Friday, July 22, 2011

கொள்ளு பருப்பு பொடி

தேவயானவை :

துவரம்பருப்பு – 4 கப்
கொள்ளு – 2 கப்
மிளகு – 2 ஸ்பூன்
குண்டு மிளகாய் வற்றல் – 10 -15
பெருங்காயம் – 1 சிட்டிகை
உப்பு – 2 டீஸ்பூன்

செய்முறை:

வெறும் வாணலியில் கொள்ளை போட்டு மிதமான தீயில் அது படபடவென வெடிக்கும் வரை நன்கு வறுத்து ஆற வைக்கவும்.
அதேபோல துவரம் பருப்பு, மிளகு, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை மெல்லிய வாசனை வர வறுத்து ஆற வைக்கவும்.
பிறகு வாணலிச் சூட்டிலேயே உப்பை சற்று வறுத்துக் கொள்ளவும்.
வறுத்த அனைத்தையும் மிச்சியில் போட்டு பொடித்து காற்று புகாத டப்பாவில் அடைத்து வைக்கவும்.
இந்தப் பொடியை சூடான சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடலாம்.
பொடியுடன் சிறிது நெய் அல்லது நல்லெண்ணை கலந்து சாப்பிடலாம்.

குறிப்பு: உப்பை வறுத்து உபயோகிப்பது பொடி நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க உதவும். மேலும் BP காரர்களும் உப்பு பற்ற்ய பயம் இல்லாமல் சாப்பிடலாம் புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">

No comments:

Blog Archive