Wednesday, October 7, 2020

'ஆமை வடை ' - கடலை பருப்பு வடை

Ingredients:
  • ஆமை வடை என்பது 'கடலை பருப்பு ' வடை தான். இதை பண்டிகை நாட்களில் செய்வோம்.
  • கடலை பருப்பு 1 கப்
  • துவரம் பருப்பு 1/4 கப்
  • மிளகாய் வற்றல் 4 - 6
  • பெருங்காயப்பொடி 1/2 ஸ்பூன்
  • கறிவேப்பிலை
  • உப்பு
  • பொரிக்க எண்ணெய்


Method:
  • கடலை பருப்பு மற்றும் துவரம் பருப்பை நன்கு அலசி , ஒரு 1/2 மணி ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
  • அப்புறம், ஒருகை பருப்பை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பாக்கி பருப்பை, மிளகாய் வற்றல் சேர்த்து கொஞ்சம் 'நர நர' வென்று அரைக்கணும்.
  • தண்ணீர் மட்டாய் விடணும்.
  • அரைத்த மாவை ஒரு பேசினில் போடணும்.
  • அதில் பெருங்காய பொடி, எடுத்து வைத்திருந்த ஊறின பருப்பு, கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கணும்.
  • மாவு நல்ல கெட்டியாக இருக்கணும், ஒருவேளை கொஞ்சம் தளர இருந்தால், சிறிது அரிசிமாவு போட்டு கலந்துக்கலாம்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் விட்டு, அது காய்ந்ததும், மாவிலிருந்து ஒரு உருண்டை எடுத்து, உள்ளங்கை களுக்கு இடை இல் வைத்து அழுத்தி, ஓட்டை போடாமல் , தட்டி எண்ணெய் இல் போடணும்.
  • வடைகளை இருபுறமும் திருப்பி விட்டு, நன்கு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
  • இப்போது சூப்பரான பருப்பு வடை ரெடி!


Notes:
  • இதில் வெங்காயம் சோம்பு சேர்த்து செய்தால் , 'மசால் வடை' ( முன்காலத்தில் எலி பிடிக்க கூட உபயோகித்தார்கள் )

Images:


No comments:

Blog Archive