Wednesday, October 7, 2020

மட்டர் பனீர் மசாலா

Ingredients:
  • பட்டாணி 1 கப்,
  • பனீர் 200 கிராம்,
  • வெங்காயம் 2
  • தக்காளி 5,
  • இஞ்சி, பூண்டு அரைத்த விழுது,
  • முந்திரி அரைத்த விழுது தலா 1 டேபிள் ஸ்பூன்,
  • மிளகாய்த் பொடி 2 டீஸ்பூன்,
  • தனியா பொடி 1 டீஸ்பூன்,
  • மஞ்சள் பொடி கால் டீஸ்பூன்,
  • சீரகத்தூள் அரை டீஸ்பூன்,
  • கரம் மசாலா பொடி அரை டீஸ்பூன்,
  • எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்,
  • நெய் 1 டேபிள் ஸ்பூன்,
  • உப்பு


Method:
  • பட்டாணியை துளி உப்பு சேர்த்து தனியாக வேகவைத்துக் கொள்ளுங்கள்.
  • வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள்.
  • வாணலியில் எண்ணெயும் நெய்யும் விட்டு வெங்காயம் சேர்த்து நன்கு நிறம் மாறும்வரை வதக்குங்கள்.
  • அதனுடன் தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்ச பொடி , உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள்.
  • பின்னர் அத்துடன், சிறு துண்டுகளாக நறுக்கிய பனீர், வேகவைத்த பட்டாணி, முந்திரி விழுது ஆகியவற்றைச் சேருங்கள்.
  • கால் கப் தண்ணீர், கரம் மசாலா தூள், சீரகத்தூள் சேர்த்து கொதிக்கவிடுங்கள் .
  • ஒரு 2 நிமிடம் கொதித்ததும், நன்கு கிளறி இறக்குங்கள்.
  • அசத்தலான மட்டர் பனீர் மசாலா ரெடி!

No comments:

Blog Archive