Tuesday, July 19, 2011

பாலக் பக்கோடா

தேவையானவை:

பாலக்கீரை - ஒரு கட்டு
கடலை மாவு - அரை கப்
அரிசி மாவு-கால் கப்
இஞ்சி, பூண்டு, சோம்பு-அரைத்த விழுது ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு
எண்ணெய் - பொரிக்க

செய்முறை:

கீரையை ஆய்ந்து தண்ணீரில் அலசி பொடியாக நறுக்கவும்.
அதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, இஞ்சி, பூண்டு, சோம்பு விழுது சேர்த்து பிசையவும்
பிறகு கொஞ்சம் தண்ணீர் விட்டு பக்கோடாவுக்கு தேவையான பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு பக்கோடாக்களாக போட்டு பொரித்தெடுக்கவும்.
ரொம்ப நல்லா இருக்கும்.

இனிப்புச் சட்னி

தேவையானவை:

பேரீச்சம்பழம் 50 கிராம்
ஒரு சிறு உருண்டை புளி
உப்பு
மிளகாய்த் பொடி 1 டீஸ்பூன்
சர்க்கரை 1 டீஸ்பூன்

பேரீச்சம்பழ கொட்டையை எடுத்துவிட்டு , எல்லாவற்றையும் சேர்த்து நன்கு அரைக்கவும்.
இதுவும் கெட்டிக் குழம்பு பத்த்தில் இருக்கணும் .

இனிப்புச் சட்னி இரண்டாம் வகை

100 கிராம் புளியை ஊற வைத்து புளிக்கரைசல் எடுத்து கொட்டை, கோதுகள் போக வடிகட்டி வைக்கவும்.
இதற்கு ஒரு ஆழாக்கு அல்லது ஒன்றரை ஆழாக்கு வெல்லத்தூள் தேவைப்படும். ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூள், உப்பு தேவையான அளவு.
ஒரு டீஸ்பூன் சர்க்கரை(பிடித்தமானால்)
ஜீரகத்தை வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ளவும். இந்தப் பொடியில் ஒரு டேபிள் ஸ்பூன் பொடியைச் சட்னியை இறக்குகையில் சேர்க்கவேண்டும்.

இப்போது கரைத்த புளிக்கரைசலை அடுப்பில் வைத்து, உப்பு, மிளகாய்த்தூள், வெல்லத்தூள், சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விடவும்.
நன்கு கொதித்துச் சட்னி கெட்டியாக ஆகும்போது வறுத்த ஜீரகப் பொடியைச் சேர்த்து அடுப்பில் இறந்து கீழே இறக்கவும்.
இது பல நாட்கள் பயன்படுத்தலாம்.
பயன்படுத்துகையில் ஒரு சின்னக் கிண்ணம் சட்னியை எடுத்துக்கொண்டு நீர் விட்டுத் தளர்த்திக்கொண்டால் ஆறு அல்லது ஏழு நபர்களுக்குப் பரிமாற முடியும்.

காரச் சட்னி அல்லது பச்சைச் சட்னி செய்யும் விதம்.

தேவையான பொருட்கள்:

கொத்துமல்லி பெரியதாய் ஒரு கட்டு
பச்சை மிளகாய்10 -12
இஞ்சி ஒரு துண்டு
பூண்டு 2 -4
2 டீஸ்பூன் பொட்டுக்கடலை
உப்பு

செய்முறை :

கொத்துமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி போன்றவற்றை நன்கு கழுவி நீரை வடிகட்டிவிட்டு மற்றச் சாமான்களோடு சேர்த்து அரைக்கவும்.
கொஞ்சம் நீர் விட்டு அரைக்கலாம்.
கெட்டிக் குழம்பு பத்த்தில் சட்னி இருக்கனும் .

கலர்ஃபுல் பிரெட் சாட்

தேவையானவை:

கோதுமை பிரெட் துண்டுகள் - 4
தயிர் - 2 கப்
தித்திப்பு சட்னி - 1 டேபிள்ஸ்பூன்
கார சட்னி - 1 டேபிள் ஸ்பூன்
ஓமப்பொடி, காராபூந்தி - தலா அரை கப்
வெங்காயம், தக்காளி
மல்லித்தழை - தலா அரை கப்
வறுத்த முந்திரி - அரை கப்
மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு
எண்ணெய் + நெய் கலந்து வைத்துக்கொள்ளவும்
வறுத்துப்போடித்த சீரகம் 1 ஸ்பூன்

செய்முறை:

தயிரைக் கடைந்து தனியே வைக்கவும்.
பிரெட்டின் ஓரத்தை எடுத்துவிட்டு முக்கோண மாக வெட்டி, எண்ணெயில் பொன்னிறமாக பொரித் தெடுக்கவும்.
அதை பரிமாறும் தட்டில் வரிசையாக அடுக்கி அதன் மேல் ஒரு கரண்டி தேன் கடைந்த தயிரை பரவலாக ஊற்றி, வெங்காயம், தக்காளி, மல்லித்தழையைப் பரத்தவும்.
தித்திப்பு சட்னி மற்றும் கார சட்னி ஊற்றி ஒரு சிட்டிகை சீரக பொடி தூவி
பிறகு காராபூந்தி, ஓமப்பொடி, மிளகாய்த்தூள், வறுத்த முந்திரி என வரிசையாக தூவி பரிமாறவும்.

பிரெட் வெஜ் ஆம்லெட்

தேவையானவை:

சால்ட் பிரெட் துண்டுகள் - 6 முதல் 8
கடலை மாவு - ஒரு கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், குடமிளகாய் - அரை கப்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்

செய்முறை:
பிரட் ஐ சிறிய வட்டமாக கட் செய்து வைத்துக்கொள்ளவும்
கடலை மாவில் வெங்காயம், காரட், குடமிளகாய், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும்.
தோசை கல் காய்ந்ததும் சிறிது எண்ணெய் ஊற்றி ஒரு பிரெட் துண்டை போட்டு, அதன் மேல் ஒரு கரண்டி கடலைமாவை பரவலாக ஊற்றவும்.
2 நிமிடம் கழித்து மெதுவாக மறுபுறம் திருப்பிப் போட்டு எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக எடுக்கவும்.

