடவும்.

குறிப்பு: எந்த காய் கும் , குருமாக்கும் இந்த பொடிய போடலாம்.

பூண்டு பொடி

தேவையானவை:

10 பல் பூண்டு
ஒரு டேபிள் ஸ்பூன் பொட்டு கடலை
ஒரு டேபிள் ஸ்பூன் வறுத்த வேர்கடலை
ஒரு டீ ஸ்பூன் மிளகாய் பொடி
உப்பு

செய்முறை:

எல்லாவற்றையும் மிக்சி இல் பொட்டு பொடிக்கவும்.
வாசனையாக நல்ல இருக்கும்.
சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடி போட்டு பிசைந்து
சாப்பிடவும்.

குறிப்பு: எந்த காய் கும் , குருமாக்கும் இந்த பொடிய போடலாம்.

வறட்டு தனியா பொடி

தேவையானவை:

1 Cup தனியா
2 Tea spoon உளுத்தம் பருப்பு
2 Tea spoon கடலை பருப்பு
10 - 12 குண்டு மிளகாய் வற்றல்
1 Pinch பெருங்காயம்
1/2 Spoon எண்ணை
கோலி குண்டு அளவு புளி
உப்பு
மிளகு கொஞ்சம் ( தேவையானால் )

செய்முறை:

தனியாவை ஜஸ்ட் எண்ணெய் தடவிய வாணலில் வறுக்கவும்.
கருகாமல் வறுக்கணும்.
புளியை சின்ன சின்ன துண்டுகளாக பிய்த்து நன்கு வறுக்கவும்.
கரகரப்பாக வறுக்கவும்.
இப்போது எண்ணை விட்டு, மற்றசாமான்களை வறுக்கவும். .
ஆறினதும் மிக்சி இல் போட்டு உப்பு சேர்த்து அரைக்கவும்.
பாட்டில் ல போட்டு வைக்கவும்.
தேவையான போது சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடி போட்டு பிசைந்து
சாப்பிடவும்.

குறிப்பு: இந்த பொடியை வறுத்த கறிகள் செய்யும் போது தூவலாம். பருப்பு சாம்பாரில் கடைசியில் கொஞ்சம் போட்டு இறக்கலாம். சுவை கூடும்.

கருப்பு உளுந்து பொடி

தேவையானவை :

1 கப் கருப்பு உளுந்து
6 -8 மிளகாய் வற்றல்
ஒரு கைப்பிடி காய்ந்த கறிவேப்பிலை
ஒருசின்ன துண்டு பெருங்காயம்
உப்பு
துளி எண்ணை

செய்முறை:

துளி எண்ணை விட்டு பெருங்காயத்தை பொரிக்கவும்.
தனியே வைக்கவும்.
பிறகு மற்றவைகளை போட்டு நன்கு வறுக்கவும்.
கருகாமல் வறுக்கவும்.
ஆறினதும், உப்பு பெருங்காயம் போட்டு அரைக்கவும்.
பாட்டில் ல எடுத்து வைக்கவும்.
தேவையான போது சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடி போட்டு கலந்து சாப்பிடவும்.

குறிப்பு: இதை தோசைக்கும் தொட்டுக்கலாம்

கறிவேப்பிலை பருப்பு பொடி

தேவையானவை:

1 கப் துவரம் பருப்பு
10 மிளகாய் வற்றல்
1 டீ ஸ்பூன் மிளகு
1 கொத்த்து கறிவேப்பிலை ( நன்கு காய்ந்தது )
உப்பு

செய்முறை:

முதலில் உப்பை வறட்டு வாணலில் வறுக்கவும்.
பிறகு மிளகு, பிறகு மிளகாய் வற்றல், பிறகு துவரம் பருப்பு என் ஒவ்வொன்றாக தனி தனியாக வறுக்கவும்.
காய்ந்த கறிவேப்பிலை யும் அப்படியே போட்டு அரைக்க தரனும்.
மிஷினில் கொடுத்து நல்ல 'நைசாக' அரைக்கவும்.
கொஞ்சம் கலர் கம்மியாக இருக்கும் ஆனால் வாசனையாக நன்ன்றாக இருக்கும்.

பூண்டு பருப்பு பொடி

தேவையானவை:

1 கப் துவரம் பருப்பு
10 மிளகாய் வற்றல்
1 டீ ஸ்பூன் மிளகு
10 பல் பூண்டு
உப்பு

செய்முறை:

முதலில் உப்பை வறட்டு வாணலில் வறுக்கவும்.
பிறகு மிளகு, பிறகு மிளகாய் வற்றல், பிறகு துவரம் பருப்பு என் ஒவ்வொன்றாக தனி தனியாக வறுக்கவும்.
பூண்டு பற்களை உரித்து அப்படியே போட்டு அரைக்க தரனும்.
மிஷினில் கொடுத்து நல்ல 'நைசாக' அரைக்கவும்.
கொஞ்சம் பூண்டு வாசத்துடன் நன்ன்றாக இருக்கும்.
ஆனால் இதை fridge இல் வைப்பது நல்லது.
(பூண்டில் கொஞ்சம் ஈரப்பசை இருக்கும் அல்லவா அதுதான் "fridge " லவைக்கணும்.)

பருப்பு பொடி

பருப்பு பொடி , இது சுலபமாக செய்யக்குடியகூடியது ஆனால் சுவை மிகுந்தது.

தேவையானவை:

1 கப் துவரம் பருப்பு
10 மிளகாய் வற்றல்
1 டீ ஸ்பூன் மிளகு
உப்பு

செய்முறை:

முதலில் உப்பை வறட்டு வாணலில் வறுக்கவும்.
பிறகு மிளகு, பிறகு மிளகாய் வற்றல், பிறகு துவரம் பருப்பு என் ஒவ்வொன்றாக தனி தனியாக வறுக்கவும்.
மிஷினில் கொடுத்து நல்ல 'நைசாக' அரைக்கவும்.
வீட்டில் அரைத்தால் நன்கு சலித்துவிட்டு மறுபடி அரைக்கணும் .
இதற்கு தொட்டுக்கொள்ள வத்த குழம்பு சூப்பர் ஆக இருக்கும்., ஆவக்காய் அருமையாக இருக்கும்.
சுடு சாதத்தில் நிறைய நல்லெண்ணெய் விட்டு பருப்பு பொடி போட்டு கலந்து சாப்பிடனும். சாதம் உதிறாய் இருந்தாலும் நல்லா இருக்கும், குழைந்து இருந்தாலும் நல்லா இருக்கும்.

குறிப்பு: வத்தக்குழம்பு சாப்பிடும் போது அதன் மேல் பருப்பு பொடி துவிண்டும் சாப்பிடலாம்

தேங்காய் பொடி

இந்த பொடி வகைகளில் தேங்காய் பொடி யும் பருப்பு பொடியும் ரொம்ப பிரசித்தம். முதலில் தேங்காய் பொடியை பார்போம்.

1 Cup தேங்காய் துருவல்
1 Tea spoon உளுத்தம் பருப்பு
1 Tea spoon கடலை பருப்பு
10 குண்டு மிளகாய் வற்றல்
1 Pinch பெருங்காயம்
1/2 Spoon எண்ணை
கோலி குண்டு அளவு புளி
உப்பு

செய்முறை:

தேங்காய் துருவலை நல்ல சிவப்பாக வறட்டு வாணலில் வறுக்கவும்.
கருகாமல் வறுக்கணும்.
புளியை சின்ன சின்ன துண்டுகளாக பிய்த்து நன்கு வறுக்கவும்.
கரகரப்பாக வறுக்கவும்.
இப்போது எண்ணை விட்டு, மற்றசாமான்களை வறுக்கவும். .
ஆறினதும் மிக்சி இல் போட்டு உப்பு சேர்த்து அரைக்கவும்.
பாட்டில் ல போட்டு வைக்கவும்.
தேவையான போது சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடி போட்டு பிசைந்து
சாப்பிடவும்.
தொட்டுக்கொள்ள கெட்டித் தயிர் போறும்.

ராஜஸ்தானி மசாலா பவுடர்

தேவயானவை:

சீரகம் வறுத்து பொடித்தது 2 டேபிள் ஸ்பூன்
ஆம் சூர் ( மாங்காய் பொடி ) 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் பொடி 2 டேபிள் ஸ்பூன்
கருப்பு உப்பு 1/2 ஸ்பூன்
மிளகு பொடி 1/2 ஸ்பூன்
கரம் மசாலா பொடி 1/2 ஸ்பூன்

எல்லாவற்றயும் கலந்து வைக்கவும்.
கறி வகைகளுக்கும் குருமா விற்கும் சேர்க்கவும்.

