Showing posts with label ருசியான ஊறுகாய்கள். Show all posts
Showing posts with label ருசியான ஊறுகாய்கள். Show all posts

Thursday, October 8, 2020

அரு அரை நெல்லிக்காய் தொக்கு

Ingredients:
  • அரு /அரை நெல்லிக்காய் 1 கிலோ கொட்டை எடுத்து துருவி வைக்கவும்.
  • மிளகாய் பொடி 200 கிராம்
  • உப்பு அநேகமாய் 100 - 150 போதுமானது
  • வறுத்து அரைத்த வெந்தயப்பொடி 2 டேபிள் ஸ்பூன்
  • பெருங்காயப்பொடி 1 டீ ஸ்பூன்
  • மஞ்சள் பொடி 2 டீ ஸ்பூன்
  • எண்ணெய் தொக்கு செய்வதற்கு 1/4 கிலோ
  • கடுகு 1 டேபிள் ஸ்பூன்


Method:
  • நெல்லிக்காய்களை அலம்பி துடைத்து, துருவவும்.
  • ஆழமான வாணலி அல்லது உருளி இல் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும்.
  • அதில் துருவின நெல்லிக்காயை போட்டு அடுப்பை நிதானமாய் எரிய விடவும்.
  • நன்கு கிளறிவிடவும்.
  • மஞ்சள் பொடி, பெருங்காயபொடி மற்றும் வெந்தயப்பொடி போடவும்.
  • நன்கு கிளறி விடவும்.
  • கொஞ்சம் வெந்தார்போல ஆகும் போது உப்பு போடவும்.
  • மீண்டும் நன்கு கிளறி விடவும்.
  • எண்ணெய் கசிய ஆரம்பிக்கும் போது மிளகாய் பொடியை போட்டு அடுப்பை பெரிதாக்கி, கைவிடாமல் கிளறி , மிளகாய் பொடி வாசனை போனதும் இறக்கிவிடவும்.
  • நன்கு ஆறினதும் பாட்டிலில் போட்டு வைக்கவும்.
  • வருஷத்துக்கும் கெடாது


Notes:
  • நெல்லிக்காய்கள் மிகவும் சிறியதாக, துருவ கஷ்டமாக இருந்தால், கொட்டையை மட்டும் எடுத்துவிட்டு மிக்சி இல் ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும்

பெரிய நெல்லிக்காய் தொக்கு

Ingredients:
  • பெரிய நெல்லிக்காய் 1 கிலோ கொட்டை எடுத்து துருவி வைக்கவும்.
  • மிளகாய் பொடி 200 கிராம்
  • உப்பு அநேகமாய் 100 - 150 போதுமானது
  • வறுத்து அரைத்த வெந்தயப்பொடி 2 டேபிள் ஸ்பூன்
  • பெருங்காயப்பொடி 1 டீ ஸ்பூன்
  • மஞ்சள் பொடி 2 டீ ஸ்பூன்
  • எண்ணெய் தொக்கு செய்வதற்கு 1/4 கிலோ
  • கடுகு 1 டேபிள் ஸ்பூன்


Method:
  • நெல்லிக்காய்களை அலம்பி துடைத்து, துருவவும்.
  • ஆழமான வாணலி அல்லது உருளி இல் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும்.
  • அதில் துருவின நெல்லிக்காயை போட்டு அடுப்பை நிதானமாய் எரிய விடவும்.
  • நன்கு கிளறிவிடவும்.
  • மஞ்சள் பொடி, பெருங்காயபொடி மற்றும் வெந்தயப்பொடி போடவும்.
  • நன்கு கிளறி விடவும்.
  • கொஞ்சம் வெந்தார்போல ஆகும் போது உப்பு போடவும்.
  • மீண்டும் நன்கு கிளறி விடவும்.
  • எண்ணெய் கசிய ஆரம்பிக்கும் போது மிளகாய் பொடியை போட்டு அடுப்பை பெரிதாக்கி, கைவிடாமல் கிளறி , மிளகாய் பொடி வாசனை போனதும் இறக்கிவிடவும்.
  • நன்கு ஆறினதும் பாட்டிலில் போட்டு வைக்கவும்.
  • வருஷத்துக்கும் கெடாது

இஞ்சி தொக்கு

Ingredients:
  • இஞ்சி கால் கிலோ
  • புளி எலுமிச்சை அளவு அல்லது 2 டேபிள் ஸ்பூன் புளி பேஸ்ட்
  • பூண்டு 100 கிராம்
  • மிளகாய் பொடி 4 ஸ்பூன்
  • வறுத்து அரைத்த வெந்தய பொடி 1 ஸ்பூன்
  • வெல்லம் கொஞ்சம்
  • உப்பு
  • எண்ணெய் கொஞ்சம்
  • கடுகு 1 ஸ்பூன்
  • பெருங்காய பொடி
  • மஞ்சள் பொடி