பிரெட் ஊத்தப்பம்

தேவையானவை:

சால்ட் பிரெட் துண்டுகள் - 12
மோர் - ஒரு கப்
பெரிய வெங்காயம் 1 -2
தக்காளி - தலா 1 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
பொடியாக நறுக்கிய மல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
நெய் (அ) எண்ணெய்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பிரெட்டின் ஓரங்களை வெட்டி விடவும்.
அதை மோரில் நனைத்து உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும் .
(தோசை மாவு பதத்தில் கரைக்கவும்.)
தோசை கல் காய்ந்ததும், ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி, அதில் ஒரு கரண்டி மாவை ஊற்றி தோசை வர்க்கவும்.
தீ சிறியதாக இருப்பது அவசியம்
அதன் மேல் பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய், மல்லித்தழை, மிளகுத்தூள் எல்லாவற்றையும் கலந்து ஒரு டீஸ்பூன் தூவி விடவும். மறுபுறம் திருப்பிப்போட்டு எண்ணெய் ஊற்றி பொன்னிறமானதும் எடுக்கவும். தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

பிரெட் கோஃப்தா

தேவையானவை:

சால்ட் பிரெட் துண்டுகள் - 10
பால் - கொஞ்சம்
வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 2(இரண்டையும் பொடியாக நறுக்கவும்)
உருளைக்கிழங்கு - 2 (வேகவைத்து தோலுரிக்கவும்)
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
கரம்மசாலா தூள் - அரை டீஸ்பூன்
தக்காளி - 2 (தண்ணீர் விடாமல் அரைத்து சாறு எடுக்கவும்)அல்லது டொம்டோ பியூரி உபயோகிக்கவும்.
மல்லித்தழை - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு
எண்ணெய் கொஞ்சம்

செய்முறை:

பாலில் பிரெட்டை நனைத்து வேக வைத்த உருளைகிழங்கு உப்புடன் பிசையவும்.
சிறு உருண்டைகளாக உருட்டி, எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். வாணலி இல் எண்ணெய் காய்ந்ததும் சீரகம், வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.
நன்கு வதங்கியதும் தக்காளி ப்யூரியை (தக்காளி சாறு) ஊற்றி, மிளகாய் பொடி , கரம்மசாலா பொடி , போட்டு கொதிக்கவிடவும்.
நான்கு கொதித்து வாசனை போனதும் இறக்கிவிடவும்.
வேண்டுமானால் கொத்தமல்லி தழை போடலாம்.
பரிமாறுவதற்கு முன் பொரித்தெடுத்த பிரெட் கோஃப்தாக்களை அதில் போட்டு மல்லித்தழை தூவி பரிமாறவும்.

பிரட் ஹல்வா 2

தேவையானவை:

மில்க் பிரட்10 ஸ்லைஸ்
மில்க் மெய்டு 1/2 டின்
நெய் 1 - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி துண்டுகள் 1 டேபிள் ஸ்பூன்
திராக்ஷை 10 - 12

செய்முறை:

முதலில் பிரட் ன் ஓரங்களை நிக்கிவிடுங்கள்.
பிரட் ஐ மிச்சி இல் ஒரு சுட்டறு சுற்றி எடுங்கள்.
பூந்துருவலாக வரும்.
வாணலி இல் நெய் விட்டு முந்திரி திராக்ஷை வறுக்கவும்.
அடுப்பை சின்னதாக்கி விட்டு பிரட் துருவலை போடவும்.
ஒரு கிளறு கிளறி மில்க் மெய்டு செக்கவும்.
நன்கு கிளறி மிதி ஒரு ஸ்பூன் நெய் யையும் விட்டு இறக்கிவிடவும்.
அவ்வளவு தான் சுவையான 'பிரட் ஹல்வா' நிமிடத்தில் தயார்.

குறிப்பு: மில்க் மெய்டு சேர்ப்பதால் சர்க்கரை மற்றும் பால் வேண்டாம்

பிரட் ஹல்வா

பிரட் ஹல்வா - இது சமிப காலமாக பிரபலமாகும் சுலபமான இனிப்பு.செய்வதும் சுலபம். பெரியவர்கள் முதல் குழந்திகள் வரை விரும்பி உண்பார்கள்.

தேவையானவை:

மில்க் பிரட்10 ஸ்லைஸ்
பால் 1 கப்
சர்க்கரை 1 கப்
நெய் 1 - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி துண்டுகள் 1 டேபிள் ஸ்பூன்
திராக்ஷை 10 - 12

செய்முறை:

முதலில் பிரட் ன் ஓரங்களை நிக்கிவிடுங்கள்.
பாலில் நனைத்து வையுங்கள். அல்லது மிச்சி இல் ஒரு சுட்டறு சுற்றி எடுங்கள்.
வாணலி இல் நெய் விட்டு முந்திரி திராக்ஷை வறுக்கவும்.
பிறகு அரைத்து வைத்ததை கொட்டி கிளறவும்.
1 நிமிடத்துக்கு பிறகு சர்க்கரை சேர்க்கவும்.
நன்கு கிளறி மிதி ஒரு ஸ்பூன் நெய் யையும் விட்டு இறக்கிவிடவும்.
அவ்வளவு தான் சுவையான 'பிரட் ஹல்வா' நிமிடத்தில் தயார்.

குறிப்பு: நீங்கள் இந்த ஹல்வா செய்ய ஃப்ரூட் பிரட் ம உபயோகிக்கலாம் . அப்பொழுது மிக்சி இல் அரைக்கவேண்டாம் . பாலில் ஒரு 10 நிமிஷம் நனைத்து வைத்து பின் ஹல்வா செய்யவும். இப்படி செய்வதால் அதில் உள்ள உயர் பழங்கள் உடயாமல் இருக்கும் மேலும் முந்திரி திராக்ஷை தேவை இல்லை . எனவே நெய்யும் குறைவாக உபயோகமாகும்.

பிரட் குலோப் ஜாமூன்

தேவையானவை:

ஸ்வீட் பிரட்10 ஸ்லைஸ்
சர்க்கரை 1 கப்
பொறிக்க எண்ணை
ரோஸ் எசன்ஸ் சில துளிகள்

செய்முறை:
முதலில் பிரட் ஐ விரல் நீளத்துக்கு கட் பண்ணி வைக்கவும்
ஒரு வாணலி இல் 1 1/2 கப் தண்ணி விட்டு சர்க்கரையை போட்டு அடுப்பை சின்னதாக வைக்கவும்.
அது நன்கு கொதித்து ஒரு கம்பி பாகு வரும் போது இறக்கி துளி ரோஸ் எசன்ஸ் விட்டு வைக்கவும்.
மற்றும் ஒரு அடுப்பில் வாணலி வைத்து எண்ணை விட்டு கட் பண்ணி வைத்துள்ள பிரட் துண்டங்களை பொரிக்கவும்.
அவை 'கோல்டன் ' கலரில் பொரிந்ததும் பாகில் போடவும்.
அடுத்த ஈடு பொரியும் வரை அது பாகில் இருக்கட்டும்.
அடுத்த ஈடு பிரட் பொரிந்து பாகில் போடும் முன் , முன்பே போட்டு பாகில் ஊறிய பிரட் துண்டங்களை அதாவது 'பிரட் குலோப் ஜாமூன் களை' எடுத்து தனியாக வைக்கவும்.
இப்போது பொறித்த பிரட் துண்டங்களை மீதி பாகில் போடவும்.
இவ்வாறு அனைத்து பிரட் துண்டங்களையும் பொறித்து பாகில் போட்டு எடுத்து வைக்கவும்.
ரொம்ப சுவையான 'பிரட் குலோப் ஜாமூன்' தயார்.

