Wednesday, October 7, 2020

கேழ்வரகு சேமியா இட்லி

Ingredients:
  • கேழ்வரகு சேமியா - 1 கப்
  • வறுத்த ரவை - 2 டேபிள் ஸ்பூன்
  • உப்பு-தேவைக்கு


Method:
  • கேழ்வரகு சேமியாவைப் இரண்டு தடவை தண்ணீர் விட்டு அலசிவிட்டு, பிறகு சேமியா மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு,சிறிது உப்பு போட்டு நன்றாக ஊறவிடவும்.
  • ஊறியதும் சாதம் வடிப்பதுபோல் நீரை வடிய வைக்கவும்.
  • சேமியாவில் சுமாராக தண்ணீர் வடிந்தால்போதும்.
  • ஏனென்றால் சேமியாவில் போதுமான ஈரம் இருக்க வேண்டும்; அப்போதுதான் சேமியா நன்றாக வேகும்.
  • ஒரு பாத்திரத்தில் ஊறின சேமியா மற்றும் ரவையை போட்டு ஒரு 10 நிமிஷம் வைக்கவும்.
  • ரவை ஊறினதும், தேவையானால் கொஞ்சம் தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்துக்கு கொண்டுவரவும்.
  • பிறகு இட்லி தட்டுகளில் என்னை தடவி, இட்லி வார்க்கவும்.
  • வெந்ததும் எடுத்து ஒரு தட்டில் கொட்டி,காரமான தேங்காய் சட்னியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.
  • கரமான பூண்டு சட்னியும் ரொம்ப நல்லா இருக்கும்.

No comments:

Blog Archive