Monday, August 8, 2011
ஏலப்பொடி
ஏலம் (தோலுடன்) கொஞ்சம் சக்கரை சேர்த்து மிக்ஸில நன்கு பொடிக்கவும்.
டப்பாவில் எடுத்து வைக்கவும்.
தேவையான போது உபயோகிக்கவும்.
இவ்வாறு செய்வதால், ஏலக்கா இன் தோலும் உபயோகப்படும்
Friday, August 5, 2011
18ம பெருக்கு / ஆடிப்பெருக்கு
ஆடிப்பெருக்கு – இதுவும் ரொம்ப சந்தோஷமான பண்டிகை. காவிரி ஆத்து ஓரமா
இருப்பவர்கள் ஆத்தன்கரை இல் போயி சாப்பிடுவா ; நாம் வீட்டுல சாப்பிடலாம் புன்னகை" longdesc="4" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை">
அன்று கலந்த சாதங்கள் அதாவது சித்திரான்னங்கள் செய்யனும்.
முதல் நாளே புளிக்காய்ச்சல் செய்து வைக்கணும். அப்ப தான் ஊறிண்டு நல்லா இருக்கும்.
புளியோதரை, தேங்காய் சாதம், தயிர் சாதம், உளுந்து வடை, பாயசம் , அப்பலாம், வற்றல் வாடம் வகைகள் பொரிக்கணும். தயிர் சாதத்துக்கு மோர்மிளகாய் பொரிக்கலாம்.
குறிப்பு: சிலர் எலுமிச்சை சாதம் கூட பண்ணுவா
Monday, August 1, 2011
மளிகை லிஸ்ட்
1. மில்க் மெய்டு : இதை ஒரு டின் வாங்கி வைத்துக்கொண்டால் , நாம் பாயசம், சக்கரை பொங்கல் போன்றவை செய்யும் போது இதை கொஞ்சம் சேர்த்தல் , அம்ருதம் தான் போங்கள் .
2. டூட்டி ப்ரூடி: எப்பவும் பாயசத்தில் திராக்ஷை முந்திரி போடுவதற்க்கு பதிலாக இதை போடலாம். கல்ர் கலர்ராய் இருக்கும் இதை குழந்தைகள் விரும்புவர்கள்.
3. அதேபோல் பாயசத்தில் முந்த்ரிகு பதிலாக உப்பில்லாம்ல் வறுத்த வேர்கடலை யை தோலுரித்து போடலாம்.
பண்டிகைக்கு தயாராவது எப்படி?
2. செய்ய வேண்டி ய பக்ஷணங்களை முதலில் எழுதணும், ( வெறுமன நினைவில் வைத்தால் போறாது) ஒரு பேப்பர்ல எழுதணும். அதற்க்கு தக்கன மளிகை லிஸ்ட் போடணும்.
3. முதல்நாளே என்ன என்ன செய்யனும், சமையல் உட்பட, எழுதி பார்க்கணும்.
4. எதை முன்ன செய்யனும் ,எதை பின்ன செய்யனும் என்றும் எழுதணும்.
உதாரணத்துக்கு, கிருஷ்ண ஜெயந்தி பக்ஷணம் செய்வதானால், எல்லா மாவுகளையும் முதலில் நல்லா சலிக்கணும். எள்ளை பொறுக்கி வைக்கணும். ரொம்ப சுத்தமான எள் என்று யார் சொன்னாலும் நம்பாதீங்கோ , சோம்பல் படாம பொறுக்கிடுங்கோ. ஓர் துளி மண் இருந்தாலும் சீடை நம்மேல் தான் வெடிக்கும். சொன்னவா மேல இல்ல. அப்பத்துக்கு முதலில் கரைத்து வெச்சிடனும். ஆனால் கடைசியா அப்பம் குத்தணும் . அப்ப தான் ஊரிண்டு ரொம்ப 'மெத்' நு வரும்.
இது போல், செய்ய வேண்டியவைகளி விவரமாக எழுதி, ஒரு பரிக்ஷை அட்டை ல பின் பண்ணி சமையல் உள்லுள்ள வைத்துக்கொள்ளுங்கள்.
இப்படி செய்தால் ரொம்ப சிஸ்ஸ்டாமடிக்காக இருக்கும், கொஞ்சமும் பதட்டப்படமல் சுலபமாக எல்லாவற்றையும் செயலாம். மறக்காம இருக்கும்.
