Wednesday, October 7, 2020

மங்களூர் பன் அல்லது வாழைப்பழ பூரி

Ingredients:
  • மசித்த வாழைப்பழம் - 1/2 கப்
  • சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
  • தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
  • பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
  • மைதா - 2 கப் எள் - 1 டீஸ்பூன்
  • ஓமம் - 1/2 டீஸ்பூன்
  • சீரகம் - 1/2 டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - பூரி பொரிக்க


Method:
  • முதலில் ஒரு பௌலில் மசித்த வாழைப்பழத்தைப் போட்டு, அத்துடன் எண்ணெயை தவிர மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு மென்மையாக பூரி மாவு போன்று பிசைந்து கொள்ள வேண்டும்.
  • அதை அப்படியே ஒரு 2-3 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
  • பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
  • எண்ணெய் சூடாவதற்குள், பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி, அதனை பூரிகளாக இட்டு வைக்கணும்.
  • எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான மங்களூர் பன் அல்லது வாழைப்பழ பூரி ரெடி!!!
  • இதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது தேங்காய் சட்னியுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.


Notes:
  • மாலையில் நல்ல சுவையான அதே சமயம் மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ் செய்து சாப்பிட ஆசைப்பட்டால், கர்நாடகத்தில் உள்ள மங்களூரில் மிகவும் பிரபலமான மங்களூர் பன் என்று அழைக்கப்படும் வாழைப்பழ பூரியை செய்யலாம்.
  • இந்த ரெசிபி செய்வது மிகவும் ஈஸி. மேலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். சரி, இப்போது அந்த மங்களூர் பன் அல்லது வாழைப்பழ பூரியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!

No comments:

Blog Archive