Ingredients:
- பச்சை பயறு ஒரு கப்
- உளுத்தம் பருப்பு அரை கப்
- பிளைன் ENO Fruit சால்ட் 1 /4 ஸ்பூன் (தேவையானால் )
Method:
- பயறை எட்டு மணிநேரமும், உளுந்தை நான்கு மணிநேரமும் ஊறவைத்து , தனித்தனியே அரைக்கவும்.
- அரைத்த இரண்டையும் உப்பு போட்டு கலக்கவும்.
- அதை அப்படியே ஒரு நான்கு மணிநேரம் வைக்கவும்.
- பிறகு வழக்கம் போல இட்லி வார்க்கவும்.
- சுவையான, புரதம் நிறைந்த பயறு இட்லி தயார்.
- சர்க்கரை நோயாளிகளுக்கான இதை எல்லோரும் சாப்பிடலாம்.
- வித்தியாசமான சுவையுடன் நன்றாக இருக்கும்
- எந்த சாம்பாருடனும் சாப்பிடலாம்.
Ingredients:
- அவல் ஒரு கப்
- இட்லி ரவை ஒன்றரை கப்
- தயிர் ஒரு கப்
- தண்ணீர் ஒரு கப்
- பிளைன் ENO Fruit சால்ட் 1 /4 ஸ்பூன்
Method:
- அவலை சுத்தம் செய்து கொண்டு, மிக்சி இல் பொடித்துக் கொள்ளவும்.
- ரவை போல இருந்தாலும் சரி தான்.
- பிறகு அவல் பொடித்தது, இட்லி ரவை இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கலந்து கொள்ளவும்.
- பிறகு அதில் தயிர், உப்பு மற்றும் தண்ணீர் விட்டு கலக்கவும்.
- உப்பு சேர்க்கவும்.
- நன்கு கட்டிகள் இல்லாமல் கலக்கவும்.
- தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
- இதை அப்படியே ஒரு பத்து நிமிடங்கள் வைத்துவிடுங்கள்.
- பிறகு எடுத்துக் பார்த்தால் அவல் ஊறிக்கொண்டு கெட்டியாகி இருக்கும்.
- எனவே, மீண்டும் கொஞ்சம் தண்ணீர் விட்டு தளர்த்திக் கொள்ளுங்கள்.
- இந்த மாவு இட்லி மாவு பதத்தில் இருக்கவேண்டும்.
- இப்போது, மாவில் ENO கலந்து உடனடியாக இட்லி தட்டில் விட்டு , இட்லி வார்க்கவும்.
- எப்பொழுதும் போல வேகவைத்து எடுக்கவும்.
- அவ்வளவுதான், கொஞ்சம் கூட உளுந்து இல்லாத, மிகவும் மெத் என்கிற வெள்ளை வெளேர் இட்லி பத்தே நிமிடங்களில் தயார்.....
- எந்த சட்னியுடனும் அல்லது சாம்பார் அல்லது தோசைமிளகாய் பொடியுடனும் நன்றாக இருக்கும்.
Ingredients:
- கெட்டித்தயிர் - அரை லிட்டர் ( மட்டாக தண்ணீர் விட்டு குழப்பி வைத்துக் கொள்ளவும் )
- பாம்பே ரவை -2 1 /2 கப்
- பன்சிரவை - சீரொட்டி ரவை என்றும் சொல்வார்கள் 2 1 /2 கப்
- பொடியாக நறுக்கிய கொத்துமல்லி ஒரு கப் நிறைய
- பொடித்த சர்க்கரை ஒரு டீ ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- முழு முந்திரி ஒரு கைப்பிடியளவு - இரண்டாக பிளந்து வைத்துக் கொள்ளவும்
- எண்ணெய் கால் கப்
- ENO FRUIT SALT PLAIN 1 1 /2 டேபிள் ஸ்பூன்
- தாளிக்க :
- கடுகு 1 டீ ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு 1 டீ ஸ்பூன்
- பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
- பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் ஒரு டேபிள் ஸ்பூன்
- பொடியாக துருவிய இஞ்சி ஒரு டேபிள் ஸ்பூன்
Method:
- ஒரு பெரிய பாத்திரத்தில் இரண்டு ரவைகளை போட்டு நன்கு கலக்கி வைத்துக் கொள்ளவும்.
