Showing posts with label வடாம் வத்தல் வகைகள். Show all posts
Showing posts with label வடாம் வத்தல் வகைகள். Show all posts

Saturday, September 10, 2011

கத்தரிக்காய் வற்றல்

கத்தரிக்காய் வற்றல் - இது போடுவதும் சுலபம். குழம்பில் போடுவதும் சுலபம்.
கத்தரிக்காய்யை நீள நீள மாக வெட்டி வெயிலில் நன்றாக காயவைக்கணும். (வைத்தலை உடைக்கவரனும் )

குழம்பு செய்யும் முன் ஒரு 10 - 15 நிமிஷம் தண்ணிரில் ஊரவைக்கணும்.
குழம்பு கொதிக்கும் போதே, ஊறவைத்த தண்ணியுடன் வத்தலையும் போட்டுடனும். புளி தண்ணியுடன் வத்தலும் கொதிக்கணும் அப்பதான் taste வரும்.

இந்த வத்தலை பருப்பு சாம்பாரிலும் போடலாம், வத்த குழம்பிலும் போடலாம்.

சாயந்தரம் ஆக ஆக கத்தரிக்காய் ஊறி ண்டு ரொம்ப நல்ல இருக்கும். அரிசி உப்புமா விற்கு நல்ல துணை.

சாம்பாரில் போடும் வெங்காய வடாம்

செட்டி நாட்டு வெங்காய வடகம்

தேவையான வை :
சின்ன வெஙகாயம் - 1/2 கிலோ,
பூண்டு - 50 கிராம்
உளுத்தம் பருப்பு - 100 கிராம்
சிகப்பு மிளகாய் - 15 -20
சீரகம் - 1 டீ ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/2 ஸ்பூன்
கடுகு - 2 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு,
கறிவேப்பிலை - கொஞ்சம்
மஞ்சள் தூள் - கொஞ்சம்

செய்முறை :

வெங்காயத்தையும், பூண்டையும் உரித்து மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெள்ளை உளுத்தம் பருப்பை ஊறவைத்து களைந்து கல் நீக்கி மிளகாயுடன் உப்பும் சேர்த்து கெட்டியாக நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
மாவுடன் சீரகம், பெருங்காயத் தூள், மஞ்சள் தூள், கடுகு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
வெயிலில் பிளாஸ்டிக் ஷீட்டைப் போட்டு மாவைச் சிறிது சிறிதாகக் கிள்ளி காயவைக்கவும்.
மறுநாள், வத்தலை திருப்பி போட்டு காய வைக்கவும்.
2 நாள் காயவேண்டும்.
காய்ந்ததும் 'சல சல வென சத்தம் வரணும்.
பிறகு டப்பாவில் போட்டு வைக்கலாம்.
தேவையான போது வறுத்து குழம்பில் போடலாம்.

Wednesday, July 20, 2011

குழம்பு வடாம்

தேவையானவை:

பூசணி துருவல் – ஒரு கப்,
உளுத்தம்பருப்பு – ஒரு கப்,
மிளகாய் வற்றல் – 5 முதல் 8,
உப்பு – தேவையான அளவு,
பெருங்காயம – கால் டீஸ்பூன்

செய்முறை:

உளுத்தம்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
அதனுடன் பூசணிக்காய் துருவல், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக பிசையவும்.
பிசைந்த மாவை பிளாஸ்டிக் பேப்பரில் சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு, நன்றாக காய்ந்ததும் எடுக்கவும்.
வத்தகுழம்பு , பருப்புசாம்பார், பொரிச்ச கூ ட்டு செய்யும்போது இதைப் பொரித்துப் போட்டால், சுவையும் மணமும் கூடும்.

குறிப்பு: பூசணிக்காய் துருவல் போடாமலும் இதை செய்யலாம்.

ஜவ்வரிசி வடாம்

ஜவ்வரிசி வடாம் - கூழ் வத்தலுக்கு சமமான அந்தஸ்த்துடய வத்தல் . எங்கள் வீடுகளில் இதற்க்கும் பெரும் வரவேற்ப்புண்டு. போடுவது ரொம்ப ஈஸி. நல்ல சூப்பராக பொரியும். குழந்தை கள் பெரிதும் விரும்புவர்கள் . இதிலும் பல வகை உண்டு. அவற்றை இங்கு பார்போம்.

