Tuesday, July 22, 2014

'குழம்புமாவு உப்புமா '

குழம்புமாவு உப்புமா '.... இது என்ன என்று குழம்புபவர்களுக்கான விளக்கம் புன்னகை அரிசி மாவை தான் நாங்க அப்படி சொல்வோம். இது அரிசி மாவில் செய்யும் 'கூழ்' . ரொம்ப சுவையாக 'மணல் மணலாக' வரும். கொஞ்சம் எண்ணெய் அதிகம் ஆகும் என்றாலும் சுவை யாக இருக்கும்.

தேவையானவை :

அரிசி மாவு ஒரு கப்
மிளகாய் வற்றல் 4 - 5
புளி தண்ணீர் 1 1 / 2 கப்
உப்பு
கடுகு கொஞ்சம்
உளுந்து கொஞ்சம்
பெருங்காயம் கொஞ்சம்
எண்ணெய் முக்கால் கப்
கறிவேப்பிலை கொஞ்சம்

செய்முறை :

முதலில் மாவையும் புளி ஜலத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கரைக்கவும் .
உப்புபோடவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்கயப் பொடி, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் போட்டு தாளிக்கவும்.
கரைத்து வைத்துள்ள மாவை கொட்டி கிளறவும்.
அடுப்பை சின்னதாக வைக்கவும்.
மாவு வேகும் வரை அப்ப அப்ப கிளறி விடவும்.
நன்கு 'உதிர் உதிராக ' வரும்வரை எண்ணெய் விட்டு கிளறவும் .
அவ்வளவுதான், சுவையான 'குழம்புமாவு உப்புமா ' தயார்.
தொட்டுக்கொள்ள பருப்பு சாம்பார் நல்லா இருக்கும்.

2 comments:

முனைவர் சு.சௌந்தரபாண்டியன் said...

சூப்பர் !

Dr.S.Soundarapandian said...

அருமை கிருஷ்ணாம்மா!

Blog Archive