Method:
  • முதலில் இஞ்சியை நன்கு மண்போக அலம்பி , தோல் சீவி துண்டங்கள் போடவும்.
  • பூண்டை உரித்து வைத்துக் கொள்ளவும்.
  • புளி பேஸ்ட் இல்லை என்றால் , புளியை தண்ணீரில் ஊற வைக்கவும்.
  • மிக்சி இல் பூண்டு, புளி பேஸ்ட் மற்றும் இஞ்சியை மையாக அரைத்துக் கொள்ளவும்.
  • புளி பேஸ்ட் இல்லாவிட்டால், புளியை கெட்டியாக கரைத்து விட்டு அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலி இல் எண்ணெய்விட்டு, கடுகு கறிவேப்பிலை தாளித்துக் கொள்ளவும்.
  • அரைத்த விழுதை இதில் கொட்டவும்.
  • நன்கு கிளறவும்.
  • பிறகு அதில், மஞ்சள் பொடி, பெருங்காய பொடி, மிளகாய் பொடி, வெந்தய பொடி என எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக போடவும்.
  • உப்பும் போட்டு நன்கு கிளறிவிடவும்.
  • நன்கு கொதித்து லேகியப்பதம் வரும்போது , எண்ணெய் பிரியும்.
  • அதுவரை, அவ்வப்போது கிளறியபடி இருக்கவும்.
  • எண்ணெய் பிரிந்து வரும்போது வெல்லம் போட்டு நன்கு கிளறி, மீண்டும் எண்ணெய் பிரிய ஆரம்பிக்கும்போது அடுப்பை அணைத்து விடவும்.
  • நன்கு ஆறினதும் பாட்டில் களில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • மிகவும் ருசியான 'இஞ்சி தொக்கு' தயார்.
  • இது உடலுக்கு மிகவும் நல்லது, வயிற்று உபாதைகளுக்கும் நல்லது.
  • தயிர் சாதம், சப்பாத்தி , தோசை என எதனுடனும் சாப்பிடலாம்.
  • சூடு சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு தொக்கு சாதமும் சாப்பிடலாம்....அருமையாக இருக்கும்.
  • பிரிட்ஜ் இல் வைத்துக்கொண்டால் ஒருவருடம் கூட வைத்துக் கொள்ளலாம்.


Notes:
  • இதை சிலசமயம் ரசம் செய்யும்போது ஒரு ஸ்பூன் கலந்தால் மிகவும் ருசியாக இருக்கும். அதே போல பிரட் இல் தடவி சாப்பிடலாம். மேலும், தொக்கு செய்யும்போது வறுத்து பொடித்த மிளகாய் பொடியை யும் போட்டால் , தொக்கின் நிறமும் மணமும் மிகநன்றாக இருக்கும்.

Wednesday, October 7, 2020

கோங்குரா (புளிச்சகீரை) தொக்கு

Ingredients:
  • புளிச்சகீரை – 1 கட்டு
  • புளி – ஒரு எலுமிச்சம்பழ அளவு அல்லது புளி பேஸ்ட் 1 டேபிள் ஸ்பூன்
  • வெல்லம் – ஒரு சிறிய துண்டு
  • உப்பு
  • தாளிக்க:
  • கடுகு – 1 டீஸ்பூன்,
  • பூண்டு – 6 - 8 பல் (பொடியாக நறுக்கி வைக்கவும் )
  • எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்.
  • வறுத்துப் பொடிக்க:
  • கடுகு – 1 டேபிள்ஸ்பூன்
  • வெந்தயம் – 1 டீஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் – 15
  • எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்.


Method:
  • கீரையை இலைகளாகக் ஆய்ந்து அலம்பித் துடைத்து, ஒரு துணியில் பரப்பி, ஒரு மணி நேரம் வரை உலர விடுங்கள்.
  • எண்ணெயைக் காயவைத்து, மிளகாய், கடுகு, வெந்தயம் சேர்த்து, சற்று சிவந்ததும் அரித்து எடுங்கள்.
  • மீந்துள்ள எண்ணெயில் கீரையை நறுக்கி போட்டு, நன்கு வதக்குங்கள்.
  • கால் கப் கொதிக்கும் நீரில் புளியை ஊறவிடுங்கள்.
  • வதக்கிய கீரை, புளி, வறுத்த கடுகு, வெந்தயம், மிளகாய், உப்பு, வெல்லம் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து, சற்றுக் கரகரப்பாக அரையுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, வதக்கிய பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, தொக்கில் சேர்த்துக் கலக்குங்கள்.
  • அருமையான 'கோங்குரா தொக்கு' ரெடி...ஆந்திரர்கள் இதை 'கோங்குரா பச்சடி' என்றே சொல்வார்கள் புன்னகை
  • சாதம் போட்டு சாப்பிடனும் என்றால் நிறைய நெய் விட்டுக்கொள்ளுங்கள் இது ரொம்ப சூடு.

