Monday, July 25, 2011

கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்..2

கோடை இல் நிறைய பேர் அவதிப்படுவது நீர்சுருக்கு எனப்படும் நோயால். அதாவது
சிறுநீர் வரும் போல் இருக்கும் ஆனால் நன்றாக பெருகி வராது . அதற்க்கு கைகண்ட மருந்து இதோ . ஒரு மிளகு அளவு சுண்ணாம்பை ( நாம் வெற்றலை போட உபயோகிப்ப்மே அது தான் ) எடுத்து அரை டம்ளர் தண்ணீரில் போட்டு கரைத்து குடித்துவிடவும் , சில நிமிடங்களிலேயே உங்கள் தொல்லை போயே போச்.

கோடை இல் சரும வியாதிகள் வர்ரமல் தடுக்க , ஒரு கை வேப்பிலையை (சுத்தம் செய்து ) ஒரு பக்கெட் தண்ணீரில் இரவே போடவும். காலை இல் அந்த தண்ணீரில் குளிக்கவும்.

வியர்வை யால் வரும் துர்நாற்றத்தை போக்க குளிக்கும் நீரில் சில துளி "யூடிகலோன் " அல்லது சில சொத்துகள் எலுமிச்சை சாறு கலக்கலாம்.

வியர்க்குரு வந்து விட்டால் அதன்மேல் தண்ணியாக கரைத்த சந்தனம் பூசலாம் அல்லது நுங்கின் உள்ளிருக்கும் நீரை தடவலாம் .

உடல் குளுமைக்கு வெட்டிவேர் போட்ட நீரை வறுகலாம். வெட்டிவேரை ஒரு வெள்ளை துணி இல் முடிந்து பானை நீரில் போடவும். தண்ணீரும் நல்ல மணமாக இருக்கும், உடலுக்கும் நல்லது + குளுமை.

வீட்டு ஜன்னல் மற்றும் வாசல் படிகளில் வெட்டிவேர் தட்டிகளை போடலாம். அதில் தண்ணீர் தெளித்தால், நல்ல மனமாகவும் வீடு குளுமயாகவும் இருக்கும்.

ரொம்ப உடல் சூட்டால் அவதி படுபவர்கள் தலைக்கு விளக்கெண்ணை கூட வைத்துக் கொள்ளலாம்.

மேலும் சோம்பு ஜலம் வைத்து சாப்பிடலாம்

No comments:

Blog Archive