Monday, August 1, 2011

மளிகை லிஸ்ட்

இதை நாம் போடும்போது, இந்த மாதம் பண்டிகை வருகிறது என்று நினைவில் வைத்துக்கொண்டு போடணும். பண்டிகைகளுக்கு செய்யவேண்டியவைகளை ஒருமுறை யோசித்து அதிகப்படியாக வாங்க வேண்டியவைகளை குறித்துவைத்துக்கொண்டால் நலம். சில பொருட்களை நான் இங்கு சொல்கிறேன் அவை உங்கள் சமையலுக்கு சுவையை கூட்டும்.

1. மில்க் மெய்டு : இதை ஒரு டின் வாங்கி வைத்துக்கொண்டால் , நாம் பாயசம், சக்கரை பொங்கல் போன்றவை செய்யும் போது இதை கொஞ்சம் சேர்த்தல் , அம்ருதம் தான் போங்கள் .

2. டூட்டி ப்ரூடி: எப்பவும் பாயசத்தில் திராக்ஷை முந்திரி போடுவதற்க்கு பதிலாக இதை போடலாம். கல்ர் கலர்ராய் இருக்கும் இதை குழந்தைகள் விரும்புவர்கள்.

3. அதேபோல் பாயசத்தில் முந்த்ரிகு பதிலாக உப்பில்லாம்ல் வறுத்த வேர்கடலை யை தோலுரித்து போடலாம்.

பண்டிகைக்கு தயாராவது எப்படி?

1. குறைந்த பக்ஷம் 1 வாரம் முன்பே நாம் மளிகை லிஸ்ட் ரெடி பண்ணனும். மிஷினில் மாவு அரைக்கணும் என்றால் அரைத்து வரணும். நட பகோடா , மனோப்பு போல செய்வதனால் அவற்றுக்கும் மாவு அரைத்து வைக்கணும். கடைசி நேரத்தில் கரண்ட் கட் ஆனால் பண்டிகை "கோவிந்தா" தான் புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">

2. செய்ய வேண்டி ய பக்ஷணங்களை முதலில் எழுதணும், ( வெறுமன நினைவில் வைத்தால் போறாது) ஒரு பேப்பர்ல எழுதணும். அதற்க்கு தக்கன மளிகை லிஸ்ட் போடணும்.

3. முதல்நாளே என்ன என்ன செய்யனும், சமையல் உட்பட, எழுதி பார்க்கணும்.

4. எதை முன்ன செய்யனும் ,எதை பின்ன செய்யனும் என்றும் எழுதணும்.

உதாரணத்துக்கு, கிருஷ்ண ஜெயந்தி பக்ஷணம் செய்வதானால், எல்லா மாவுகளையும் முதலில் நல்லா சலிக்கணும். எள்ளை பொறுக்கி வைக்கணும். ரொம்ப சுத்தமான எள் என்று யார் சொன்னாலும் நம்பாதீங்கோ , சோம்பல் படாம பொறுக்கிடுங்கோ. ஓர் துளி மண் இருந்தாலும் சீடை நம்மேல் தான் வெடிக்கும். சொன்னவா மேல இல்ல. அப்பத்துக்கு முதலில் கரைத்து வெச்சிடனும். ஆனால் கடைசியா அப்பம் குத்தணும் . அப்ப தான் ஊரிண்டு ரொம்ப 'மெத்' நு வரும்.
இது போல், செய்ய வேண்டியவைகளி விவரமாக எழுதி, ஒரு பரிக்ஷை அட்டை ல பின் பண்ணி சமையல் உள்லுள்ள வைத்துக்கொள்ளுங்கள்.
இப்படி செய்தால் ரொம்ப சிஸ்ஸ்டாமடிக்காக இருக்கும், கொஞ்சமும் பதட்டப்படமல் சுலபமாக எல்லாவற்றையும் செயலாம். மறக்காம இருக்கும்.

குழந்தைகள் இதை பார்க்கும் போது அவர்களும் 'ப்ளானிங்க்' என்றால் என்ன என்று கற்றுக்கொள்வார்கள் .

அஞ்சறை பெட்டி

இதை வெறும் தாளிக்கும் பொருட்கள் வைக்கும் பெட்டி என்று என்ன வேண்டாம் இதற்க்கு பல உபயோகங்கள் உண்டு.

1. பூஜை அறை இல் திரி, சுவாமிக்கு பண்ணுவதற்க்கு கல்கண்டு, அவல், திராக்ஷை போன்றவை வைத்து கொள்ளலாம்.

2. பூஜை இன் போது தேவைப்படும், மஞ்சள் பொடி, சந்தன கட்டி, குங்குமம் வைக்கக்லாம் .

3. சின்ன பெண் குழந்தை கள் இருக்கும் வீடுகளில் சின்ன சின்ன ஹேர் கிளிப்ஸ், ஹெஐர் பின், சேஃப்டி பின் , ரப்பர் பாண்ட் போன்றவை வாக்க உபயோகிக்கலாம். கால வேளைகளில் தேடாமல் இருக்க சௌகர்யமாய் இருக்கும்.

