Wednesday, August 17, 2011

வெல்ல சீடை

அடுத்தது வெல்ல சீடை

தேவையானவை :

பச்சரிசி 2 கப்
ஒரு பிடி உளுத்த மாவு ( வறுத்து அரைத்தது )
வெல்லம் 1 1/2 கப்
தேங்காய் பல்லு பல்லாக நறுக்கி வைத்தது 2 டேபிள் ஸ்பூன்
எள் கொஞ்சம்
ஏலப்பொடி பொடி 1/4 டீ ஸ்பூன்
நெய் 1 டேபிள் ஸ்பூன்
பொறிக்க எண்ணை

செய்முறை:

முதலில் அரிசியை களைந்து உலர்த்தனும்.
இதை முதல் நாளே கூட செய்து வைக்கலாம்.
அரிசி காய்ந்ததும், மிக்சி இல் மாவாக அரைத்து , சலித்து வைக்கவும்.
எள்ளை பொறுக்கி வைக்கவும்
தேங்காய்யை பல்லு பல்லாக நறுக்கி அளந்து எடுத்துக்கொள்ளவும்.
ஒரு உருளி இல் தண்ணீர் விட்டு நறுக்கின வெல்லத்தை போடவும்.
வெல்லம் கரைந்ததும், வடிகட்டவும்.
பின் மீண்டும் அடுப்பில் வைத்து நன்கு கொதிக்கும் போது, எள், தேங்காய் , ஏலப் பொடி எல்லாம் போட்டு நன்கு கலக்கவும்.
பின் அரிசிமாவு, வறுத்து அரைத்த உளுத்தம் மாவு, போட்டு இறக்கிவைத்து நன்கு கிளறவும்.
நெய்விடவும்.
கொஞ்சம் ஆறினதும் அழுத்தி பிசையவும்.
ஒரு வெள்ளை துணி அல்லது துளி எண்ணை தடவிய தாம்பாளத்தில் சின்ன சின்னதாக ஆனால் உப்பு சீடை யை விட சற்று பெரியதாக மொத்த மாவையும் உருட்டிவிடவும்.
அடுப்பில் எண்ணை வைத்து, கொஞ்சம் கொஞ்சமாக சீடைகளை அதில் போட்டு பொரித்து எடுக்கவும்.
நல்லா மருதாணி பற்றியது போன்ற கலர் இல் - மெருன் கலரில் வரும் புன்னகை.
'கரகர' ப்பான 'வெல்ல சீடை ' ரெடி

குறிப்பு: இதில் துளி கல் மண் இருந்தாலும் சீடை வெடிக்கும்.
இது வும் ரொம்ப ஜாக்கிரதையாக செய்யவேண்டிய பக்ஷணம் புன்னகை
தேங்காய்யை பல்லு பல்லாக நறுக்கி வைத்து கொண்டால் அப்பத்துக்கும் போடலாம்.
இது பெருமாளுக்கு நைவேத்தியம் என்பதால் வாயி இல் போட்டுக்கொண்டு பார்க்க முடியாது. எனவே, சீடை கொஞ்சம் ஆறினதும் கையால் அழுத்தி பார்க்கணும். உடனே உடைந்தால் நல்லா வந்திருக்கு என்று அர்த்தம் . இல்லா விட்டால் இன்னும் கொஞ்ச நேரம் அடுப்பில் வைத்து எடுக்கணும் என்று அர்த்தம்

No comments:

Blog Archive