கறி மசாலா பொடி

இது போல் பல பொடிகள் இருக்கு . சுவைக்காக மாற்றி மாற்றி உபயோகிக்கலாம். புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">

தேவயானவை:

குண்டு மிளகாய் வற்றல் 25 - 30
"கசா காஸா" 1/2 கப்
மிளகு 4 spoon
தனியா 1 கப்
கடலை பருப்பு 1 கப்
தேங்காய் 1 கப்

செய்முறை:

வரட்டு வாணலி இல் தேங்காய்யை வறுக்கவும்.
பிறகு துளி எண்ணை விட்டு மற்ற பொருட்களை வறுக்கணும்.
பிறகு எல்லாவற்றயும் கலந்து எடுத்து வாக்கணும்.
தேவயான போது கறிகளிலோ, குருமாவிலோ போடலாம்.

குறிப்பு: தேங்காய் ஃபிரெஷ் ஆக போட்டால் நல்லா இருக்கும் என் நினப்பவர்கள் தேங்காய் தவிர மற்ற அனைத்தையும் பொடித்து வைத்து கொள்ளலாம் புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">

டீ மசாலா பொடி

இது ரொம்ப நல்லா இருக்கும் . முயன்று பாருங்கள் புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">

ஏலக்காய் 10 கிராம்
கிராம்பு 5 கிராம்
பட்டை 10 கிராம்
ஜாதிக்காய் 1/2

எல்லாவற்றயும் நன்கு பொடிக்கவும்.
டீ போடும்போது ஒரு சிட்டிகை போடவும்.
அருமயாக இருக்கும்.

கூட்டு பொடி

இது எங்க கிருஷ்ணா காக நான் கண்டுபிடித்த பொடி புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4"> நாங்க் வீட்டுல "பொரித்த கூட்டு " செய்வோம். அதற்க்கு தேங்காய் , உளுந்து , மிளகாய் வற்றல் , பொருங்காயபொடி எல்லாம் அரைத்து விடுவோம். அப்பதான் கூட்டு நல்லா இருக்கும். அதை சுலபமாக செய்ய தான் இந்த பொடி.

தேவயானவை:

உளுந்து 1 கப்
மிளகாய் வற்றல் 20 - 25
ஒரு துளி எண்ணை

செய்முறை:

துளி எண்ணை விட்டு இரண்டையும் வறுக்கவும்.
மிக்சி இல் அரைக்கவும் .
தேவயான போது உபயோகப்படுத்தவும்.

உபயோகப்படுத்தும் முறை: கூட்டு செய்ய, புடலங்காய், கத்தரிக்காய், பெங்களூரு கத்தரிக்காய் , பீன்ஸ் , காரட், முட்டை கோஸ், அவரக்காய் போன்றவை ஏற்றவை. இதை ஏதாவது ஒருக்காய் + பயத்தம் பருப்பு சேர்த்து குக்கர் இல் வைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலி இல் எண்ணை விட்டு, ( தேங்காய் எண்ணை ரொம்ப நல்லது) கடுகு உளுத்தம் பருப்பு போட்டு வெடித்ததும், வெந்த காய் பருப்பை கோட்டவும்.
கொஞ்சம் பெருங்காய பொடி, உப்பு, 2 ஸ்பூன் கூட்டு பொடி, வறுத்த தேங்காய் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
அவ்வளவு தான் கூட்டு ரெடி.
ரசத்துடன் அல்லது துவயலுடன் அமர்க்களமாக இருக்கும்.

குறிப்பு: தேங்கை துருவலை நான்கு சிவக்க வறுத்து ஃப்ரீஸர் இல் வைத்து உபயோகப்படுத்தவேண்டும். அல்லது இறக்கும் முன் 1 ஸ்பூன் பச்சை தேங்காய் எண்ணை விட்டு இறக்கலாம்.

பிசிபேளா பாத் பவுடர்

பல வருடங்களாக எங்க வீட்டில் உபயோகப்படுத்தும் பொடி. இங்கு சொன்ன அளவுக்கு 2 ஹர்லிக்க்ஸ் பாட்டில் அளவு வரும். வருஷத்துக்கு வைத்துக்கொள்ளலாம். எங்க கிருஷ்ணா இந்த பொடியை உருளைகிழங்கு காய் செய்யவும் உபயோகப்படுத்துவான். ரொம்ப நல்லா இருக்கும்.

தேவையானவை :

250 Gms. தனியா
500 Gms. கடலை பருப்பு
250 Gms. குண்டு மிளகாய்
100 Gms. கச காசா
25 Gms. மராட்டி மொக்கு
25 Gms. அன்னாசிப்பூ
25 Gms. பட்டை
25 Gms. வெந்தயம்

செய்முறை :

முதலில் வெந்தயத்தை வறட்டு வாணலில் நன்கு வறுக்கவும்.
பிறகு துளி எண்ணெய் விட்டு வாணலி யை துடைக்கவும்.
(Just grease the pan )
பிறகு மற்ற பொருட்களை தனி தனியாக வறுத்து எடுக்கவும்.
கருகாமல் வறுக்கணும் .
பிறகு மிக்சியில் பொடிக்கணும்.
அவ்வளவு தான்.
பிசிபேளா பாத் பவுடர் ரெடி.
பாட்டில் லில் போட்டு வைக்கவும்.
சுமார் 2 வருஷத்துக்கும் மேலாக நன்றாக இருக்கும்.

குறிப்பு: பிசிபேளாபாத் செய்யவேண்டும் எனில், குக்கரில் காய், துவரம் பருப்பு, அரிசி ஒன்றாக வைத்து விட்டு, வெளியே எடுத்ததும், இந்த பொடி போட்டு, புளி பேஸ்ட் போட்டு ஒரு கொதி விடலாம். அல்லது, சாதாரணமாக சாம்பார் செய்வது போல் இந்த பொடி போட்டு சாம்பார் செய்து விட்டு பிறகு சாதம் போட்டு கலக்கலாம். எப்படி பண்ணாலும் 'அமிர்தமாக' இருக்கும்.

கண்ண்டிப்பாக பக்கத்தாத்து மாமி கேட்பா "என்ன சமைக்கிற?" என்று புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">
சமைத்து பார்த்து சொல்லுங்கள் யாரானும். அபப தான் மற்றவர்கள் ஆர்வம் வந்து முயலுவார்கள் .

கரம் மசாலா பவுடர்

தேவயானவை:

தனியா 50 கிராம்
மிளகு 20 கிராம்
பட்டை 20 கிராம்
சீரகம் 15 கிராம்
பெரிய ஏலக்காய் 15 கிராம்
கிராம்பு 10கிராம்
சிறிய ஏலக்காய் 10 கிராம்
பிரிஞ்சி இலை 10 கிராம்

செய்முறை :
எல்லாவற்றயும் லேசாக வறுத்து பொடிக்கவும்.
Microwave வில் சுட வைத்தாலும் போரும்.
காற்று புகாமல் முடி வைத்து உபயோகப்படுத்தவும்.

தோசை மிளகாய் பொடி எள்ளுடன்

தேவையானவை:

1cup கடலை பருப்பு
1cup உளுத்தம் பருப்பு
25 - 35 குண்டு மிளகாய்
பெருங்காயம் ஒரு சின்ன துண்டு
1 /4cup கருப்பு எள்
உப்பு.
துளி எண்ணெய்

செய்முறை:

கருப்பு எள் ளை சுத்தம் செய்யவும்.
வறட்டு வாணலில் 'பட பட' வென பொரியும் வரை வறுக்கவும்
தனியே வைக்கவும்.
வாணலில் ஒரு துளி எண்ணெய் விட்டு பெருங்காயத்தை பொரிக்கவும் .
தனியே வைக்கவும்.
மிளகாய் வற்றலை கருகாமல் வறுக்கவும்.
தனியே வைக்கவும்.
இரண்டு பருப்புகளையும் தனி தனி யாக கருகாமல் வறுக்கவும்.
ஆறினதும், எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு , உப்பு போட்டு உங்கள்விருப்ப படி, கரகரப்பாகவோ மிகவும் பொடியாகவோ அரைக்கவும்.
எள் போட்ட தோசை மிளகாய் பொடி ரெடி.
எள் போடுவதால் ரொம்ப மணமாக இருக்கும்.

தோசை மிளகாய் பொடி (plain)

தேவையானவை:

1cup கடலை பருப்பு
1cup உளுத்தம் பருப்பு
25 - 35 குண்டு மிளகாய்
பெருங்காயம் ஒரு சின்ன துண்டு
உப்பு.
துளி எண்ணெய்

செய்முறை:

வாணலில் ஒரு துளி எண்ணெய் விட்டு பெருங்காயத்தை பொரிக்கவும் .
தனியே வைக்கவும்.
மிளகாய் வற்றலை கருகாமல் வறுக்கவும்.
தனியே வைக்கவும்.
இரண்டு பருப்புகளையும் தனி தனி யாக கருகாமல் வறுக்கவும்.
ஆறினதும், மிக்சியில் போட்டு , உப்பு போட்டு உங்கள்விருப்ப படி, கரகரப்பாகவோ மிகவும் பொடியாகவோ அரைக்கவும்.
தோசை மிளகாய் பொடி ரெடி.

