Monday, June 22, 2015

நெஞ்சு எரிச்சலை குணப்படுத்துவது எப்படி?

நிறைய தண்ணீர் குடிக்கணும். எவ்வளவு சூடு குடிக்க முடியுமோ அவ்வளவு சூடா குடிக்கலாம்.

முழு ஏலக்காய் 3 எடுத்துக்கொண்டு , இலுப்ப கரண்டி இல் போட்டு மெல்லிய தீ இல் வறுக்கணும் . அது நல்லா உப்பிக்கொண்டு , brown colour இல் மாறும் போது, அடுப்பிலிருந்து எடுத்து ஆறவிடணும். நல்லா ஆறினதும் அதை உரித்து, பொடி பண்ணி தேனுடன் கலந்து சாப்பிடணும்.

இது 1 வேளைக்கான மருந்து அனேகமாய் இதிலே யே சரியாகி விடும். இல்லா விட்டால், மறு முறை செய்து சாப்பிடவும். பெரும்பாலும் இந்த நெஞ்சு எரிச்சல் இரவு நேரங்களில் அதிகம் சாப்பிட்டு விட்டு போதிய தண்ணீர் குடிக்காமல் படுப்பதால் ஏற்படும். எனவே மேல் சொன்ன பொடியை செய்து சாப்பிட்டு விட்டு நிறைய தண்ணீர் குடித்து விட்டு படுத்தால் காலை சரியாகி விடும்.

சின்ன குழந்தை முதல் பெரியவர் வரை இதை சாப்பிடலாம். பெரியவர்களுக்கு இது ஒரு வேளை மருந்து. குழந்தைகளுக்கு 1 சிட்டிகை முதல் 1 ஏலக்கா இன் பொடி அளவு வரை கொடுக்கலாம் புன்னகை

No comments:

Blog Archive