- வாணலி இல் எண்ணெய் வைத்து முதலில் முந்திரியை வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- பிறகு, தாளிக்க தந்துள்ள பொருட்களை தாளித்து, கலந்து வைத்துள்ள ரவை கலவை மீது இதைக் கொட்டவும்.
- நன்கு கலக்கவும்.
- உப்பு மற்றும் பொடித்த சர்க்கரை சேர்த்து மீண்டும் நன்கு கலக்கவும்.
- இப்போது கொஞ்சம் கொஞ்சமாக தயிர் மற்றும் தண்ணீர் விட்டு கலக்கவும்.
- ஒவ்வொரு முறை விடும்போதும், இட்லி மாவை நன்கு கலக்க வேண்டும்.
- தேவையானால் மீண்டும் கொஞ்சம் தயிர் மீண்டும் கொஞ்சம் தண்ணீர் என்று விட்டு கலக்கவும்.
- இப்போது பொடியாக நறுக்கிய கொத்துமல்லி யை போட்டு நன்கு கலக்கவும்.
- மாவு இட்லி மாவு பதத்தில் இருக்கணும்.
- இந்த ஸ்டெப் தான் மிக முக்கியம்....
- ENO FRUIT SALT ஐ கொடுத்துள்ள அளவின் படி, மாவில் போட்டு நன்கு கலக்கவும்.
- இதை செய்ததும், உடனடியாக இட்லி தட்டுகளில் மாவை விட்டு விடவேண்டும். ஊற வைக்க வேண்டாம்.
-
- பிறகு எண்ணெய் தடவிய இட்லி தட்டுகளில் முதலில் ஒரு முந்திரி யை நடுவில் வைக்கவும்.
- அதன்மேல் மாவை விட்டு இட்லி பானை இல் வைக்கவும்.
- பத்து முதல் பன்னிரண்டு நிமிடங்கள் வரை வேகவைக்கவும்.
- இட்லி பானையை திறந்து, இட்லி தட்டுகளை எடுத்து ஒரு ஐந்து நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
- நாம் வைத்த மாவைவிட இரண்டு மடங்காக இருக்கும் இந்த இட்லி.
- பார்க்கவே 'புஸு புஸு ' என்று மிக அழகாக இருக்கும்.
- நன்கு ஆறினதும், இட்லிகளை மெதுவாக ஸ்பூன் மூலம் எடுக்கவும்.
- மெத் மெத் என்கிற , MTR போலவே சுவையான 'ரவா இட்லி' தயார் .
- தொட்டுக்கொள்ள எதுவுமே வேண்டாம், ஆனால் உங்களுக்கு தேவையானால் , தோசை மிளகாய் பொடி அல்லது எந்த சட்னியுடனும் பரிமாறலாம் .
Ingredients:
- இட்லி மாவு
- காரட் துருவல் கொஞ்சம்
- பச்சை மிளகாய் தேவையானால்
Method:
- இட்லி வார்க்கும் போது எண்ணெய் தடவிய தட்டில் முதலில் அரை கரண்டி மாவை இட்லி தட்டில் விடுங்கோ.
- பிறகு துருவி வைத்துள்ள காரட்டை அதில் வைக்கவும்.
- அதன் மேல் மீண்டும் இட்லி மாவை விடவும் .
- இதே போல மற்ற தட்டுகளிலும் விடவும்.
- இட்லி வெந்ததும் கட் செய்து பார்த்தல் இட்லி நடுவிலே சிகப்பாக காரட் தெரியும்.
- குழந்தைகளுக்கு பார்க்கவே பிடிக்கும் இந்த சான்ட்விச் இட்லி, சாப்பிடவும் பிடிக்கும்.
- கறிகாயும் சேரும் உடலுக்கும் நல்லது.
- சாஸுடன் பரிமாறலாம்.
Notes:
- இது போல உங்களுக்கு பிடித்தமான காயை உள்ளே வைத்து இந்த சான்ட்விச் இட்லி தயாரிக்கலாம் .