குறிப்பு: சிலர் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்ப்பார்கள். வேண்டுமானால் நீங்களும் சேர்க்கலாம்.

" ரச பொடி"

தேவையானவை:

10 - 15 குண்டு மிளகாய்
800gm தனியா
200gm மிளகு
200gm துவரம் பருப்பு
2 - 3 தேக்கரண்டி சீரகம்

செய்முறை:

மேல் கூறிய எல்லாவற்றையும் மிக்சி இல் போட்டு 'கர கரப்' பாக அரக்கவும்.
'ரச பொடி ' ரெடி.

குறிப்பு: மேல் கூறிய சாமான்களுடன் மஞ்சள் பொடி யும் போடலாம். நான் எப்பொழுதும் ரசம் வைக்கும் போது பருப்புடன் போடுவேன்.
உங்களுக்கு விருப்பமானால் மேல் கூறிய சாமான்களுடன் பத்து பல் பூண்டும் போட்டு அரைக்கலாம். ஆனால் அப்படி அரைத்தால், ரசப்பொடியை fridge இல் வைக்கணும். ஏன் என்றால் அது சற்று ஈரபசையுடன் இருக்கும்.

பாதாம் ஹல்வா

பாதாம் ஹல்வா - சொலும்போதே நாவில் நீர் ஊற செய்யும் ஒரு இனிப்பு இது .
இதை பல வழிகளில் செயலாம் நாம் ஒவ்வொன்றாக பார்போம் .

தேவையானவை:

பாதாம் பருப்பு 2 கப் விழுது (250 கிராம் பருப்பை ஊறவைத்து , தோலுரித்து பாலில் அரைக்கவும் )
சக்கரை 2 கப்
பால் - 1/2 கப் பாதாமை அரைக்க
குங்குமப்பூ 10 -12 இழைகள்
நெய் 1 கப்
ஏலப்பொடி 1/2 ஸ்பூன் (தேவையானால் )

செய்முறை:

பாதாம் பருப்பை 2 மணிநேரம் வெந்நீரில் ஊரவைக்கவும்
ஊரவைத்த பருப்பை ,தோலுரித்து பாலில் அரைக்கவும்
ரொம்ப பால் விட வேண்டாம், தோசைமாவை விட கெட்டியாக இருக்கணும்.
ஒரு உருளி இல் அரைத்தத்தை விட்டு, சக்கரை போட்டு கிளற ஆரம்பிக்கணும்.
ஒரு சின்ன கிண்ணி இல் குங்குமப்பூவை போட்டு துளி பால் விட்டு வைக்கவும்
பிறகு கரைத்து ஹல்வாவில் கொட்டனும்.
ஹல்வா கொதிக்க ஆரம்பித்ததும் கைவிடாமல் கிளறவும்.
கொஞ்சம் திறந்து வரும் பொது, நெய் விட ஆரம்பிக்கணும்.
கொஞ்சம் கொஜமாக விட்டு கிளறனும்.
கரைத்து வைத்துள்ள குங்கும பூவை இதில் கொட்டவும்
நெய் முழுவதும் அந்த ஹல்வா உறிந்து கொண்டு நன்கு பொரிந்து வரும்.
அப்ப இறக்கவும்.
ஆறினதும் அல்லது சுட சுட "பாதாம் ஹல்வா" வை பரிமாறவும்.

குறிப்பு:வேண்டுமானால் ஆறினதும், ஒவ்வோர் ஸ்பூன் எடுத்த்கு ஒரு அலுமினிய foil ல போட்டு மடித்து வைத்தால் சர்வ் பண்ண சௌகர்யமாக இருக்கும்.

அதிரசம்

இது கால்ம் காலமாய் நாம் செய்து வரும் இனிப்பு. தெற்க்கு பக்கத்தில் இது இல்லாம்ல் தீபாவளி கிடையாது :) தீபாவளிக்கு அடுத்த நாள் வரும் நோன்புக்காக செய்வது இந்த இனிப்பு. கொஞ்சம் மெக்கெடனும் ஆனால் ரொம்ப நல்லா இருக்கும்.

தேவையானவை:

பச்சரிசி 1/2 கிலோ
வெல்லம் 1/4 கிலோ
எண்ணை - பொறிக்க
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்

செய்முறை:

அரிசியை கல் குப்பை நீக்கி, களைந்து உலர்த்தனும்.
ஒரு 3 மணி நேரம் காயனும்.
ரொம்பவும் காய கூடாது, கொஞ்சம் ஈரமாக இருக்கும் போதே மிக்ஸில மாவாக அரைக்கணும்.
நன்கு சலிக்கவும்.
வெல்லத்தை எடுத்து உடைத்து 3/4 கப் தண்ணீரில் போடவும் .
அது நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் முன், வடி கட்டவும்.
மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
கிளறிக்கொண்டே இருக்கவும் இல்லாவிடில் பொங்கிவிடும்.
பாகு கொஞ்சம் கெட்டியாக துவங்கும் போது, ஒரு சின்ன கிண்ணி இல் தண்ணி எடுத்து வைத்துக்கொண்டு, இந்த பாகிலிருந்து ஒரு ஸ்பூன் எடுத்து அதில் விடவும்.
உங்கள் கைவிரல்களால், பாகை உருட்ட முடிந்தால் சரியான பதம் என பொருள்.
இல்லாவிட்டால் இன்னும் கொதிக்கணும் என பொருள் . சரியா?
பதம் சரி என பட்டதும் அடுப்பை சின்னதாக்கி விட்டு, ஏலப்பொடி போடவும்.
அடுப்பிலிருந்து இறக்கவும்.
ஒரு பெரிய பேசினில், அரிசி மாவை போடவும் .
இந்த பாகிலிருந்து ஒரு கரண்டி அதில் விடவும்.
அதை கலக்கவும்.
மீண்டும் மாவில் பாகை விடவும் , கலக்கவும்.
இதற்க்கு "பாகு செலுத்துதல்" என்று பெயர்.
[b]மாவில் பாகை கொஞ்சம் கொஞ்சமாக போடணும் பாகில் மாவை கொட்டக்கூடாது[/b]
[color=red][/color]
இப்படி யாக கெட்டியான அதிரச மாவை தயாரிக்கணும்.
கொஞ்சம் பாகு மீந்து போனால் பரவாயில்லை, பாயசத்துக்கு உபயோகிக்கலாம்.
அதிரசமாவை நன்கு பிசைந்து வைத்துவிடவும்
2 நாள் கழித்து கூட அதிரசம் பண்ணலாம்.
மாவு ஒன்றும் ஆகாது.
ஒரு வாணலி இல் எண்ணை விட்டு இந்த மாவிலிருந்து கொஞ்சம் எடுத்து அதிரசம் தட்டி எண்ணை இல் போடவும்.
அடுப்பு நிதானமாய் எரியவேண்டும்.
வெந்ததும் மறுபுறம் திருப்பி போடணும்.
வெளியே எடுத்து மற்றும் ஒரு கரண்டியால் அதிரசத்தை நன்கு அழுத்தி எண்ணையை வடித்துவிட்டு தட்டில் போடணும்.
அவ்வளவுதான் சுவையான அதிரசம் தயார்

[b]குறிப்பு: சிலர் வெல்லத்துக்கு பதில் சர்க்கரை சேர்த்து செய்வார்கள் .[/b]

7 கப் கேக்

ரொம்ப சுலபமான இனிப்பு இது. 7 கப் சேர்த்து செய்வதால் அந்த பெயர். கிளறுவதும் ஈஸி, கட் பண்ணினால் நல்ல கேகாகவும் வரும்.

தேவையானவை:

சக்கரை 3 கப்
நெய் - 1 கப்
தேங்காய் - 1 cup
கடலை மாவு - 1 கப்
பால் - 1 கப்
வெனில எல்சன்ஸ் - சில துளிகள்

செய்முறை :
ஒரு தட்டில் நெய் தடவி தயாராய் வைக்கவும்.
ஒரு அடி கனமாக உருளி இல் எல்லாவற்றி யும் போட்டு நன்கு கலக்கவும்
கலவை நன்கு கொதித்து நெய் பிரியும் வரை கிளறவும்.
அடுப்பு நிதானமாக எரியவேண்டுவது அவசியம்.
நெய் பிரிந்து வரும் போது, நெய் தடவிய தட்டில் கொட்டவேண்டும்.
கொஞ்சம் அறினதும் விலைகள் போடலாம்.
7 கப் கேக் ரெடி.

