Wednesday, July 20, 2011

நாரத்தை குழம்பு

தேவையானவை:

நாரத்தங்காய் - 1 (சாறு எடுக்கவும் )
வெந்த துவரம் பருப்பு 1/2 கப்
வெல்லம் - 1 சின்ன கட்டி
பச்சை மிளகாய் - 4
குழம்பு மிளகாய் பொடி - 2 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/4 ஸ்பூன்
புளி பேஸ்ட் - 1/4 ஸ்பூன் (தேவயானால் )
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
வறுத்து அரைத்த வெந்தய பொடி - 1/2 ஸ்பூன்
பெருங்காய பொடி - 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வாணலி இல் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு , கறிவேப்பிலை தாளித்து... பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள்பொடி , சேர்த்து வதக்க வும் .
அதில் வெந்த பருப்பு, நார்தம் காய்ன் சாறு சேர்க்கவும்.
வேண்டுமானால் புளிஜலம் அல்லது புளி பேஸ்ட் போடவும். ( ஆனால் வெறும் நாரத்தை சாரே இந்த குழபுக்கு போறும்)
வெந்தய பொடி, பெருங்காய பொடி மற்றும் உப்பு போடவும்.
நன்றாகக் கொதிக்க விடவும். பிறகு, வெல்லத்தை சேர்க்கவும்.
எல்லாம் சேர்ந்து நன்றாகக் கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில் அடுப்பிலிருந்து இறக்கவும்.
ரொம்ப நல்ல டேஸ்ட் ஆன குழம்பு இது.
saadhathil போட்டு சாப்பிடலாம்.

குறிப்பு: ஒரு வாரம் 10 நாள் வைத்து சாப்பிடலாம். வயிறு சரி இல்லயானால் கூட இதை சாப்பிடலாம். நல்லது .

No comments:

Blog Archive