2. செய்ய வேண்டி ய பக்ஷணங்களை முதலில் எழுதணும், ( வெறுமன நினைவில் வைத்தால் போறாது) ஒரு பேப்பர்ல எழுதணும். அதற்க்கு தக்கன மளிகை லிஸ்ட் போடணும்.
3. முதல்நாளே என்ன என்ன செய்யனும், சமையல் உட்பட, எழுதி பார்க்கணும்.
4. எதை முன்ன செய்யனும் ,எதை பின்ன செய்யனும் என்றும் எழுதணும்.
உதாரணத்துக்கு, கிருஷ்ண ஜெயந்தி பக்ஷணம் செய்வதானால், எல்லா மாவுகளையும் முதலில் நல்லா சலிக்கணும். எள்ளை பொறுக்கி வைக்கணும். ரொம்ப சுத்தமான எள் என்று யார் சொன்னாலும் நம்பாதீங்கோ , சோம்பல் படாம பொறுக்கிடுங்கோ. ஓர் துளி மண் இருந்தாலும் சீடை நம்மேல் தான் வெடிக்கும். சொன்னவா மேல இல்ல. அப்பத்துக்கு முதலில் கரைத்து வெச்சிடனும். ஆனால் கடைசியா அப்பம் குத்தணும் . அப்ப தான் ஊரிண்டு ரொம்ப 'மெத்' நு வரும்.
இது போல், செய்ய வேண்டியவைகளி விவரமாக எழுதி, ஒரு பரிக்ஷை அட்டை ல பின் பண்ணி சமையல் உள்லுள்ள வைத்துக்கொள்ளுங்கள்.
இப்படி செய்தால் ரொம்ப சிஸ்ஸ்டாமடிக்காக இருக்கும், கொஞ்சமும் பதட்டப்படமல் சுலபமாக எல்லாவற்றையும் செயலாம். மறக்காம இருக்கும்.
குழந்தைகள் இதை பார்க்கும் போது அவர்களும் 'ப்ளானிங்க்' என்றால் என்ன என்று கற்றுக்கொள்வார்கள் .
1 comment:
It is very useful to me :) thanks
Post a Comment