Wednesday, July 20, 2011

பிரட் சாண்ட்விச்

தேவயானவை:

பிரட், ஏதாவது "left over curry" இல்லாவிடில்
வெங்காயம், தக்காளி , உருளை கிழங்கு , சீரகம் கடுகு, கொஞ்சம் எண்ணை, பிரட் டொஸ்டர்.

செய்முறை:

உருளை யை வேகவைக்கவும்.
( குக்கர் இல் தண்ணீர் விட்டோ அல்லது ஓவன் லோ வைக்கவும், வெந்ததும் தோல் உரித்து மசிக்கவும் )
வாணலி இல் எண்ணைவிட்டு கடுகு சீரகம் தாளிக்கவும்.
அதில் நறுக்கிய வெங்காயம் தக்காளி போடவும்.
வதக்கவும்.
வெந்த உருளைக்கிழங்கை போடவும்.
தண்ணீர் விடவும்.
உப்பு போடவும்.
நன்கு கிளறவும்.
காய் ரெடி.
இப்ப இரண்டு பிரட் ஸ்லைஸ் நடுவில் காய் வைத்து அதன் மேல் துளி நெய் தடவி, டொஸ்டர் இல் வைக்கவும்.
காஸ் இன் மே தீ இல் இருபுறமும் சுடவும்.
திறந்தால் டோஸ்ட் ரெடி.

ஏற்க்கனவே ஏதாவது curry இருந்தால் அதை பிரட் நடுவில் வைத்து மேலே சொன்னது போல் செய்யவும். டொமாட்டோ சாஸ் சுடன் நன்றாக இருக்கும்.

குறிப்பு: எலக்ட்ரிக்கல் டொஸ்டர் இருந்தால் இன்னும் சுலபம் :)

பிரெட் வித் கறிகாய்

தேவயானவை:

4 பிரட் ஸ்லைஸ்
1 கப் mixed vegetables (அதாவது, கேரட் , வெங்காயம், பட்டாணி,தக்காளி,உருளை என் உங்களுக்கு பிடித்தமான காய்களை நறுக்கி கொள்ளவும்.)
3 ஸ்பூன் நெய்
1/2 ஸ்பூன் சீரகம்
1/2 ஸ்பூன் கடுகு
2 - 4 பச்சை மிளகாய்
கொத்துமல்லி தழை - கொஞ்சம்
உப்பு

செய்முறை:

பிரட் ஐ சிறிய துண்டங்களாக்கவும் . (கத்தரிக்கோலால் சதுரமாக வெட்டவும். சமயல் அறைக்கென தனி யாக ஒன்று வைத்துக்கொள்ளவும். கண் எரியாமல் பொடியாக பச்சை மிளகாய் வெட்டலாம் புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4"> )
வாணலி இல் நெய் 1 ஸ்பூன் விட்டு பிரட் துண்டங்களை நல்ல பொன்னிறமாக சிறிய தீ இல் வைத்து வறுக்கவும்.
தனியே வைக்கவும்.
மறுபடி வாணலி யை அடுப்பில் வைத்து நெய் விட்டு, கடுகு சீரகம் தாளிக்கவும்.
நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு வறுக்கவும்.
நறுக்கி வைத்துள்ள காய்களை போடவும்.
நான்கு வதக்கவும். துளி தண்ணி தெளித்து மூடவும்.
2 நிமிடத்த்தில் வெந்துவிடும். பிறகு நன்கு கிளறி வறுத்து வைத்துவைதுள்ள பிரட் துண்டங்களை போடவும்.
கொத்துமல்லி தழை தூவி இறக்கவும்.
சுவயான bread mixed veg. தயார் .
நல்ல 'filling' ஆக இருக்கும்.
சுலபமாக தயாரிக்கலாம்.

சக்கரை தூவின பிரட்

தேவயானவை:

4 பிரட் ஸ்லைஸ்
3 ஸ்பூன் நெய்
2 ஸ்பூன் சக்கரை

செய்முறை:

பிரட் ஐ சிறிய துண்டங்களாக்கவும் .
வாணலி இல் நெய் விட்டு பிரட் துண்டங்களை நல்ல 'மெத்' என சிறிய தீ இல் வைத்து வறுக்கவும்.
சக்கரையை தூவி இறக்கவும்.
அவ்வளவு தான். ருசியோ ருசி.

பிரட் உப்புமா

தேவயானவை:
6 பிரட் ஸ்லைஸ்
1 கப் துருவின கேரட் & வெங்காயம்
2 ஸ்பூன் எண்ணை
1/2 ஸ்பூன் உளுந்து
1/2 ஸ்பூன் கடுகு
1/2 ஸ்பூன் கடலை பருப்பு
2 - 4 பச்சை மிளகாய்
கொத்துமல்லி தழை - கொஞ்சம்
உப்பு

செய்முறை:
பிரட் ஐ மிக்சி ல போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
பூ போல் மிருதுவாக வந்துடும்.
தனியே வைக்கவும்
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணை விட்டு, கடுகு உளுந்து கடலை பருப்பு தாளிக்கவும்.
நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு வறுக்கவும்.
துருவிய காய்யை போடவும்.
நன்கு வதக்கவும்.
உப்பு போடவும்.
தனியே எடுத்து வைத்துள்ள பிரட் ஐ போடவும். நன்கு கிளறி உடனே இறக்கவும்.
இது ரொம்ப சுலபம் புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4"> அப்படியே சாப்பிடலாம்.

All Purpose Powder

ரொம்ப அருமையான recipe இது. எங்க வீட்டிலும் எங்க உறவினர் மற்றும் நண்பர்கள் வட்டாரத்திலும் மிகவும் பிரபலம். புன்னகை

முதலில் பொடி செய்யும் முறையை பார்போம். இதை நான் APP - that is 'ALL PURPOSE POWDER' என் அழைப்பது வழக்கம். இதை கொண்டும் பல டிஷ் கள் தயாரிக்கலாம்.

தேவையானவை:

500gm தனியா
500gm கடலை பருப்பு
250gm குண்டு மிளகாய்
பெருங்காயம் - ஒரு சின்ன துண்டு
கொஞ்சம் எண்ணெய் (அரை ஸ்பூன் )

செய்முறை :

பெருங்காயத்தை துளி எண்ணெயில் பொரிக்கவும்.
தனி எ எடுத்துவைக்கவும்
அதே வாணலில் மற்றவற்றை போட்டு கருகாமல் வறுக்கவும்.
நன்கு ஆறினதும் மிக்சியில் போட்டு பொடிக்கவும்.
உங்கள் APP தயார்.

குறிப்பு: இந்த பொடி யை கொண்டு திடீர் புளியோதரை , புளி கூடு, அரைத்துவிட்ட சாம்பார், கத்தரிக்காய் எண்ணெய் குழம்பு , உருளை, வாழை மற்றும் கதிதரிகாய் பொடி போட்ட காய், தக்காளி சாதம் இன்னும் பல dish கள் செய்யலாம்.

நாரத்தை குழம்பு

தேவையானவை:

நாரத்தங்காய் - 1 (சாறு எடுக்கவும் )
வெந்த துவரம் பருப்பு 1/2 கப்
வெல்லம் - 1 சின்ன கட்டி
பச்சை மிளகாய் - 4
குழம்பு மிளகாய் பொடி - 2 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/4 ஸ்பூன்
புளி பேஸ்ட் - 1/4 ஸ்பூன் (தேவயானால் )
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
வறுத்து அரைத்த வெந்தய பொடி - 1/2 ஸ்பூன்
பெருங்காய பொடி - 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வாணலி இல் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு , கறிவேப்பிலை தாளித்து... பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள்பொடி , சேர்த்து வதக்க வும் .
அதில் வெந்த பருப்பு, நார்தம் காய்ன் சாறு சேர்க்கவும்.
வேண்டுமானால் புளிஜலம் அல்லது புளி பேஸ்ட் போடவும். ( ஆனால் வெறும் நாரத்தை சாரே இந்த குழபுக்கு போறும்)
வெந்தய பொடி, பெருங்காய பொடி மற்றும் உப்பு போடவும்.
நன்றாகக் கொதிக்க விடவும். பிறகு, வெல்லத்தை சேர்க்கவும்.
எல்லாம் சேர்ந்து நன்றாகக் கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில் அடுப்பிலிருந்து இறக்கவும்.
ரொம்ப நல்ல டேஸ்ட் ஆன குழம்பு இது.
saadhathil போட்டு சாப்பிடலாம்.

குறிப்பு: ஒரு வாரம் 10 நாள் வைத்து சாப்பிடலாம். வயிறு சரி இல்லயானால் கூட இதை சாப்பிடலாம். நல்லது .

