Friday, October 9, 2020

சோயா சங் பரோட்டா

Ingredients:
  • கோதுமை மாவு - 2 கப்,
  • சோயா சங் / உருண்டைகள் 20 / 30 அல்லது சோயா க்ரானுல்ஸ் - 1 /2 கப்
  • பச்சை மிளகாய் 8 - 10
  • கரம் மசாலா 1 ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய்-நெய் கலவை - தேவையான அளவு.


Method:
  • ஒரு பாத்திரத்தில் உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை நன்கு கசக்கிப் பிசையவும்.
  • சோயா உருண்டைகளை கொதிக்கும் நீரில் போட்டு எடுத்து, பச்சை தண்ணீரில் இரு முறை நன்கு அலசவும்.
  • நன்கு பிழிந்து, மிக்ஸியில் அடித்து உதிர்த்துக் கொள்ளவும்.
  • கரம் மசாலா போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
  • இப்பொழுது , கொஞ்சம் கொஞ்சமாக கோதுமை மாவை போட்டு கலக்கவும்.
  • தண்ணீர் துளியும் விடவேண்டாம்.
  • அநேகமாய் இரண்டு கப் மாவும் கலக்க வரும்.
  • ஒருவேளை, எல்லா மாவும் போட்டு பின் தண்ணீர் தேவையானால் கொஞ்சமே கொஞ்சம் விட்டுக்கொள்ளுங்கள்.
  • மாவு நன்கு கெட்டியாக, சப்பாத்தி மாவுபோல் இருக்க வேண்டும்.
  • பிறகு பிசைந்த மாவை சிறிய சப்பாத்திகளாக இட்டு , தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய்-நெய் கலவையை விட்டு இரண்டு பக்கங்களும் கருகாமல் எடுங்கள்.
  • சுவையான, அருமையான சோயா சங் பரோட்டா தயார்.
  • இதற்கு தொட்டுக்கொள்ள எதுவுமே வேண்டாம், தேவையானால் கெட்டித்தயிர் போதும்.


Notes:
  • சோயா சங் இல்லாமல் தூளாக கிடைத்தால், அதை அப்படியே தண்ணீரில் போட்டு ஒரு ஐந்து நிமிடம் கழித்து நன்கு பிழிந்து உபயோகிக்கவும்.
  • ஒருவேளை பச்சை வாசனை வருமே என்று நீங்கள் நினைத்தால், வாணலி இல் ஒருமுறை புரட்டி எடுத்து பின் உபயோகிக்கவும்.
  • இந்த சங்கை தனியே பொடித்து வைத்துக் கொண்டு, கரம் மசாலா கலந்து, சப்பாத்திக்குள் பூரணம் போல் வைத்து ஸ்டஃப்டு பரோட்டாவாகவும் செய்யாலாம் .
  • எண்ணெய்-நெய் கலவை - தோசை மற்றும் சப்பாத்தி செய்வதற்கு எப்போதுமே எண்ணெய் அரை கப் என்றால், நெய் கால் கப் என்ற விகிதத்தில் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அருமையாக, மணமாக இருக்கும்.

No comments:

Blog Archive