Friday, July 22, 2011

வெந்தய பொடி

இது நாம் செய்யும் எல்லா குழம்புகளுக்கும் வேண்டும். என்னதான் குழம்பு பொடி செய்யும் போது வெந்தயம் போட்டு அரைத்தாலும் , மேலுக்கு இதையும் போடணும் அப்ப தான் குழம்பு மணக்கும். தினமும் குழம்பு செய்யும் முன் வறுத்து பொடித்து போடணும். முடியாதவர்கள் 1 வாரம் 10 நாளுக்கு சேர்த்து வறுத்து அரைத்து வைத்து கொள்ளலாம் .

எல்லா ஊருகாய் களுக்கும் இது தேவைப்படும்.

தக்காளி சாதம், கத்தரிக்காய் சாதம், புளியோதரை போன்ற கலந்த சாதங்களுக்கும் பயன்படும்.

100 கிராம் வெந்தயத்தை எடுத்து சுத்தம் செய்யவும்.
வரட்டு வாணலி இல் போட்டு நல்ல சிவப்பாக கருகாமல் வறுக்கவும்.
நல்ல மணம் வந்ததும், ஒரு தட்டில் கோட்டவும்.
ஆறினதும் மிக்ஸில பொடிக்கவும்
பாட்டிலில் போட்டு வைக்கவும்.
தேவைப்படும் போது உபயோகிக்கவும்.

No comments:

Blog Archive