Wednesday, October 7, 2020

கொழுக்கட்டை மேல் மாவு

Ingredients:
  • அரிசி மாவு 2 கப் (களைந்து உலர்த்தி அரைத்தது)
  • உப்பு 1 சிட்டீகை
  • நெய் 1 டீ ஸ்பூன்
  • தண்ணீர் 1 1/2 முதல் 2 கப்


Method:
  • உருளி அல்லது ஆழமான 'non stick pan' இல் தண்ணீர் ஊற்றவும்
  • அது நன்கு கொதிக்கும் பொது, உப்பு மற்றும் நெய் சேர்க்கவும்.
  • அடுப்பை சின்னதாக்கி மாவை கொட்டி கிளறவும்.
  • அடுப்பை அணைத்துவிட்டு நன்கு கிளறவும்.
  • தேவையானால் சிறிது தண்ணீர் தெளித்து கிளறவும்.
  • நன்கு உருண்டு வந்ததும் முடிவைக்கவும்.
  • சொப்பு செய்யும் முறை :
  • கொஞ்சம் ஆறினதும், நன்கு அழுத்தி பிசையவும்.
  • மாவிலிருந்து ஒரு சிறிய உருண்டை எடுத்துக்கொண்டு, விரல்களால் ஓரத்தை அழுத்திக்கொண்டே கப் போல் செய்யவும்.
  • கட்டைவிரலை நடுவில் அழுத்திக்கொண்டு, மற்ற விரல்களால் ஓரத்தை அழுத்தவும்.
  • சிறிய கப் வடிவம் வந்ததும், செய்து வைத்துள்ள பூரணத்தை ( தேங்காய் பூரணம், உளுந்து பூரணம்,எள் பூரணம், கடலை பருப்பு பூரணம் ) வைத்து உள்ளங்கை யை குவித்து கப் இன் ஓரங்களை ஒன்றாக சேர்த்து குவிக்கவும்.
  • குவித்ததை அழுத்தி மோதகம், அதாவது கொழுக்கட்டையாக பிடிக்கவும்.
  • இட்லி தட்டில் வைத்து ஆவி இல் வேக விடவும்.
  • கொழுக்கட்டை தயார்.
  • சொப்பு செய்ய வாரா விட்டால்?.....
  • கையால் சொப்பு செய்ய வராவிட்டால், இப்படி செய்து பாருங்கள்.
  • சாதாரணமாக, வரட்டு அரிசி மாவில் செய்வதை விட களைந்து உலர்த்தின மாவில் ஈசி யாக செய்ய வரும்.
  • அப்படி வராவிட்டால், ஒரு சின்ன உருண்டை மாவை எடுத்துக்கொண்டு, 2 பிளாஸ்டிக் பேபரின் நடுவில் வைத்து கையால் அல்லது அப்பாளாக்குழவியால் மெல்ல ஒரு ஓட்டு ஒட்டவும்.
  • ஒரு சிறிய வட்டமாக மாவு மாறும்.
  • அதை கை இல் எடுத்து, உள்ளங்கை இல் வைத்துக்கொண்டு, சிறிய ஸ்பூன் ஆல் பூரணத்தை எடுத்து அதில் வைத்து மெல்ல குவிக்கவும்.
  • அல்லது,
  • அதை ஜஸ்ட் இரண்டாக மடித்து ஓரங்களை அழுத்திவிடவும்.
  • இது 'சோமாஸ்' போல இருக்கும்.
  • அல்லது,
  • கோதுமை மாவை சப்பாத்தி க்கு பிசைவது போல் மாவு பிசைந்து, சிறிய சிறிய பூரி கள்ளாகவோ , அல்லது ஒரே பெரிய சப்பாத்தி போலோ இடவும்.
  • ஒரு டப்பா மூடியை கொண்டு சப்பாத்தி யை வட்ட வட்டமாக கட் செய்யவும்.
  • அதன் நடுவில் பூரணத்தை வைத்து குவித்து முடி, கொழுக்கைட்டை கள் செய்யவும்.
  • இது போல் மொத்தமும் செய்து விட்டு, அடுப்பில் வாணலி இல் எண்ணை வைத்து எல்லாவற்றைய்ம், நன்கு பொரித்து எடுக்கவும்.
  • இப்படி செய்வதால், 2 - 3 நாள் வைத்திருந்து சாப்பிடலாம்.
  • முதல் நாளே கூட செய்து வைக்கலாம்.
  • இது பத்து இல்லை

No comments:

Blog Archive