4. சமையல் அறை இல் சாதாரணமாய் கடுகு, மிளகு, உளுந்து, கடலை பருப்பு , மிளகாய் வற்றல் போன்றவை வைப்போம் அல்லவா அது போல மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, கரம் மசாலா பொடி, தனைய பொடி, அம்சூர் போல தினமும் தேவை படும் பொடிகளி வைக்கவும் உபயோகப்படுத்தலாம்.

5. இப்ப பண்டிகை காலங்களில், அதில் நாம் துண்டாக்கிய முந்திரி, அலம்பி துடைத்த திராக்ஷை (கிஸ் மிஸ் ) , ஊறவைத்து தோலுரித்து துண்டங்கள் ஆக்கிய பாதாம் போன்றவைகளை வைத்துக்கொண்டால், பாயசத்திலும் பொங்கலிலும் போட சௌகர்யமாய் இருக்கும்.

மத்தியான வேளைகளில் வெறுமன இருக்கும் போது இப்படி செய்து வைத்துக்கொண்டால் , காலை நேர பர பரப்பை தவிர்க்கலாம் புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">

வெல்லம்

வெல்லம் : இதை யும் மொத்தமாக உடைத்து வைத்துக்கொண்டால் சௌகர்யம்.
இப்பவெல்லாம் ஃப்ளாட்ஸ் இல் இருப்பதால், முன்பு போல அம்மி குழவியால் உடைக்க முடியாது. சுத்தியல் , இடுக்கி , கரண்டி என தேடவேண்டாம் புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4"> அதற்க்கு சுலபமான முறை, ஒரு வெல்ல கட்டி யை எடுத்து மக்ரோ வேவ் ஓவனில் ஒரு 30 முதல் 45 செகண்ட் வரை போடவும். எடுத்து தொட்டு பார்க்கவும் நல்லா சுடவில்லை என்றால் மீண்டும் ஒரு 20 செகண்ட்ஸ் போடவும். வெளியே எடுத்து கத்தியால் சுலபமாக நறுக்கவும். ஒரு டப்பாவில் சேமிக்கவும். பாயசம் செய்யும் போது காலை வேளைகளில் கஷ்டம் இருக்காது புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">

குறிப்பு: ஓவனில் வைத்து எடுக்கும் போது சில சமயம் அந்த வெல்லக்கட்டி இன் நடுவில் கொஞ்சம் பாகு போல ஆகிவிடும், சூடு அதிகமானால் இப்படி ஆவதுண்டு. எனவே வெல்லத்தை நறுக்கும் முன், ஒரு தட்டில் வைத்து முதலில் இரண்டாக கட் செய்யவும். பிறகு கைய்ல் எடுத்து கத்தியால் சீவவும். அழகான துருவல்களாக வரும். நடுவில் வெல்லம் குழம்பு போல ஆகி இருந்தால், கை இல் படாமல் தட்டில் கொட்டிவிடும். சில நிமிஷங்கள் அப்படியே விட்டு விட்டு பின் நறுக்கலாம். சரியா?

பண்டிகை கால டிப்ஸ்

ஆடிமாதம் பிறந்து விட்டாலே பண்டிகைகள் தான். ஆடி செவ்வை, ஆடி வெள்ளி, ஆடி ஞாயிறு , பிறகு ஆவணி அவிட்டம் , கிருஷ்ண ஜெயந்தி , பிள்ளையார் சதுர்த்தி என பட்டியல் நீளும். அதற்கான முன்னேற்பாடுகள் செய்து வைத்துக்கொண்டால், பண்டிகை அன்று சிரமப்படாமல் சந்தோஷமாக கொண்டாடலாம். அதற்கான டிப்ஸ் தான் கீழுள்ளவைகள்

கோல மாவு :

எப்படியும் இழை கோலம் தான் போடணும், ஒவ்வொரு நாளும் அரிசி ஊறவைத்து அரைத்து , கோலம் போட்டாலும், மீந்து விட்டால் வேஸ்ட் தான் . அதனால் ஒரு 1/2 அல்லது 1 ஆழாக்கு அரிசி யை ஊற வைத்து நன்கு அரைக்கவும் . முதல் நாள் அப்படியே கோலம் போட்டு விடவும். பிறகு அந்த மாவை ஒரு தாம்பாளத்தில் கொட்டி, காய வைக்கவும். வெயீல் தான் வேண்டும் என்பது இல்லை. காற்றாட வைத்தாலே காய்ந்து விடும். அவ்வளவுதான், காய்ந்ததும் அதை டப்பாவில் போட்டு வைக்கவும். தேவையான போது, அதிலிருந்து கொஞ்சம் எடுத்து துளி தண்ணி விட்டு கரைத்து கோலம் போடவும். இழை கோலம் ரொம்ப நல்ல வரும்.

குறிப்பு: கோலம் ரொம்ப வெள்ளை யாக வாரவும், சீக்கிரம் அழியாமலும் இருக்க அரைத்த மாவில் கொஞ்சம் மைதா மாவு சேர்த்து கலந்து கோலம் போடவும்.