Ingredients:
- இட்லி மாவு - 2 கப்
- இளம் முருங்கைக் கீரை - ஒரு கப்
- பச்சை மிளகாய் விழுது - 2 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
Method:
- இட்லி மாவுடன் கீரை, பச்சை மிளகாய் விழுது, உப்பு சேர்த்து நன்கு கலக்கி இட்லி தட்டுகளில் எண்ணெய் தடவி இட்லி வார்க்க வேண்டியது தான்.
- கீரை, துளிராக இருக்க வேண்டியது முக்கியம் அவ்வளவுதான் .
Ingredients:
- 10 இட்லி
- 2 - 3 பெரிய வெங்காயம்
- 2 - 3 தக்காளி
- பச்சை மிளகாய் - தேவையான அளவு
- உப்பு
- எண்ணெய் - வதக்க
- மஞ்சள் பொடி
- 1 ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் சீரகம்
Method:
- இட்லிகளை வெட்டி வைத்துகொள்ளவும்.
- வெங்காயம் தக்காளி இரண்டையும் நறுக்கி வைக்கவும்.
- வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் தாளிக்கவும்.
- பச்சை மிளகாய் போடவும்.
- நன்கு வதக்கவும் .
- பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம் தக்காளி போட்டு வதக்கவும்.
- உப்பு போடவும்.
- மற்றொரு வாணலியில் எண்ணெய் விட்டு இட்லி துண்டங்களை நன்கு பொரிக்கவும். (deep fry )
- வெங்காயம் தக்காளி கலவையில் போடவும்.
- கிளறி உடனே இறக்கவும்.
- சுவையான மாலை டிபன் ரெடி.
Ingredients:
- 10 இட்லி
- உப்பு
- எண்ணெய் - வதக்க
- 1 ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் உளுந்து
- 2 - 4 ஸ்பூன் தோச மிளகாய் பொடி அல்லது சாதா மிளகாய் பொடி
Method:
- இட்லிகளை வெட்டி வைத்துகொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு இட்லி துண்டங்களை நன்கு பொரிக்கவும். (deep fry )
- ஒரு பேசினில் போடவும்.
- வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து தாளிக்கவும்.
- வறுத்த இட்லி துண்டுகளின் மீது கொட்டவும்.
- உப்பு மிளகாய் பொடி போட்டு நன்கு குலுக்கவும்.
- சுவையான மாலை டிபன் ரெடி.
Notes:
- இதில் மேலும் மசாலா வேண்டுபவர்கள், பூண்டு போடலாம்.
- மேலும் காய்கறி வேண்டுவோர் , பீன்ஸ் , காரட், உருளை, குடை மிளகாய் போன்ற காய்களை மெலிதாக அரிந்து, வதக்கி சேர்க்கலாம்.
Ingredients:
- மோர் - 1 கப்
- 'பன்சி' ரவை – சோள ரவை -1 கப்
- உப்பு - தேவையான அளவு
- கறிவேப்பிலை கொஞ்சம்
- உப்பு
- தாளிக்க எண்ணெய்
- தாளிக்க :
- கடுகு 1 டீ ஸ்பூன்
- கடலை பருப்பு 1 டீ ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு 1 டீ ஸ்பூன்
- பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
- பச்சைமிளகாய் பொடியாக நறுக்கினது 1 டீ ஸ்பூன்
- இஞ்சி துருவியது 1 டீ ஸ்பூன் தேவையானால்
Method:
- ஒரு பாத்திரத்தில் மோர் விட்டு அதில் சோள ரவையை போடவும்.
- ஒரு 15 நிமிஷம் அது ஊறட்டும்.
- வாணலி இல் எண்ணெய் வைத்து தாளிக்க தந்துள்ள பொருட்களை தாளித்து ஊர வைத்த ரவையுடன் போடவும்.
- உப்பு மற்றும் கறிவேப்பிலை எல்லாம் போட்டு கலக்கவும் .
- மாவு இட்லி மாவு பதத்தில் இருக்கணும்.
