Wednesday, October 7, 2020

மல்டி கிரைன் கஞ்சி - பல தானிய கஞ்சி

Ingredients:
  • முன்பே நான் வேறு ஒரு கஞ்சி 'சத்துமாவு கஞ்சி'ஒன்று போட்டுள்ளேன், அது போல த்தான் இதுவும் ஆனால் இதில் பல சிறுதானியங்கள் சேர்த்துள்ளேன்.
  • கேழ்வரகு - கால் கிலோ
  • கொள்ளு, கோதுமை, சோளம், சிவப்பு அரிசி - தலா இரண்டு டேபிள் ஸ்பூன்
  • பொட்டுக்கடலை, கம்பு - தலா நாலு டேபிள் ஸ்பூன்
  • முந்திரி, பாதாம் - தலா 10
  • ஏலக்காய் - 5
  • பார்லி - 4 டேபிள்ஸ்பூன்
  • சர்க்கரை தேவைக்கு ஏற்ப


Method:
  • கேழ்வரகு, கொள்ளு, கோதுமை, கம்பு ஆகியவற்றை ஊற வைத்து தண்ணீரை வடிகட்டி, ஒரு துணியில் போட்டு முடிந்து வைத்தால் காலையில் முளைவிட்டிருக்கும்.
  • முளைகட்டிய தானியங்களை நிழலில் உலர்த்தவும்.
  • வெறுமன வாணலியில் பொட்டுக்கடலை, சோளம், பாதாம், முந்திரி, சிவப்பு அரிசி, பார்லி, ஏலக்காய் எல்லாவற்றையும் தனித்தனியாக நன்கு ஆனால் காந்தாமல் வறுக்கவும்.
  • முளைகட்டிய தானியங்களை நிழலில் உலர்த்தவும்.
  • முளை விட்ட தானியங்கள் மற்றும் வறுத்து வைத்தவற்றையும் சேர்த்து அரவை மெஷினில் நைஸாக அரைத்துக் வைத்துக் கொள்ளவும்.
  • கஞ்சி போட:
  • ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் 2 டேபிள்ஸ்பூன் மாவு போட்டு நன்கு கலந்து கொள்ளவும்.
  • கட்டி இல்லாமல் இருக்கணும்.
  • பிறகு அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளறவும்.
  • சில நிமிடங்களில் இது கெட்டியாக வெந்துவிடும்.
  • இதனுடன் சர்க்கரை மற்றும் பால் கலந்து கொடுக்கவும்.
  • நல்லா பசி தாங்கும் .


Notes:
  • 1 . அனைத்து தானியங்களும் கலந்திருப்பதால் குழந்தை ஆரோக்கியமாக வளரத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது. குழந்தைக்கு எளிதில் ஜீரணம் ஆகும். 4 மாதம் முதல் 2 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு கூட இதைக் கொடுக்கலாம்.
  • பெரியவர்களும் குடிக்கலாம்.
  • 2 . வேண்டுமானால் கஞ்சி போடாமல் உருண்டை செய்யலாம். இந்த பொடி இல் கொஞ்சம் நெய் விட்டு சர்க்கரை சேர்த்து உருண்டை செய்தும சாப்பிடலாம் புன்னகை
  • 3 . ஒருவேளை முளைவிட்ட தானியங்கள் நன்றாக காயவில்லை என்று நினைத்தீர்கள் என்றால் அவற்றையும் வறட்டு வாணலி இல் வறுத்துக்கொள்ளவும்.

No comments:

Blog Archive