Wednesday, October 7, 2020

அரிசி உப்புமா - 2

Ingredients:
  • உடைத்த அரிசி அல்லது குருணை (பருப்புகளுடன் ) - 2 cup
  • தேங்காய் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
  • தேங்காய் துருவல் - 1 கப்
  • ப.மிளகாய் 3 (தேவையானால் )
  • வற்றல் மிளகாய் 4 -5
  • உப்பு தேவைக்கேற்ப
  • கறிவேப்பிலை - கொஞ்சம்
  • தாளிக்கக் கடுகு, உ.பருப்பு, க.பருப்பு எல்லாம் 1 ஸ்பூன் அளவில் எடுத்துக்கோங்கோ
  • பெருங்காயம் - அரை டீஸ்பூன்
  • உடைத்த மிளகு சீரகம் - 1 டீ ஸ்பூன்


Method:
  • ஒரு நான்ஸ்டிக் அல்லது இலுப்பச்சட்டில் எண்ணெய் விட்டு கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை , பெருங்காயம் எல்லாம் தாளிக்கவும்.
  • ஒரு கப்க்கு 2 முதல் 2 1/2 கப் தண்ணீர் என்று அளந்து கொண்டு, வாணலி இல் விடவும்.
  • உப்பு போடவும்.
  • அது நன்கு கொதிக்கும் போது அடுப்பை சின்னதாக்கிவிட்டு, உடைத்து வைத்துள்ள குருணையை அதில் போடவும்.
  • நன்கு கிளறவும்.
  • மேலே ஒரு தட்டு போட்டு மூடி வைக்கவும்.
  • அப்பப்போது ஒருமுறை கிளறி விடவும்.
  • தண்ணீர் தேவையானால் விடவும்.
  • நன்கு வெந்ததும், தேங்காய் துருவல் போட்டு நன்கு கிளறி இறக்கவும்.
  • ஆறினதும் ரொம்ப நல்லா இருக்கும்.
  • தேங்காய் சட்னி, கத்தரிக்காய் கொத்சு அல்லது வெறும் தயிரு கூட போறும்.


Notes:
  • தேங்காய் துருவலை வெறும் வாணலி இல் வறுத்தும் போடலாம்

No comments:

Blog Archive