Tuesday, August 30, 2011

பால் போளி 2

தேவையானவை:

மைதா 2 கப்
சிட்டிகை உப்பு
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
துளி சோடா உப்பு
பொறிக்க எண்ணை
Full cream milk 2 கப்
பாதாம் 1/2 கப்
முந்திரி 1/2 கப்
பிஸ்தா 1/2 கப்
கோவா 1/2 கப்
சக்கரை 2 கப்
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
குங்குமப்பூ 12 -15 இழைகள்

செய்முறை:

மைதாமாவை சப்பாத்திக்கு பிசைவது போல், உப்பு மஞ்சள் பொடி, சோடா உப்பு போட்டு பிசைந்து வைக்கவும்.
பருப்புகளை சன்னமாக உடைக்கவும்.
ஏலப்பொடி, கோவா போட்டு கலந்து வைக்கவும்.
இது தான் பூரணம்.
பாலை அடுப்பில் ஏற்றி ,சக்கரை ஏலப்பொடி ,குங்குமப்பூ போட்டு கலக்கவும்
பால் ஒரு கொதி வந்ததும் இறக்கி வைக்கவும்.
பிசைந்து வைத்துள்ள மாவை பூரிகளாக இடவும்.
ஒவ்வொரு பூரி இன் உள்ளும், பூரணத்தை வைத்து மூடவும்.
போளி போல பிளாஸ்டிக் கவர் அல்லது வாழை இலை இல் வைத்து தடவும் .
எண்ணை இல் பொரித்து எடுக்கவும்.
ஒரு பேசினில், கொதித்த பாலை விட்டு அதில் இந்த பூரிகளை போடவும்.
ஊரினதும் பரிமாறவும்.
ரொம்ப நல்லா இருக்கும்.

குறிப்பு: இதை சூடாவும், ஃபிரிஜ் இல் வைத்து குளிர்ச்சியாகவும் பரிமாறலாம்.
பரிமாறும் போது, மேலே பாதாம் பிஸ்தா தூவி பரிமாறலாம். புன்னகை

No comments:

Blog Archive