Tuesday, June 23, 2015

'ஆலு மட்டர்' - உருளை கிழங்கு , பட்டாணி காய்

'ஆலு மட்டர்' - உருளை கிழங்கு , பட்டாணி காய்


தேவையானவை :

வேகவைத்த உருளை கிழங்கு 2 -3 (தோலுரித்து, சதுரமாக வெட்டிக்கொள்ளவும்)
பச்சை பட்டாணி - வேகவைத்தது 1 கப்
வெங்காயம் - 1 - பொடியாக நறுக்கிகொள்ளவும்
பச்சைமிளகாய் - 2
இஞ்சி - 1 துண்டு தோலெடுத்து , துருவிக்கொள்ளவும்
பெங்களூர் தக்காளி 2 - விதை எடுத்து பொடியாக நறுக்கவும்
உப்பு
சீரகம் 1 டீ ஸ்பூன்
எண்ணெய் 1 டீ ஸ்பூன்
நெய் 1 டீ ஸ்பூன்
மாங்காய் பொடி ( ஆம்சூர் ) 1/2 டீ ஸ்பூன்
கரம் மசாலா பவுடர் 1/2 டீ ஸ்பூன்
தனியா பொடி 1 1/2 டீ ஸ்பூன்
மிளகாய் பொடி 1/2 to 1 டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/4 டீ ஸ்பூன்
கொத்துமல்லி கொஞ்சம்

செய்முறை:

மிக்சி இல் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி யை மையாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலி இல் எண்ணெய் மற்றும் நெய் விடவும்.
சீரகத்தை தாளிக்கவும், அரைத்ததை போட்டு நன்கு வதக்கவும்.
எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கணும்.
அத்துடன், பொடியாக நறுக்கின தக்காளி யை போட்டு நன்கு வதக்கவும்.
பிறகு நறுக்கி வைத்துள்ள உருளை மற்றும் வெந்த பட்டாணியை போடவும்.
கொஞ்சம் உப்பு போடவும்.
கொஞ்சம் வதங்கினதும், எல்லா பொடிகளையும் போடவும்.
அடுப்பை கொஞ்சம் தணித்து வைக்கவும்.
அப்பப்போ கிளறி விடவும்.
கொஞ்சம் 'கிரேவியாக' வேண்டுமானால் தண்ணீர் விடவும்; இல்லை உதிர் உதிராக வேண்டுமானால் அப்படியே கிளறி இறக்கிவிடவும்.
அவ்வளவு தான், சுவையான 'ஆலு மட்டர்' தயார்.
சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சாப்பிடலாம் புன்னகை .

No comments:

Blog Archive