பருப்பு உருண்டை மோர் குழம்பு

தேவையானவை:

துவரம்பருப்பு - 1 கப்
புளிக்காத கெட்டி தயிர் - 1 கப்
தேங்காய் துருவ்ல் - 1/2 கப்
கடலை பருப்பு - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் 2
கடுகு - அரை டீஸ்பூன்
குண்டு மிளகாய் - 3 - 4
வெந்தய பொடி - 1/2 ஸ்பூன் ( வறுத்து அரைத்தது)
பெருங்காய பொடி - 1/4 ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/4 ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:
துவரம்பருப்பை ஊற வைத்து அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும்.
அதை, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.
தேங்காய் , பச்சைமிளகாய் கடலை பருப்பை ஒரு 10 நிமிஷம் ஊறவைத்து அரைக்கவும்
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, சிலுப்பிய தயிர் சேர்க்கவும்.
அதில் உப்பு சேர்க்கவும்.
அரைத்த விழுத்தையும் போடவும். கொதித்து மணம் வரும்போது உருண்டைகளை அதில் மெதுவாகப் போடவும்.
வேண்டுமானால் தண்ணீர் விடவும். நன்றாக கொதிக்கவிடவும்.
வெந்தய பொடி போடவும். பெருங்காய பொடி போடவும்.
நன்கு கொதித்ததும் கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.

பருப்பு உருண்டைக் குழம்பு

தேவையானவை:

துவரம்பருப்பு - 1 கப்
சாம்பார்பொடி - 3 டீஸ்பூன்
புளி - எலுமிச்சம்பழ அளவு அல்லது புளி பேஸ்ட் 2 ஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
குண்டு மிளகாய் - 3 - 4
வெந்தய பொடி - 1/2 ஸ்பூன் ( வறுத்து அரைத்தது)
பெருங்காய பொடி - 1/4 ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:
துவரம்பருப்பை ஊற வைத்து அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும்.
அதை, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, கரைத்து வடிகட்டிய புளிக் கரைசலை சேர்க்கவும்.
அதில் சாம்பார்பொடி சேர்த்துக் கலக்கி, உப்பு சேர்க்கவும்.
குழம்பு கொதித்து மணம் வரும்போது உருண்டைகளை அதில் மெதுவாகப் போடவும். நன்றாக கொதிக்கவிடவும்.
வெந்தய பொடி போடவும். பெருங்காய பொடி போடவும்.

குறிப்பு: உருண்டைகளை தனியாக ஸ்நாக்ஸ் போல சாப்பிடலாம்.

மலபார் சாம்பார்

அரைக்க தேவயானவை :
5 -7
குண்டு மிளகாய் வற்றல்
2
ஸ்பூன் கடலை பருப்பு
1
ஸ்பூன் தனியா
1/2
கப் துருவின தேங்காய்
1
ஸ்பூன் வெந்தயம்
மற்ற தேவயான பொருட்கள்:
கடுகு
கறிவேப்பிலை
2 -3
ஸ்பூன் தேங்காய் எண்ணை
2
ஸ்பூன் புளி paste
1/2
ஸ்பூன் வறுத்து பொடித்த வெந்தயம்
1
கப் வெந்த துவரம் பருப்பு
பெங்களூர் கத்தரிக்காய் , கத்தரிக்காய்
அல்லது பூசணிக்காய் ஏதாவது ஒரு காய் "தானுக்கு".


செய்முறை :

தேங்காய் தவிர அரைக்கவேண்டிய பொருட்களை வறுத்து, தேங்காயுடன் அரைக்கவும்.
ஒரு வாணலி இல் தேங்காய் எண்ணை விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
வெட்டி வைத்து உள்ள "தானை"போட்டு வதக்கவும்.
2
டம்ப்லர் தண்ணீர் விட்டு, புளி பேஸ்ட், மஞ்சள் பொடி, வெந்தய பொடி, அரைத்தவிழுது , உப்பு என் எல்லாம் போடவும்.
காய் வேகும் வரை நன்கு கொதிக்க விடவும்.
பிறகு இறக்கவும்.
சாதத்துடன் பரிமாறவும். இதற்க்கு பொறித்த அப்பளாம் nandraga irukkum.

கீரை குழம்பு

தேவையானவை:

1cup வெந்த துவரம் பருப்பு
2sp புளி பேஸ்ட்
3 - 4 பச்சை மிளகாய்
1 கட்டு கீரை (முளைக்கிரை அல்லது பருப்பு கீரை )
2 -3sp சாம்பார் பொடி
1 /2sp வறுத்து பொடித்த வெந்தயம்

தாளிக்க:
கடுகு
மஞ்சள் பொடி
கறிவேப்பிலை
கொத்தமல்லி
எண்ணெய்
உப்பு.

செய்முறை:
கீரையை சுத்தம் செய்து நறுக்கவும்.
ஒரு ஆழமான வாணலி அல்லது உருளி இல் எண்ணெய் விடவும்.
கடுகு போட்டு வெடித்ததும் , அரிந்த பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
நறுக்கிய கீரை போட்டு வதக்கவும்.
இப்போது,
வெந்த பருப்பு, புளி பேஸ்ட், மஞ்சள் பொடி, வறுத்து பொடித்த வெந்தயம்
,சாம்பார் பொடி, உப்பு என எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக போடவும்.
நன்கு கொதிக்கும் படி விடவும்.
பிறகு மிளகாய் பொடி வாசம் போனதும், கறிவேப்பிலை,கொத்தமல்லி துவி இறக்கவும்.
"கீரை குழம்பு " ரெடி , சாதத்துடன் பரிமாறலாம்.
சாதத்துடன் பரிமாறவும்.

இஞ்சி குழம்பு

தேவையானவை:

3 ஸ்பூன் புளி பேஸ்ட்
2 ஸ்பூன் துவரம் பருப்பு
2 ஸ்பூன் கடலை பருப்பு
2 ஸ்பூன் சாம்பார் பொடி
2 -3 பெரிய வெங்காயம்
25 - 30 பல் பூண்டு
4-6 இன்ச் இஞ்சி துண்டு
1 ஸ்பூன் வறுத்து பொடித்த வெந்தயம்
கடுகு

மஞ்சள் பொடி
பெருங்காயம் (தேவயானால் )
கறிவேப்பிலை - கொஞ்சம்
எண்ணெய்
உப்பு
2 ஸ்பூன் பொடித்த வெல்லம்

செய்முறை:

முதலில் இஞ்சி இன் தோலியை நீக்கவும் .
பூண்டு உரிக்கவும், வெங்காயம் நறுக்கவும்.
மூன்றையும் மையாக அரைக்கவும்.
வாணலி இல் நல்லெண்ணை விட்டு, கடுகு, கடலை பருப்பு, துவரம் பருப்பு,
கறிவேப்பிலை தாளிக்கவும்.
அரைத்த விழுதை போட்டு வதக்கவும். நன்கு எண்ணை
பிரியும் வரை வதக்கவும். மஞ்சள் பொடி சேர்க்கவும்.
2 டம்பளர் தண்ணீர்
விடவும்.
புளி பேஸ்ட், சாம்பார் பொடி, பெருங்காய பொடி, வறுத்த வெந்தய பொடி
எல்லாம் சேர்க்கவும் .
நன்கு கொதித்து கெட்டியாகும் வரை பொறுக்கவும்.
பிறகு
இறக்கவும். நல்ல மணமுள்ள இஞ்சி குழம்பு தயார்.
சாதத்துடன் பரிமாறவும். தொட்டுக்கொள்ள அப்பளம் போரும்.

குறிப்பு: இந்த குழம்பை ஒரு வாரம் வரை ஃபிரிஜ் இல்லாமலே கூட வைத்து
சாப்பித்லாம். ஃபிரிஜ் இல் வைத்தால் 1 மாதம் கூட வைத்துக்கொள்ளலாம்.
(புளிக்காய்ச்சல் போல் )


வெளிஊர்களுக்கு போகும் போது எடுத்து செல்ல லாம் ரொம்ப உபயோகமானதாக இருக்கும். சமயத்தில் "Bread" il தடவி சாப்பிடலாம்

எண்ணை கத்தரிக்காய் குழம்பு

தேவையானவை :

250 gms குட்டி கத்தரிக்காய்
2 -3 ஸ்பூன் புளி பேஸ்ட்
3 - 4 ஸ்பூன் APP (ALL PURPOSE POWDER)
கொஞ்சம் கறிவேப்பிலை
கொஞ்சம் மஞ்சள் பொடி
2 சிட்டிகை பெருங்காயப்பொடி
1/2 ஸ்பூன் வறுத்து அரைத்த வெந்தய பொடி
1 ஸ்பூன் கடுகு
உப்பு
கத்தரிக்காய் வதக்க நல்லெண்ணை

செய்முறை:
முதலில் குட்டி கத்தரிக்காய் களை அலம்பி காம்பை மட்டும் நறுக்கவும்.
பிறகு, அதை 4 ஆக பிளக்கவும்.
பிளந்த தில் APP யை வைது அடைக்கவும்.
ஒரு வாணலி இல் எண்ணை விட்டு கடுகு தாளிக்கவும்.
கத்தரிக்காய்களை மெதுவே போடவும்.
உப்பு, மஞ்சள் பொடி, பொருங்காயப்பொடி , வெந்தயப்பொடி போட்டு மெல்ல வதக்கவும்.
கொஞ்சம் வதங்கியதும், புளி பேஸ்ட் போடவும்.
தேவயானால் கொஞ்சம் தண்ணீர் விடவும்.
காய் நான்கு வெந்து எண்ணை பிரிய துவங்கியதும் அடுப்பை அணைக்கவும்
சூடு சாத்ததுடன் பரிமாறவும்.
சப்பாத்தி உடனும் நன்றாக இருக்கும்.

