Monday, July 25, 2011

கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்..

வெயீல் கொளுத்துகிறது; அதிலிருந்து தப்பிக்க சில டிப்ஸ் இங்கே புன்னகை

நிறைய குளுமயான பொருட்களை சாப்பாட்டில் சேர்க்கவும். அதாவது வெள்ளரி, பூசணி, பரிங்கி, சௌ சௌ போன்ற நீர் காய்களை யும், தர் பூசணி , கிர்ணி , வெள்ளரிப்பழம் போன்ற பழங்களையும் சேர்க்கலாம்.

மசாலா அதிகம் சேர்க்காத சாப்பாட்டை சாப்பிடவும்.

நீர்மோர், இளநீர் , பழரசங்கள் பருகவும். ரொம்பவும் அதிகம் பருகவேண்டியது குளிர்ந்த நீர் புன்னகை

உடல் ரொம்ப சூடாகிவிட்டால் , வாழைப்பழம் + பால் + சர்க்கரை சேர்த்து மிக்சி ல அரைத்து குடிக்கவும். உடலுக்கு ரொம்ப குளுமை.

பிடித்தவர்கள் போகவர சோம்பு சாப்பிடலாம். அதுவும் உடலுக்கு குளுமை.

தலைக்கு தவறாமல் எண்ணை தடவவும். எண்ணை தேய்த்து குளிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதை செயலாம்.

கைக்கு மருதாணி இட்டுக்கொள்ளல்லாம், அதுவும் குளுமை.

இரவே ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் ஊற போட்டுவிட்டு காலை அதை அரைத்து தலை இல் வைத்துக்கொண்டு ஒரு 10 -15 நிமிட்ங்கல் ஊறி குளித்தால் தலை முடிக்கும் நல்லது, உடலுக்கும் ரொம்ப குளுமை.

அதேபோல் வெந்தயத்தை எவ்வளவுக்கு எவ்வளவு சாப்பாட்டிட்டில் செக்கிறோமோ அவ்வளவு நல்லது.

No comments:

Blog Archive