குறிப்பு: நாம் தீபாவளி சமயம் குலோப் ஜாமூன் செய்த பின் அந்த பாகு மீந்து விடும் ; அந்த நேரத்தில் இந்த 'பிரட் குலோப் ஜாமூன்' தயார் செயல்லாம் . இந்த பொரிந்த பிரட் துண்டங்கள் எல்லா பாகையும் உறிந்துகொண்டு சுவையாக இருக்கும் . நமக்கு பாகும் வீணாகாது புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">

பிரட் பஜ்ஜி

தேவையானவை :

சால்ட் பிரட் 10 ஸ்லைஸ் ( குறுக்கு வாட்டில் வெட்டி வைக்கவும் )
கடலை மாவு 1/4 கிலோ
மிளகாய் பொடி 2 ஸ்பூன்
ஓமம் 1/2 ஸ்பூன்
பொருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்
2 சிட்டிகை சோடா உப்பு
2 சிட்டிகை கேசரி கலர்
உப்பு
பொறிக்க எண்ணை

செய்முறை:

ஒரு பேசினில் கடலை மாவு,மிளகாய் பொடி, ஓமம், பொருங்காயப்பொடி, சிட்டிகை சோடா உப்பு, கேசரி கலர் மற்றும் உப்பு போடவும்.
கொஞ்சமாக தண்ணீர் விட்டு நல்ல கெட்டியாக மாவு கரைக்கவும் .
1/2 மணி அந்த மாவை ஊற விடுங்கள்.
பிறகு ஒரு ஆழமான வாணலி இல் எண்ணை விட்டு , முக்கோணமாக கட் செய்து வைத்துள்ள பிரட் துண்டங்களை இந்த பஜ்ஜி மாவில் முக்கி எண்ணை இல் போடுங்கள்.
ஜாக்கிரதையாக போடணும், இல்லாவிட்டால் எண்ணை மேலே தெறித்துவிடும்.
மெல்ல திருப்பி விடுங்கள்.
நன்கு பொரிந்ததும் எடுத்து எண்ணையை வடிய விடுங்கள்.
வடி தட்டில் வைக்கலாம் அல்லது 'டிஷ்யூ பேப்பரில் ' வைக்கலாம்.
நல்ல தேங்காய் சட்னி அல்லது டொமெட்டோ கெட்ச் அப் உடன் பரிமாறுங்கள் .
மாலை வேளைக்கு ஏற்ற நல்ல டிபன் புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">

பிரட் பஜ்ஜி 2

தேவையானவை :

சால்ட் பிரட் 10 ஸ்லைஸ் ( குறுக்கு வாட்டில் வெட்டி வைக்கவும் )
தோசை மாவு 2 கப்
மிளகாய் பொடி 2 ஸ்பூன்
டொமெட்டோ கெட்ச் அப் அல்லது சாஸ் 2 ஸ்பூன்
பொருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்
2 சிட்டிகை சோடா உப்பு
2 சிட்டிகை கேசரி கலர்
உப்பு
பொறிக்க எண்ணை

செய்முறை:

ஒரு பேசினில் தோசை மாவு, மிளகாய் பொடி, பொருங்காயப்பொடி, சிட்டிகை சோடா உப்பு, கேசரி கலர் மற்றும் உப்பு போடவும்.
தேவையானால் கொஞ்சமாக தண்ணீர் விடவும்
நல்ல கெட்டியாக மாவு கரைக்கவும் .
பிறகு ஒரு ஆழமான வாணலி இல் எண்ணை விட்டு , முக்கோணமாக கட் செய்து வைத்துள்ள பிரட் துண்டங்களை இந்த பஜ்ஜி மாவில் முக்கி எண்ணை இல் போடுங்கள்.
ஜாக்கிரதையாக போடணும், இல்லாவிட்டால் எண்ணை மேலே தெறித்துவிடும்.
மெல்ல திருப்பி விடுங்கள்.
நன்கு பொரிந்ததும் எடுத்து எண்ணையை வடிய விடுங்கள்.
வடி தட்டில் வைக்கலாம் அல்லது 'டிஷ்யூ பேப்பரில் ' வைக்கலாம்.
பிரட் பஜ்ஜி தயார் புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">
நல்ல தேங்காய் சட்னி அல்லது டொமெட்டோ கெட்ச் அப் உடன் பரிமாறுங்கள் .
மாலை வேளைக்கு ஏற்ற நல்ல டிபன் .

குறிப்பு: மீந்து போகும் தோசைமாவில் இதை செயலாம். எண்ணை வேண்டாம் என நினைப்பவர்கள் தோசை கல்லில் போட்டு மட்டாக எண்ணை விட்டு பொறுமையாக , பஜ்ஜி நன்கு வெந்ததும் எடுக்கலாம் .

பிரட் பஜ்ஜி 3

தேவையானவை :

சால்ட் பிரட் 10 ஸ்லைஸ் ( குறுக்கு வாட்டில் வெட்டி வைக்கவும் )
கடலை மாவு 2 கப்
சோள மாவு 1/4 cup
மிளகாய் பொடி 2 ஸ்பூன்
ஓமம் 1/2 ஸ்பூன் (தேவையானால் )
பொருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்
2 சிட்டிகை சோடா உப்பு
2 சிட்டிகை கேசரி கலர்
உப்பு
பொறிக்க எண்ணை

செய்முறை:

ஒரு பேசினில் கடலை மாவு, சோள மாவு,மிளகாய் பொடி, ஓமம், பொருங்காயப்பொடி, சிட்டிகை சோடா உப்பு, கேசரி கலர் மற்றும் உப்பு போடவும்.
கொஞ்சமாக தண்ணீர் விட்டு நல்ல கெட்டியாக மாவு கரைக்கவும் .
பிறகு ஒரு ஆழமான வாணலி இல் எண்ணை விட்டு , முக்கோணமாக கட் செய்து வைத்துள்ள பிரட் துண்டங்களை இந்த பஜ்ஜி மாவில் முக்கி எண்ணை இல் போடுங்கள்.
ஜாக்கிரதையாக போடணும், இல்லாவிட்டால் எண்ணை மேலே தெறித்துவிடும்.
மெல்ல திருப்பி விடுங்கள்.
நன்கு பொரிந்ததும் எடுத்து எண்ணையை வடிய விடுங்கள்.
வடி தட்டில் வைக்கலாம் அல்லது 'டிஷ்யூ பேப்பரில் ' வைக்கலாம்.
சோள மாவு சேர்ப்பதால் இது ரொம்ப 'கிறிஸ்ப் 'ஆக இருக்கும் அதாவது ரொம்ப மொரு மொருப்பாக இருக்கும் புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">
நல்ல தேங்காய் சட்னி அல்லது டொமெட்டோ கெட்ச் அப் உடன் பரிமாறுங்கள் .
மாலை வேளைக்கு ஏற்ற நல்ல டிபன் .

குறிப்பு: உங்களுக்கு இந்த பஜ்ஜிகள் இன்னும் காரமாக வேண்டுமானால் , பிரட் துண்டங்கள் மேல் துளி மிளகாய் பொடி உப்பு கலவையை தடவி பின் மாவில் முக்கி பஜ்ஜி போடுங்கள் . சரியா?