தக்காளி பூண்டு தொக்கு

Ingredients:
  • பெங்களூர் தக்காளி 1 கிலோ
  • பூண்டு உரித்தது 200 கிராம்
  • மிளகாய் பொடி 200 - 250 கிராம்
  • உப்பு அநேகமாய் 100 - 125 கிராம் போதுமானது
  • வறுத்து அரைத்த வெந்தயப்பொடி 3 டேபிள் ஸ்பூன்
  • பெருங்காயப்பொடி 2 டீ ஸ்பூன்
  • மஞ்சள் பொடி 2 டீ ஸ்பூன்
  • எண்ணெய் தொக்கு செய்வதற்கு 1/4 கிலோ
  • கடுகு 1 டேபிள் ஸ்பூன்


Method:
  • தக்காளிகளை அலம்பி துடைத்து நறுக்கி, விதைகள் நீக்கி, தண்ணீர் விடாமல், பூண்டையும் போட்டு மிக்சி இல் அரைத்துக்கொள்ளவும்.
  • ஆழமான வாணலி அல்லது உருளி இல் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும்.
  • அதில் அரைத்த தக்காளி விழுதை போட்டு அடுப்பை நிதானமாய் எரிய விடவும்.
  • நன்கு கிளறிவிடவும்.
  • மஞ்சள் பொடி, பெருங்காயபொடி மற்றும் வெந்தயப்பொடி போடவும்.
  • நன்கு கிளறி விடவும்.
  • கொஞ்சம் நேரம் எடுக்கும் தொக்கு இது, நன்கு கொதித்து, கொதித்து, குறைந்து தொக்குபோல சேர்ந்து வரும் போது உப்பு போடவும்.
  • மீண்டும் நன்கு கிளறி விடவும்.
  • எண்ணெய் கசிய ஆரம்பிக்கும் போது மிளகாய் பொடியை போட்டு அடுப்பை பெரிதாக்கி, கைவிடாமல் கிளறி , மிளகாய் பொடி வாசனை போனதும் இறக்கிவிடவும்.
  • நன்கு ஆறினதும் பாட்டிலில் போட்டு வைக்கவும்.
  • இதுவும் வருஷத்துக்கும் கெடாது .
  • சப்பாத்தி , இட்லி தோசை, தயிர் சாதம் , சண்ட்விச் என்று எதுக்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ளலாம்.


Notes:
  • குறிப்பு: தக்காளி அரைத்ததும் நிறைய போல தோன்றும் அதனால் அப்போ உப்பு போடாதீங்கோ, அது கொதித்து குறைந்ததும், அளவைப்பர்த்துக்கொண்டு உப்பு போடுங்கோ. இல்லாவிட்டால் உப்பு அதிகமாகி தொக்கு கரித்து விடும்.
  • பூண்டு பொடி கூட இப்போது கடைகளில் கிடைக்கிறது , அப்படி வேண்டுபவர்கள் , மிளகாய் பொடி போடும் போது 4 - 5 டேபிள் ஸ்பூன் பூண்டு பொடி போட்டு கிளறி இறக்கவும்.
  • வாயில் பூண்டு கடி படவேண்டும் என்று நினைத்தால், பூண்டை நறுக்கி எண்ணெய் இல் வதக்கி , பிறகு அரைத்த தக்காளியை சேர்க்கவும்.
  • அவசரத்துக்கு ஓர் 2 - 3 தக்காளிகளை அரைத்து வதக்கி, இட்லி க்கு தோசைக்கு தொட்டுக்க வைத்துக்கொள்ளலாம். அந்த சமையங்களில் எண்ணெய் குறைவாக விட்டாலே போதுமானது.

தக்காளித் தொக்கு

Ingredients:
  • பெங்களூர் தக்காளி 1 கிலோ
  • மிளகாய் பொடி 150 - 200 கிராம்
  • உப்பு அநேகமாய் 75 - 100 கிராம் போதுமானது
  • வறுத்து அரைத்த வெந்தயப்பொடி 2 டேபிள் ஸ்பூன்
  • பெருங்காயப்பொடி 1 டீ ஸ்பூன்
  • மஞ்சள் பொடி 2 டீ ஸ்பூன்
  • எண்ணெய் தொக்கு செய்வதற்கு 1/4 கிலோ
  • கடுகு 1 டேபிள் ஸ்பூன்