குழந்தைகள் இதை பார்க்கும் போது அவர்களும் 'ப்ளானிங்க்' என்றால் என்ன என்று கற்றுக்கொள்வார்கள் .
அஞ்சறை பெட்டி
1. பூஜை அறை இல் திரி, சுவாமிக்கு பண்ணுவதற்க்கு கல்கண்டு, அவல், திராக்ஷை போன்றவை வைத்து கொள்ளலாம்.
2. பூஜை இன் போது தேவைப்படும், மஞ்சள் பொடி, சந்தன கட்டி, குங்குமம் வைக்கக்லாம் .
3. சின்ன பெண் குழந்தை கள் இருக்கும் வீடுகளில் சின்ன சின்ன ஹேர் கிளிப்ஸ், ஹெஐர் பின், சேஃப்டி பின் , ரப்பர் பாண்ட் போன்றவை வாக்க உபயோகிக்கலாம். கால வேளைகளில் தேடாமல் இருக்க சௌகர்யமாய் இருக்கும்.
4. சமையல் அறை இல் சாதாரணமாய் கடுகு, மிளகு, உளுந்து, கடலை பருப்பு , மிளகாய் வற்றல் போன்றவை வைப்போம் அல்லவா அது போல மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, கரம் மசாலா பொடி, தனைய பொடி, அம்சூர் போல தினமும் தேவை படும் பொடிகளி வைக்கவும் உபயோகப்படுத்தலாம்.
5. இப்ப பண்டிகை காலங்களில், அதில் நாம் துண்டாக்கிய முந்திரி, அலம்பி துடைத்த திராக்ஷை (கிஸ் மிஸ் ) , ஊறவைத்து தோலுரித்து துண்டங்கள் ஆக்கிய பாதாம் போன்றவைகளை வைத்துக்கொண்டால், பாயசத்திலும் பொங்கலிலும் போட சௌகர்யமாய் இருக்கும்.
மத்தியான வேளைகளில் வெறுமன இருக்கும் போது இப்படி செய்து வைத்துக்கொண்டால் , காலை நேர பர பரப்பை தவிர்க்கலாம்
வெல்லம்
இப்பவெல்லாம் ஃப்ளாட்ஸ் இல் இருப்பதால், முன்பு போல அம்மி குழவியால் உடைக்க முடியாது. சுத்தியல் , இடுக்கி , கரண்டி என தேடவேண்டாம்
குறிப்பு: ஓவனில் வைத்து எடுக்கும் போது சில சமயம் அந்த வெல்லக்கட்டி இன் நடுவில் கொஞ்சம் பாகு போல ஆகிவிடும், சூடு அதிகமானால் இப்படி ஆவதுண்டு. எனவே வெல்லத்தை நறுக்கும் முன், ஒரு தட்டில் வைத்து முதலில் இரண்டாக கட் செய்யவும். பிறகு கைய்ல் எடுத்து கத்தியால் சீவவும். அழகான துருவல்களாக வரும். நடுவில் வெல்லம் குழம்பு போல ஆகி இருந்தால், கை இல் படாமல் தட்டில் கொட்டிவிடும். சில நிமிஷங்கள் அப்படியே விட்டு விட்டு பின் நறுக்கலாம். சரியா?
பண்டிகை கால டிப்ஸ்
கோல மாவு :
எப்படியும் இழை கோலம் தான் போடணும், ஒவ்வொரு நாளும் அரிசி ஊறவைத்து அரைத்து , கோலம் போட்டாலும், மீந்து விட்டால் வேஸ்ட் தான் . அதனால் ஒரு 1/2 அல்லது 1 ஆழாக்கு அரிசி யை ஊற வைத்து நன்கு அரைக்கவும் . முதல் நாள் அப்படியே கோலம் போட்டு விடவும். பிறகு அந்த மாவை ஒரு தாம்பாளத்தில் கொட்டி, காய வைக்கவும். வெயீல் தான் வேண்டும் என்பது இல்லை. காற்றாட வைத்தாலே காய்ந்து விடும். அவ்வளவுதான், காய்ந்ததும் அதை டப்பாவில் போட்டு வைக்கவும். தேவையான போது, அதிலிருந்து கொஞ்சம் எடுத்து துளி தண்ணி விட்டு கரைத்து கோலம் போடவும். இழை கோலம் ரொம்ப நல்ல வரும்.