பிரட் குர் குரே

தேவையானவை:

எந்த பிரட் ஆனாலும் சரி 10 ஸ்லைஸ்
கொஞ்சம் நெய்
உப்பு
மிளகு பொடி

செய்முறை:

பிரட் ஐ சின்ன சின்ன துண்டங்களாக ( 1 சென்டி மீட்டர் அளவுக்கு சின்னதாக )
கட் செய்து வைக்கவும்.
அப்படியே விட்டால் 4 - 5 மணி நேரத்தில் அவை காய்ந்துவிடும் , இல்லாவிட்டால் மக்ரோவேவ் ஓவனிலோ, அடுப்பில் வாணலி வைத்தோ வறுக்கவும்.
காந்தாமல் வறுக்கணும்.
அவை நல்ல கர கர வென வரும் போது , நெய் விட்டு வறுக்கணும். ( இப்படி செய்வதால் நெய் குறைவாக செலவாகும் கண்ணடி" src="http://r18.imgfast.net/users/1813/71/41/02/smiles/182891.gif" alt="கண்ணடி" longdesc="43"> )
வறுத்து எடுத்ததும் ஒரு பேசினில் போட்டு உப்பு மிளகு பொடி போட்டு குலுக்கவும்.
அவ்வளவுதான் , பிரட் குர் குரே தயார்.
டிரைன் ல போகும் போது , மதிய வேளைகளில் 'போர் ' அடிக்கும்போது இது ரொம்ப நல்லா இருக்கும்.
மாலை வேளை களிலும் டீ உடன் நல்ல இருக்கும்.
செய்து பாருங்கள் அப்புறம் மீந்த பிரட் களில் இதயே தான் செய்வீர்கள் ஜாலி" src="http://r18.imgfast.net/users/1813/71/41/02/smiles/755837.gif" alt="ஜாலி" longdesc="17">

பிரட் குர் குரே - இனிப்பு

தேவையானவை:

எந்த பிரட் ஆனாலும் சரி 10 ஸ்லைஸ்
கொஞ்சம் நெய்
பொடித்த சக்கரை

செய்முறை:

பிரட் ஐ சின்ன சின்ன துண்டங்களாக ( 1 சென்டி மீட்டர் அளவுக்கு சின்னதாக )
கட் செய்து வைக்கவும்.
அப்படியே விட்டால் 4 - 5 மணி நேரத்தில் அவை காய்ந்துவிடும் , இல்லாவிட்டால் மக்ரோவேவ் ஓவனிலோ, அடுப்பில் வாணலி வைத்தோ வறுக்கவும்.
காந்தாமல் வறுக்கணும்.
அவை நல்ல கர கர வென வரும் போது , நெய் விட்டு வறுக்கணும். ( இப்படி செய்வதால் நெய் குறைவாக செலவாகும் கண்ணடி )
வறுத்து எடுத்ததும் ஒரு பேசினில் போட்டு பொடித்த சக்கரை போட்டு குலுக்கவும்.
அவ்வளவுதான் , பிரட் குர் குரே தயார்.
ரொம்ப நல்லா இருக்கும்.
மாலை வேளை களில் குழந்தைகளுக்கு தரலாம்

பிரட் கபாப்

தேவயானவை :

பிரட் 10 ஸ்லைஸ்
பூண்டு 4 பல்
மிளகாய் பொடி 1 spoon
கரம் மசாலா 1/2 ஸ்பூன்
தயிர் 4 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு 2 டீ ஸ்பூன்
உப்பு
எண்ணை
கொத்துமல்லி - கொஞ்சம்

செய்முறை :

பிரட் துண்டாங்களை தண்ணீரில் முக்கி பிழிய யும்.
ஒரு பேசினில், பிழிந்த பிரட், பொடியாக நறுக்கிய பூண்டு , கரம் மசாலா, மிளகாய் பொடி, உப்பு, தயிர் , எலுமிச்சை சாறு எல்லாம் போட்டு நன்கு பிசையவும்
நீள் உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
ஒரு தோசைகல்லை அடுப்பில் வைத்து ( நிதானமான தீ இருக்கவேண்டும் )துளி எண்ணை விட்டு இந்த "கபாப்" களை (4 - 5 ) வைக்கவும்.
கொஞ்சம் பொரிந்ததும் மெல்ல திருப்பிவிடவும்.
மீண்டும் எண்ணை விடவும்.
நன்கு பொன்னிறமானதும் , எடுத்து வடிய விடவும்.
எல்லாவர்ற்றையும் இவ்வாறு செய்யவும்.
டொமாட்டோ கெசப்புடன் பரிமாறவும்.

ப்ரெட் கட்லெட்

தேவயானவை :

பிரட் 10 ஸ்லைஸ்
பூண்டு 4 பல்
வெங்காயம் 2 (பொடியாக நறுக்கவும் )
வேகவைத்த உருளை கிழங்கு 2
மிளகாய் பொடி 1 spoon
கரம் மசாலா 1/2 ஸ்பூன்
உப்பு
எண்ணை
கொத்துமல்லி - கொஞ்சம்

செய்முறை :

பிரட் துண்டாங்களை தண்ணீரில் முக்கி பிழிய யும்.
ஒரு பேசினில், பிழிந்த பிரட், பொடியாக நறுக்கிய பூண்டு + வெங்காயம், வேகவைத்து உதிர்த்த உருளை கிழங்கு , கரம் மசாலா, மிளகாய் பொடி, உப்பு எல்லாம் போட்டு நன்கு பிசையவும்
தேவையான வடிவத்தில் 'கட்லெட் ' செய்து வைக்கவும்
ஒரு தோசைகல்லை அடுப்பில் வைத்து ( நிதானமான தீ இருக்கவேண்டும் )துளி எண்ணை விட்டு இந்த 'கட்லெட் ' களை (4 - 5 ) வைக்கவும்.
கொஞ்சம் பொரிந்ததும் மெல்ல திருப்பிவிடவும்.
மீண்டும் எண்ணை விடவும்.
நன்கு பொன்னிறமானதும் , எடுத்து வடிய விடவும்.
எல்லாவர்ற்றையும் இவ்வாறு செய்யவும்.
டொமாட்டோ கெசப்புடன் பரிமாறவும்.

குறிப்பு: பிசையும் மாவு நன்கு கெட்டியாக இருக்கணும், ஒருவேளை அவ்வாறு இல்லாவிட்டால் , கலக்கும் மாவில் கொஞ்சம் சோள மாவு கலந்து கொள்ளலாம் அல்லது அவல் சேக்கலாம். அவ்வாறு சேர்க்கும் போது, மாவை சற்று நேரம் ஊரவைக்க னும் .

