Friday, October 9, 2020

சர்க்கரைவள்ளிக் கிழங்கு பரோட்டா

Ingredients:
  • கோதுமை மாவு - 2 கப்,
  • வேகவைத்து துருவிய சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 2 கப்
  • சர்க்கரை அல்லது வெல்லம் இரண்டு டேபிள் ஸ்பூன்
  • ஏலப்பொடி அரை ஸ்பூன்
  • உப்பு - ஒரே ஒரு சிட்டிகை
  • எண்ணெய்-நெய் கலவை - தேவையான அளவு.


Method:
  • ஒரு பாத்திரத்தில் உப்பு வேகவைத்து துருவிய சர்க்கரைவள்ளிக் கிழங்கு , ஏலப்பொடி போட்டு நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
  • இப்பொழுது , கொஞ்சம் கொஞ்சமாக கோதுமை மாவை போட்டு கலக்கவும்.
  • தண்ணீர் துளியும் விடவேண்டாம்.
  • அநேகமாய் இரண்டு கப் மாவும் கலக்க வரும்.
  • ஒருவேளை, எல்லா மாவும் போட்டு பின் தண்ணீர் தேவையானால் கொஞ்சமே கொஞ்சம் விட்டுக்கொள்ளுங்கள்.
  • மாவு நன்கு கெட்டியாக, சப்பாத்தி மாவுபோல் இருக்க வேண்டும்.
  • அப்படியே ஒரு பத்து நிமிடங்கள் மூடி வைத்திருங்கள்.
  • பிறகு பிசைந்த மாவை சிறிய சப்பாத்திகளாக இட்டு , தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய்-நெய் கலவையை விட்டு இரண்டு பக்கங்களும் கருகாமல் எடுங்கள்.
  • சுவையான, அருமையான, இனிப்பான சர்க்கரைவள்ளிக் கிழங்கு பரோட்டா தயார்.
  • இதற்கு தொட்டுக்கொள்ள எதுவுமே வேண்டாம், தேவையானால் தேன் விட்டுக்கொள்ளலாம் அல்லது நெய் விட்டுக்கலாம்.


Notes:
  • 1 ) இந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கை தனியே மசித்து வைத்துக் கொண்டு, சப்பாத்திக்குள் பூரணம் போல் வைத்து ஸ்டஃப்டு பரோட்டாவாகவும் செய்யாலாம் .
  • 2 ) எண்ணெய்-நெய் கலவை - தோசை மற்றும் சப்பாத்தி செய்வதற்கு எப்போதுமே எண்ணெய் அரை கப் என்றால், நெய் கால் கப் என்ற விகிதத்தில் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அருமையாக, மணமாக இருக்கும்.

Blog Archive