குறிப்பு: கோலம் ரொம்ப வெள்ளை யாக வாரவும், சீக்கிரம் அழியாமலும் இருக்க அரைத்த மாவில் கொஞ்சம் மைதா மாவு சேர்த்து கலந்து கோலம் போடவும்.
Monday, July 25, 2011
கத்தரிக்காய் எப்படி வாங்குவது ?
பார்த்து எடுக்கணும். காயை தொட்டால் , மெல்ல அமுத்தினால் மெத் என் இருக்கணும். அழுத்தமாக இருந்தால் அதில் விதை இருக்கும் என் அர்த்தம்
அத வாங்காதிங்கோ, சுடும் போது வெடிக்கும் .
பாதுகாப்பது எப்படி?: கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான். காம்பை நறுக்கிவிட்டு வைக்கலாம் . முதலில் இந்த காயை பயன் படுத்திவிடுவது தான் நல்லது. வெகு நாட்கள் தாங்காது.
புடலங்காய் எப்படி வாங்குவது ?
எப்படி பாதுகாப்பது?: முனையும்
காம்பும் நறுக்கி வைக்கலாம். பிளாஸ்டிக் கவரில் போட்டு ஃபிரிஜ் இல் வைக்கலாம் .
முருங்கைக்காய் எப்படி வாங்குவது ?
எப்படி பாதுகாப்பது?: முனையும் காம்பும் நறுக்கி வைக்கலாம் அல்லது சாம்பாரில் போடுவதற்க்கு நறுக்குவது போல் நறுக்கி வைக்கலாம். பிளாஸ்டிக் கவரில் போட்டு ஃபிரிஜ் இல் வைக்கலாம் .
வெண்டைக்காய் வாங்குவது எப்படி?
பாதுகாப் பது எப்படி?: ஃப்ரிஜ்ஜில் வைப்பதானால் கழுவாமல், லூஸாக பிளாஸ்டிக் பையில் போட்டு காய்கறி ட்ரேயில் வைக்கவும். ஃப்ரிஜ்ஜில் வைக்கும்போது துளி கூட ஈரம் இருக்கக் கூடாது. ஈரம் இருந்தால் வெண்டைக்காய் அழுகி கொசகொசத்து பூசணம் பூத்துவிடும். சமைப்பதற்கு முன்தான் அலம்ப வேண்டும். சில வகை வெண்டைக்காயில் மெல்லிய பூனைமுடி போல இருக்கும். நன்றாக தேய்த்துக் கழுவி பேப்பர் டவலில் துடைத்துவிட்டு நறுக்கவும். நறுக்கி
தண்ணீரில் போடக்கூடாது. காம்பை நறுக்கி வைப்பதால் காய் முற்றாமல் இருக்கும்.
பாகற்காய் எப்படி வாங்குவது?
பாதுகாப்பது எப்படி?: பாகற்காயை 2 நாள் வரை ஃப்ரிஜ்ஜில் வைக்கலாம். அதற்கு மேல் வைத்தால் மஞ்சளாகும். இல்லை ஒரு 4 , 5 நாட்கள் வாக்கணும் எனில் கம்புகளை நறுக்கி வையுங்கள் .அப்போது பழுக்காது. அவ்வப்போது வாங்கி சமைப்பதுதான் சிறந்தது
சர்க்கரை வள்ளிக்கிழங்கு தேர்ந்தெடுப்பது எப்படி?
பாதுகாத்தல் எப்படி?: சீக்கிரம் பயன்படுத்தி விடவேண்டிய காய்கறி இது. ஃப்ரீஜ்ஜில் வைத்தால் காய்ந்து போய் ருசியும் குறைந்துவிடும். உருளை வெங்காயம் போல் காற்றாட வைக்கலாம். அல்லது கொஞ்சம் மண்ணை போட்டு அதில் வைக்கலாம் .
பீட்ரூட் வாங்குவது எப்படி?