பிரெட் ரோல்ஸ் தக்காளி கிரேவியுடன்

தேவையானவை :

சால்ட் பிரட் 10 ஸ்லைஸ்
வேக வைத்த உருளை கிழங்கு 3 (உதிர்த்து வைக்கவும் )
வெங்காயம் 1 (பொடியாக நறுக்கி வைக்கவும் )
பச்சை மிளகாய் 10
மிளகாய் பொடி 1 ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
சீரகம் 1/2 ஸ்பூன் ( தேவையானால் )
உப்பு
எண்ணை

செய்முறை:

முதலில் வாணலி இல் எண்ணை விட்டு கடுகு சீரகம் தாளிக்கணும்.
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு வதக்கணும்
பிறகு வெங்காயத்தை போடணும்.
பிறகு உருளைக்கிழங்கை போடணும்.
எல்லாவற்றையும் நன்கு கிளறனும்.
உப்பு மிளகாய் பொடி போட்டு மறுபடி கிளர்னும்.
உப்பு உறைப்பு சரி பார்த்து இறக்கிடணும்
வேண்டுமானால் கொத்துமல்லி தூவலாம்.
அறினதும் சின்ன சின்ன உருண்டை களாக உருட்டி வைக்கவும்.
ஆழமான வாணலி இல் எண்ணை விட்டு சுடவைக்கணும்.
பிரட் இன் ஓரங்களை கட் செய்து விட்டு தயாராய் வைத்துக்கொள்ளவும்
ஒரு பிரட் ஸ்லைஸ் எடுத்துக்கொண்டு தண்ணீரில் முக்கவும் , இரண்டு உள்ளங்கைகளுக்கு நடுவே வைத்து அழுத்தி தண்ணீரை பிழியவும்.
பிறகு அந்த பிரெட் நடுவே ஒரு உருளை கறி உருண்டையை வைத்து, பிரெட் ஆலேயே மூடணும்.
பிறகு நல்லா உருட்டி எண்ணை ல போடணும்.
நல்ல பொன்னிறமானதும் எடுத்துடனும்.
இவ்வாறு எல்லா பிரெட் ஐயும் செய்யனும்.
வெஜிடேபிள் போண்டா போலவே ரொம்ப நல்லா இருக்கும்.
மேலே பகுதி ரொம்ப கர கர ப்பாகவும் உள்ளே மெத் என்றும் இருக்கும்.
பார்க்கவும் ரொம்ப அழகாக இருக்கும்.

தக்காளி கிரேவி செய்யும் முறை :

தேவையானவை:

தக்காளி 1/2 கிலோ
வெங்காயம் 1/4 கிலோ
பச்சை மிளகாய் 10
பூண்டு 4 -6 பல்
இஞ்சி ஒரு துண்டு
உப்பு
கரம் மசாலா 1/2 டீ ஸ்பூன்
வேண்டுமானால் 1/2 ஸ்பூன் மிளகாய் பொடி
நெய் 2 - 3 ஸ்பூன்

செய்முறை :

பூண்டு வெங்காயம் இஞ்சி இவைகளை விழுதாக அரைத்து எடுக்கவும்.
தக்காளியை நறுக்கி விதைகளை எடுத்துவிடவும்.
பிறகு தக்காளி பச்சைமிளகாய் இவைகளையும் அறக்கவும்.
தண்ணீர்விடாமல் அரைக்கவும் .
வாணலி இல் நெய் விட்டு பூண்டு மசால்வை வதக்கவும்.
பிறகு தக்காளி கலவையை போட்டு வதக்கவும்.
1 நிமிடம் கழித்து 1 டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க வைக்கவும்.
உப்பு மிளகாய் பொடி போடவும்.
நன்கு கொதித்து வாசனை போனதும் ஒரு 10 நிமிஷம் ஆகும், இறக்கவும்.
வேண்டுமானால் கொத்துமல்லி போடலாம்.
தயாராய் பொரித்து வைத்துள்ள பிரெட் ரோல்ஸ் ஐ போட்டு மேலே கொத்துமல்லி தூவி பரிமாறலாம்.

குறிப்பு: இரண்டையும் தனித்தனி யாக வைத்திருந்து ,பரிமாறும் போது பிரெட் ரோல்ஸ் மேல் கிரவி யை விட்டு தரணும். இல்லையானால் பிரட் ரோல்ஸ் ஊறி நன்றாக இருக்காது. சரியா?

பிரெட் ரோல்ஸ்

தேவையானவை :

சால்ட் பிரட் 10 ஸ்லைஸ்
வேக வைத்த உருளை கிழங்கு 3 (உதிர்த்து வைக்கவும் )
வெங்காயம் 1 (பொடியாக நறுக்கி வைக்கவும் )
பச்சை மிளகாய் 10
மிளகாய் பொடி 1 ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
சீரகம் 1/2 ஸ்பூன் ( தேவையானால் )
உப்பு
எண்ணை

செய்முறை:

முதலில் வாணலி இல் எண்ணை விட்டு கடுகு சீரகம் தாளிக்கணும்.
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு வதக்கணும்
பிறகு வெங்காயத்தை போடணும்.
பிறகு உருளைக்கிழங்கை போடணும்.
எல்லாவற்றையும் நன்கு கிளறனும்.
உப்பு மிளகாய் பொடி போட்டு மறுபடி கிளர்னும்.
உப்பு உறைப்பு சரி பார்த்து இறக்கிடணும்
வேண்டுமானால் கொத்துமல்லி தூவலாம்.
அறினதும் சின்ன சின்ன உருண்டை களாக உருட்டி வைக்கவும்.
ஆழமான வாணலி இல் எண்ணை விட்டு சுடவைக்கணும்.
பிரட் இன் ஓரங்களை கட் செய்து விட்டு தயாராய் வைத்துக்கொள்ளவும்
ஒரு பிரட் ஸ்லைஸ் எடுத்துக்கொண்டு தண்ணீரில் முக்கவும் , இரண்டு உள்ளங்கைகளுக்கு நடுவே வைத்து அழுத்தி தண்ணீரை பிழியவும்.
பிறகு அந்த பிரெட் நடுவே ஒரு உருளை கறி உருண்டையை வைத்து, பிரெட் ஆலேயே மூடணும்.
பிறகு நல்லா உருட்டி எண்ணை ல போடணும்.
நல்ல பொன்னிறமானதும் எடுத்துடனும்.
இவ்வாறு எல்லா பிரெட் ஐயும் செய்யனும்.
வெஜிடேபிள் போண்டா போலவே ரொம்ப நல்லா இருக்கும்.
மேலே பகுதி ரொம்ப கர கர ப்பாகவும் உள்ளே மெத் என்றும் இருக்கும்.
பார்க்கவும் ரொம்ப அழகாக இருக்கும்.
டொமாட்டோ சாஸுடன் பரிமாறலாம்.

