Tuesday, July 22, 2014

உப்புமா கொழுக்கட்டை

தேவையானவை :

அரிசி 2 கப்
துவரம் பருப்பு 2 டேபிள் ஸ்பூன் 
கடலைபருப்பு 2 டேபிள் ஸ்பூன் 
தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன் 
உப்பு 

தாளிக்க :

கடுகு 1 ஸ்பூன்
மிளகாய் வற்றல் 4 - 5 
உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன் 
கடலை பருப்பு 1 ஸ்பூன் 
பச்சை மிளகாய் 2 - 3 
பெருங்காயம் கால் ஸ்பூன் 
கறிவேப்பிலை கொஞ்சம் 
தேங்காய் எண்ணெய் தாளிக்க கொஞ்சம் 

செய்முறை :

அரிசியை களைந்து உலர்த்தனும். 
மிக்சி இல் ரவையாக பொடிக்கவும்.
தனியாக துவரம் பருப்பு மற்றும் கடலைப்பருப்பையும் ரவை போல பொடிக்கவும்.
ஒரு வாணலி இல் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை போட்டு தாளிக்கவும். 
பிறகு தண்ணிர் விடவும். உப்பு போடவும்.
அது நன்கு கொதிக்கும் போது அடுப்பை சின்னதாக்கி விட்டு அரைத்து வைத்துள்ள அரிசி மற்றும் பருப்பு இவைகளை போடவும்.
கட்டிகள் இல்லாமல் நன்கு கலக்கவும்.
தேங்காய் துருவல் போட்டு நன்கு கிளறி இறக்கவும்.
இப்போது ரவை பாதி வெந்து இருக்கும்.
அப்படியே அடுப்பிலிருந்து இறக்கி ஒரு பெரிய தாம்பாளத்தில் கொட்டவும்.
அது கொஞ்சம் ஆறட்டும்.
ஒரு இட்லி பானையில் தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும்.
இட்லி தட்டுகளில் எண்ணெய் தடவவும்.
ஆறி உள்ள ,பாதி வெந்த உப்புமாவை கைகளில் எடுத்து பிடிகொழுக்கட்டை போல பிடிக்கவும்.
இட்லி தட்டுகளில் அடுக்கவும்.
எல்லாவற்றையும் இவ்வாறு அடுக்கினதும், இட்லி போல ஆவி இல் வேக வைக்கவும்.
அவ்வளவு தான் 'உப்புமா கொழுக்கட்டை ' ரெடி. 
தேங்காய் சட்டினியுடன் பரிமாறவும்.
அல்லது பருப்பு சாம்பாருடன் பரிமாறவும்.

No comments:

Blog Archive