Monday, July 25, 2011

சர்க்கரை வள்ளிக்கிழங்கு தேர்ந்தெடுப்பது எப்படி?

கையில் எடுத்தால் கனமாகக் கெட்டியாக இருக்க வேண்டும். அமுந்தக்கூடாது . தோல் புள்ளி எதுவும் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும். நுனியில் சுருங்கி இருந்தால் பழசு. அழுகதுவங்கி இருக்கு என் அர்த்தம் அழுகத் தொடங்கிய பகுதியை வெட்டி எறிந்தால் கூட அதன் வாசனை மற்ற இடங்களுக்குப் பரவி இருக்கும். வெளித்தோல் கொஞ்சம் கறுத்திருந்தாலும் கெட்டுப் போய் இதனடியில் உள்ள சதையும் கறுப்பாக மாறியிருக்கும். வாங்கியதும் மண் படிந்திருந்தால், அலம்பாமல் அப்படியே வைய்யவும். ஈரம், கிழங்கை சீக்கிரம் கெடுத்துவிடும். உபயோகிக்கும் முன் சுத்தம் செய்தால் போதும்.

பாதுகாத்தல் எப்படி?: சீக்கிரம் பயன்படுத்தி விடவேண்டிய காய்கறி இது. ஃப்ரீஜ்ஜில் வைத்தால் காய்ந்து போய் ருசியும் குறைந்துவிடும். உருளை வெங்காயம் போல் காற்றாட வைக்கலாம். அல்லது கொஞ்சம் மண்ணை போட்டு அதில் வைக்கலாம் .

No comments:

Blog Archive