Thursday, November 15, 2018

கூட்டு பொடி

கூட்டு பொடி !


இது எங்க கிருஷ்ணா காக நான் கண்டுபிடித்த பொடி  நாங்க வீட்டுல "பொரித்த கூட்டு " செய்வோம். அதற்க்கு தேங்காய் , உளுந்து , மிளகாய் வற்றல் , பொருங்காயபொடி எல்லாம் அரைத்து விடுவோம். அப்பதான் கூட்டு நல்லா இருக்கும். அதை சுலபமாக செய்ய தான் இந்த பொடி. பொரித்த கூட்டு செய்யத் தேவையான பொடி....வேண்டுமானால் நீங்கள் தினமும் அரைத்து செய்யலாம்.

தேவயானவை:

உளுந்து 1 கப்
மிளகாய் வற்றல் 20 - 25
ஒரு துளி எண்ணை

செய்முறை:

துளி எண்ணை விட்டு இரண்டையும் வறுக்கவும்.
மிக்சி இல் அரைக்கவும் .
தேவயான போது உபயோகப்படுத்தவும்.

உபயோகப்படுத்தும் முறை: கூட்டு செய்ய, புடலங்காய், கத்தரிக்காய், பெங்களூரு கத்தரிக்காய் , பீன்ஸ் , காரட், முட்டை கோஸ், அவரக்காய் போன்றவை ஏற்றவை. இதை ஏதாவது ஒருக்காய் + பயத்தம் பருப்பு சேர்த்து குக்கர் இல் வைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலி இல் எண்ணை விட்டு, ( தேங்காய் எண்ணை ரொம்ப நல்லது) கடுகு உளுத்தம் பருப்பு போட்டு வெடித்ததும், வெந்த காய் பருப்பை கொட்டவும்.
கொஞ்சம் பெருங்காய பொடி, உப்பு, 2 ஸ்பூன் கூட்டு பொடி, வறுத்த தேங்காய் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
அவ்வளவு தான் கூட்டு ரெடி. 
ரசத்துடன் அல்லது துவையலுடன் அமர்க்களமாக இருக்கும்.

குறிப்பு: தேங்காய் துருவலை நன்கு சிவக்க வறுத்து ஃப்ரீஸர் இல் வைத்து உபயோகப்படுத்தவேண்டும். அல்லது இறக்குவதற்கு முன் 1 ஸ்பூன் பச்சை தேங்காய் எண்ணை விட்டு இறக்கிவிடலாம்.

No comments:

Blog Archive