கத்தரிக்காய் வற்றல்

கத்தரிக்காய் வற்றல் - இது போடுவதும் சுலபம். குழம்பில் போடுவதும் சுலபம்.
கத்தரிக்காய்யை நீள நீள மாக வெட்டி வெயிலில் நன்றாக காயவைக்கணும். (வைத்தலை உடைக்கவரனும் )

குழம்பு செய்யும் முன் ஒரு 10 - 15 நிமிஷம் தண்ணிரில் ஊரவைக்கணும்.
குழம்பு கொதிக்கும் போதே, ஊறவைத்த தண்ணியுடன் வத்தலையும் போட்டுடனும். புளி தண்ணியுடன் வத்தலும் கொதிக்கணும் அப்பதான் taste வரும்.

இந்த வத்தலை பருப்பு சாம்பாரிலும் போடலாம், வத்த குழம்பிலும் போடலாம்.

சாயந்தரம் ஆக ஆக கத்தரிக்காய் ஊறி ண்டு ரொம்ப நல்ல இருக்கும். அரிசி உப்புமா விற்கு நல்ல துணை. ( எங்க மாமனார் cum தாத்தா இந்த combination நை ரொம்ப விரும்பினார். புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4"> )

"வற்றல்" குழம்பில் வற்றல் போடும் முறை

கறிகாய் இல்லாவிடில், சுண்டக்காய் வற்றல் , மணத்தக்காளி வற்றல், கத்தரிக்காய் வற்றல், கொத்தவரை வற்றல் போட்டு "வற்றல்" குழம்பு வைக்கலாம் என் சொன்னேன் அல்லவா? அதை எப்படி போடுவது?

அதாவது, சுண்டக்காய் வற்றல் , மணத்தக்காளி வற்றல், கொத்தவரை வற்றல்,
தாமரை தண்டு வற்றல், பாகற்காய் வற்றல் போன்றவற்றை முதலில் எண்ணெயில் வறுத்துக்கொள்ள வேண்டும்.

அதை தனியே எடுத்து வைத்துவிட்டு குழம்பு செய்ய வேண்டும்.
இன்னும் ஒரு இரண்டு நிமிஷம் குழம்பு கொதித்தால் போறும் என்கிற நிலை வரும் பொது, வறுத்து வைத்துள்ள வற்றலை போடணும்.
மற்றுமொரு கொதி வந்ததும் இறக்கணும்.

குறிப்பு: மேல் கூறிய வற்றல் களில் உப்பு இருக்கும். எனவே குழம்பு வைக்கும் போது உப்பு குறைவாக போடணும். இல்லாவிடில் குழம்பு உப்பு கரித்துவிடும்.

அரைத்துவிட்ட சாம்பார்

அரைத்துவிட்ட சாம்பார் - இதை இட்லி சாம்பார் ஆகவும் பயன் படுத்தலாம் புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">

தேவையானவை:

1cup வெந்த துவரம் பருப்பு
2sp புளி பேஸ்ட்
2 ஸ்பூன் APP
2 ஸ்பூன் தேங்கா துருவல்
ஒரு கை சின்ன வெங்காயம்
1 தக்காளி ( வேண்டுமானால் ) அரிந்து வைத்துக்கொள்ளவும் , விதைகளை எடுக்கவும் )
1 /2sp வறுத்து பொடித்த வெந்தயம்

தாளிக்க:

கடுகு
மஞ்சள் பொடி
கறிவேப்பிலை
எண்ணெய்
உப்பு.

செய்முறை:

ஒரு ஆழமான வாணலி அல்லது உருளி இல் எண்ணெய் விடவும்.
கடுகு போட்டு வெடித்ததும் ,
தக்காளி மற்றும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
இப்போது, வெந்த பருப்பு, புளி பேஸ்ட், தேங்கா துருவல், மஞ்சள் பொடி, வறுத்து பொடித்த வெந்தயம் ,APP பொடி, உப்பு என எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக போடவும்.
நன்கு கொதிக்கும் படி விடவும்.
பிறகு மிளகாய் பொடி வாசம் போனதும், கறிவேப்பிலை, தூவி இறக்கவும்.
சாதத்துடன் பரிமாறவும்.
உருளை கிழங்கு பொடிமாஸ் , அல்லது எந்த வதக்கின கறியுடனும் ( veg ) நன்றாக இருக்கும்.
குறிப்பு: இதில் முருங்கைக்காய் , முருங்கைக்காய் + சின்ன வெங்காயம், வெறும் பெரிய வெங்காயம், முருங்கைக்காய் + பெரிய வெங்காயம் என் தான் களை மாற்றி குழம்பு செய்யலாம்

மிளகு குழம்பு

மிளகு குழம்பு - உடலுக்கு ஆரோகியமான ஒரு குழம்பு. பத்திய குழம்பு என்று கூட சொல்லலாம்.

தேவையானவை:

10 குண்டு மிளகாய்
2spoon தனியா
2 - 4 ஸ்பூன் மிளகு
பெருங்காயம்
2 ஸ்பூன் புளி பேஸ்ட்
கறிவேப்பிலை - கொஞ்சம்

தாளிக்க:

கடுகு
மஞ்சள் பொடி
கறிவேப்பிலை
எண்ணெய்
உப்பு.

செய்முறை:

முதலில் சொன்னவைகளை எண்ணெயில் வறுத்து, புளி பேஸ்ட் உடன் நன்கு அரைக்கவும்.
இரண்டு டம்பளர் தண்ணிரில் கரைக்கவும்.
ஒரு ஆழமான வாணலில் தாரளமாக எண்ணெய் விட்டு தாளிக்கும் பொருட்களை போட்டு தாளிக்கவும்.
கரைத்து வைத்ததை கொட்டவும்.
உப்பு போடவும்.
நன்கு கொதித்து கெட்டியானதும் இறக்கவும்.
சுடு சாதத்துடன் நெய் போட்டு, மிளகு குழம்பு விட்டு சாப்பிடவும்.
'பருப்பு துவைய' லுடன் நன்றாக இருக்கும்.

குறிப்பு: இந்த குழம்பில் காய்ந்த மாங்காய் துண்டங்கள் போட்டும் செய்யலாம். அவ்வாறு செய்யும் போது புளி மற்றும் உப்பை குறைக்கவும்.

வத்த குழமபை எப்படி சாப்பிடலாம்? (2)

இப்ப தயிர் சாதம் .
இதுக்கு நன்றாக மசித்த சாதத்தில், கெட்டியான எருமை தயிர் விட்டு, உப்பு போட்டு 'மை 'யாக பிசையவும்.
கையில் ஒரு கவளம் எடுத்துக்கொண்டு, நான்கு விரல்களில் வைத்துக்கொண்டு , கட்டை விரலால் சாதத்தை குழிதுக்கொள்ளவேண்டும்.
அந்த குழி இல் ஒரு ஸ்பூன் வத்த குழம்பை விடனும். வெளியல்
வழியககூடாது.
அப்படியே 'லபக்'என்று வாய்ல போட்டுக்க வேண்டியது தான். Yummy யாக இருக்கும்.
குழந்தைகள் கூட நன்னா சாப்பிடுவா.
ஒரு 'குண்டான்' சாதமும் சீக்கிரம் முடிந்துவிடும்.
இதையும் Try பண்ணி பாருங்கள்.

