Tuesday, December 13, 2011

இட்லி , பொங்கல்

ஒரு 6மாதம் 7 மாதம் ஆனதும் , இட்லி பொங்கல் தரலாம். மசிஞ்ச சாதத்தில் துளி ரசம், பருப்பு, நெய் விட்டு தரலாம் .

ஒரு உணவை அல்லது கறிகாய்யை தரும்போது, 1 வாரம் முழுக்க தரவேண்டும், அப்ப தான் அது குழந்தைக்கு பிடிக்கிறதா, ஒத்த்துக்கொள்கிறதா என தெரியும். அதை பார்த்து விட்டு பின் அதுத்த உணவுக்கு போகலாம். இல்லா விட்டால் எது குழந்தைக்கு அலர்ஜி என கண்டு பிடிக்க முடியாது.

இட்லி தரும்போது, துளி சக்கரை தொட்டு தரலாம். கையால் நன்கு மசித்து தான் எதையுமே தரணும்.

பொங்கல் தருவதானால், நாம் தாளிக்கும் முன்பே தனியே கொஞ்சம் எடுத்து வைத்து விட்டு பிறகு துளி உப்பு போட்டு கலக்கவும். பிறகு ஒரு துளி நெய்யை அந்த மிளகு சீரகம் வறுத்த வாணலி இல் விட்டு , அதை இந்த , தனி யே எடுத்து வைத்துள்ள பொங்கலில் போட்டு கலந்து தரலாம். ஏன் என்றால், நாம் சாப்பிடும் பொங்கல் குழந்தைக்கு காரமாக இருக்கும்.

No comments: