Tuesday, August 30, 2011

பொரி மாவு உருண்டை 2

தேவையானவை:

புழுங்கல் அரிசி 1 கப்
பொட்டு கடலை 1/2 கப்
வெல்லம் 1 கப்
தேங்காய் - பல்லு பல்லாக நறுக்கியது 2 டேபிள் ஸ்பூன்
ஏலப்பொடி 1 ஸ்பூன்
நெய் 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

வெல்லத்தை தூளாக்கி தண்ணீரில் போடவும்.
கரைந்ததும், வடி கட்டி தயாராய் வைக்கவும்.
வாணலி இல் அரிசியை போட்டு நல்லா வறுக்கணும்.
அது பொரிந்து கொண்டு, நல்ல வாசனை வரும். அது வரை வறுக்கவும்.
தீ குறைவாய் வைக்கவும் இல்லாவிட்டால் 'தீய்ந்து' போய்விடும்.
நன்கு வறு பட்டதும், தனியே தட்டில் கொட்டி ஆறவைக்கவும்.
நன்கு ஆறினதும், மிக்சி இல் பொடிக்கவும்.
தேங்காய் துண்டங்களை நல்ல சிவப்பாக வறுக்கவும்
பொட்டு கடலை யை சற்று சூடாக்கி பொடிக்கவும்.
வாணலி இல் வெல்ல தண்ணீரை ஊற்றவும் .
அரைத்த மாவுகள் , வறுத்த தேங்காய் மற்றும் ஏலப்பொடி போட்டு கைவிடாமல் கிளறி கொஞ்சம் கெட்டியானதும் இறக்கவும்.
கொஞ்சம் ஆறினதும், சின்ன சின்ன உருண்டைகள் பிடிக்கவும்.
குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கவும்.
ரொம்ப வாசனையாக நல்லா இருக்கும்.

குறிப்பு: வேண்டுமானால் , வறுத்த முந்திரி துண்டங்களும் சேர்க்கலாம் .நாள் பட வைத்திருந்து சாப்பிடலாம் புன்னகை

No comments:

Blog Archive