வத்த குழமபை எப்படி சாப்பிடலாம்? (1)

இது ஒரு பெரிய விஷயமான்னு நினைபிர்கள் , ஆமாம். எதுக்கும் முறை நு ஒன்னு இருக்கே. புன்னகை

சுடு சாதத்தில் 'பிரெஷ் ' ஆக உருக்கின ஆவின் நெய் விட்டு ( எனக்கு உத்துகுளி வெண்ணை பிடிக்காது. சோகம் முதலில் நல்லா இருக்கும் பிறகு கொஞ்சம் புளிப்பு வாசனை வரும். உங்களுக்கு பிடிச்சா மாதிரி நெய் விடுக்கொங்கோ ) நல்லா குழைய வேகவைத்த பயத்தம் பருப்பை போட்டு 'மை 'யாக பிசையவும்.
கையில் ஒரு கவளம் எடுத்துக்கொண்டு, நான்கு விரல்களில் வைத்துக்கொண்டு , கட்டை விரலால் சாதத்தை குழிதுக்கொள்ளவேண்டும்.
அந்த குழி இல் ஒரு ஸ்பூன் வத்த குழம்பை விடனும். வெளியல்
வழியககூடாது.
அப்படியே 'லபக்'என்று வாய்ல போட்டுக்க வேண்டியது தான். Yummy யாக இருக்கும்.
குழந்தைகள் கூட நன்னா சாப்பிடுவா.
ஒரு 'குண்டான்' சாதமும் சீக்கிரம் முடிந்துவிடும்.
Try பண்ணி பாருங்கள்.

குழம்பு வடாம்

தேவையானவை:

பூசணி துருவல் – ஒரு கப்,
உளுத்தம்பருப்பு – ஒரு கப்,
மிளகாய் வற்றல் – 5 முதல் 8,
உப்பு – தேவையான அளவு,
பெருங்காயம – கால் டீஸ்பூன்

செய்முறை:

உளுத்தம்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
அதனுடன் பூசணிக்காய் துருவல், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக பிசையவும்.
பிசைந்த மாவை பிளாஸ்டிக் பேப்பரில் சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு, நன்றாக காய்ந்ததும் எடுக்கவும்.
வத்தகுழம்பு , பருப்புசாம்பார், பொரிச்ச கூ ட்டு செய்யும்போது இதைப் பொரித்துப் போட்டால், சுவையும் மணமும் கூடும்.

குறிப்பு: பூசணிக்காய் துருவல் போடாமலும் இதை செய்யலாம்.

வத்த குழம்பில் என்ன, என்ன போடலாம்?

வத்த குழம்பில் என்ன, என்ன போடலாம்?

பூண்டு, முருங்கைக்காய், வெண்டைக்காய், அவரைக்காய் போடலாம்.

கறிகாய் இல்லாவிடில், சுண்டக்காய் வற்றல் , மணத்தக்காளி வற்றல், கத்தரிக்காய் வற்றல், கொத்தவரை வற்றல் போட்டு "வற்றல்" குழம்பு வைக்கலாம்.

குழம்பு வடாம் போட்டும் "வற்றல்" குழம்பு வைக்கலாம்.

வத்த குழம்பு

வத்த குழம்பு, குடமிளகாய் சாம்பாருக்கு சொத்து எழுதி வைக்காதவர்கள் இதற்கு எழுதி வைக்கலாம். புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">

தேவையானவை :

1 பெரிய வெங்காயம் அல்லது ஒரு கை சின்ன வெங்காயம்
1 தக்காளி ( வேண்டுமானால் ) அரிந்து வைத்துக்கொள்ளவும் , விதைகளை எடுக்கவும் )
2 -3sp சாம்பார் பொடி
1 /2sp வறுத்து பொடித்த வெந்தயம்
2sp புளி பேஸ்ட்
1 /2sp துவரம் பருப்பு
1 /2sp கடலை பருப்பு
4 - 5 குண்டு மிளகாய் வற்றல்
கடுகு
மஞ்சள் பொடி
கறிவேப்பிலை
நல்ல எண்ணெய்
உப்பு.

செய்முறை:

ஒரு ஆழமான வாணலி அல்லது உருளி இல் எண்ணெய் விடவும்.
கடுகு போட்டு வெடித்ததும் , துவரம் பருப்பு, கடலை பருப்பு,மிளகாய் வற்றல் போட்டு வதக்கவும்.
தக்காளி மற்றும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
இப்போது, புளி பேஸ்ட், மஞ்சள் பொடி, வறுத்து பொடித்த வெந்தயம் ,சாம்பார் பொடி, உப்பு என எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக போடவும்.
நன்கு கொதிக்கும் படி விடவும்.
பிறகு மிளகாய் பொடி வாசம் போனதும், கறிவேப்பிலை துவி இறக்கவும்.
(எண்ணெய் பிரிந்து வரணும் )
சாதத்துடன் பரிமாறவும்.
சுட்ட அப்பளம் நல்லா இருக்கும்.
எல்லா வறுத்த (fried ) காய் களும் நன்றாக இருக்கும்.

குறிப்பு: வெங்காயம் போடும் போது பெருங்காயம் தேவை இல்ல.

பருப்பு சாம்பாரில் "தான் " என்ன போடலாம்?

பருப்பு சாம்பாரில் "தான் " என்ன போடலாம்?

கீழ் கண்ட காய்கறி லிஸ்ட் லிருந்து எதாவது ஒன்றை போடலாம்.
அவை: குடமிளகாய் (இந்த சாம்பாருக்கு சொத்தையே எழுதி வைக்கலாம் அவ்வளோ taste புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4"> ) முள்ளங்கி, நூல்கோல் , கத்தரி, வெண்டை, சின்ன வெங்காயம், முருங்கைக்காய், உருளை, காரட் , சௌ சௌ.

இதில் , வெங்காயம், சின்னவெங்காயம், குடமிளகாய், கத்தரி, வெண்டை போன்றவற்றை தாளித்ததும் போட்டு வதக்கணும்.

முள்ளங்கி, நூல்கோல் ,முருங்கைக்காய், காரட் , சௌ சௌ ஆகியவற்றை பருப்புடன் வேகவைத்து போடணும்.

உருளை யை வேக வைத்து தனியே வதக்கி போடணும்.

தனக்கு என் வாசம் இல்லாத காரட் , சௌ சௌ , பீன்ஸ் போன்றவற்றை சேர்த்து போடலாம்.

பருப்பு சாம்பார்

சாதாரணமாக நம் வீடுகளில் தினசரி செய்யும் ஒன்று இது. சாம்பாரில் போடும் 'தான் 'களை மாற்றி போடுவதால் சாம்பாரின் சுவையையும் மாற்றலாம். உதாரணத்துக்கு, குடமிளகாய் சாம்பார், முள்ளங்கி சாம்பார், முருங்கைக்காய் சாம்பார். எனவே நான் சாம்பார் செய்முறை யை சொல்கிறேன் மற்றும் அதில் போடும் காய்களையும் சொல்கிறேன். பிறகு உங்கள் கைவண்ணம் தான்.

Here we go........

தேவையானவை:

1cup வெந்த துவரம் பருப்பு
2sp புளி பேஸ்ட்
3 - 4 பச்சை மிளகாய்
1 பெரிய வெங்காயம் அல்லது ஒரு கை சின்ன வெங்காயம்
1 தக்காளி ( வேண்டுமானால் ) அரிந்து வைத்துக்கொள்ளவும் , விதைகளை எடுக்கவும் )
2 -3sp சாம்பார் பொடி
1 /2sp வறுத்து பொடித்த வெந்தயம்

தாளிக்க:

கடுகு
மஞ்சள் பொடி
கறிவேப்பிலை
கொத்தமல்லி


எண்ணெய்
உப்பு.

செய்முறை:

ஒரு ஆழமான வாணலி அல்லது உருளி இல் எண்ணெய் விடவும்.
கடுகு போட்டு வெடித்ததும் , அரிந்த பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
தக்காளி மற்றும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
இப்போது, வெந்த பருப்பு, புளி பேஸ்ட், மஞ்சள் பொடி, வறுத்து பொடித்த வெந்தயம் ,சாம்பார் பொடி, உப்பு என எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக போடவும்.
நன்கு கொதிக்கும் படி விடவும்.
பிறகு மிளகாய் பொடி வாசம் போனதும், கறிவேப்பிலை,கொத்தமல்லி துவி இறக்கவும்.
சாதத்துடன் பரிமாறவும்.
எந்த கறியுடனும் ( veg ) நன்றாக இருக்கும்.
எலுமிச்சை ஊறுகாய் அல்லது ஆவக்காய் கூட போறும். ஜாலி" src="http://r18.imgfast.net/users/1813/71/41/02/smiles/755837.gif" alt="ஜாலி" longdesc="17">


குறிப்பு: வெங்காயம் போடும் போது பெருங்காயம் தேவை இல்ல.