- பிறகு எண்ணெய் தடவிய இட்லி தட்டுகளில் மாவை விட்டு இட்லி செய்யவும்.
- சுவையான சோள ரவை இட்லி தயார் .
- இதை எந்த சட்னியுடனும் பரிமாறலாம்.
Ingredients:
- மோர் - 1 கப்
- பாம்பே ரவை -1 கப்
- உப்பு - தேவையான அளவு
- கறிவேப்பிலை கொஞ்சம்
- காரட் துருவினது தேவையானால்
- உப்பு, தாளிக்க எண்ணெய்
- தாளிக்க :
- கடுகு 1 டீ ஸ்பூன்
- கடலை பருப்பு 1 டீ ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு 1 டீ ஸ்பூன்
- பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
- பச்சைமிளகாய் பொடியாக நறுக்கினது 1 டீ ஸ்பூன்
- இஞ்சி துருவியது 1 டீ ஸ்பூன் தேவையானால்
- மஞ்சள் பொடி 1/2 டீ ஸ்பூன்
Method:
- வாணலி இல் எண்ணெய் வைத்து தாளிக்க தந்துள்ள பொருட்களை தாளித்து, அதனுடன் ரவையும் போட்டு வறுக்கவும்.
- உப்பு, காரட் மற்றும் கறிவேப்பிலை எல்லாம் போட்டு கலக்கவும் .
- ஒரு 15 நிமிஷம் அது ஊறட்டும்.
- மாவு இட்லி மாவு பதத்தில் இருக்கணும்.
- பிறகு எண்ணெய் தடவிய இட்லி தட்டுகளில் மாவை விட்டு இட்லி செய்யவும்.
- சுவையான ரவை இட்லி தயார்.
- தோசை மிளகாய் பொடி அல்லது எந்த சட்னியுடனும் பரிமாறலாம்.
Ingredients:
- மோர் - அரை கப்
- ஓட்ஸ் - 1 கப்
- கோதுமை ரவை - டாலியா -1/2 கப்
- உப்பு - தேவையான அளவு
- கொத்துமல்லி நறுக்கியது 1 டேபிள் ஸ்பூன்
- கறிவேப்பிலை கொஞ்சம்
- உப்பு
- தாளிக்க எண்ணெய்
- தாளிக்க :
- கடுகு 1 டீ ஸ்பூன்
- கடலை பருப்பு 1 டீ ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு 1 டீ ஸ்பூன்
- பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
- மஞ்சள் பொடி 1/2 டீ ஸ்பூன்
- பச்சைமிளகாய் பொடியாக நறுக்கினது 1 டீ ஸ்பூன்
- இஞ்சி துருவியது 1 டீ ஸ்பூன்
Method:
- வாணலி இல் முதலில் ஓட்ஸ் ஐ கொஞ்சம் சிவப்பாக வறுக்கவும்.
- கொஞ்சம் ஆறினதும் மிக்சி இல் போட்டு பொடிக்கவும்.
- வாணலி இல் எண்ணெய் வைத்து தாளிக்க தந்துள்ள பொருட்களை தாளித்து, அதனுடன் கோதுமை ரவையும் போட்டு வறுக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் மோர் விட்டு அதில் இதை போடவும்.
- பொடித்து வைத்துள்ள ஓட்ஸ் ஐயும் இதில் போடவும்.
- உப்பு, கொத்துமல்லி மற்றும் கறிவேப்பிலை எல்லாம் போட்டு கலக்கவும் .
- மாவு இட்லி மாவு பதத்தில் இருக்கணும்.
- ஒரு 15 நிமிஷம் அது ஊறட்டும்.
- பிறகு எண்ணெய் தடவிய இட்லி தட்டுகளில் மாவை விட்டு இட்லி செய்யவும்.
- சுவையான ஓட்ஸ் - கோதுமை ரவை இட்லி தயார் .
Notes:
- கண்டிப்பாக ஓட்ஸ் ஐ வறுக்கணும். இல்லாவிட்டால் கொழ கொழப்பாக இருக்கும்.