Method:
  • தக்காளிகளை அலம்பி துடைத்து நறுக்கி, விதைகள் நீக்கி, தண்ணீர் விடாமல் மிக்சி இல் அரைத்துக்கொள்ளவும்.
  • ஆழமான வாணலி அல்லது உருளி இல் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும்.
  • அதில் அறத்த தக்காளியை போட்டு அடுப்பை நிதானமாய் எரிய விடவும்.
  • நன்கு கிளறிவிடவும்.
  • மஞ்சள் பொடி, பெருங்காயபொடி மற்றும் வெந்தயப்பொடி போடவும்.
  • நன்கு கிளறி விடவும்.
  • கொஞ்சம் நேரம் எடுக்கும் தொக்கு இது, நன்கு கொதித்து, கொதித்து, குறைந்து தொக்குபோல சேர்ந்து வரும் போது உப்பு போடவும்.
  • மீண்டும் நன்கு கிளறி விடவும்.
  • எண்ணெய் கசிய ஆரம்பிக்கும் போது மிளகாய் பொடியை போட்டு அடுப்பை பெரிதாக்கி, கைவிடாமல் கிளறி , மிளகாய் பொடி வாசனை போனதும் இறக்கிவிடவும்.
  • நன்கு ஆறினதும் பாட்டிலில் போட்டு வைக்கவும்.
  • இதுவும் வருஷத்துக்கும் கெடாது புன்னகை
  • சப்பாத்தி , இட்லி தோசை, தயிர் சாதம் , சண்ட்விச் என்று எதுக்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ளலாம்.


Notes:
  • குறிப்பு: தக்காளி அரைத்ததும் நிறைய போல தோன்றும் அதனால் அப்போ உப்பு போடாதீங்கோ, அது கொதித்து குறைந்ததும், அளவைப்பர்த்துக்கொண்டு உப்பு போடுங்கோ. இல்லாவிட்டால் உப்பு அதிகமாகி தொக்கு கரித்து விடும்.

மாங்காய் தொக்கு

Ingredients:
  • நல்ல புளிப்பு மாங்காய் 1 கிலோ தோல் சீவி துருவி வைக்கவும்.
  • மிளகாய் பொடி 200 கிராம்
  • உப்பு அநேகமாய் 100 - 150 போதுமானது
  • வறுத்து அரைத்த வெந்தயப்பொடி 2 டேபிள் ஸ்பூன்
  • பெருங்காயப்பொடி 1 டீ ஸ்பூன்
  • மஞ்சள் பொடி 2 டீ ஸ்பூன்
  • எண்ணெய் தொக்கு செய்வதற்கு 1/4 கிலோ
  • கடுகு 1 டேபிள் ஸ்பூன்


Method:
  • மாங்காய்களை அலம்பி துடைத்து தோல் சீவி, துருவவும்.
  • ஆழமான வாணலி அல்லது உருளி இல் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும்.
  • அதில் துருவின மாங்காயை போட்டு அடுப்பை நிதானமாய் எரிய விடவும்.
  • நன்கு கிளறிவிடவும்.
  • மஞ்சள் பொடி, பெருங்காயபொடி மற்றும் வெந்தயப்பொடி போடவும்.
  • நன்கு கிளறி விடவும்.
  • கொஞ்சம் வெந்தார்போல ஆகும் போது உப்பு போடவும்.
  • மீண்டும் நன்கு கிளறி விடவும்.
  • எண்ணெய் கசிய ஆரம்பிக்கும் போது மிளகாய் பொடியை போட்டு அடுப்பை பெரிதாக்கி, கைவிடாமல் கிளறி , மிளகாய் பொடி வாசனை போனதும் இறக்கிவிடவும்.
  • நன்கு ஆறினதும் பாட்டிலில் போட்டு வைக்கவும்.
  • வருஷத்துக்கும் கெடாது.


Notes:
  • மாங்காய் தொக்கு ! - என்னைப்பொருத்த வரை உலகத்திலேயே அருமையான தொக்கு இது என்பேன். 'மாதா ஊட்டாத சாதத்தை மாங்காய் ஊட்டும்" என்று என் தாத்தா சொல்வார்.
  • குறிப்பு : கொஞ்சம் புளிப்பு கம்மியாக இருக்கணும் தொக்கு என்று நினைப்பவர்கள் பெங்களுரா மாங்காய் இல் தொக்கு போடலாம். அல்லது ஊறுகாய் இல் வெல்லம் கொஞ்சம் போடலாம் புன்னகை எங்க அப்பாவுக்காக தனியாக நான் பங்களுராவில் தொக்கு போடுவேன்

Images:


எலுமிச்சை பஞ்சாபி ஸ்டைல்

Ingredients:
  • எலுமிச்சம் பழம் - 1/2 கிலோ
  • உப்பு - 2 - 2 1/2 டேபிள் ஸ்பூன்
  • கருப்பு உப்பு - 2 - 2 1/2 டேபிள் ஸ்பூன்
  • இஞ்சி - 100 கிராம் ( தோல் சிவி துருவவும் )
  • மிளகாய் பொடி - 1 1/2 டேபிள் ஸ்பூன்
  • பெருங்காயப் பொடி - 1/4 டீ ஸ்பூன்
  • ஓமம் - 3 டேபிள் ஸ்பூன்
  • சர்க்கரை - 1 cup
  • கடுகு 1/4 டேபிள் ஸ்பூன்
  • கரம் மசாலா பொடி 1 டேபிள் ஸ்பூன்