தேவையானவை :

1 கிலோ ஜவ்வரிசி
150 -200 கிராம் பச்சை மிளகாய்
1/2 பெருங்காய பொடி
உப்பு

செய்முறை :

முதல் நாள் இரவே ஜவ்வரிசியை நன்கு 2 -3 முறை களைந்து அது மூழ்கும் வரை திண்ணிர் ஊற்றி ஊற வைக்க வேண்டும்.
காலை இல் அடி கனமான உருளி இல் இதை போட்டு கொதிக்க விடவும்.
பச்சை மிளகாயை அலம்பி நன்கு அரைக்கவும்.
ஜவ்வரிசி வேக ஆரம்பித்ததும் அரைத்து வைத்துள்ள பச்சை மிளகை விழுது உப்பு மற்றும் பெருங்காய பொடி போட்டு கலக்கவும்.
எல்லமாக சேந்து நன்கு வெந்ததும் அடுப்பை அணைக்கவும் .
கொஞ்சம் ஆறினதும், பிளாஸ்டிக் ஷீட் இல் கரண்டியால் மொண்டு மொண்டு வத்தல் இடவும்.
நேரம் ஆக ஆக வத்தல் மாவு கெட்டியாகும்.
எனவே வேண்டுமானால் தண்ணீர் விட்டுக்கொண்டு மொத்த மாவையும் வாடாமாக இடவும்.
மதியம் அல்லது சாயந்திரம் வத்தல்களை பிச்சு திருப்பி போடணும்.
இருபுறமும் நன்கு காய்ந்ததும் ( கையால் உடைக்க வரணும் ) டப்பாக்களில் சேமிக்கவும்.
சரியாக செய்தால் வத்தல் பொறிக்கும் பொழுது 2 - 3 மடங்காக வெள்ளையாய் பொரியும்.

அவல் வத்தல்

அவல் வத்தல் - இதுவும் பகோடா போல இருக்கும். ரொம்ப சுவையானது.
அபாரமாக இருக்கும் புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">

தேவயானவை :

1 கிலோ கெட்டி அவல்
3/4 கிலோ பொடியாக அரிந்த பூசணி (வெள்ளை நிறத்தில் இருப்பது )
200 பச்சை மிளகாய்
2 ஸ்பூன் ஓமம் அல்லது சீரகம்
உப்பு


செய்முறை:
முதலில் அவலை 2 - 3 முறை தண்ணீர் விட்டு நன்கு அலசவும்.
பிறகு அவல் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு ஒரு 1/2 மணி வாக்கவும்.
இதனிடையே பூசணிக்காயை பொடியாக நறுக்கி அல்லது துருவி பிழிந்து வாக்கவும்.
ஊறி பிழிந்த அவலில் பிழிந்து வைத்துள்ள பூசணிக்கா ஓமம் அல்லது சீரகம் மற்றும் பச்சை மிளகாயை போட்டு கலக்கவும்.
நன்கு பிசையவும்.
பிளாஸ்டிக் ஷீட் இல் கையால் மாவை எடுத்து பகோடா போடுவது போல் கிள்ளி, கிள்ளி வைக்கவும்.
காய கொஞ்சம் லேட் ஆனாலும் பொறுமயாக 2 நாள் காய வைத்து டப்பாவில் அடைக்கவும்.
தேவயான போது வறுக்கலாம்.
கலந்த சாத வகைகளுக்கு ரொம்ப நல்ல இருக்கும்
வெறுமன கூட சயந்தரம் காஃபி அல்லது டீ யுடன் சாப்பிடலாம்.
நல்லா வெள்ளையாக பொரிந்து கொண்டு பார்பதர்க்கும் அழகாக இருக்கும்.

அவல் வத்தல் 2

அவல் வத்தல் - இதுவும் பகோடா போல இருக்கும். ரொம்ப சுவையானது.
அபாரமாக இருக்கும் புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">

தேவயானவை :

1 கிலோ கெட்டி அவல்
1/4 கிலோ பொடியாக அரிந்த பூசணி (வெள்ளை நிறத்தில் இருப்பது )
1/2 கிலோ பொடியாக நறுக்கிய வெங்காயம்
200 பச்சை மிளகாய்
2 ஸ்பூன் ஓமம் அல்லது சீரகம்
உப்பு


