Thursday, October 8, 2020

நெல்லிமுள்ளி பச்சடி

Ingredients:
  • நெல்லிமுள்ளி – 10 - 15
  • புளிப்பில்லாத தயிர் – 2கப்
  • பச்சைமிளகாய் – 4
  • தேங்காய்த்துருவல். - 3டேபிள்ஸ்பூன்
  • நெய் – 1டீஸ்பூன்
  • கொத்தமல்லி – 1/4கப் நறுக்கியது
  • உப்பு - தேவைக்கேற்ப


Method:
  • நெல்லிமுள்ளியை ஒரு அரைமணி நேரம் வெந்நீரில் ஊறவைத்து மைய அரைத்துக் கொள்ளவும்..
  • அதில், தேங்காய், பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
  • அரைத்த அனைத்தையும் புளிக்காத தயிரில் கலந்து,உப்பு போட்டு கலக்கவும்.
  • பிறகு, நெய்யில் கடுகு, பெருங்காயம் தாளித்துக் கொட்டவும்.
  • தேவையானால் கொத்துமல்லி தூவலாம்.
  • குறிப்பு: பெரிய நெல்லிக்காய்களை வெயிலில் காயவைத்து எடுத்து வைத்துக் கொள்வதையே நெல்லி முள்ளி என்று சொல்கிறோம். இந்த பச்சடியை பொதுவாக துவாதசி அன்று செய்வார்கள். காய்ந்தாலும் நெல்லிக்காய் இல் உள்ள சத்துக்கள் வீணாவது இல்லை.

No comments:

Blog Archive