Method:
  • எலுமிச்சம் பழங்களைக் கழுவி, ஈரமில்லாது துடைத்து, நான்காக பிளந்து வைக்கவும்.
  • ஒரு பேசினில் மற்ற சாமான்களை போட்டு நன்கு கலந்து வைக்கவும்.
  • இந்த மசாலாவை எல்லா எலுமிச்சங்காய்களிலும் அடைக்கவும்.
  • ஒரு ஈரம் இல்லாத ஜாடி இல் அடுக்கவும் .
  • அவ்வளவுதான், ஊறுகாய் ரெடி.ஆனால் இதை 1 மாதம் கழித்து தான் உபயோகப்படுத்த துவங்கலாம்புன்னகை
  • அதுவரை தினமும்ஜாடி இன் வாயை மெல்லிய துணியால் கட்டி வெயிலில் வைக்கணும்.
  • இதை ஒரு வருடம் கூட வைத்திருக்கலாம்.
  • சப்பாத்தி , சாம்பார் மற்றும் தயிர் சாதத்துக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

'அம்ருத்' எலுமிச்சங்காய் ஊறுகாய்

Ingredients:
  • எலுமிச்சம் பழம் - 1 கிலோ
  • உப்பு - 100 - 150 கிராம்
  • பச்சை மிளகாய் - 200 கிராம்
  • வறுத்து அரைத்த வெந்தயப் பொடி - 50 கிராம்
  • பெருங்காயப் பொடி - 1 டீ ஸ்பூன்
  • நல்லெண்ணெய் - 50 கிராம்
  • கடுகு - 1 டீஸ்பூன்
  • மஞ்சள் பொடி - 2 ஸ்பூன்
  • இஞ்சி - 100 கிராம் ( தோல் சிவி துருவவும் )


Method:
  • எலுமிச்சம் பழங்களைக் கழுவி, ஈரமில்லாது துடைத்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
  • எலுமிசம்பழ துண்டுகளை ஒரு பேசினில் போடவும்.
  • பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.
  • இஞ்சியை தோல் சிவி துருவவும்.
  • எலுமிச்சம் துண்டங்களுடன் போடவும்.
  • ஒரு வாணலி இல் எண்ணெய் காய வைத்து, கடுகு தாளித்து, அதை அப்படியே எலுமிச்சம் துண்டங்களின் மேல் விட்டு , கலந்து வைக்கவும்.
  • அடுத்து வறுத்தரைத்த வெந்தய பொடி, மஞ்சள் பொடி மற்றும் பெருங்காயபொடி தூவவும்.
  • நன்கு குலுக்கவும்.
  • அவ்வளவுதான், ஊறுகாய் ரெடி.
  • ஒரு நாலு நாள் கழித்து தொட்டுக்கொள்ளலாம்.
  • ஆனால் தினமும் நன்கு கிளறி விடனும்.
  • இதை ஒரு வருடம் கூட வைத்திருக்கலாம்.
  • சாம்பார் மற்றும் தயிர் சாதத்துக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
  • இதை 'அம்ருத்' என்று சொல்வார்கள்

Images:


எலுமிச்சங்காய் ஊறுகாய் 2

Ingredients:
  • எலுமிச்சம் பழம் - 1 கிலோ
  • உப்பு - 100 - 150 கிராம்
  • மிளகாய்ப் பொடி - 200 கிராம்
  • வறுத்து அரைத்த வெந்தயப் பொடி - 50 கிராம்
  • பெருங்காயப் பொடி - 1 டீ ஸ்பூன்
  • நல்லெண்ணெய் - கால் கிலோ ,
  • கடுகு - 1 டீஸ்பூன்
  • மஞ்சள் பொடி - 2 ஸ்பூன்


Method:
  • எலுமிச்சம் பழங்களைக் கழுவி, ஈரமில்லாது துடைத்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
  • எலுமிசம்பழ துண்டுகளை ஒரு பேசினில் போடவும்.
  • அதன் மேல் உப்பைத் தூவவும்.
  • பிறகு மிளகாய் பொடி தூவவும்.
  • அடுத்து வறுத்தரைத்த வெந்தய பொடி மற்றும் பெருங்காயபொடி தூவவும்.
  • நன்கு குலுக்கவும்
  • ஒரு வாணலி இல் எண்ணெய் காய வைத்து, கடுகு தாளித்து, அதை அப்படியே எலுமிச்சம் துண்டங்களின் மேல் விட்டு , கலந்து வைக்கவும்.
  • அவ்வளவுதான், ஊறுகாய் ரெடி.
  • ஒரு நாலு நாள் கழித்து தொட்டுக்கொள்ளலாம்.
  • ஆனால் தினமும் நன்கு கிளறி விடனும்.
  • இதை ஒரு வருடம் கூட வைத்திருக்கலாம்.
  • சாம்பார் மற்றும் தயிர் சாதத்துக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