செய்முறை:
முதலில் அவலை 2 - 3 முறை தண்ணீர் விட்டு நன்கு அலசவும்.
பிறகு அவல் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு ஒரு 1/2 மணி வாக்கவும்.
இதனிடையே பூசணிக்காயை பொடியாக நறுக்கி அல்லது துருவி பிழிந்து வாக்கவும்.
ஊறி பிழிந்த அவலில் பிழிந்து வைத்துள்ள பூசணிக்கா. வெங்காயம், ஓமம் அல்லது சீரகம் (தேவை இல்லை என்றால் போடவேண்டாம் ) மற்றும் பச்சை மிளகாயை போட்டு கலக்கவும்.
நன்கு பிசையவும்.
பிளாஸ்டிக் ஷீட் இல் கையால் மாவை எடுத்து பகோடா போடுவது போல் கிள்ளி, கிள்ளி வைக்கவும்.
காய கொஞ்சம் லேட் ஆனாலும் பொறுமயாக 2 நாள் காய வைத்து டப்பாவில் அடைக்கவும்.
தேவயான போது வறுக்கலாம்.
கலந்த சாத வகைகளுக்கு ரொம்ப நல்ல இருக்கும்
வெறுமன கூட சயந்தரம் காஃபி அல்லது டீ யுடன் சாப்பிடலாம்.
நல்லா வெள்ளையாக பொரிந்து கொண்டு பார்பதர்க்கும் அழகாக இருக்கும்.

தக்காளி வத்தல்

தக்காளி வத்தல்

தேவயானவை :

2 கப் கூழ்வத்தல் மாவு
1 /2 கப் தக்காளி puree
2 ஸ்பூன் மிளகாய் பொடி

செய்முறை:

வத்தல் மாவில் தக்காளி puree மற்றும் மிளகாய் பொடியை போட்டு கலக்கவும்.
இதை கலந்ததும் மாவு கொஞ்சம் நீர்க்க ஆகும்.
எனவே பிளாஸ்டிக் ஷீட் இல் மாவை கரண்டியால் எடுத்து அப்பளம் போல் வட்டமாக ஊற்ற வேண்டும்.
காயந்ததும் டப்பாவில் அடைக்கவும்.
தேவயான போது வறுக்கலாம்.
கலந்த சாத வகைகளுக்கு ரொம்ப நல்ல இருக்கும்.
கலர் ஆக இருப்பதால் குழந்தை களுக்கு ரொம்ப பிடிக்கும் புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">
வெறுமன கூட சயந்தரம் காஃபி அல்லது டீ யுடன் சாப்பிடலாம்.

குறிப்பு: தக்காளி puree ai கடை இல் வாங்கினாலும் சரி இல்லாவிடில் வீட்டில் தக்காளியை தண்ணீர் விடாமல் அரைத்து வடிகட்டி சேர்க்கணும்.

காரம் குறைவாக வேண்டுபவர்கள் மாவில் பச்சை மிளகாயை தவிர்க்கவும்.

இதற்க்கு நாட்டு தக்காளி நன்றாக இராது பங்களூர் தக்காளி நன்றாக இருக்கும்.

பூசணி வத்தல்

பூசணி வத்தல் - இதுவும் பகோடா போல இருக்கும். ரொம்ப சுவையானது.
அபாரமாக இருக்கும் புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">

தேவயானவை :

2 கப் கூழ்வத்தல் மாவு
1 கப் பொடியாக அரிந்த பூசணி (வெள்ளை நிறத்தில் இருப்பது )


செய்முறை:

வத்தல் மாவில் பொடியாக நறுக்கிய பூசணிக்காயை போட்டு கலக்கவும்.
பிளாஸ்டிக் ஷீட் இல் கையால் மாவை எடுத்து பகோடா போடுவது போல் கிள்ளி, கிள்ளி வைக்கவும்.
காய கொஞ்சம் லேட் ஆனாலும் பொறுமயாக 2 நாள் காய வைத்து டப்பாவில் அடைக்கவும்.
தேவயான போது வறுக்கலாம்.
கலந்த சாத வகைகளுக்கு ரொம்ப நல்ல இருக்கும்
வெறுமன கூட சயந்தரம் காஃபி அல்லது டீ யுடன் சாப்பிடலாம்.
நல்லா வெள்ளையாக பொரிந்து கொண்டு பார்பதர்க்கும் அழகாக இருக்கும்.

கொத்துமல்லி வத்தல்

கொத்துமல்லி வத்தல் இதுவும் புதினாவை போன்றதுதான் , புதினா தழைகளுக்கு பதில் கொத்துமல்லி தழைகளை போடணும்.