பாதுகாப்பது எப்படி? : ஃப்ரெஷ்ஷாக இருக்கக் கொஞ்சமாக அவ்வவ்போது வாங்க வேண்டும். சமைக்கும் போது தான் நறுக்க வேண்டும். முன்பே நறுக்கி வைத்தால் சாயம் வடியும். வாங்கியதும் இலைகளை தனியே பிரித்து வைக்கவும். உடனே கழுவாமல் இலையையும், காயையும் தனித்தனி பையில் போட்டு வைக்கவும். இலைகளை ஒன்றிரண்டு நாளில் சமைத்து விடவும். காயை பிளாஸ்டிக் பையில் போட்டு ஃபிரிஜ் இல் 1 வாரம் கூட வைக்கலாம்.
காலிஃபிளவர் தேர்ந்தெடுப்பது எப்படி?
அப்படியே வாங்கி வந்து விட்டாலும் புழு இருக்கும் பகுதியை நீக்கி விட்டு உபயோகிக்கலாம். சமைப்பதற்கு முன்
பூவை நறுக்கி உப்பு கலந்த வெதுவெது ப்பான நீரில் போட்டு எடுக்கவும். புழுகள் இறந்து வெளியே வந்துவிடும். பூக்கள் மஞ்சளாக இருந்தால் பழசு என்று அர்த்தம்.
பாதுகாப்பது எப்படி?: வெளி இலேயே ஒரு நாள் - 2 நாள் வைக்கலாம் . ஃப்ரிஜ்ஜில் வைக்கும்போது பிளாஸ்டிக் பைகளில் வைக்கக்கூடாது.துணிப்பைகளில் வைக்கலாம் . அடியிலுள்ள கிரிஸ்பரில் வைக்கவும். அதுவும் தண்டுப் பகுதி மேல் பக்கமாக இருக்குமாறு வைத்தால் ஈரம் பூவின் மேல் தங்காது. ஃபிரெஷ் ஆக இருக்கும்.
கோடைலிருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்..
நிறைய குளுமயான பொருட்களை சாப்பாட்டில் சேர்க்கவும். அதாவது வெள்ளரி, பூசணி, பரிங்கி, சௌ சௌ போன்ற நீர் காய்களை யும், தர் பூசணி , கிர்ணி , வெள்ளரிப்பழம் போன்ற பழங்களையும் சேர்க்கலாம்.
மசாலா அதிகம் சேர்க்காத சாப்பாட்டை சாப்பிடவும்.
நீர்மோர், இளநீர் , பழரசங்கள் பருகவும். ரொம்பவும் அதிகம் பருகவேண்டியது குளிர்ந்த நீர்
உடல் ரொம்ப சூடாகிவிட்டால் , வாழைப்பழம் + பால் + சர்க்கரை சேர்த்து மிக்சி ல அரைத்து குடிக்கவும். உடலுக்கு ரொம்ப குளுமை.
பிடித்தவர்கள் போகவர சோம்பு சாப்பிடலாம். அதுவும் உடலுக்கு குளுமை.
தலைக்கு தவறாமல் எண்ணை தடவவும். எண்ணை தேய்த்து குளிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதை செயலாம்.
கைக்கு மருதாணி இட்டுக்கொள்ளல்லாம், அதுவும் குளுமை.
இரவே ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் ஊற போட்டுவிட்டு காலை அதை அரைத்து தலை இல் வைத்துக்கொண்டு ஒரு 10 -15 நிமிட்ங்கல் ஊறி குளித்தால் தலை முடிக்கும் நல்லது, உடலுக்கும் ரொம்ப குளுமை.
அதேபோல் வெந்தயத்தை எவ்வளவுக்கு எவ்வளவு சாப்பாட்டிட்டில் செக்கிறோமோ அவ்வளவு நல்லது.
கறைகளை நீக்குவதற்க்கு முன்
கறைகளை நீக்குவதற்கு முன் செய்ய வேண்டியவை, துணிகளை ஊற வைப்பதற்கான குறிப்புகள் ஆகியவற்றை கீழே காணலாம்.
கறைகளை நீக்குவதற்கு முன்:
மறக்காதீர்கள்! கறைகள் பட்டவுடன் உடனடியாக அதை நீக்கினால் அவை முழுமையாக மறையும் வாய்ப்புண்டு.
உங்கள் உடையின் பாதுகாப்பு விதிகளைப் படித்து கறைகளை நீக்கும் போது உடைகளுக்கு ஏதேனும் சேதம் ஏற்படுமா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் உபயோகிக்கும் சோப் உங்கள் துணிகளுக்கு ஏற்றதா என்பதை சரி பார்த்து உபயோகிக்க வேண்டும்.
