Wednesday, July 20, 2011

பருப்பு உருண்டைக் குழம்பு

தேவையானவை:

துவரம்பருப்பு - 1 கப்
சாம்பார்பொடி - 3 டீஸ்பூன்
புளி - எலுமிச்சம்பழ அளவு அல்லது புளி பேஸ்ட் 2 ஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
குண்டு மிளகாய் - 3 - 4
வெந்தய பொடி - 1/2 ஸ்பூன் ( வறுத்து அரைத்தது)
பெருங்காய பொடி - 1/4 ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:
துவரம்பருப்பை ஊற வைத்து அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும்.
அதை, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, கரைத்து வடிகட்டிய புளிக் கரைசலை சேர்க்கவும்.
அதில் சாம்பார்பொடி சேர்த்துக் கலக்கி, உப்பு சேர்க்கவும்.
குழம்பு கொதித்து மணம் வரும்போது உருண்டைகளை அதில் மெதுவாகப் போடவும். நன்றாக கொதிக்கவிடவும்.
வெந்தய பொடி போடவும். பெருங்காய பொடி போடவும்.

குறிப்பு: உருண்டைகளை தனியாக ஸ்நாக்ஸ் போல சாப்பிடலாம்.

No comments:

Blog Archive