Thursday, August 25, 2011

விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள்

இந்த வருடம் (2011) சதுர்த்தி செப்டம்பர் 1 ம தேதி வருகிறது. அந்த நன்னாளில் செய்யவேண்டிய நைவேத்தியங்கள் பற்றி இங்கு பார்போம்

கொழுக்கட்டை - விநாயகர் என்றதுமே நமக்கு நினைவுக்கு வருவது இது தான். இதில் இனிப்பு மற்றும் கார கொழுக்கட்டைகள் செயலாம் . முதலில் மேல் மாவு செய்யும் விதம் பார்க்கலாம்.
தேவையானவை:

அரிசி மாவு 2 கப் (களைந்து உலர்த்தி அரைத்தது)
உப்பு 1 சிட்டீகை
நெய் 1 டீ ஸ்பூன்
தண்ணீர் 1 1/2 முதல் 2 கப்

செய்முறை :

உருளி அல்லது ஆழமான 'non stick pan' இல் தண்ணீர் ஊற்றவும்
அது நன்கு கொதிக்கும் பொது, உப்பு மற்றும் நெய் சேர்க்கவும்.
அடுப்பை சின்னதாக்கி மாவை கொட்டி கிளறவும்.
அடுப்பை அணைத்துவிட்டு நன்கு கிளறவும்.
தேவையானால் சிறிது தண்ணீர் தெளித்து கிளறவும்.
நன்கு உருண்டு வந்ததும் முடிவைக்கவும்.

சொப்பு செய்யும் முறை :

கொஞ்சம் ஆறினதும், நன்கு அழுத்தி பிசையவும்.
மாவிலிருந்து ஒரு சிறிய உருண்டை எடுத்துக்கொண்டு, விரல்களால் ஓரத்தை அழுத்திக்கொண்டே கப் போல் செய்யவும்.
கட்டைவிரலை நடுவில் அழுத்திக்கொண்டு, மற்ற விரல்களால் ஓரத்தை அழுத்தவும்.
சிறிய கப் வடிவம் வந்ததும், செய்து வைத்துள்ள பூரணத்தை ( தேங்காய் பூரணம், உளுந்து பூரணம்,எள் பூரணம், கடலை பருப்பு பூரணம் ) வைத்து உள்ளங்கை யை குவித்து கப் இன் ஓரங்களை ஒன்றாக சேர்த்து குவிக்கவும்.
குவித்ததை அழுத்தி மோதகம், அதாவது கொழுக்கட்டையாக பிடிக்கவும்.
இட்லி தட்டில் வைத்து ஆவி இல் வேக விடவும்.
கொழுக்கட்டை தயார். புன்னகை

No comments:

Blog Archive