குறிப்பு: பிரட் இன் ஓரங்களை பிரெட் குர் குரே செய்ய உப்யோகப்படுத்தலாம்

பிரெட் புட்டு

தேவையானவை:

பிரட் ஸ்லைஸ் 10 -12
கடலை பருப்பு 5 டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு 5 டேபிள் ஸ்பூன்
மிளகாய் வற்றல் 10 -12
பெருங்காயம் 1/2 டீ ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
உப்பு
எண்ணை

செய்முறை:

முதலில் பருப்புகளை 1/2 மணி ஊற வையுங்கோ
பிரட் ஐ மிசில போட்டு பூந்துருவலாக துருவி எடுத்து வையுங்கோ .
ஊறிய பருப்புகள் மற்றும் மிளகாய் வற்றல் கொஞ்சம் கறிவேப்பிலை உப்பு போட்டு நன்கு மசிய அரையுங்கோ
தண்ணி மட்டா விட்டு அரையுங்கோ.
அரைத்த விழுதை இட்டலி போல் ஆவி ல வேகவையுங்கோ
வெளி இல் எடுத்து அறினதும் உதிர்த்து வையுங்கோ.
ஓர் வாணலி இல் எண்ணை விட்டு கடுகு உளுந்து மற்றும் கறிவேப்பிலை தாளித்து, பெருங்காய பொடி போட்டு , உதிர்த்து வைத்துள்ள பருப்பு கலவையை போட்டு நன்கு கிளருங்கோ.
2 நிமிஷம் அப்படியே நன்கு கிளருங்கோ.
இப்ப பிரட் துருவலை போட்டு கிளருங்கோ.
எல்லாமா ஒண்ணா சேர்ந்ததும் இறக்கிடுங்கோ
பிரெட் புட்டு தயார், எந்த சட்டினியுடனும் நன்னா இருக்கும்.

குறிப்பு: வேண்டுமானால் நீங்க இதில் கொஞ்சம் எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.

பேல் பூரி

பேல் பூரி: சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதை சாப்பிடலாம். நல்ல balancedfood . இதற்க்கு முக்கியத் தேவை அரிசிப் பொரிதான். அதோடு வேக வைத்த உருளைக்கிழங்கு, வேகவைத்த பட்டாணி , வீட்டில் செய்த அல்லது கடையில் வாங்கிய ஓமப்பொடி, வறுத்துக் காரம் போட்ட கடலைப்பருப்பு அல்லது வேர்க்கடலை, மாதுளை முத்துக்கள் அல்லது பொடியாக நறுக்கிய தக்காளி , பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைக்கொத்துமல்லி,எலுமிச்சைச் சாறு போன்றவை. மற்றபடி பச்சைச் சட்னி, இனிப்புச் சட்னி, சின்னச் சின்ன பூரிகள் பேல் பூரியில் கலக்க வைத்த்குக்கொண்டால் "பேல்" அருமையாக இருக்கும் புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">

சட்னி வகைகளை முன் கூட்டியே தயாரித்து வைத்துக்கொள்ளுதல் நல்லது. பேல்பூரியில் கலக்கவேண்டிச் சின்னச் சின்ன பூரிக ளையும் செய்து வைத்துக கொள்ள வேண்டும் .

முதலில் பூரி செய்யும் விதம்:

ரவை ஒரு கப்
மைதா ஒரு கப்
கோதுமை மாவு ஒரு கப்
தேவையான அளவுக்கு உப்பு
பொரிக்க எண்ணெய்

மூன்று மாவையும் நன்கு உப்பைப் போட்டுக் கலந்துகொண்டு தேவையான நீரைச் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும்.
ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் மறுபடி நன்கு பிசைந்து சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி எடுத்துக்கொண்டு மெல்லிய பூரிகளாக இடவும்.
இட்ட பூரியில் ஒரு ஃபோர்க் அல்லது முள் கரண்டியால் குத்திவிடவும்.
இப்படிக் குத்தாமல் பொரித்தால் பூரி உப்பிவிடும்.
தட்டையான பூரிகளே இதற்குத் தேவை.
ஆகையால் குத்திவிட்டுப் பூரிகளைப் பொரித்தெடுக்கவும்.

அடுத்து காரச் சட்னி அல்லது பச்சைச் சட்னி செய்யும் விதம்.


தேவையான பொருட்கள்:

கொத்துமல்லி பெரியதாய் ஒரு கட்டு
பச்சை மிளகாய்10 -12
இஞ்சி ஒரு துண்டு
பூண்டு 2 -4
2 டீஸ்பூன் பொட்டுக்கடலை
உப்பு

செய்முறை :

கொத்துமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி போன்றவற்றை நன்கு கழுவி நீரை வடிகட்டிவிட்டு மற்றச் சாமான்களோடு சேர்த்து அரைக்கவும்.
கொஞ்சம் நீர் விட்டு அரைக்கலாம்.
கெட்டிக் குழம்பு பத்த்தில் சட்னி இருக்கனும் .

அடுத்து இனிப்புச் சட்னி:

தேவையானவை:

பேரீச்சம்பழம் 50 கிராம்
ஒரு சிறு உருண்டை புளி
உப்பு
மிளகாய்த் பொடி 1 டீஸ்பூன்
சர்க்கரை 1 டீஸ்பூன்

பேரீச்சம்பழ கொட்டையை எடுத்துவிட்டு , எல்லாவற்றையும் சேர்த்து நன்கு அரைக்கவும்.
இதுவும் கெட்டிக் குழம்பு பத்த்தில் இருக்கணும் .

புளிச்சட்னி(இனிப்புச் சட்னி இரண்டாம் வகை)

100 கிராம் புளியை ஊற வைத்து புளிக்கரைசல் எடுத்து கொட்டை, கோதுகள் போக வடிகட்டி வைக்கவும்.
இதற்கு ஒரு ஆழாக்கு அல்லது ஒன்றரை ஆழாக்கு வெல்லத்தூள் தேவைப்படும். ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூள், உப்பு தேவையான அளவு.
ஒரு டீஸ்பூன் சர்க்கரை(பிடித்தமானால்)
ஜீரகத்தை வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ளவும். இந்தப் பொடியில் ஒரு டேபிள் ஸ்பூன் பொடியைச் சட்னியை இறக்குகையில் சேர்க்கவேண்டும்.

இப்போது கரைத்த புளிக்கரைசலை அடுப்பில் வைத்து, உப்பு, மிளகாய்த்தூள், வெல்லத்தூள், சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விடவும்.
நன்கு கொதித்துச் சட்னி கெட்டியாக ஆகும்போது வறுத்த ஜீரகப் பொடியைச் சேர்த்து அடுப்பில் இறந்து கீழே இறக்கவும்.
இது பல நாட்கள் பயன்படுத்தலாம்.

பயன்படுத்துகையில் ஒரு சின்னக் கிண்ணம் சட்னியை எடுத்துக்கொண்டு நீர் விட்டுத் தளர்த்திக்கொண்டால் ஆறு அல்லது ஏழு நபர்களுக்குப் பரிமாற முடியும்.
இப்போ பேல் பூரிக்கு வேண்டிய சாமான்கள் தயார். இவை எல்லாவற்றையும் முன்கூட்டியே தயார் செய்து வைத்துக்கொண்டால் நேரே பேல்பூரியைக் கலக்க ஆரம்பிக்கலாம்.