எலுமிச்சங்காய் ஊறுகாய் 1

Ingredients:
  • எலுமிச்சம் பழம் - 1 கிலோ
  • உப்பு - 100 - 150 கிராம்
  • மிளகாய்ப் பொடி - 200 கிராம்
  • வறுத்து அரைத்த வெந்தயப் பொடி - 50 கிராம்
  • பெருங்காயப் பொடி - 1 டீ ஸ்பூன்
  • நல்லெண்ணெய் - கால் கிலோ ,
  • கடுகு - 1 டீஸ்பூன்
  • மஞ்சள் பொடி - 2 ஸ்பூன்


Method:
  • எலுமிச்சம் பழங்களைக் கழுவி, ஈரமில்லாது துடைத்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
  • பின்பு வாணலி இல் எண்ணெய் விட்டு, கடுகு போட்டு வெடித்ததும், எலுமிசம்பழ துண்டுகளை போடவும்.
  • நன்கு கிளறவும்.
  • கொஞ்சம் அது வதங்கட்டும்.
  • இப்போது உப்பு போடவும்; மீண்டும் நன்கு கிளறவும்.
  • காய் பாதி வெந்ததும், வெந்தயப் பொடி, பெருங்காயப் பொடி, மஞ்சள் பொடி எல்லாம் போடவும்.
  • நன்றாகக் கிளறவும்.
  • எல்லாமாக நன்கு சேர்ந்து எண்ணெய் பிரிந்து வரும்போது, மிளகாய்ப் பொடி போட்டு நன்கு கிளறி இறக்கவும்.
  • ஆறினதும் பாட்டில்களில் சேமிக்கவும்.
  • உடனே யே தொட்டுக்கலாம்.
  • இதை ஒரு வருடம் கூட வைத்திருக்கலாம்.
  • சாம்பார் மற்றும் தயிர் சாதத்துக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

ஆவக்காய்

Ingredients:
  • புளிப்பான மாங்காய் - 10
  • மிளகாய்ப் பொடி - 200 கிராம்
  • உப்பு
  • வெந்தயம் - 100 கிராம்
  • வெள்ளை கொத்து கடலை 1/2 கிலோ
  • எண்ணெய் 1 கிலோ


Method:
  • இந்த ஊறுகாய்க்கு எல்லாமே பச்சையாகத்தான் போடணும்.
  • மாங்காயை நன்கு அலம்பி , துடைத்து, கொட்டையும் சேர்த்து, ஒரு காயை 16 துண்டுகளாக நறுக்க வேண்டும்.
  • எல்லா துண்டுகளுமே ஓட்டுடன் இருந்தால் நல்லது.
  • உள்ளிருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்றாகத் துணியால் துடைக்கவும்.
  • சுத்தமாக உலர்ந்த ஜாடியில் அல்லது ஒரு பெரிய பிளாஸ்டிக் பக்கெட்டில் மாங்காய் துண்டங்களை போடவும்.
  • அதன் மேலே உப்பு மற்றும் மிளகாய் பொடி போடவும்.
  • நன்கு குலுக்கவும்.
  • மாங்காய் துண்டங்களின் மேல் உப்பும் மிளகாய் பொடியும் நன்கு ஒட்டி இருக்கணும்.
  • இப்போது வெந்தயம் மற்றும் கொத்து கடலையை போடணும்; நன்கு குலுக்கணும்.
  • இப்போது எண்ணெய் விடணும், மாங்காய் இன் மேலே எண்ணெய் மிதக்கும்படி இருக்க வேண்டும். ஈரம், காற்று படக் கூடாது.
  • நன்கு மூடி வைக்கணும்.
  • தினமும் நன்கு 'அடி ஓட்ட' கிளறி விடணும்.
  • ஒரு வாரம் கழித்து உபயோகிக்க துவங்கலாம்.
  • அருமையான ஊறுகாய் இது.
  • தயிர் சாதம் என்று இல்லை பருப்பு சாம்பார் சாதம் மற்றும் பருப்பு பொடி சாதத்துக்கு கூட தொட்டுக்கலாம்; ஆவக்காய் சாதமே சாப்பிடலாம்

வெந்தய மாங்காய்

Ingredients:
  • மாங்காய் - 10
  • மிளகாய் - 150 கிராம்
  • உப்பு
  • வறுத்து அரைத்த வெந்தயப் பொடி - 2 டேபிள் ஸ்பூன்
  • மஞ்சள் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
  • பெருங்காயப் பொடி - 1 டீ ஸ்பூன்
  • நல்லெண்ணெய் - 1 - 1 1/2 கப்
  • கடுகு 2 டீ ஸ்பூன்


