Monday, July 25, 2011

சூட்டில் சளி

முதலில் எப்படி கண்டுபிடிப்பது ? கண்ணு எரியும், தொண்டை கர கரக்கும், தலை இல் எண்ணை வைத்து அழுந்த தேத்தால சூடு பறக்கும், வறட்டு இருமல் இருக்கும்,
சில சமையம் அடி வயிறு வலிக்கும், ‘ஒன்றுக்கு’ போனால் எரியும் அல்லது கொஞ்சமாக நீர் கடுப்புபோல் அளவு குறைவாக போகும்

அப்படி இருந்தால், செய்ய வேண்டியவை, நல்ல எண்ணை தேய்த்து குளிக்கணும், நிறைய மோர் குடிக்கணும், தயிர் சாதம் நரத்தங்கை தொட்டுண்டு சாப்பிடணும், இஞ்சி டீ குடிக்கலாம், சோம்பு ஜலம் குடிக்கலாம், பனங்கல்கண்டு ஜலம் குடிக்கலாம்,
பனம் வெல்லத்தில் ஏதாவது பண்ணி சாப்பிடலாம். ஆக மொத்தத்தில் குளுமைக்கு சாப்பிடணும்.

எல்லாத்தைவிட ரொம்ப ரொம்ப சிறந்த து, வாழைப்பழ மில்க் ஷேக் அது குடித்தால் ஒரே வேளை இல் சரியாகிவிடும்.

சேர்க்க வேண்டிய காய்கறிகள், பூசணி, சௌ சௌ , பரங்கி, சூறை போன்ற நீர் காய்கறிகள், வெந்தயம் , வெந்தய கீரை, பசும்பால் போன்றவை .

No comments:

Blog Archive