Tuesday, October 6, 2020

முந்திரி கொத்து

Ingredients:
  • பூரணம் செய்ய :
  • பாசி பயறு அல்லது பாசிப்பருப்பு 100 கிராம்.
  • முந்திரி பருப்பு 100 கிராம்.
  • வெல்லம் 100 கிராம்
  • ஏலக்காய் 10
  • தேங்காய் துருவல் 1 கப்
  • வெள்ளை எள்ளு 50 கிராம்
  • மேல் மாவு செய்ய :
  • பச்சை அரிசி மாவு 1 /4 கப் (களைந்து உலர்த்தின அரிசி இல் செய்த மாவு என்றால் நல்லது )
  • மைதா 3 /4 cup
  • மஞ்சள் கலர் 1 ,சிட்டிகை
  • சோடா உப்பு சிறிது
  • எண்ணெய் பொரிக்க


Method:
  • பச்சை அரிசி மற்றும் மைதா மாவை சலித்து மஞ்சள் கலர், சோடா உப்பு சேர்த்து கெட்டியாக , அதாவது இட்லி மாவு பதத்திற்கு
  • தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்து கொள்ளவும்.
  • பூரணத்திற்கு பாசி பயறை நன்றாக நெய் அல்லது எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும், ஆறிய பின் ரவை போல் பொடித்து
  • கொள்ளவும்.
  • பிறகு எள்ளு மற்றும் தேங்காய் துருவலை தனி தனியாக வறுக்கவும்.நல்ல பிரவுன் கலர் வரும் வரை தேங்காவை வறுக்கவும்.
  • 'பட பட' வென பொறியும் வரை எள்ளை வறுக்கவும்.
  • முந்திரி யை ஒரு சுட்டறு மிக்சி இல் பொடிக்கவும். ஏலம் பொடிக்கவும்.
  • ஒரு வாணலி இல் பொடித்த வெல்லம் போட்டு சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.
  • வெல்லம் கரைந்ததும் அதை வடி கட்டி கொள்ளவும்.
  • மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
  • இளம் பாகு அதாவது ஒரு கிண்ணி இல் தண்ணீர் வைத்துக்கொண்டு பாகில் கொஞ்சம் எடுத்து அதில் விடவும். பிறகு கையால் உருட்டி பார்க்கவும் , உருட்ட வந்தால் அது இளம் பாகு. அப்படி பாகு காய்ந்ததும்,
  • அடுப்பை சின்ன தாக்கி, பொடித்த அனைத்தையும் கொட்டி கிளறவும்.
  • கொஞ்சம் ஆறினதும் கெட்டியாக பிசைந்து கொள்ளவும் .
  • மாவு கெட்டியாக, சிறய சிறிய உருண்டைகளாக பிடிக்கும் பதம் இருக்கவேண்டும்.
  • தேவைப்பட்டால் கொஞ்சம் மாவை சேர்த்து கொள்ளலாம்.
  • பிசைந்த மாவை சிறு சிறு உருளைகளாக உருட்டவும்.
  • மூன்று மூன்று உருண்டைகளாக சேர்த்து தயாராக வைத்துக்கொள்ளவும்.
  • ஒரு வாணலி இல் எண்ணெய் விட்டு , உருண்டைகளை கரைத்து வைத்துள்ள மைதா ,அரிசி மாவு கலந்த மாவில் முக்கி
  • கொதிக்கும் எண்ணையில் போட்டு பொறித்து எடுக்கவும்.
  • நல்ல பவுன் கலரில் எடுக்கவும்.
  • சுவையான முந்திரி கொத்து தயார்
  • இதை நிறைய நாட்கள் வைத்து சாப்பிடலாம்.சீக்கிரம் கெடாது.

No comments:

Blog Archive