Method:
  • மாங்காயை நன்கு அலம்பி, துடைத்து, கொட்டை எடுத்துட்டு , சின்ன சின்னதாக வெட்டிக் கொள்ளவும்.
  • ஒரு வாணலி இல் துளி எண்ணெய் விட்டு மிளகாயை வறுக்கவும்.
  • கொஞ்சம் ஆறினதும் மிக்சி இல் போட்டு கொஞ்சம் உப்பு போட்டு பொடிக்கவும்.
  • 'கர கர'ப்பாக அரைக்கவும்.
  • துண்டங்களை ஒரு பேசினில் போட்டு, அதில் மிளகாய்ப் பொடி, பெருங்காயப்பொடி, உப்பு, வெந்தயப்பொடி, மஞ்சள் பொடி எல்லாம் போட்டு நன்றாகக் குலுக்கவும்.
  • ஒவ்வொரு துண்டத்திலும் எல்லாம் 'கோட்' ஆகி இருக்கணும்.புன்னகை
  • வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும் .
  • அதை மாங்காய் துண்டங்கள் மேல் கொட்டவும்.
  • கொட்டி னதை நன்கு கலக்கவும்.
  • ஒரு 2 நாள் கழித்து நன்றாக ஊறின பின் சாப்பிடலாம்.
  • ஆனால் தினமும் நன்கு கிளறி விடனும்.

கார மாவடு

Ingredients:
  • மாவடு - 1 படி
  • கல் உப்பு - 1 கப்
  • மஞ்சள் பொடி - 2 டீ ஸ்பூன்
  • விளக்கெண்ணெய் எண்ணெய் 1/2 cup
  • அரைக்க :
  • மிளகாய் வற்றல் - 30 -35
  • கடுகு - 2 டேபிள் ஸ்பூன்
  • விரலி மஞ்சள் - 2 -3


Method:
  • உருண்டை அல்லது நீள மாவடுவைத் தேர்ந்தெடுத்து, நன்கு அலம்பி , ஈரம் போகத் துடைக்கவும்.
  • மிளகாய் வற்றல்,கடுகு, விரளி மஞ்சளை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  • மாவடுவில் விளக்கெண்னை, கடுகு, மிளகாய் பொடி மட்டும் மஞ்சள் பொடி கலவையை , கலந்து பிசிறிக் கொள்ளவும்.
  • ஜாடி அல்லது பிளாஸ்டிக் பக்கெட்டில் கொஞ்சம் மாவடுவை போடவும்.
  • பிறகு ஒரு டேபிள்ஸ்பூன் உப்பைப் போட்டு மேலே கொஞ்சம் மாவடு, அதன்மேலே ஒரு உப்பு மறுபடி மாவடு என்று மாற்றி மாற்றி எல்லாவற்றையும் போட்டு, மேலாக நல்லெண்ணையும் சேர்த்து மூடிவைக்கவும்.
  • மறுநாள் எடுத்து, ஓரிரு முறை குலுக்கி வைக்கவும்.
  • அப்பவே உபயோகிக்கலாம் .
  • ஊறுகாயை அவ்வப்போது கிளறி விட்டால் போறும் ஒரு வருடம் வரை நன்றாக இருக்கும்.
  • மாவடு நீர் விடும் என்பதால் மாவடு மூழ்கும் அளவு தண்ணீர் அதிலிருந்தே கிடைத்து விடும்.
  • துளி கூட நாம் தண்ணீர் விட வேண்டாம்

மாவடு

Ingredients:
  • மாவடு - 1 படி
  • கல் உப்பு - 100 கிராம்
  • மஞ்சள் பொடி - 2 டீ ஸ்பூன்
  • விளக்கெண்ணெய் எண்ணெய் 4 டீஸ்பூன்.


Method:
  • உருண்டை அல்லது நீள மாவடுவைத் தேர்ந்தெடுத்து, நன்கு அலம்பி , ஈரம் போகத் துடைக்கவும்.
  • பெரிய ஜாடி அல்லது பிளாஸ்டிக் பக்கெட்டில் மாவடுவை போட்டு விளக்கெண்ணெய் எண்ணெய் விட்டு நன்றாகக் குலுக்க வும்.
  • பிறகு உப்பு, மஞ்சள் பொடி போட்டு மறு முறை குலுக்கவும்.
  • அப்படியே வைக்கவும்.
  • மறுநாள் எடுத்து, ஓரிரு முறை குலுக்கி வைக்கவும்.
  • ஒரு நாலு நாளில் ஊறிடும்.
  • ஊறுகாயை அவ்வப்போது கிளறி விட்டால் போறும் ஒரு வருடம் வரை நன்றாக இருக்கும்.
  • மாவடு நீர் விடும் என்பதால் மாவடு மூழ்கும் அளவு தண்ணீர் அதிலிருந்தே கிடைத்து விடும்.
  • துளி கூட நாம் தண்ணீர் விட வேண்டாம்.

