Wednesday, October 7, 2020

பயத்தம்பருப்பு சுகியன்

Ingredients:
  • முழு பச்சைப்பயிறு அல்லது உடைத்த பயத்தம் பருப்பு – 1 கப்
  • மைதா – 1 கப்
  • வெல்லம் – 1 கப்
  • தேங்காய்த்துருவல் – 1/2 கப்
  • ஏலப்பொடி – சிறிதளவு
  • அரிசி மாவு – 2 டீஸ்பூன்
  • எண்ணெய் – தேவையான அளவு


Method:
  • பச்சைப்பயிரை 10 நிமிடங்கள் ஊறவைத்து மூழ்கும் அளவிற்குத் தண்ணீரை ஊற்றி இரண்டு விசில் வந்ததும் கேஸை அணைக்கவும்.
  • பயத்தம் பருப்பானால் களைந்து அப்படியே வேகவைக்கலாம்.
  • வெந்த பாசிப்பயிரை நன்றாக மசிக்கவும்.
  • வெல்லத்தை உடைத்து, வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் வெல்லம் போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு, அது கரைந்ததும் வடிகட்டிக்கொள்ளவும்.
  • மீண்டும் வெல்லத் தண்ணீரை அடுப்பில் வைத்து அதில், வேக வைத்த பருப்பு, தேங்காய்த் துருவல், ஏலப்பொடி, நெய் சேர்த்து நன்றாகத் திரண்டு வரும் வரை கிளறவும்.
  • பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்க வேண்டும், தேவையானால் இன்னும் சிறிது நெய் விட்டுக்கொள்ளவும்.
  • நன்கு கிளறவும், எல்லாமாக நன்கு சேர்ந்து கொண்டாடும், ஒரு தாம்பாளத்தில் கொட்டவும்.
  • அது நன்கு ஆறியபின் சிறுசிறு உருண்டைகளாக ஒரே அளவில் உருட்டிக் கொள்ளவும்.
  • இது தான் பூரணம்.
  • அடுத்து , மேல் மாவிற்கு, மைதாவுடன் சிறிது உப்பு, அரிசி மாவு சேர்த்து தோசை மாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும் .
  • எண்ணெயை சூடாக்கி பருப்பு உருண்டையை மாவில் முக்கி எண்ணெயில் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.
  • இப்போது சுவையான 'பயத்தம்பருப்பு சுகியன்' தயார்.


Notes:
  • சிலர் மேல் மாவிற்க்காக அரிசி உளுந்து அரைத்து செய்வார்கள். அப்படியும் செய்யலாம்

No comments:

Blog Archive