அரிசி மாவு ஒரு கப்
கடலை மாவு அரை கப்
இஞ்சி துருவியது ஒரு ஸ்பூன்
நெய் இரண்டு டேபிள் ஸ்பூன்
சோடா உப்பு அரை ஸ்பூன்
உப்பு
பெருங்கயப்பொடி
கறிவேப்பிலை
பொரிக்க எண்ணெய்
பச்சை மிளகாய் தேவையானால்
செய்முறை :
ஒரு பெரிய பேசினில் நெய் மற்றும் சோடா உப்பை போட்டு நன்கு நுரை வரும் வரை தேய்க்கவும் .
பிறகு அதில் மாவுகளை போட்டு நன்கு அழுத்தி கலக்கவும்.
தண்ணீர் விட்டு நன்கு பிசையவும்.
பிறகு இஞ்சி துருவல், பெருங்காயம், பச்சைமிளகாய், மற்றும் கறிவேப்பிலை போட்டு பிசையவும்.
மாவு கொஞ்சம் மெத் என்று இருக்கணும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு மாவை கையில் எடுத்து கிள்ளி கிள்ளி போடவும்.
நன்கு பவுன் கலராய் எடுக்கவும்.
'மெது பகோடா' ரெடி.
குறிப்பு: ஜானவாசத்தில் இந்த பகோடா தான்போடுவா with காசி அல்வா
No comments:
Post a Comment