அரிசிப் பொரி கைகளால் போட்டால் இரண்டு கை அளவு அல்லது இரண்டு பெரிய கிண்ணம் அளவு, அதே அளவு ஓமப்பொடி, நொறுக்கிய பூரிகள், (நம் விருப்பத்திற்கேற்ப பூரிகளைச் சேர்க்கலாம்) இதன் மேல் நறுக்கிய உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்றவை சேர்க்கவும். இதன் மேலே இரண்டு டீஸ்பூன் காரச் சட்னியை ஊற்றி, இரண்டு டீஸ்பூன் இனிப்புச் சட்னியையும் ஊற்றவும். அரை மூடி எலுமிச்சையைப் பிழிந்து கொள்ளவும். எல்லாவற்றையும் கலக்கும் முன்னர் நறுக்கி வைத்த கொத்துமல்லிக்கீரையைச் சேர்க்கவும். நன்கு கலக்கவும். உடனே சாப்பிடவும். பேல்பூரியை முதலிலேயே கலந்து வைத்தால் சொத சொதவென ஆகிவிடும். ஆகவே அவ்வப்போது சாப்பிடும் நபர்களுக்கு ஏற்பக் கொஞ்சம் கொஞ்சமாய்க் கலக்கவேண்டும்.

குறிப்பு: பேல் பூரி பண்ணப் போகும் நாளின் முந்தைய தினம் கூட இதைப் பண்ணி ஒரு காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைக்கலாம்.

இந்த ஜீரகப் பொடி ரசம், சாட், தயிர்வடை போன்றவற்றிலும் கலக்கத் தேவைப்படும். ஆகவே நூறு கிராம் ஜீரகத்தை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டால் தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.

சோளே மசாலா பொடி

சோளே மசாலா பொடி இதை செய்து வைத்துக்கொண்டால் சுலபமாக சோளே செய்துவிடலாம்.

தேவையானவை :

கரம் மசாலா பொடி 1 ஸ்பூன்
மிளகாய் பொடி 2 ஸ்பூன்
மஞ்சள் பொடி 1 ஸ்பூன்
தனியா பொடி 2 ஸ்பூன்
சீரகப்பொடி 1 ஸ்பூன்
மிளகு பொடி 1 ஸ்பூன்
இஞ்சி பொடி அதாவது சுக்கு பொடி 1 ஸ்பூன்
பூண்டு பொடி 1 ஸ்பூன்

வெந்த கொத்து கடலைகள் பாட்டில் களில் கிடைக்கும் ; நாம் வேறுமான உருளைக்கிழங்கை வேகவைத்தால் போறும். சோளே பண்ணிடலாம்.

சோளே பட்டூரா அல்லது சன்னா பட்டூரா

அடுத்து சோளே பட்டூரா அல்லது சனா பட்டூரா: வட இந்தியாவைப் பொறுத்த வரையில் இது ஒரு முக்கிய உணவு. தவறாமல் விருந்துகளில் இடம் பிடிக்கும் ஒன்று
இதற்குச் சோளே அல்லது சனா செய்ய முதல் நாளே கொண்டைக்கடலையை ஊற வைக்க வேண்டும். இது செய்ய வெள்ளைக் கொண்டைக்கடலையே ஏற்றது.

பட்டூரா செய்ய தேவையானவை :

மைதா மாவு 1/2 கிலோ
வெண்ணெய் அல்லது டால்டா(விருப்பம்போல்) 100 கிராம்
உப்பு தேவையான அளவு
ஒரு சிட்டிகை சமையல் சோடா
தயிர் ஒரு கப்
பொரிக்க எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை :

முதலில் மாவைப் பிசைந்து வைத்துக்கொள் ளவும் , மாவு நன்கு ஊறினால் தான் பூரி உப்புக்கொண்டு கரகரப்பாயும் கையால் பிய்த்தால் உள்ளே பொரபொரவென்றும் வரும்.

ஒரு அகலத் தட்டு அல்லது பேசனில் சிட்டிகை சோடாவைப் போட்டுக்கொண்டு நூறுகிராம் வெண்ணெயைப் போட்டு நன்கு குழைக்கவும். குழைக்க்க் குறைந்த்து ஐந்திலிருந்து பத்து நிமிஷம் ஆகவேண்டும். இப்போது தேவையான உப்பைச் சேர்த்துக் கலக்கவும். இதைச் சிறிது நேரம் நன்கு கலந்து விட்டுப்பின்னர் மைதாமாவைக் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேர்த்துக்கொண்டே கலக்கவும். மாவும், வெண்ணெய் விழுதும் நன்கு கலக்க வேண்டும். கலக்க்க் கலக்க நம் கைகளுக்கே மாவின் வழவழப்புத் தன்மை மாறி பொரபொரவென வருவது புரியும். இப்போது கொஞ்சம் கொஞ்சமாய்த் தயிரைச் சேர்க்கவும். மாவை நன்கு பிசையவும். மாவு நன்கு கெட்டியாகப் பிசைந்த்தும், ஒரு ஈரத்துணியால் மாவை மூடி வைக்கவும். குறைந்த்து ஆறு மணி நேரமாவது மாவு ஊற வேண்டும். நடு நடுவே எடுத்து மாவைப் பிசைந்து திரும்ப மூடி வைக்கவும்.

சன்னா செய்ய தேவையானவை :

1 கப் ஊரவைத்த வெள்ளை கொத்துக்கடலை
2 உருளை கிழங்கு
2 வெங்காயம்
1 துண்டு இஞ்சி
சிறிய எலுமிச்சை அளவு புளி
1 ஸ்பூன் கடுகு
1/4 ஸ்பூன் மஞ்சள் பொடி
1 ஸ்பூன் மிளகாய் பொடி
1/2 ஸ்பூன் கரம் மசாலா
1 சின்ன துண்டு வெல்லம்
உப்பு
ஒரு சிட்டிகை சோடா உப்பு
2 ஸ்பூன் எண்ணை அல்லது டால்டா

செய்முறை :

ஒரு குக்கரில் ஊறிய கொத்துக்கடலை மற்றும் உருளை கிழங்கை உப்பு மற்றும் சோடா உப்பு சேர்த்து வேகவிடவும்.
வெந்ததும் அதிலிருந்து 2 ஸ்பூன் கொத்துக்கடலை , வெங்காயம் மற்றும் இஞ்சி சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும் .
ஒரு வாணலி இல் எண்ணை விட்டு கடுகு தாளித்து அரைத்த விழுது போட்டு வதக்கவும்.
மிளகாய் பொடி மஞ்சள் பொடி சேர்க்கவும்.
நன்கு வதங்கியதும் புளியை கரைத்து விடவும்.
அது நன்கு கொதிக்கும் போது, வெந்த கடலை மற்றும் உருளைக்கிழங்கை போடவும்.
கரம் மசாலா பொடி யை போடவும்.
நன்கு கொதித்து கொஞ்சம் இறுகும் வரை பொறுக்கவும்.
வெல்லத்தை தட்டி போடவும்.
நன்கு கொதித்ததும் இறக்கவும்.

பட்டூரா செய்யும் விதம்: பிசைந்து வைத்த மாவைச் ரொட்டிக்கு எடுப்பது போல், உருண்டை எடுத்துக்கொண்டு பூரியாக இடவும். எண்ணெயைக் காய வைத்துப் பொரித்தெடுக்கவும். பூரி நன்கு உப்பிக்கொண்டு வெண்மையாக அப்படியே உப்பல் குறையாமல் இருக்கும்.