டிட்டர்ஜண்ட், சோப் ஆகியவற்றில் உள்ள குறிப்புகளையும் மறக்காமல் படிக்கவும்.
உங்கள் துணிகளின் நிறம் போகாமல் இருக்குமா என்பதை சரி பார்க்கவும்.
கம்பளி, பட்டு உடைகளுக்கு ப்ளீச் அல்லது ப்ளீச் அடங்கிய டிட்டர்ஜெண்ட் உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.
அதிகமாக கறை படிந்த துணிகளை ஊற வைத்துத் துவைக்க வேண்டும்.
ஊற வைப்பதற்கு முன் கவனிக்க வேண்டியவை:
உடையின் சாயம் மாறுமா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
பட்டு, கம்பளி, தோல் மற்றும் உலோகத்தாலான பொருட்கள் இல்லாத ஆடைகளாக இருக்க வேண்டும்.
சோப் அல்லது டிட்டர்ஜெண்ட் முழுமையாக கரைந்து விட்டதா என்று சரி பார்க்கவும்.
தண்ணீரின் வெப்பத்தை உடை தாங்குமா என்று சரி பார்க்கவும்.
உடைகள் அளவுக்கு அதிகமாக கசங்கிவிடாமல் பார்த்துக் கொள்ளவும்.
வெள்ளைத் துணிகளை வண்ணத் துணிகளோடு கலந்து ஊற வைக்காமல் தனியாக ஊற வைக்கவும்.
உடைகளின் சாயம் மாறுமா?
உடைகளின் சாயம் போகுமா இல்லையா என்று சந்தேகமாக இருந்தால், துணியின் ஒரு சிறிய பகுதியை நனைத்து, அதன் மேல் வெள்ளை துணி அல்லது டிஷ்ஷு பேப்பர் வைத்து அயர்ன் பண்ணவும். துணியின் நிறம் அதில் பட்டால் துவைக்கும் போது சாயம் அவசியம் போகும்.
சாயம் போகும் துணிகளை எப்படித் துவைப்பது?
ஊற வைக்காமல், தனியாக குளிர்ந்த நீரில் துவைக்க வேண்டும்.
சாயம் மாறும் துணிகளை வீட்டில் துவைக்காமல் டிரை கிளீனிங் செய்யலாம்.
உங்கள் வீட்டின் துணிகள் கறையின்றி பளிச்சிட மேலுள்ள குறிப்புகளை மறக்காமல் பின்பற்றுங்கள்.
கறைகளை நீக்க
காபி, டீ கறைகள் பட்டவுடன் சோப்பு அல்லது டிட்டர்ஜெண்ட்டால் கழுவி விடவும். வெள்ளை துணியாக இருந்தால் பிளீச் அல்லது பேகிங் சோடாவை கறையின் மீது தேய்த்து கறைகளை நீக்கலாம்.
சூயிங் கம் கறையை நீக்க:
சூயிங் கம் பட்ட உடையை ஒரு பையில் போட்டு, ஃப்ரீஜரில் ஒரு மணி நேரம் வைக்கவும். இதனால் சூயிங் கம் கெட்டியாகிவிடும். இப்போது இதை எளிதில் உடைத்து எடுத்துவிடலாம்.
எப்போதும் போல் துவைத்து முழுமையாக சுத்தம் செய்துவிடலாம்.
சாக்லேட் கறையை நீக்க:
துணியில் பட்டுள்ள சாக்லேட்டை முதலில் நீக்கவும். பிறகு வெதுவெதுப்பான சோப்பு நீரால் கறையை தேய்த்து சுத்தம் செய்யவும். சாக்லேட் கறை மறைந்துவிடும்.
பழக் கறையை நீக்க:
உடனடியாக துவைக்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு உப்பை கறையின் மேல் தேய்த்து கழுவவும்.
காய்ந்த கறைகளை நீக்க க்ளிசரின் (மருந்து கடைகளில் கிடைக்கும்) மற்றும் வெதுவெதுப்பான நீரை சமமான அளவில் கலந்து கறையில் தேய்த்து கழுவவும். அல்லது தண்ணீரில் துணியை ஊரவைத்து, கறையில் உப்பைத் தேய்த்து அதன்பின் கழுவவும்.
