Wednesday, October 7, 2020

வெல்ல அடை

Ingredients:
  • வறுத்த பச்சரிசி மாவு 1 கப்
  • காராமணி 1/4 கப்
  • தேங்காய் சிறிய பற்களாக நறுக்கியது - அரை கப் (துருவியும் போடலாம்)
  • வெல்லம் (பொடித்தது) 1 கப்
  • ஏலக்காய் பொடி 1 டீ ஸ்பூன்
  • தண்ணீர் 2 கப்


Method:
  • காராமணியை நன்கு வறுத்து, பின் வேகவிட்டு வடித்து வைத்துக் கொள்ளவும்.
  • வாணலி அல்லது உருளி இல் இரண்டு கப் தண்ணீர் விட்டு வெல்லத்தைப்போட்டு கொதிக்கவிடவும். வெல்லம் நன்றாக கரைந்ததும், வடிகட்டிக்கொள்ளவும்.
  • பிறகு மீண்டும் அடுப்பில் வைக்கவும், வெல்லத் தண்ணீர் "தள தள' என்று கொதிக்கும்போது, வேகவைத்த காராமணி,தேங்காய் துண்டுகள்,ஏலப்பொடி சேர்க்கவும்.
  • அடுப்பை சின்னதாக்கிவிட்டு, வறுத்துவைத்துள்ள மாவை ஒரு கையால் கொட்டிக்கொண்டே மறுகையால் கிளறவும்.
  • அடுப்பை அணைத்துவிட்டு நன்கு கிளறவும்.
  • மாவு நன்றாக பந்து போல சுருண்டு வந்ததும் ஒரு தாம்பாளத்தில் கொட்டிவைத்துக் கொள்ளவும்.
  • நன்கு ஆறினதும், நன்றாக அழுத்தி பிசையவும்.
  • ஒரு எலுமிச்சை அளவிற்கு மாவை எடுத்துக் கொண்டு அதை கைகளில் வைத்து அழுத்தி தட்டை போல செய்யவும்.
  • இது போல மொத்த மாவையும் செய்யவும்.
  • இவைகளை, அதாவது இந்த நோன்பு அடைகளை, எண்ணெய் தடவிய இட்லி தட்டில் வைத்து, ஒரு பத்து நிமிடங்கள் ஆவி இல் இட்லி போல வேகவைத்து எடுக்கவும்.
  • பரிமாறும்போது உருகாத வெண்ணெயுடன் பரிமாறவும்.


Notes:
  • தயிர் சேர்த்துக்க கூடாது.
  • எண்ணெய் தேய்த்து குளிக்கணும் .

Images:


No comments:

Blog Archive