Ingredients:
- மோர் - 1 கப்
- கோதுமை ரவை - டாலியா -1 கப்
- உப்பு - தேவையான அளவு
- கறிவேப்பிலை கொஞ்சம்
- உப்பு ,தாளிக்க எண்ணெய்
- தாளிக்க :
- கடுகு 1 டீ ஸ்பூன்
- கடலை பருப்பு 1 டீ ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு 1 டீ ஸ்பூன்
- பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
- பச்சைமிளகாய் பொடியாக நறுக்கினது 1 டீ ஸ்பூன்
- இஞ்சி துருவியது 1 டீ ஸ்பூன் தேவையானால்
Method:
- ஒரு பாத்திரத்தில் மோர் விட்டு அதில் கோதுமை ரவையை போடவும்.
- ஒரு 15 நிமிஷம் அது ஊறட்டும்.
- வாணலி இல் எண்ணெய் வைத்து தாளிக்க தந்துள்ள பொருட்களை தாளித்து ஊர வைத்த ரவையுடன் போடவும்.
- உப்பு மற்றும் கறிவேப்பிலை எல்லாம் போட்டு கலக்கவும் .
- மாவு இட்லி மாவு பதத்தில் இருக்கணும்.
- பிறகு எண்ணெய் தடவிய இட்லி தட்டுகளில் மாவை விட்டு இட்லி செய்யவும்.
- சுவையான கோதுமை ரவை இட்லி தயார் .
- சர்க்கரை நோயாளுகளுக்கான நல்ல உணவு இது நாமும் சாப்பிடலாம், வித்தியாசமாக இருக்கும், எந்த சட்னியுடனும் பரிமாறலாம்.
Ingredients:
- மோர் - அரை கப்
- ஓட்ஸ் - 1 கப்
- பாம்பே ரவை - 1/2 கப்
- உப்பு - தேவையான அளவு
- கொத்துமல்லி நறுக்கியது 1 டேபிள் ஸ்பூன்
- கறிவேப்பிலை கொஞ்சம்
- உப்பு
- தாளிக்க எண்ணெய்
- தாளிக்க :
- கடுகு 1 டீ ஸ்பூன்
- கடலை பருப்பு 1 டீ ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு 1 டீ ஸ்பூன்
- பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
- மஞ்சள் பொடி 1/2 டீ ஸ்பூன்
- பச்சைமிளகாய் பொடியாக நறுக்கினது 1 டீ ஸ்பூன்
- இஞ்சி துருவியது 1 டீ ஸ்பூன்
Method:
- வாணலி இல் முதலில் ஓட்ஸ் ஐ கொஞ்சம் சிவப்பாக வறுக்கவும்.
- கொஞ்சம் ஆறினதும் மிக்சி இல் போட்டு பொடிக்கவும்.
- வாணலி இல் எண்ணெய் வைத்து தாளிக்க தந்துள்ள பொருட்களை தாளித்து, அதனுடன் ரவையும் போட்டு வறுக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் மோர் விட்டு அதில் இதை போடவும்.
- பொடித்து வைத்துள்ள ஓட்ஸ் ஐயும் இதில் போடவும்.
- உப்பு, கொத்துமல்லி மற்றும் கறிவேப்பிலை எல்லாம் போட்டு கலக்கவும் .
- மாவு இட்லி மாவு பதத்தில் இருக்கணும்.
- ஒரு 15 நிமிஷம் அது ஊறட்டும்.
- பிறகு எண்ணெய் தடவிய இட்லி தட்டுகளில் மாவை விட்டு இட்லி செய்யவும்.
- சுவையான ஓட்ஸ் இட்லி தயார்.
Notes:
- கண்டிப்பாக ஓட்ஸ் ஐ வறுக்கணும். இல்லாவிட்டால் கொழ கொழப்பாக இருக்கும்.
Ingredients:
- கொள்ளு - 1 கப்
- அரிசி - 3 கப்
- உப்பு - தேவையான அளவு
Method:
- முதலில் கொள்ளு மற்றும் அரிசியை தனித்தனியாக அலசி ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 5 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
- அப்புறம் அதனை கிரைண்டரில் அல்லது மிக்சி இல் போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- அரைத்த மாவை உப்பு சேர்த்து கரைத்து , குறைந்தது 8 மணிநேரம் புளிக்க வைக்க வேண்டும்.