மாங்காய் வத்தல் ஊறுகாய்

Ingredients:
  • காய்ந்த மாங்காய் துண்டங்கள் - 1 கப்
  • மிளகாய் பொடி - 4 டீ ஸ்பூன்
  • தேவையானால் கொஞ்சமே கொஞ்சம் உப்பு
  • வறுத்து பொடித்த வெந்தய பொடி 1/4 டீ ஸ்பூன்
  • பெருங்காயப்பொடி 1/2 டீ ஸ்பூன்
  • தாளிக்க கடுகு மற்றும் எண்ணெய்


Method:
  • மாங்காய் வற்றலை ஒரு 5 நிமிஷம் வென்னீரில் போடவும்.
  • தண்ணிரை வடி கட்டவும்.
  • வாணலி இல் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து மாங்காய் மேல் கொட்டவும்.
  • அதிலேயே மிளகாய் பொடி, பெருங்காயப்பொடி, வெந்தயபொடி மற்றும் உப்பு போட்டு குலுக்கவும்.
  • சுவையான ஊறுகாய் தயார்.


Notes:
  • இந்த ஊறுகாய் 'இன்ஸ்டன்ட் ஊறுகாய்' காய்ந்த மாங்காய் இருந்தால் போறும், சில நிமிடங்களில் தயாரிக்கலாம்.
  • மாங்காய் வத்தல் - நல்ல புளிப்பு மாங்காய் களில் இதை போடலாம். நன்கு காய வைத்து வைத்துக்கொண்டால், மாங்காய் சீசன் இல்லாத போது, இந்த வத்தலை உபயோகித்து , குழம்பு மற்றும் ஊறுகாய் போடலாம். முதலில் மாங்காய் வத்தல் போடும் முறையை பார்ப்போம்.
  • தேவையானவை:
  • புளிப்பான மாங்காய் தேவையான அளவு.
  • உப்பு
  • செய்முறை:
  • மாங்காயை நன்கு அலம்பி துடைக்கவும்,
  • பிறகு அதை செதில் செதிலாக வெட்டவும்.
  • உப்பு போட்டு குலுக்கி வைக்கவும்.
  • 'சல சல' வென தண்ணிர் விட்டுக்கொள்ளும்.
  • மாங்காய் துண்டங்களை மட்டும் தினமும் வெயிலில் வைக்கவும்.
  • மாலை இல் மீண்டும் உப்பு நீரில் போடவும்.
  • இப்படி யே உப்பு நீர் முழுவதும் வற்றும் வரை செய்யவும்.
  • பிறகு மாங்காய் துண்டங்களை வெயிலில் நன்கு காய வைத்து எடுத்து பத்திரப்படுத்தவும்.

கல்யாண மாங்காய்

Ingredients:
  • பெங்களுரா மாங்காய் - 1 ( கிளிமூக்கு மாங்காய் )
  • மிளகாய் பொடி - 3 டேபிள் ஸ்பூன்
  • உப்பு
  • வறுத்துப் பொடித்த வெந்தய பொடி - 1/2 ஸ்பூன்
  • பெருங்காய பொடி - 1 டீஸ்பூன்.
  • தாளிக்க:
  • நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
  • கடுகு - 1 டேபிள்ஸ்பூன்


Method:
  • மாங்காயைக் அலம்பி துடைத்துப் பொடியாக நறுக்கவும்.
  • அதை ஒரு பேசினில் போடவும் .
  • அதன் மேல் சுற்றிலும் உப்பைத் தூவவும்.
  • பிறகு மிளகாய் பொடி தூவவும்.
  • அடுத்து வறுத்தரைத்த வெந்தய பொடி மற்றும் பெருங்காயபொடி தூவவும்.
  • ஒரு வாணலி இல் எண்ணெய் காய வைத்து, கடுகு தாளித்து, அதை அப்படியே மாங்காயின் மேல் விட்டு , கலந்து வைக்கவும்.
  • அவ்வளவுதான், இதை உடனே யே தொட்டுக்கொள்ளல்லாம்.
  • கல்யாணம் மற்றும் சீமந்தங்களில் இப்படி செய்வார்கள் , அதனாலேயே இந்த பேர் வந்தது


Notes:
  • இப்ப மாங்காய் சீசன் அல்லவா, அதனால் முதலில் மாங்காய். அதிலும் இது ரொம்ப சிம்பிளான ஊறுகாய் - 'கல்யாண மாங்காய்' இதை 1 வாரம் வைத்துக்கொள்ளலாம். பிரிட்ஜ் இல் வைத்தால் 1 மாதம் வைத்துக்கொள்ளலாம்.

Images:


Blog Archive