Friday, July 22, 2011

உருளை கிழங்கு பொடி

தேவையானவை:

ஒரு பெரிய உருளை கிழங்கு
2 Tea spoon உளுத்தம் பருப்பு
1 கப் துவரம் பருப்பு
6 -8 மிளகாய் வற்றல்
ஒருசின்ன துண்டு பெருங்காயம்
உப்பு
துளி எண்ணை

செய்முறை:

துளி எண்ணை விட்டு பெருங்காயத்தை பொரிக்கவும்.
தனியே வைக்கவும்.
பிறகு மற்றவைகளை போட்டு நன்கு வறுக்கவும்.
கருகாமல் வறுக்கவும்.
ஆறினதும், உப்பு பெருங்காயம் போட்டு அரைக்கவும்.
உருளை கிழங்கை அலம்பி துடைக்கவும்.
அதன் மேல் துளி எண்ணெய் விட்டு புரா காய் மீதும் தடவவும்.
காஸ் அடுப்பில் வைத்து சுடவும்
சுடும் போது திருப்பி திருப்பி வைத்து சுடவும்.
நன்றாக சுட்டதும், ஒரு பேசினில் தண்ணீர் விட்டு அதில் போடவும்.
ஆறினதும், தோலுரித்து துருவவும்.
பொடித்து வைத்துள்ள தில் போட்டு கலக்கவும்.
அல்லது பொடி , உருளை துருவல் இரண்டையும் மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடி போட்டு கலந்து சாப்பிடவும்.

குறிப்பு:
இதில் துளி கூட தண்ணீர் இல்லாத தால் ஒரு வாரம் வரை வைத்திருந்து
உபயோகிக்கலாம். fridge இல் வைத்தால் 15 நாள் கூட வைக்கலாம்.உருளை யை வேகவைத்தும் இது போல் செயலாம். ஆனால் உடனே உபயோகிக்கவேண்டும். நாள் பட வைத்துக்கொள்ள முடியாது.

No comments:

Blog Archive