Tuesday, August 30, 2011

நெய் இல்லாத போளி

எனக்கு இவ்வளவு நெய் வேண்டாம் என்று சொல்பவர்கள் நெய் இல்லாமலே போளி
செயலாம். அதர்க்கான குறிப்பு இங்கே புன்னகை

தேவையானவை:

கடலை மாவு 1 கப்
பொடித்த சக்கரை 3/4 கப்
ஏலப்பொடி

மேல் மாவு செய்ய:

மைதா 2 கப்
சிட்டிகை உப்பு
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
துளி சோடா உப்பு
2 டேபிள் ஸ்பூன் எண்ணை

செய்முறை:

கடலை மாவை துளி நெய் விட்டு சிவக்க வறுக்கவும். (கொஞ்சம் தான் புன்னகை )
ஆறினதும், சர்க்கரை பொடி ஏலப்பொடி போட்டு கலந்து வைக்கவும்.
இது தான் பூரணம்.
ஒரு பேசின் இல் மைதா மாவை போட்டு, உப்பு, சோடா உப்பு மஞ்சள் பொடி போட்டு2 ஸ்பூன் எண்ணை விட்டு நன்கு பிசிரவும்.
அது நன்கு கலந்ததும், கொஞ்சம் கொஞ்சமாய் தண்ணீர் தெளித்து பிசையவும்.
சப்பாத்தி மாவு போல ஆனால் ரொம்ப மிருதுவாய் இருக்கணும்.
பிசைந்த மாவை 1 மணி நேரம் அப்படி யே வைத்திருக்கவும்.
பிறகு மீண்டும் மாவை நன்கு பிசைந்து, சப்பாத்தி போல் இடவும்.
அதன் மேல் பூரண கலவையை 1 -2 ஸ்பூன் போடவும்.
மெதுவாக மூடவும்.
மெல்ல ரொம்ப அழுத்தாமல் 'சப்பாத்தி போல் இடவும்'
கஷ்டமானால் அரைவட்டமாக மடித்து கொஞ்சமாய் இடவும். இது கொஞ்சம் சுலபம் புன்னகை
அது போல் எல்லாவற்றையும் செய்யவும்.பிறகு அடுப்பில் தோசை கல்லை போடவும்
இட்டு வைத்துள்ள போளியை எடுத்து தோசை கல்லில் போடவும்.
ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போடவும்.
தேவையானால் நெய் விட்டு எடுக்கவும்.
பரிமாறும் போதும் மேலே நெய் விட்டு தரவும்.
சுவையான நெய் இல்லாத போளி தயார்.
இதை 1 வாரம் வரை கூட வைத்து இருக்கலாம், சாப்பிடும்போது, நெய் விட்டு தரலாம்.
வேண்டாம் என்றால் அப்படியே சாப்பிடலாம்.

No comments:

Blog Archive