புளி பேஸ்ட்

குழம்பு பொடி கு அடுத்ததாக முக்கியமானது புளி. இதை குறைவாகவும் நிறைவாகவும் உபயோகிக்க சிறந்த வழி - புளி பேஸ்ட் . ஆமாம். இண்டைய விலை வாசியில் நாம் எதையுமே வீணடிக்க முடியாது. எனவே புளியை சிக்கனமாக உபயோகிக்கவும், சமையலை சிக்கிரம் முடிக்கவும் இந்த புளி பேஸ்ட் உதவும். அதை தயாரித்து வைத்துக்கொண்டால் சமையல் எளிது மேலும் அந்த புளி பேஸ்ட் கொண்டு பல 'recipes ம பண்ணலாம். அதை பிறகு சொல்கிறேன். இப்ப புளி பேஸ்ட்

இது ரொம்ப சுலபம். 1 /4kg புளியை வெந்நீரில் அரை மணி ஊறவைக்கவும்
பிறகு மட்டா தண்ணி விட்டு கரைக்கவும்
'திக் ' புளி தண்ணி யை தனியே வைக்கவும்.
ஒரு பெரிய வாணலில் தாரளமாக (100 gm ) எண்ணெய் விட்டு கடுகு மஞ்சள் பொடி, தாளிக்கவும்.
பெருங்காயபொடி போடவும்.
புளிதண்ணியை ஊற்றவும்
அது நன்கு கொதிக்கட்டும்.
மற்றும் ஒரு வாணலில் 1 மேசை கரண்டி வெந்தயம் வறுக்கவும்.
நன்கு பொடி செய்து புளி தண்ணி இல் போடவும்.
நன்கு கொதித்து லேகிய பதம் வந்ததும் இறக்கவும்.
ஆறினதும் பாட்டில் ல போடவும்.
நம்ப புளி பேஸ்ட் தயார்.

குறிப்பு: கெட்டியாக புளி கரைக்க கஷ்டமானால், கொட்டை களை எடுத்துவிட்டு, மிக்சியில் அரைத்து வடிகட்டலாம். ( நான் அப்படி தான் செய்வது வழக்கம். )

குழம்பு பொடி

முதலில் குழம்பு பொடி. இது தான் குழம்பின் ருசியை நிர்ணயம் செய்வது. நான் இங்கு தரப்போகும் பொடி 4 தலைமுறைகளாக எங்கள் வீட்டில் உபயோகிப்பது. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். இதோ அளவுகள்

500gm குண்டு மிளகாய்
500gm தனியா
150gm மிளகு
100gm துவரம் பருப்பு
100gm கடலை பருப்பு
100gm வெந்தயம்
100gm விரலி மஞ்சள்

மேல் கூறிய எல்லா பொருட்களையும் ஒரு டப்பாவில் போட்டு, மெசினில் அரைத்து, ( 3 போட்டு அரைக்கவும் ) ஒரு பேப்பரில் போட்டு ஆறவிடவும். பிறகு
காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். தினசரி உபயோகத்துக்கு சிறிய டப்பாவில் எடுத்துவைதுக்கொள்ளவும்.

இந்த பொடி 6 மாதமானாலும் கெடாது. Fridge இல் வைத்தால் வருடக்கணக்கில் வைத்துக்கொள்ளலாம்.

ஜவ்வரிசி வடாம்

ஜவ்வரிசி வடாம் - கூழ் வத்தலுக்கு சமமான அந்தஸ்த்துடய வத்தல் . எங்கள் வீடுகளில் இதற்க்கும் பெரும் வரவேற்ப்புண்டு. போடுவது ரொம்ப ஈஸி. நல்ல சூப்பராக பொரியும். குழந்தை கள் பெரிதும் விரும்புவர்கள் . இதிலும் பல வகை உண்டு. அவற்றை இங்கு பார்போம்.

தேவையானவை :

1 கிலோ ஜவ்வரிசி
150 -200 கிராம் பச்சை மிளகாய்
1/2 பெருங்காய பொடி
உப்பு

செய்முறை :

முதல் நாள் இரவே ஜவ்வரிசியை நன்கு 2 -3 முறை களைந்து அது மூழ்கும் வரை திண்ணிர் ஊற்றி ஊற வைக்க வேண்டும்.
காலை இல் அடி கனமான உருளி இல் இதை போட்டு கொதிக்க விடவும்.
பச்சை மிளகாயை அலம்பி நன்கு அரைக்கவும்.
ஜவ்வரிசி வேக ஆரம்பித்ததும் அரைத்து வைத்துள்ள பச்சை மிளகை விழுது உப்பு மற்றும் பெருங்காய பொடி போட்டு கலக்கவும்.
எல்லமாக சேந்து நன்கு வெந்ததும் அடுப்பை அணைக்கவும் .
கொஞ்சம் ஆறினதும், பிளாஸ்டிக் ஷீட் இல் கரண்டியால் மொண்டு மொண்டு வத்தல் இடவும்.
நேரம் ஆக ஆக வத்தல் மாவு கெட்டியாகும்.
எனவே வேண்டுமானால் தண்ணீர் விட்டுக்கொண்டு மொத்த மாவையும் வாடாமாக இடவும்.
மதியம் அல்லது சாயந்திரம் வத்தல்களை பிச்சு திருப்பி போடணும்.
இருபுறமும் நன்கு காய்ந்ததும் ( கையால் உடைக்க வரணும் ) டப்பாக்களில் சேமிக்கவும்.
சரியாக செய்தால் வத்தல் பொறிக்கும் பொழுது 2 - 3 மடங்காக வெள்ளையாய் பொரியும்.

அவல் வத்தல்

அவல் வத்தல் - இதுவும் பகோடா போல இருக்கும். ரொம்ப சுவையானது.
அபாரமாக இருக்கும் புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">

தேவயானவை :

1 கிலோ கெட்டி அவல்
3/4 கிலோ பொடியாக அரிந்த பூசணி (வெள்ளை நிறத்தில் இருப்பது )
200 பச்சை மிளகாய்
2 ஸ்பூன் ஓமம் அல்லது சீரகம்
உப்பு


செய்முறை:
முதலில் அவலை 2 - 3 முறை தண்ணீர் விட்டு நன்கு அலசவும்.
பிறகு அவல் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு ஒரு 1/2 மணி வாக்கவும்.
இதனிடையே பூசணிக்காயை பொடியாக நறுக்கி அல்லது துருவி பிழிந்து வாக்கவும்.
ஊறி பிழிந்த அவலில் பிழிந்து வைத்துள்ள பூசணிக்கா ஓமம் அல்லது சீரகம் மற்றும் பச்சை மிளகாயை போட்டு கலக்கவும்.
நன்கு பிசையவும்.
பிளாஸ்டிக் ஷீட் இல் கையால் மாவை எடுத்து பகோடா போடுவது போல் கிள்ளி, கிள்ளி வைக்கவும்.
காய கொஞ்சம் லேட் ஆனாலும் பொறுமயாக 2 நாள் காய வைத்து டப்பாவில் அடைக்கவும்.
தேவயான போது வறுக்கலாம்.
கலந்த சாத வகைகளுக்கு ரொம்ப நல்ல இருக்கும்
வெறுமன கூட சயந்தரம் காஃபி அல்லது டீ யுடன் சாப்பிடலாம்.
நல்லா வெள்ளையாக பொரிந்து கொண்டு பார்பதர்க்கும் அழகாக இருக்கும்.

அவல் வத்தல் 2

அவல் வத்தல் - இதுவும் பகோடா போல இருக்கும். ரொம்ப சுவையானது.
அபாரமாக இருக்கும் புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">

தேவயானவை :

1 கிலோ கெட்டி அவல்
1/4 கிலோ பொடியாக அரிந்த பூசணி (வெள்ளை நிறத்தில் இருப்பது )
1/2 கிலோ பொடியாக நறுக்கிய வெங்காயம்
200 பச்சை மிளகாய்
2 ஸ்பூன் ஓமம் அல்லது சீரகம்
உப்பு


செய்முறை:
முதலில் அவலை 2 - 3 முறை தண்ணீர் விட்டு நன்கு அலசவும்.
பிறகு அவல் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு ஒரு 1/2 மணி வாக்கவும்.
இதனிடையே பூசணிக்காயை பொடியாக நறுக்கி அல்லது துருவி பிழிந்து வாக்கவும்.
ஊறி பிழிந்த அவலில் பிழிந்து வைத்துள்ள பூசணிக்கா. வெங்காயம், ஓமம் அல்லது சீரகம் (தேவை இல்லை என்றால் போடவேண்டாம் ) மற்றும் பச்சை மிளகாயை போட்டு கலக்கவும்.
நன்கு பிசையவும்.
பிளாஸ்டிக் ஷீட் இல் கையால் மாவை எடுத்து பகோடா போடுவது போல் கிள்ளி, கிள்ளி வைக்கவும்.
காய கொஞ்சம் லேட் ஆனாலும் பொறுமயாக 2 நாள் காய வைத்து டப்பாவில் அடைக்கவும்.
தேவயான போது வறுக்கலாம்.
கலந்த சாத வகைகளுக்கு ரொம்ப நல்ல இருக்கும்
வெறுமன கூட சயந்தரம் காஃபி அல்லது டீ யுடன் சாப்பிடலாம்.
நல்லா வெள்ளையாக பொரிந்து கொண்டு பார்பதர்க்கும் அழகாக இருக்கும்.

Blog Archive