Showing posts with label பத்திய சமையல். Show all posts
Showing posts with label பத்திய சமையல். Show all posts

Monday, July 25, 2011

முழு உளுந்து பொங்கல்

தேவையானவை:

முழு உளுந்து - 1/2 கப்
பச்சரிசி -1 கப்
இஞ்சி (நறுக்கியது) - 1/2 ஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
நெய் - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முழு உளுந்தை அரை மணி நேரம் ஊற வைத்து நன்றாகக் களைந்து எடுக்கவும். அரிசியுடன் சேர்த்து ஒன்றுக்கு 3 பங்கு தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். ஆறியதும், உப்பு போட்டு நன்றாகக் கலக்கவும்.
கடாயில் நெய் விட்டு பொடித்த மிளகு, சீரகம் தாளித்து அதில் நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து பொங்கலில் விட்டு நன்றாகக் கலக்கி பரிமாறவும்.
இதுவும் பெண் குழந்தைகளுக்கு ஏற்றது.

உளுத்தங்களி 3

தேவையானவை:

சிகப்பு அரிசி 2 கப் - வறுத்து அரைக்கவும்
உளுத்தம் பருப்பு - 3 /4 கப் - - வறுத்து அரைக்கவும்
பயற்றம் பருப்பு - 1 /2 கப் - வறுத்து அரைக்கவும்
சர்க்கரை - 2 கப்
நெய் - கொஞ்சம்
ஏலப்பொடி - கொஞ்சம்
தேங்காய் பால் - 1 கப்

செய்முறை:

உருளியில் தேங்காய்பால், சர்க்கரை ஏலப்பொடி போட்டு ஒரு கொதி விடவும்.
அடுப்பை சின்னதாக்கி விட்டு , எல்லா மாவையும் போட்டு நெய் விட்டு
கிளறவும்.
நன்றாக 'பந்து' போல் வந்ததும் இறக்கவும்.

குறிப்பு: பூப்பெய்தும் பெண்குழந்தைகளுக்கு தினமும் உளுத்தங்களி சாப்பிட கொடுப்பது வழக்கம் உளுத்தங்களியில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம்,வைட்டமின் ஆகிய பலசத்துகள் அடங்கியுள்ளது. அத்துடன் உளுத்தங்களியை கொடுப்பதால் அவர்களின் இடுப்பெலும்பு கள் வலுவாகும்.

உளுத்தங்களி 2

தேவையானவை:

முழு உளுத்தம் பருப்பு - 1/4 கிலோ
சர்க்கரை - 150 கிராம்,
ஏலக்காய் - 5,
தேங்காய் - 1 மூடி,
நெய் - 4 ஸ்பூன்.

செய்முறை:

உளுத்தம்பருப்பை நன்கு சிவக்க வறுக்கவும். மெஷினில் நைசாக அரைக்கவும்.
தேங்காயை துருவி 2 டம்ளர் பால் எடுக்கவும். தேங்காய் பாலை அடுப்பில் வைத்து, சர்க்கரை சேர்த்து கரைய விடவும்.
சர்க்கரை கரைந்தவுடன் உளுத்தம் மாவை கட்டியில்லாமல் தூவி கிளறவும்.
ஏலக்காயை பொடி செய்து தூவி நெய் ஊற்றி கிளறி அல்வா பதம் போல் வரும் போது இறக்கவும்.
சுவையான உளுத்தங்களி தயார்.

உளுத்தங்களி

உளுத்தங்களி, உளுத்தங்க கஞ்சி எல்லாமே குருக்க்கு (இடுப்புக்கு நல்லது)
உளுந்து சுண்டல், உளுந்து வடையும் சாப்பிடலாம்.

தேவையானவை:

தோலுடைய முழு உளுத்தம் பருப்பு - 1 1/4 கப்
பனை வெல்லம் - 200 கிராம்
நெய் 100 கிராம்
ஏலக்காய் தூள் - அரை தேக்கரண்டி
தண்ணீர் - அரை லிட்டர்

செய்முறை:

உளுந்தை சிவக்க வறுத்து நன்கு பவுடராக அரைத்து சலித்து கொள்ளவும். ஒரு உருளியில் தண்ணீர் ஊற்றி பனை வெல்லத்தை இடித்து கரைத்து தெளிய வைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
பின் உளுந்து மாவில் கலந்து கட்டியில்லாமல் கரைத்து அடுப்பில் வைத்து கரண்டியால் கிளறிக்கொண்டே இருக்கவும்.
சுருண்டுவரும் பதம் வந்ததும் நெய், ஏலக்காய் தூள் சேர்த்து சிறிது நேரம் கிளறி இறக்கவும்.

குறிப்பு: சிலர் நல்லெண்ணெய் விட்டும் செய்வார்கள்.

Blog Archive