தேவயானவை :

2 கப் கூழ்வத்தல் மாவு
1 கப் பொடியாக அரிந்த கொத்துமல்லி
4 பச்ச மிளகாய் (பொடியாக நறுக்கவும் )
செய்முறை:
வத்தல் மாவில் கொத்துமல்லி மற்றும் பச்சை மிளகாயை போட்டு கலக்கவும்.
பிளாஸ்டிக் ஷீட் இல் கையால் மாவை எடுத்து பகோடா போடுவது போல் கிள்ளி, கிள்ளி வைக்கவும்.
காய கொஞ்சம் லேட் ஆனாலும் பொறுமயாக 2 நாள் காய வைத்து டப்பாவில் அடைக்கவும்.
தேவயான போது வறுக்கலாம்.
கலந்த சாத வகைகளுக்கு ரொம்ப நல்ல இருக்கும்
வெறுமன கூட சயந்தரம் காஃபி அல்லது டீ யுடன் சாப்பிடலாம்.

குறிப்பு: இந்த வத்தலை, கூழ் வத்தல் போல் முறுக்கு அச்சில் போட்டு பிழியனும் என் நினத்தால் , கொத்துமல்லி யை நறுக்காமல் மசிய அரைத்து ( தண்ணீர் விடாமல் ) கலக்கவும். பிறகு தேன்குழல் அச்சில் போட்டு பிழியவும்.

புதினா வத்தல்

புதினா வத்தல் - இதுவும் பகோடா போல இருக்கும். ரொம்ப சுவையானது. நான் மேலே சொன்ன மாவு தான்
அதாவது "கூழ்வத்தல் " மாவு தான் பேஸ் , அதை வைத்துக்கொண்டு பல பல வற்றல்கள் போடலாம்

தேவயானவை :

2 கப் கூழ்வத்தல் மாவு
1 கப் பொடியாக அரிந்த புதினா
4 பச்ச மிளகாய் (பொடியாக நறுக்கவும் )

செய்முறை:
வத்தல் மாவில் புதினா மற்றும் பச்சை மிளகாயை போட்டு கலக்கவும்.
பிளாஸ்டிக் ஷீட் இல் கையால் மாவை எடுத்து பகோடா போடுவது போல் கிள்ளி, கிள்ளி வைக்கவும்.
காய கொஞ்சம் லேட் ஆனாலும் பொறுமயாக 2 நாள் காய வைத்து டப்பாவில் அடைக்கவும்.
தேவயான போது வறுக்கலாம்.
கலந்த சாத வகைகளுக்கு ரொம்ப நல்ல இருக்கும்
வெறுமன கூட சயந்தரம் காஃபி அல்லது டீ யுடன் சாப்பிடலாம்

குறிப்பு: இந்த வத்தலை, கூழ் வத்தல் போல் முறுக்கு அச்சில் போட்டு
பிழியனும் என் நினத்தால் , புதினா இலைகளை நறுக்காமல் மசிய அரைத்து (
தண்ணீர் விடாமல் )மாவில் கலக்கவும். பிறகு தேன்குழல் அச்சில் போட்டு பிழியவும்.

பாகற் காய் வற்றல்

பாகற் காய் வற்றல். இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்.

தேவயானவை:

1/2 கிலோ பாகற் காய்
2 டேபிள் ஸ்பூன் உப்பு

செய்முறை:
பாகற் காய்யை அலம்பி வட்ட வட்ட மாக நறுக்கவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் நிறைய தண்ணீர் விட்டு அது கொதிக்கும் போது நறுக்கி வைத்துள்ள பாகற் காயை போடவும் .
உப்பு போடவும்.
மீண்டும் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் காய் வெந்து விட்டதா என் பார்க்கவும்.
(கரண்டியால் "கட்" செய்தால் கட் பண்ண வரணும் )
வெந்து விட்டால் அடுப்பை அணைக்கவும் .
கொஞ்சம் ஆறினதும் , தண்ணீரை வடிகட்டி விட்டு , காய்களை பிளாஸ்டிக் ஷீட் இல் உலர்த்தவும்.
நன்கு " சல சல " வென காய்ந்ததும் டப்பாகளில் சேமிக்கவும்.
தேவயான போது எண்ணை இல் பொரிக்கவும்.
கலந்த சாதங்களுக்கும் தொட்டுக்கொள்ளலாம் , வெறும் சுடு சாதத்திலும் போட்டு நொறுக்கி பிசந்து சாப்பிடலாம். ( இது தான் சுகர் நோயாளிகளுக்கு பொருந்தும் )

