Friday, July 22, 2011

பாதாம் ஹல்வா

பாதாம் ஹல்வா - சொலும்போதே நாவில் நீர் ஊற செய்யும் ஒரு இனிப்பு இது .
இதை பல வழிகளில் செயலாம் நாம் ஒவ்வொன்றாக பார்போம் .

தேவையானவை:

பாதாம் பருப்பு 2 கப் விழுது (250 கிராம் பருப்பை ஊறவைத்து , தோலுரித்து பாலில் அரைக்கவும் )
சக்கரை 2 கப்
பால் - 1/2 கப் பாதாமை அரைக்க
குங்குமப்பூ 10 -12 இழைகள்
நெய் 1 கப்
ஏலப்பொடி 1/2 ஸ்பூன் (தேவையானால் )

செய்முறை:

பாதாம் பருப்பை 2 மணிநேரம் வெந்நீரில் ஊரவைக்கவும்
ஊரவைத்த பருப்பை ,தோலுரித்து பாலில் அரைக்கவும்
ரொம்ப பால் விட வேண்டாம், தோசைமாவை விட கெட்டியாக இருக்கணும்.
ஒரு உருளி இல் அரைத்தத்தை விட்டு, சக்கரை போட்டு கிளற ஆரம்பிக்கணும்.
ஒரு சின்ன கிண்ணி இல் குங்குமப்பூவை போட்டு துளி பால் விட்டு வைக்கவும்
பிறகு கரைத்து ஹல்வாவில் கொட்டனும்.
ஹல்வா கொதிக்க ஆரம்பித்ததும் கைவிடாமல் கிளறவும்.
கொஞ்சம் திறந்து வரும் பொது, நெய் விட ஆரம்பிக்கணும்.
கொஞ்சம் கொஜமாக விட்டு கிளறனும்.
கரைத்து வைத்துள்ள குங்கும பூவை இதில் கொட்டவும்
நெய் முழுவதும் அந்த ஹல்வா உறிந்து கொண்டு நன்கு பொரிந்து வரும்.
அப்ப இறக்கவும்.
ஆறினதும் அல்லது சுட சுட "பாதாம் ஹல்வா" வை பரிமாறவும்.

குறிப்பு:வேண்டுமானால் ஆறினதும், ஒவ்வோர் ஸ்பூன் எடுத்த்கு ஒரு அலுமினிய foil ல போட்டு மடித்து வைத்தால் சர்வ் பண்ண சௌகர்யமாக இருக்கும்.

3 comments:

prabhadamu said...

supper ammaa :)

prabhadamu said...

Word verification no போடுங்க.....

Dr.S.Soundarapandian said...

நாக்கில் எச்சில் ஊறுதே !

Blog Archive