செய்து வைத்துள்ள சன்னா வுடன் பரிமாறவும். தேவையானால் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி , கொத்துமல்லி தூவி பரிமாறலாம்.
புளிப்பு அதிகம் தேவைபடுபவர்கள், சன்னா மேல் எலுமிச்சை பிழிந்து கொள்ளலாம்.

பானி பூரி



பூரி செய்ய தேவயானவை :

1 கப் மைதா
1/4 கப் உளுந்துமாவு
1 கப் மெல்லிய ரவை
தேவையான உப்பு
கொஞ்சம் வெது வெதுப்பான தண்ணீர்

மேற்சொன்ன மாவுகளை உப்புச் சேர்ந்துக் கலந்து நீர் விட்டுப் பிசைந்து வைத்துக்கொள்ளவும். இந்த பூரிகளைச் சிறு உருண்டைகளாக உருட்டி உடனடியாகப் பொரிக்கவும். இவை நன்கு உப்ப வேண்டும். ஆகவே முள்கரண்டியால் குத்த வேண்டாம். இதை ஒரு நாள் முன்னதாய்ச் செய்து வைத்துக்கொள்ளலாம்.

அடுத்துப் பானி என்னும் சட்னி நீர் தயாரிக்கும் விதம்
. ஹிந்தியில் பானி என்றால் தண்ணீர் என்ற பொருள் என அனைவரும் அறிவோம். இங்கே பானி என்பது சட்னியை நீர்க்க்க் கரைப்பதைக் குறிக்கும்.

ஒரு கட்டு புதினா இலைகள்
ஒரு கட்டு கொத்துமல்லி இலைகள்
ஒரு டீஸ்பூன் மிளகு
ஒரு டேபிள் ஸ்பூன் கருப்பு உப்பு (இது இல்லாவிட்ட்லும் பரவாயில்லை )
ஒரு டேபிள் ஸ்பூன் சாதாரண உப்பு
2 டீஸ்பூன் ஜீரகம்
4 டீஸ்பூன் காய்ந்த ஆம்சூர் தூள்(மாங்காயைக் காய வைத்துச் செய்த பொடி, ஆம்சூர் என்ற பெயரிலே எல்லாக் கடைகளிலும் கிடைக்கும்.)
இஞ்சி ஒரு துண்டு.
2 டீஸ்பூன் வறுத்த ஜீரகப் பொடி

மேற்சொன்ன பொருட்களை நன்கு சுத்தம் செய்து ஒன்றாய்ப் போட்டு சட்னி பத்த்தில் நல்ல நைசாகவே அரைக்கவும். அரைத்த்தைச் சற்று நேரம் வைக்கவும்.
பிறகு நீரில் கரைத்து வைக்கவும்.

பூரிக்குள் வைக்கும் மசாலா :

பச்சைப் பயறு அல்லது கொண்டைக்கடலையை அல்லது பச்சை பட்டாணி உப்புப் போட்டு வேக வைத்துக்கொள்ளவேண்டும். உருளைக்கிழங்கை வேக வைத்துப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேவையானால் கொஞ்சம் உப்புப் போட்டுக் கலக்கலாம், பயறு வகையைச் சுண்டல் போல் செய்தாலும் நன்றாக இருக்கும்.

பானி பூரி யை பரிமாறுவது எப்படி ?

இப்போது பொரித்த பூரிகளை எடுக்கவும். ஒரு பூரியின் நடுவே கைக்கட்டை விரலால் ஒரு ஓட்டை போடவும். அந்த ஓட்டைக்குள்ளாக வேக வைத்த ப்யறு, உருளைக்கிழங்கை வைக்கவும். இப்போது அரைத்து வைத்த சட்னியை நீர் விட்டுக் கரைத்துக்கொண்டு அந்த நீரைக் கொஞ்சம் அதில் விடவும். உடனே வாயில் போட்டுக்கொண்டு சாப்பிட வேண்டும். இதில் முக்கியமாய்க் கவனிக்க வேண்டியது பூரி வாய் கொள்ளுமளவுக்குச் சின்னதாய் இருக்க வேண்டும் என்பதே. பூரியின் கரகரப்பு சட்னி நீரில் ஊறிப் போகும் முன்னர் சாப்பிட வேண்டும். பூரியின் கரகரப்பு, சட்னியின் காரம், அதோடு பயறு, உளுந்து இவற்றின் வெந்த தன்மை எல்லாம் சேர்ந்து சுவை நன்றாக இருக்கும்.

சுலபமான திரட்டுப்பால்

அதே திரட்டுப்பாலை 5 நிமிடத்தில் செய்ய :

தேவையானவை :

1 டின் மில்க் மெய்டு
1 ஸ்பூன் தயிர்

செய்முறை:

மில்க் மெய்டு டின் ஐ திறந்து ஒரு மைக்ரோவே வேவ் ஓவன் பாத்திரத்தில் விடவும்.
தயிர் சேர்க்கவும்.
நன்கு கலக்கவும்.
ஓவனில் வைத்து 'high' இல் 2 நிமிடம் வைக்கவும்.
வெளியே எடுத்து கிளறவும்.
மீண்டும் 2 நிமிடம் வைக்கவும்.
வெளியே எடுத்து கிளறவும்.
மீண்டும் 1 நிமிடம் வைக்கவும்.
கிளறி சுவை பார்க்கவும்.
அருமையான திரட்டுப்பால் ரெடி.

குறிப்பு: உங்களின் ஓவனின் திறனை பொறுத்து நிமிடங்கள் மறுபடலாம். என்றாலும் 6 -7 நிமிடங்களில் செய்து விடலாம் புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4"> சாப்பிட விருந்தாளி யை உக்கார வைத்துவிட்டு மோர் சாதம் வருவதர்க்குள் ஸ்வீட் ரெடி பண்ணிவிடலாம் புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">

திரட்டுப்பால்

இதில் பலவகை இனிப்புகள் செய்யும் (ஈசியான) முறைகளை பார்க்கலாம்.
முதலில் திரட்டுப்பால் .

பொதுவாக எங்கள் வீடுகளில் இது இல்லாமல் எந்த பண்டிகையும் இருக்காது. கல்யாணம் கார்த்திகை எல்லாத்துக்கும் திரட்டுப்பால் வேண்டும்.

தேவையானவை:

வெண்ணை நிறைந்த பால் 1 லிட்டர்
சர்க்கரை 200 கிராம்

செய்முறை:

அடிகனமான உருளி இல் பாலை விட்டு அடுப்பை சின்னதாக வைக்கணும் .
பால் பொங்கி வராமல் இருக்க அதில் ஒரு சின்ன கிண்ணி யை போட்டுவைக்கலாம்.
நன்கு பால் குறைந்து வரும்பொழுது, கிண்ணியை எடுத்துவிட்டு கிளறவும்.
சர்க்கரை சேர்க்கவும்.
நன்கு சுருண்டு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
வேண்டுமானால் ஏலப்பொடி போடலாம்.
அப்படியேவும் நன்றாக இருக்கும்.
இளம் 'பிங்க்' நிறத்தில் நன்றாக இருக்கும்.

Blog Archive