வெங்காய வத்தல்

வெங்காய வத்தல் - இது பகோடா போல இருக்கும். ரொம்ப சுவையானது. நான் மேலே சொன்ன மாவு தான்
அதாவது "கூழ்வத்தல் " மாவு தான் பேஸ் , அதை வைத்துக்கொண்டு பல பல வற்றல்கள் போடலாம்

தேவயானவை :

2 கப் கூழ்வத்தல் மாவு
1 கப் பொடியாக அரிந்த வெங்காயம்
4 பச்ச மிளகாய் (பொடியாக நறுக்கவும் )
செய்முறை:
வத்தல் மாவில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை போட்டு கலக்கவும்.
பிளாஸ்டிக் ஷீட் இல் கையால் மாவை எடுத்து பகோடா போடுவது போல் கிள்ளி, கிள்ளி வைக்கவும்.
காய கொஞ்சம் லேட் ஆனாலும் பொறுமயாக 2 நாள் காய வைத்து டப்பாவில் அடைக்கவும்.
தேவயான போது வறுக்கலாம்.
கலந்த சாத வகைகளுக்கு ரொம்ப நல்ல இருக்கும்
வெறுமன கூட சயந்தரம் காஃபி அல்லது டீ யுடன் சாப்பிடலாம்

கூழ் வத்தல்

கூழ் வத்தல் - இது தான் ரொம்ப பிரசித்தம் எங்கள் வீடுகளில் புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4"> இதை செய்வது எப்படி என பார்ப்போம்.

தேவையானவை:

1கிலோ புது பச்சரிசி (களைந்து உலர்த்தி மாவு அரைக்கவும்)
200 கிராம் ஜவ்வரிசி
15 - 20 பச்சை மிளகாய்
2 -3 எலும்ச்சை (சாறு பிழியவும் )
1/2 ஸ்பூன் பொருங்காய பொடி
உப்பு

செய்முறை:

ஒரு அடிகனமான உருளி அல்லது 10 லிட்டர் குக்கர் ஐ எடுத்துக்கொண்டு அதில் பதி அளவு தண்ணீர் எடுத்து கொள்ளவும்.
தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
இப்போது ஜவ்வரிசி யை போடவும்.
நன்கு கிளறவும். அது கொதிக்கட்டும்
மிக்சி இல் பச்சைமிளகைகளை போட்டு நீர் விட்டு அரைக்கவும்
வடிகட்டவும். அதை கொதிக்கும் ஜவ்வரிசி இல் போடவும்.
உப்பு பொருங்காய பொடி போடவும்.
ஜவ்வரிசி நன்கு வெந்ததும்., அடுப்பை சின்ன தாக்கவும் .
அரைத்து வைத்துள்ள அரிசி மாவை கொஞ்ச கொஞ்சமாக போட்டு கிளறவும்.
கட்டி தட்டாமல் கிளறவேண்டும்.
மாவு நன்கு வெந்ததும் அடுப்பை அணைக்கவும்.
பிறகு எலுமிச்சை சாறு விட்டு மறுபடி யும் நன்கு கிளறவும்.
நன்கு ஆறினதும், பிளாஸ்டிக் சீட் இல் வத்தல் பிழியயும்.
நன்கு காய்ந்ததும் டப்பாக்களில் போட்டு முடி வைக்கவும்
வருஷத்துக்கு கேடாது. தேவயான போது பொரித்து கொள்ளலாம் .


குறிப்பு: களைந்து உலர்த்த்ன மாவு இல்லாமல் கடை இல் விர்க்கும் மாவை யும் உபயோகிக்கலாம் ஆனால் வத்தல் கொஞ்சம் "கடக் கடக்" என வரும்.

சூட்டுடன் வத்தல் பிழிந்தால், வத்தல் சிவக்கும். வெள்ளை வெளேர் என் வராது. வேண்டுமானால் முதல் நாள் இரவே கிளறி வைத்துவிட்டு மறுநாள் விடிகாலை பிழியலாம். அப்படி பிழிவ்தால் எலுமிச்சை பிழிய வேண்டிய அவசியம் இல்ல மற்றும் வெயீலுக்கு முன்னே பிழிந்துவிடலாம்.

முறுக்கு அச்சில் "ரிப்பன் " அல்லது தேன்குழல் அல்லது ஓமப்பொடி தட்டு போட்டு பிழியலாம் அவர் அவர் விருப்பம் அது புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">

அரைத்த பச்சை மிளகாயை வடி கட்டலை என்றால் அது ஓமப்பொடி கண்ணில் அடைத்துக்கொண்டு சரியாக பிழிய வராது

Blog Archive