- பிறகு அதனை இட்லிகளாக வார்க்கவேண்டியது தான்.
- ஆரோக்கியமான கொள்ளு இட்லி ரெடி.
- இதனை வெங்காயம் தக்காளி சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் ரொம்ப சூப்பராக இருக்கும்.
Notes:
- கேழ்வரகு இட்லி போலவே இந்த கொள்ளிலும் இட்லி செய்யலாம். இதோ அதன் ரெசிபி.
Ingredients:
- கேழ்வரகு மாவு - 4 கப்
- உளுந்து - 1 கப்
- மெல்லிசு அவல் - 2 - 2 1/2 கப்
- ( கெட்டி அவல் என்றால் 1 - 1/2 கப் போறும்)
Method:
- அவல் மற்றும் உளுத்தம் பருப்பை நன்கு களைந்து தனித்தனியாக 2 - 3 மணிநேரம் ஊர வைக்கவும்.
- பிறகு கேழ்வரகு மாவை உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
- தண்ணீர் மட்டா விடவும்.
- ஊறிய பிறகு முதலில் உளுந்தை அரைத்து பிறகு அதிலேயே ஊறிய அவலையும் போடவும்.
- அது நன்கு அரைபட்டதும், கரைத்து வைத்துள்ள கேழ்வரகு மாவையும் கொட்டி ஒரு சுற்று சுற்றி , பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
- ஒரு 8 மணி நேரம் கழித்து இட்லி வார்க்கலாம்.
- அருமையான கேழ்வரகு இட்லி தயார்.
Ingredients:
- கெட்டி அவல் 2 கப்
- மோர் அல்லது தண்ணீர் கொஞ்சம்
- கொத்துமல்லி நறுக்கியது 1 டேபிள் ஸ்பூன்
- கறிவேப்பிலை கொஞ்சம்
- உப்பு
- தாளிக்க எண்ணெய்
- தாளிக்க :
- கடுகு 1 டீ ஸ்பூன்
- கடலை பருப்பு 1 டீ ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு 1 டீ ஸ்பூன்
- பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
- மஞ்சள் பொடி 1/2 டீ ஸ்பூன்
- பச்சைமிளகாய் பொடியாக நறுக்கினது 1 டீ ஸ்பூன்
- இஞ்சி துருவியது 1 டீ ஸ்பூன்
Method:
- அவலை 2 -3 முறை நன்கு களைந்து பிழிந்து மோரில் ஊற வைக்கவும்.
- வாணலி இல் எண்ணெய் வைத்து தாளிக்க தந்துள்ள பொருட்களை தாளித்து ஊறிய அவல் மீது கொட்டவும்.
- உப்பு, கொத்துமல்லி மற்றும் கறிவேப்பிலை எல்லாம் போட்டு கலக்கவும் .
- மாவு இட்லி மாவு பதத்தில் இருக்கணும்.
- அவ்வளவு தான் எண்ணெய் தடவிய இட்லி தட்டுகளில் மாவை விட்டு இட்லி செய்யவும்.
- சுவையான அவல் இட்லி ரெடி.
Ingredients:
- இட்லி அரிசி -- 3 ஆழாக்கு (நான் இன்று பச்சரிசி இல் தான் செய்தேன் )
- வெந்தயம் -- - 3 டேபிள் ஸ்பூன் (1 Table spoon = 15 grams)
Method:
- வெந்தயத்தை தனியாக 4 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
- இட்லி அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்தாலும் போறும்.
- முதலில் கிரைண்டரில் வெந்தயத்தை போட்டு அரைக்கவும்.
- 3 டேபிள் ஸ்பூன் வெந்தயத்திற்கு 3 டம்ளர் தண்ணீர் தேவையாக இருக்கும்.
- கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்துக்கொண்டே அரைக்கும்போது நன்கு நுரைக்கும்.
- உளுந்தை போல பார்ப்பதற்கு நுரைத்து வரும்; நம்ப முடியாத அளவிற்கு புஸு புஸு என்று வரும்.
- அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
- பிறகு அரிசியை கொஞ்சம் நற நற வென அரைக்கவும்.
- இரண்டையும் ஒன்றாக உப்பு சேர்த்து கலந்து மூடி வைக்கவும்.
- மறு நாள் காலை நன்கு பொங்கி வந்திருக்கும்.
- எப்போதும்போல் இட்லி தட்டில் நனைத்த துணி அல்லது எண்ணை தடவி மாவை விட்டு, குக்கரில் ஆவியில் 7/10 நிமிடம் வரை வேகவைத்து எடுக்கவும்.
- ஆறிய பிறகும் மெத்தென்றுதான் இருக்கும்.
- அரைக்கும் பக்குவம் மிகவும் முக்கியம்.
- மறு நாள்காலை தண்ணீர் ஊற்றக்கூடாது; முதல் நாளே பக்குவமாக கரைத்து வைக்க வேண்டும்.
- அவ்வளவுதான் சூப்பர் வெந்தய இட்லி ரெடி.
- இந்த இட்லி ரொம்ப வெள்ளையாக இருக்காது, கொஞ்சம் கிரீம் கலரில் இருக்கும்.
- வெந்தயம் என்பதால் அப்படி இருக்கும்.
- இன்று காலை நான் செய்தேன், இரவு வரை மெத் என்று இருந்தது.
Notes:
- உளுந்தே சேர்க்காமல் செய்யும் இந்த இட்லி மெத்தென்றும் இருக்கும்.
- வெந்தயம் சேர்த்ததே தெரியாத அளவிற்கு இருக்கும்.
- மிக ருசியானது.ஆரோக்கியத்திற்கு மிக உகந்தது.
- வாரம் ஒரு முறை வெந்தய இட்லி செய்வதை பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.
Ingredients:
- பார்லி 2 கப்
- கோதுமை ரவை 1 கப்
- மிளகாய் வற்றல் 4 -5
- உப்பு
Method:
- பார்லியை நன்கு களைந்து ஒரு 4 மணிநேரம் ஊர வைக்கவும்.
- கோதுமை ரவையை 1/2 மணி ஊர வைக்கவும்.
- பிறகு இரண்டையும் மிளகா உப்பு போட்டு மைய அரைக்கவும்.
- மீண்டும் ஒரு அரைமணி அப்படியே வைத்திருந்து விட்டு பிறகு இட்லி வார்க்கவும்.
- ஹெல்தியான இட்லி இது.
Notes:
- வேணுமானால் தண்ணிருக்கு பதில் தயிர் உபயோகிக்கலாம். இந்த மாவில் தோசையும் வார்க்கலாம்.
Ingredients:
- கோதுமை மாவு 2 கப்
- உளுத்தம் பருப்பு 3/4 கப்
- உப்பு
Method:
- கோதுமை மாவை கட்டிகள் இல்லாமல் தண்ணிரில் கரைத்து வைக்கவும்.
- உளுந்தை நன்கு களைந்து 1 மணிநேரம் ஊறவைக்கவும்.
- பிறகு நன்கு அரைக்கவும், கடைசி இல் கோதுமை மாவையும் சேர்த்து போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
- உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
- மறுநாள் எப்பவும் போல இட்லி வார்க்கவும்.
- நல்லா மெத் என்று வரும் இந்த இட்லி.
- சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு வரப்பிரசாதம் , பூண்டு துவையல் அல்லது காரமான வெங்காய சட்னி யுடன் ரொம்ப நல்லா இருக்கும்.
Ingredients:
- கேழ்வரகு மாவு - 2 கப் - கடை இல் வாங்கிய மாவு
- உளுத்தம் பருப்பு - 3/4 கப்
- உப்பு - 1 தே.கரண்டி
Method:
- உளுத்தம் பருப்பினை குறைந்தது 1 மணி நேரமாவது ஊறவைக்கவும்.
- ஊறவைத்த உளுத்தம் பருப்பினை, இட்லிக்கு அரைப்பது போல மைய அரைத்து கொள்ளவும்.
