Tuesday, June 23, 2015

ராஜஸ்த்தானி 'கடி பகோடா'

ராஜஸ்த்தானி  'கடி பகோடா

தேவையானவை :

1 1 /2 கப் கடலை மாவு
2 ஸ்பூன் மிளகாய் பொடி
அரை ஸ்பூன் ஓமம்
ஒரு சிட்டிகை பெருங்கயப்பொடி
கால் ஸ்பூன் சோடா உப்பு
2 கப் திக்கான மோர்
அரை ஸ்பூன் வறுத்து பொடித்த வெந்தயப்பொடி
அல்லது காய்ந்த வெந்தய கீரை
கறிவேப்பிலை
உப்பு
பொரிக்க எண்ணெய்

செய்முறை:


முதலில் ஒரு பேசினில் பாக்கி ஒரு கப் கடலை மாவை போட்டு, ஓமம், சோடா உப்பு, கொஞ்சம் மிளகாய் பொடி, உப்பு போடவும்.
தண்ணீர் விட்டு பகோடா மாவு போல கரைக்கவும்.
ஒரு பக்கமாய் வைக்கவும்.
மோரை நன்கு குழப்பவும்.
உப்பு, அரை கப் கடலை மாவு, கொஞ்சம் மிளகாய் பொடி, வெந்தய பொடி அல்லது பொடித்த வெந்தய கீரை போட்டு நன்கு கலக்கவும்.
மாவு கட்டி தட்டாமல் நன்கு கலக்கவும்.
வாணலி இல் எண்ணெய் துளிவிட்டு கொஞ்சம் ஓமம் மற்றும் கறிவேப்பிலை தாளிக்கவும்.
கரைத்த மோரை அதில் விடவும்.
அது கொதிக்கட்டும். இது தான் 'கடி'
வாணலி இல் எண்ணெய் வைக்கவும்.
சூடான எண்ணெய் இல் கரைத்து வைத்துள்ள மாவை எடுத்து பக்கோடாக்கள் போல போடவும்.
நல்ல பவுன் நிறத்தில் எடுத்து , கொதித்துக்கொண்டிருக்கும் 'கடி' இல் போடவும்.
இது போல எல்லா மாவும்ஆகும் வரை செய்யவும்.
பக்கோடாக்கள் மொத்தமும் போட்டதும் ஒரு கொதி வரும் வரை காத்திருக்கவும்.
பிறகு 'கடி பகோடாவை' அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
இது ஒரு ராஜஸ்த்தானி டிஷ் , சப்பாத்திக்கு பூரிக்கு ரொம்ப நன்னா இருக்கும்.


No comments:

Blog Archive