Monday, June 22, 2015

பஞ்சாபி "மேத்தி மலாய் மசாலா " 2

பஞ்சாபி "மேத்தி மலாய் மசாலா " 2



இது ஃபிரெஷ் மேத்தி யால் செய்வது. அதாவது வெந்தய கீரையால் செய்வது. கீரை யை மெட்ராஸ் ல வாங்காதீங்க அது குட்டியாக இருக்கும். கொழ கொழ ப்பாக இருக்கும். வட இந்தியாவில் விற்கும்கீரை இல் செய்வது இது. புன்னகை

தேவயானவை:

வெந்தய கீரை - ஒரு பெரிய கட்டு ( ஆய்ந்து, சுத்தப்படுத்தி நறுக்கி வைக்கவும் )
வெங்காயம் - 2 - மிகவும் பொடியாக நறுக்கவும்
பூண்டு - 4 - 5 பல் - மிகவும் பொடியாக நறுக்கவும்
பச்சை மிளகாய் - 2 - மிகவும் பொடியாக நறுக்கவும்
ஏலம்1, கிராம்பு1, பட்டை 1 இன்ச் துண்டு, சீரகம் 1/2 ஸ்பூன், 1 பிரிஞ்சி இலை (நன்கு பொடிக்கவும்; இது தான் இதன் மசாலா )
ஏலம்1, கிராம்பு1, பட்டை 1 இன்ச் துண்டு, சீரகம் 1/2 ஸ்பூன், 1 பிரிஞ்சி இலை - இதை அப்படியே முழுசாக போட வைத்து கொள்ளுங்கள் .
ஃபிரெஷ் கிரீம் - 1/4 கப்
மாங்காய் பொடி - 1 ஸ்பூன் (ஆம்சுர் என் கடைகளில் விற்க்கும்)
மிளகாய் பொடி - 1/2 ஸ்பூன்
சர்க்கரை 1/2 ஸ்பூன்
பால் - 1 கப் (ஃபுல் கிரீம் மில்க் )
உப்பு
எண்ணை - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

வாணலி இல் எண்ணை விட்டு ஏலம்1, கிராம்பு1, பட்டை 1 இன்ச் துண்டு, சீரகம் 1/2 ஸ்பூன், 1 பிரிஞ்சி இலை போட்டு வறுக்கவும்.
வாசனை வந்ததும், நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் , பூண்டு போட்டு வதக்கவும்.
இப்ப பொடித்து வைத்துள்ள மசாலா பொடியை போடவும். கருகாமல் வதக்கவும்.
நறுக்கி வைத்துள்ள வெந்தய கீரையை போடவும்.
நன்கு கிளறவும், கீரை பாதி வெந்ததும் பாலை விடவும்.
கீரை வேகும் வரை அப்ப அப்ப கிளறவும்.
ஆம்சுர், மிளகாய் பொடி மற்றும் சர்க்கரை போடவும்.
கிளறவும். உப்பு போடவும்.
கிரீம் போடவும். நல்லா கொதித்ததும் இறக்கவும்.
சப்பாத்தி - நான் - உடன் பரிமாறவும்.

குறிப்பு : இதில் பச்சை சோளம் அல்லது பச்சை பட்டாணி சேர்ப்பதுண்டு.

No comments:

Blog Archive