லிப்ஸ்டிக் கறையை நீக்க:
சிறிதளவு டூத்பேஸ்ட்டை கறையின் மீது தடவி தேய்த்தால் லிப்ஸ்டிக் கறை மறையும். பிறகு எப்போதும் போல் துணியை துவைக்கலாம்.
அல்லது பெட்ரோலியும் ஜெல்லியால் தேய்த்தும் இந்தக் கறையை நீக்கலாம்.
பீர் கறையை நீக்க:
வினிகருடன் வெதுவெதுப்பான நீரை கலந்து, பீர் கறையின் மேல் தடவவும். சிறிது நேரத்திற்கு பிறகு டிட்டர்ஜேண்ட்டால் துவைக்கவும். கறை நீங்கும்.
Blog Archive
-
▼
2020
(1754)
-
▼
October
(1109)
-
▼
Oct 09
(58)
- சௌதி 'கர கர' சப்பாத்தி
- மைதா பரோட்டா 2
- மைதா பரோட்டா
- சௌதி 'கர கர' சப்பாத்தி
- மைதா பரோட்டா 2
- மைதா பரோட்டா
- வெஜிடபிள் ஸ்டஃப்டு பரோட்டா
- முளைப்பயறு ஸ்டஃப்டு பரோட்டா ! பச்சை பயிறு ஸ்டஃப்...
- ஸ்வீட் ஸ்டஃப்டு பரோட்டா
- பனீர் ஸ்டஃப்டு பரோட்டா
- உருளைக்கிழங்கு ஆலு ஸ்டஃப்டு பரோட்டா
- முள்ளங்கி ஸ்டஃப்டு பரோட்டா - 3
- காலிஃப்ளவர் ஸ்டஃப்டு பரோட்டா
- மேரி பிஸ்கட் கேக்
- ஆரஞ்சு பிஸ்கட் கேக்
- Marie Biscuit Cake
- Orange Cream Biscut cake
- லட்சா பரோட்டா கோதுமை பரோட்டா
- சோயா சங் பரோட்டா
- சர்க்கரைவள்ளிக் கிழங்கு பரோட்டா
- முள்ளங்கி பரோட்டா - 2
- முள்ளங்கி பரோட்டா
- வெந்தயக் கீரை சப்பாத்தி மேத்தி பரோட்டா
- உருளைக்கிழங்கு ஆலு பரோட்டா
- காலிஃப்ளவர் பரோட்டா
- மங்களூர் போண்டா
- காக்ரா கரகரப்பான சப்பாத்தி
- புல்கா அதாவது மிருதுவான சப்பாத்தி
- காரட் மசாலா சப்பாத்தி
- காரட் சப்பாத்தி
- காரட் இனிப்பு சப்பாத்தி
- பீட்ரூட் இனிப்பு சப்பாத்தி
- பீட்ரூட் சப்பாத்தி
- கார மசாலா சப்பாத்தி
- கார சப்பாத்தி
- க்ரீன் மசாலா சப்பாத்தி
- பச்சை சோள கார்ன் சப்பாத்தி
- பச்சை பட்டாணி சப்பாத்தி
- ஆப்பிள் சப்பாத்தி
- வாழைப்பழ சப்பாத்தி
- வெந்தயக் கீரை சப்பாத்தி
- மிகவும் மிருதுவான சப்பாத்தி
- டிரை புரூட்ஸ் லட்டுகள் 2
- Dry Fruits Laddus
- பம்பாய் ரவா பாயசம்
- சேமியா ரவா பாயசம்
- சேமியா பாயசம்
- ஜவ்வரிசி சேமியா பாயசம்
- ஜவ்வரிசி அவல் பாயசம்
- ஜவ்வரிசி பாயசம்
- பூரி பாயசம்
- கோதுமை ராவா பாயசம்
- நல்ல பாயசம் செய்வதற்கான சில டிப்ஸ்கள்
- தேங்காய் பால் பாயசம் (தேங்கா பால் பாயசம்)
- அவல் பாயசம்
- சேமியா பாயசம் -2
- அக்கார அடிசில்
- தக்காளி பச்சடி
-
▼
Oct 09
(58)
-
▼
October
(1109)