Thursday, August 25, 2011

சொப்பு செய்ய வாரா விட்டால்?.....

கையால் சொப்பு செய்ய வராவிட்டால், இப்படி செய்து பாருங்கள்.
சாதாரணமாக, வரட்டு அரிசி மாவில் செய்வதை விட களைந்து உலர்த்தின மாவில் ஈசி யாக செய்ய வரும்.
அப்படி வராவிட்டால், ஒரு சின்ன உருண்டை மாவை எடுத்துக்கொண்டு, 2 பிளாஸ்டிக் பேபரின் நடுவில் வைத்து கையால் அல்லது அப்பாளாக்குழவியால் மெல்ல ஒரு ஓட்டு ஒட்டவும்.
ஒரு சிறிய வட்டமாக மாவு மாறும்.
அதை கை இல் எடுத்து, உள்ளங்கை இல் வைத்துக்கொண்டு, சிறிய ஸ்பூன் ஆல் பூரணத்தை எடுத்து அதில் வைத்து மெல்ல குவிக்கவும்.

அல்லது,

அதை ஜஸ்ட் இரண்டாக மடித்து ஓரங்களை அழுத்திவிடவும்.
இது 'சோமாஸ்' போல இருக்கும்.

அல்லது,

கோதுமை மாவை சப்பாத்தி க்கு பிசைவது போல் மாவு பிசைந்து, சிறிய சிறிய பூரி கள்ளாகவோ , அல்லது ஒரே பெரிய சப்பாத்தி போலோ இடவும்.
ஒரு டப்பா மூடியை கொண்டு சப்பாத்தி யை வட்ட வட்டமாக கட் செய்யவும்.
அதன் நடுவில் பூரணத்தை வைத்து குவித்து முடி, கொழுக்கைட்டை கள் செய்யவும்.
இது போல் மொத்தமும் செய்து விட்டு, அடுப்பில் வாணலி இல் எண்ணை வைத்து எல்லாவற்றைய்ம், நன்கு பொரித்து எடுக்கவும்.
இப்படி செய்வதால், 2 - 3 நாள் வைத்திருந்து சாப்பிடலாம்.
முதல் நாளே கூட செய்து வைக்கலாம்.
இது பத்து இல்லை புன்னகை

No comments:

Blog Archive