- கேழ்வரகு மாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக, கட்டி இல்லாமல் கரைத்து கொள்ளவும்.
- கரைத்து வைத்த கேழ்வரகு மாவுடன் உப்பு + அரைத்த உளுத்தம் மாவினை சேர்த்து நன்றாக இட்லி மாவு பதத்திற்கு கலக்கவும்.
- ( மிகவும் தண்ணீயாக கரைத்துவிட வேண்டாம்.) இதனை குறைந்தது 6 - 8 மணி நேரம் வைத்து புளிக்கவிடவும்.
- இந்த மாவு புளிக்க , அரிசி மாவினை விட கொஞ்சம் நேரம் எடுக்கும்.
- புளித்த இட்லி மாவினை, இட்லி தட்டில் விட்டு, அரிசி இட்லியை போலவே ஆவி இல் வேகவைக்கவும்.
- இப்போது சுவையான சத்தான கேழ்வரகு இட்லி ரெடி.
Notes:
- கேழ்வரகில் அதிக அளவு நார்சத்து(Dietary Fiber), புரோட்டின்(Protein) காணப்படுகின்றது.
- டயபெட்டிக், வயதனாவர்களுக்கு ஏற்ற உணவு.
Ingredients:
- அரிசி 1 கப்
- உளுத்தம் பருப்பு 3/4 கப் ( சமயத்தில் அரிசிக்கு சமமாகவும் உளுந்து போடுவோம் )
- மிளகு 1 டீ ஸ்பூன் உடைக்கவும்
- சீரகம் 1 டீ ஸ்பூன் உடைக்கவும்
- சுக்கு பொடி 1/2 டீ ஸ்பூன்
- பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
- நெய்
- உப்பு
- கறிவேப்பிலை
Method:
- அரிசி உளுந்து இரண்டையும் ஒன்றாகவே நனைத்து ஒன்றாகவே அரைக்கணும்.
- ஒரு மணி ஊறினால் போறும்.
- கொஞ்சம் கர கர பாக அரைக்கணும் .
- இந்த இட்லிக்கு அரைப்பது தான் ரொம்ப முக்கியம்.
- உப்பு போட்ட கரைத்து அப்படியே ஒரு 12 மணிநேரம் வைக்கணும்.
- மறுநாள் காலை, நெய்யை உருக்கி மாவில் விட்டு நன்கு கலக்கவும்.
- மேலும் அதில் உடைத்த மிளகு, சீரகம், சுக்கு பொடி, பெருங்காயப்பொடி மட்டும் கறிவேப்பிலை போட்டு நன்கு கலக்கவும்.
- மாவு இட்லி மாவு பதத்தில் இருக்கணும்.
- பிறகு எண்ணெய் தடவிய இட்லி தட்டுகளில் மாவை விட்டு இட்லி செய்யவும்.
- சுவையான காஞ்சிபுரம் இட்லி தயார் .
- தொட்டுக்கொள்ள ஏதும் வேண்டாம் வெறுமனவே சாப்பிடலாம் நல்லா இருக்கும்.
- வேண்டுமானால் தோசைமிளகாய் பொடி நல்லா இருக்கும்.
- இட்லி மேல நல்லெண்ணெய் விட்டு கொண்டும் சாப்பிடலாம்.
Notes:
- அதாவது குடலை இட்லி - இது காஞ்சிபுரம் கோவிலில் செய்வது; ரொம்ப நல்லா இருக்கும். ஒரு முறை முயன்று பாருங்கள்.
- சாதாரணமாக இந்த குடலை இட்லி என்பதை இலைகளில் தான் செய்வா நாங்கள் வீடுகளில் செய்யும் போது சின்ன சின்ன கிண்ணிகள் அல்லது தம்ளர்களில்
- செய்வோம்.
- இப்போவெல்லாம் இட்லி தட்டிலே செய்கிறோம். ஏன் என்றால், அப்படி வைக்கும் போது வேக ரொம்ப நாழி ஆகிறது நீங்க வேண்டுமானால் குட்டி குட்டி
- கிண்ணிகளில் எண்ணெய் தடவிவிட்டு மாவை விட்டு இட்லி பண்ணலாம்.